Jump to content

ஒரு போதும்... பதவி, விலகப் போவதில்லை – ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

ஒரு போதும்... பதவி, விலகப் போவதில்லை – ஜனாதிபதி

தாம் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்காரணமாகவே அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, திறமை மிக்கவர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி வருவதாகவும், அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை நியமனம் முழுமை பெறும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

‘அமைச்சரவை நியமனம் முழுமை பெற்றவுடன் ஜனாதிபதி பதவியிலிருந்து நான் விலகுவேன் என்று சில ஊடகச் செய்திகளைப் பார்த்தேன். எனினும், நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன.’; எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சரவை ஓரணியில் செயற்பட்டால்தான் நாட்டுப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1284273

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

 

பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

சூனியம் வைச்சாலாலேயெ சூனியத்தை எடுக்க முடியாட்டில் என்ன செய்யமுடியும்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போ: பொருளாதார நெருக்கடிக்கு காரணம் முன்னைய ஆட்சியாளர்களேயன்றி நாங்களில்லை என்று நீங்கள் ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டியது பகிடி விளையாட்டா? இப்போ,  உங்களை சாடுகிறார் ரணில். அவருக்கு அவ்வளவு திறன் இருந்திருந்தால் உங்கள் கையில் நாடு விழுந்திருக்காதே?  நாட்டின் இன்றைய நிலைக்கு யார் யார் எல்லாம் காரணமோ அவர்கள் ஒன்றுசேர்ந்து அனுபவிக்க வேண்டியது கடனே!  என்ன இருந்தாலும் நீங்கள் வருந்தி பதவியை ஏற்றதே உங்களின் தீர்க்கப்படாத பழைய கணக்குகளை தீர்ப்பதற்கே. அதுவரையில் நீங்களே நினைத்தாலும் விலக முடியாது. விதி காத்திருக்கு உங்களுக்காக.....    

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.