Jump to content

யாழில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது
 

https://www.virakesari.lk/article/128324

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

யாழில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது
 

https://www.virakesari.lk/article/128324

 

மிகவும் சோகமான செய்தி. இருவரும் மூதாட்டிகள்.
இவர்கள் வயோதிப இல்லத்தில் பராமரிக்கப் பட்டிருந்தால்…
அவர்களின் இறுதிக் காலம், நிம்மதியாக கழிந்திருக்கும்.
புலம் பெயர் மக்கள்… தமது ஆடம்பர செலவுகளை குறைத்து…
ஊருக்கு, ஒரு முதியோர் இல்லங்களோ, தொண்டு நிறுவனங்களோ அமைக்க முன் வர வேண்டும்.
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனநடமாட்டம் புழங்காத இடமாக மாறிவிட்டது அல்லது பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்று பார்ப்பவர்கள் இல்லாத அளவுக்கு நகரத்து வாழ்வு எல்லா இடமும் தோன்றிவிட்டது. 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இப்படியாக இறந்து 6 மாதத்தின் பின் தனியே வசித்த மூதாட்டியின் உடல் இலண்டன் அப்பார்மெட்ட்டில் கண்டுபிடிப்பு என்ற செய்திகளை பார்த்து ஊரில் இப்படி நடக்காது என நினைப்பதுண்டு.

ஆனால் இப்போ சங்கரத்தையிலும் அதுவே நடக்கும் அளவுக்கு அங்கேயும் இயந்திரமயமாகி விட்டது வாழ்வு. 

ஒருவர் இறந்த பின் அந்த வீட்டில் மற்றையவர் 2 கிழமை இருந்துள்ளார்.

கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை  மனநலக் குறைபாடு இருந்திருக்கலாம்.  ஏனென்று கேட்க ஒரு மனிதாபிமானம்  கொண்டவர் இல்லையே? 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

சனநடமாட்டம் புழங்காத இடமாக மாறிவிட்டது அல்லது பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்று பார்ப்பவர்கள் இல்லாத அளவுக்கு நகரத்து வாழ்வு எல்லா இடமும் தோன்றிவிட்டது. 

இது தான் மேலைத்தேய கலாச்சாரம்.

ஊரில்  நான் சிறுவனாக இருந்த காலத்தில் பக்கத்து வீட்டில் இருமல் சத்தம் கேட்டாலே ஓடிப்போய் பார்ப்போம்.

இங்கே முன் வீட்டில் ஒருவர் இறந்தால் கூட அமைதி எனும் பெயரில் கறுப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு அமைதியாக இருப்பர்.

மேலைத்தேய வாழ்வுக்கு ஆசைப்பட்டால் உதுவும் அடங்கும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இன்னும் நிறையவே வரும்.

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

இது தான் மேலைத்தேய கலாச்சாரம்.

ஊரில்  நான் சிறுவனாக இருந்த காலத்தில் பக்கத்து வீட்டில் இருமல் சத்தம் கேட்டாலே ஓடிப்போய் பார்ப்போம்.

இங்கே முன் வீட்டில் ஒருவர் இறந்தால் கூட அமைதி எனும் பெயரில் கறுப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு அமைதியாக இருப்பர்.

மேலைத்தேய வாழ்வுக்கு ஆசைப்பட்டால் உதுவும் அடங்கும்.
 

இது மேலை, கீழை தேகம் என்பதை விட கால மாற்றம் அல்லது வர்க்க வேறுபாடு என நினைக்கிறேன். 1960 களூகு முன்பும் இங்கேயும் இப்படித்தான் வாழ்ந்துள்ளார்கள். எனக்கு படிப்புத்த ஆசிரியர் ஒருவர் சொல்லுவா, தெருவுக்கு ஒரு குளியல் அறை இருந்ததாம். ஒன்றாக கூடி வாழ்ந்தார்களாம்.

இப்போதும் council estate எனும் அரச வீட்டுதிட்ட பக்கம் போனால் குருநகர் வீட்டுத்திட்டத்தில் இருப்பதை போல அக்கம் பக்கம் நெருங்கி பழகுவதை காணலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இது மேலை, கீழை தேகம் என்பதை விட கால மாற்றம் அல்லது வர்க்க வேறுபாடு என நினைக்கிறேன். 1960 களூகு முன்பும் இங்கேயும் இப்படித்தான் வாழ்ந்துள்ளார்கள். எனக்கு படிப்புத்த ஆசிரியர் ஒருவர் சொல்லுவா, தெருவுக்கு ஒரு குளியல் அறை இருந்ததாம். ஒன்றாக கூடி வாழ்ந்தார்களாம்.

இப்போதும் council estate எனும் அரச வீட்டுதிட்ட பக்கம் போனால் குருநகர் வீட்டுத்திட்டத்தில் இருப்பதை போல அக்கம் பக்கம் நெருங்கி பழகுவதை காணலாம்.

காலமாற்றம் சரிதான்......ஆனால் விரலுக்கு ஏற்ற வீக்கமும் வேணுமெல்லோ? 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

காலமாற்றம் சரிதான்......ஆனால் விரலுக்கு ஏற்ற வீக்கமும் வேணுமெல்லோ? 🤣

குசாவுக்கு வடபகுதி நிலை சரிவரத் தெரியாதுபோல...😔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இங்குள்ள நிலமை யாரை யார் பார்ப்பது என்ற நிலைதான் சிலிண்டரை சுமந்து திரிகிறேன் விறகு இல்லை விறகு எடுக்க போனால் காட்டிற்கு பொலிஸ் பிடிக்கும்  தனக்கு தனக்கு என வாழ்க்கையை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது இலங்கை😴😴🙄

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.