Jump to content

காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு

33 நிமிடங்களுக்கு முன்னர்
 

காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக நேற்று முற்பகல் 10 மணியளவில் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்த சிறுமி கோழி இறைச்சியைக் கொள்வனவு செய்து, மீண்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சிகள், அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், குறிப்பிட்ட சிறுமியைத் தேடுவதற்காக காவல்துறையின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

பண்டாரகம காவல்துறையினருக்கு மேலதிகமாக, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சிறுமியின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக சுமார் இருபதுக்கும் அதிகமானோரின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61620114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு

09 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்று முன்தினம் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று 28 சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1284347

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்

ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு... இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி,  நீதியை... பெற்றுத்தருவதாகவும் உறுதி

உயிரிழந்த ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவாக நடவடிக்கை எடுத்து நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

“ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.

இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன். சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்றையதினம் காணாமல் போயிருந்த நிலையில் இன்று 28 ஓடைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1284326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ஹும் ... ரிஷாத் பதியுதீன் வீட்டில் கொலைசெய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்துவிட்டது, மூன்று ஆண்டுகளுக்கு மேலாய் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலையும் நம் உறவுகளுக்கு நீதி கிடைத்துவிட்டது, இனி இந்த சிறுமியின் பெற்றோருக்கும் நீதி கிடைக்கும். நீதி என்று ஒன்று நாட்டில் இருந்திருந்தால் இது நிகழ்ந்திருக்குமா? கொலையாளிகளுக்கு விடுதலையும், பதவியுமே கிடைக்கும் இவர் காலத்தில்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 9 வயது சிறுமி கொலை: நீதி கிடைக்க உறுதியளிக்கிறேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,AFP

இலங்கை அட்டாலுகம பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை (மே 27) முற்பகல் 10 மணியளவில் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த சிறுமி கோழி இறைச்சியை வாங்கிவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பும் காட்சிகள், அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், குறிப்பிட்ட சிறுமியைத் தேடுவதற்காக காவல்துறையின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

பண்டாரகம காவல்துறையினருக்கு மேலதிகமாக, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சிறுமியின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக சுமார் இருபதுக்கும் அதிகமானோரின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன் ட்விட்டர் பக்கத்தில், "ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன். இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்" என தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61622252

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சியாக இருக்குமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தற்போதைய நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சியாக இருக்குமோ? 

நீங்கள் சொல்வதையும்... தட்டிக் கழிக்க முடியாது.
பட்டப்  பகல் 10 மணிக்கு, சம்பவம் நடந்துள்ளது.
ஜனாதிபதியும்  கண்டு பிடித்து தருகின்றேன் என்று வாக்குறுதி கொடுக்கின்றார்.
கடைசியில்... அப்பாவி தமிழன் ஒருவனை கொண்டு வந்து நிறுத்தி,
அரசியல் ஆதாயம் தேட வாய்ப்பு உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்வதையும்... தட்டிக் கழிக்க முடியாது.
பட்டப்  பகல் 10 மணிக்கு, சம்பவம் நடந்துள்ளது.
ஜனாதிபதியும்  கண்டு பிடித்து தருகின்றேன் என்று வாக்குறுதி கொடுக்கின்றார்.
கடைசியில்... அப்பாவி தமிழன் ஒருவனை கொண்டு வந்து நிறுத்தி,
அரசியல் ஆதாயம் தேட வாய்ப்பு உள்ளது. 

நடந்த இடம் ஏற்கனவே சிங்கள முஸ்லிம் கலவரம் வந்த இடமென நினைக்கிறேன். 

கொல்லபட்ட பிள்ளை முஸ்லிம்.

இனமோதலை பற்ற வைக்கும் முயற்சி என்பது மிக நியாயமான சந்தேகமே

3 hours ago, Kapithan said:

தற்போதைய நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சியாக இருக்குமோ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?- பொலிஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்!

ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?- பொலிஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்!

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பாரியளவிலான ஆதாரங்களை அழித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சதுப்பு நிலத்தில், பல்வேறு நபர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கால்த் தடங்கள் காணபட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்டவுடன், குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் செய்தி அறிந்த ஏராளமான கிராம மக்களும் பல்வேறு இடங்களில் இருந்து சிறுமியின் உடலைப் பார்க்க வந்ததாக அதிகாரி கூறினார்.

இதன் காரணமாக சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அல்லது பலரை கைது செய்வதற்கான இலகுவான வாய்ப்புகள் தவறவிடப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதன்காரணமாக சிறுமியின் சடலத்தை தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் (28) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1284455

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

ஆயிஷா மரணம் தொடர்பாக... கீரை தோட்ட தொழிலாளி, கைது!

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கீரை தோட்ட தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்தோடு, அந்த நபரின் உடலில் பல இடங்களில் கீறல்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த கீரை தோட்டத்தை அண்மித்த காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இதற்கு முன்னர் தாயும் மகளும் தங்கியிருந்த வீட்டிற்கு இரவில் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் (28) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சிறுமியின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1284478

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.