Jump to content

இரண்டு மாதங்களில்... உணவு, நெருக்கடி? நிலாந்தன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களில் உணவு நெருக்கடி? நிலாந்தன்.

இரண்டு மாதங்களில்... உணவு, நெருக்கடி? நிலாந்தன்.

“செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு” என்று தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிபதிகளைச் சந்தித்தபின் அவர் ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.”கோத்தபாயவின் தவறான விவசாயக் கொள்கையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.ரசாயன உரமும் இல்லை, சேதன உரமும் இல்லை.உரத்தட்டுப்பாட்டுடன் இப்பொழுது எரிபொருள் பிரச்சினையும் சேர்ந்துள்ளது.எரிபொருள்,உரம் இரண்டும் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாதுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”ஒரு வருடத்திற்கு மாத்திரம் 33 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. டொலர் நெருக்கடியால் அதுவும் இல்லை. தவறான உரக் கொள்கையால் பெரும்போக விவசாயத்தில் விளைச்சல் 60 சதவிகிதத்தால் குறைந்துவிட்டது.எதிர்வரும் காலத்தில் பெரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. நடுத்தரவர்க்க மக்களால் கொள்வனவு செய்யமுடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கிறது.ஓகஸ்ட் செப்டம்பர் மாதப் பகுதிகளில் உணவு நெருக்கடி வரலாம்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்குள் பயிற்செய்கையில் ஈடுபடத் தவறினால்,நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

“எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முடியாது” என முன்னாள் விவசாயத்துறை பணிப்பாளர் கே.பி குணவர்தன தெரிவித்துள்ளார்.”கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களின் நுகர்வுக்கு அவசியமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.எனினும்,கடந்த பெரும்போகத்தின்போது, இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதால், நெல் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளில் கிடைக்கும் அறுவடை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்டவாறு விவசாயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் கருத்து தெரிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓர் உணவு நெருக்கடி தொடர்பாக எச்சரித்திருந்தார்.அவரும் அடுத்த ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இரவில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு என்று எச்சரித்திருந்தார்.

நிலவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சூம் சந்திப்பின்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கைத்தீவு இதுவரை சந்தித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதார அதிர்ச்சிகளின் போது நாட்டை பாதுகாத்தது விவசாயம்தான் என்று அவர் அதில் கூறினார். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் உரக் கொள்கையில் கை வைத்தார். ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.அவருக்கு முன் ஆட்சி செய்த எல்லாத் தலைவர்களுமே விவசாய வாக்காளர்களை கவர்வதற்காக ரசாயன உரத்துக்கு மானியம் வழங்கினார்கள். அவருடைய தமையனார் மஹிந்தவும் அவ்வாறு மானியம் வழங்கினார். இதனால் விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு உரப்பை ஒன்றை 350 ரூபாயிலிருந்து 450 வரை ரூபாய் வரையிலும் மானிய விலையில் வழங்கியது. ஆனால் கோத்தாபய ஜனாதிபதியாக வந்ததும் நாட்டை ராணுவத்தனமாக இயற்கை உரத்துக்கு மாற்றவிழைந்தார்.

அது பெருந்தொற்று நோய்க் காலம். ஏற்கனவே இனப்பிரச்சினை காரணமாக நொந்து போயிருந்த பொருளாதாரம்,ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பினால் நொந்து போயிருந்த பொருளாதாரம், ஏற்கனவே கோத்தபாயவின் வரிக் குறைப்பினால் நொந்து போயிருந்த பொருளாதாரம், அரசாங்கத்தின் புதிய உரக் கொள்கையால் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. பேராசிரியர் அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டியதுபோல இதற்குமுன் வந்த எல்லாப் பொருளாதார அதிரச்சிகளில் இருந்தும் நாட்டை பாதுகாத்த விவசாயம், இந்த முறை நாட்டைப் பாதுகாக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.கடந்த போகங்களில் செயற்கை உரப் பாவனை குறைந்தபடியால் விளைச்சல் 20 வீதம் அளவே கிடைத்தது என்று விவசாயிகள் பொதுவாகக் கூறுகிறார்கள்.ஒரு பகுதி விவசாயிகள் 12 விகிதம்தான் கிடைத்தது என்று முறைப்பாடு செய்கிறார்கள்.

இயற்கை உரம் ஓர் உன்னதமான கொள்கை. பூமியைப் பாதுகாக்க விரும்பும் எவரும் அதை ஏற்றுக் கொள்வர். ஆனால் தன் நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினரை ஈவிரக்கமின்றி புழு பூச்சிகளைப் போல கொன்றொழித்து யுத்தத்தை வெற்றிகொண்ட ஒருவர், நாட்டின் மண்ணை நேசிக்கிறேன் மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக ரசாயன உரத்தை நிறுத்துகிறேன் என்று கூறியது ஓர் அக முரணே.

பொருளாதார நெருக்கடியானது மக்களால் தாங்க முடியாத ஒரு வளர்ச்சியை அடைந்தபொழுது, முன்னைய காலங்களைப் போல அந்த அதிர்ச்சியை தாங்கக் கூடிய நிலையில் விவசாயம் இருக்கவில்லை. இவை அனைத்தினதும் திரட்டப்பட்ட விளைவே மக்களை வீதிக்குக் கொண்டுவந்தது.

விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக அரசாங்கம் ரசாயன உரத்தை அனுமதித்தது. ஆனால் மானியத்தை நிறுத்தியது.மேலும் ரசாயன உர விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தது. ஆனால் டொலர் பிரச்சினையால் திட்டமிட்டபடி ரசாயன உரத்தை கொண்டு வரமுடியவில்லை.இப்பொழுது இந்தியாவில் இருந்து பெறக்கூடிய உரத்துக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அந்த உரத்தில் இருக்கக்கூடிய நைட்ரஜனின் அளவு போதாது என்ற ஒரு சந்தேகமும் உண்டு. எதுவாயினும் அந்த உரம் இம்முறை கால போகத்துக்குள் வந்துசேராது என்று விவசாயிகள் அச்சமடைகிறார்கள். இம்முறை கால போகத்திற்கு ஒப்பீட்டளவில் பிந்தி விதைத்த விவசாயிகள் கிட்டதட்ட 30 நாட்களுக்குள் உரம் கிடைத்தால் விளைச்சலில் மாற்றத்தை காட்டலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன.

அதேசமயம் கள்ளச்சந்தையில் உரம் ஒரு பை 45000 ரூபாய் போகிறது.அந்த விலைக்கு உரத்தை வாங்கி கமம் செய்த ஒரு விவசாயி எந்த விலைக்கு நெல்லை விற்பார்? இப்பொழுது நெல் ஒரு கிலோவின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக போகிறது. ரசாயன உரம் நிறுத்தப்பட முன்பு அரசாங்கம் மானிய விலையில் 350 இலிருந்து 450 ரூபாய் வரையிலும் ஒரு உரப்பையை வழங்கியது. அப்பொழுது நெல்லின் விலை ஒரு மூட்டை ஆயிரம் வரை போனது. ஆனால் இப்பொழுது நெல்லின் விலை ஒரு மூட்டை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் உரத்தை வாங்கி பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயி எந்த விலைக்கு நெல்லை விற்பார்? அந்த விலைக்கு நெல்லை வாங்க நடுத்தர வர்க்கத்தாலும் முடியாது போகலாம் என்பதை இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். அப்படியென்றால் ஏழைகளின் பாடு எப்படியிருக்கும்? குறிப்பாக தமிழ் மக்கள் என்ன செய்ய போகிறார்கள்?

தமிழ்மக்கள் இயல்பாகவே சேமிக்கும் பழக்கம் உடையவர்கள். இப்பொழுதும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மணித்தியாலக் கணக்காக வரிசையில் நின்று மோட்டார் சைக்கிளின் வயிறு முட்ட பெட்ரோலை நிரப்பி கொண்டு வந்து வீட்டில் அதை குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து போத்தல்களில் சேமிக்கும் பலரைரைக் காணலாம்.தமிழ்மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்த காரணிகளில் முக்கியமானது சீதனம். தவிர இயல்பாகவே முன்னெச்சரிக்கை உணர்வு மிக்க மக்கள். குறிப்பாக யுத்த காலத்தில் அந்த முன்னெச்சரிக்கை உணர்வு சேமிப்பு பழக்கத்தை மேலும் ஊக்குவித்தது.இப்பொழுது பொருளாதார நெருக்கடியின் பொழுதும் தமிழ் மக்களை பாதுகாக்க போவது, அல்லது தமிழ்மக்கள் ஓரளவுக்காவது சமாளித்துக்கொண்டு தப்பிப் பிழைக்க காரணமாக அமையப் போவது அவர்களுடைய சேமிப்பு பழக்கம்தான். இது முதலாவது.

இரண்டாவதாக, தமிழ்ப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி வெளிநாட்டு காசில் தங்கியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பணம் இப்பொழுது டொலரின் பெறுமதி காரணமாக பல மடங்காகப் பெருகி வருகிறது. எனவே அதுவும் தமிழ் மக்களுக்கு ஒரு பலந்தான்.

எனினும்,அதற்காக தமிழ் மக்கள் சும்மாயிருக்கக்கூடாது.ஒரு நெருக்கடியை முன் அனுமானித்து முன்னெச்சரிக்கையோடு சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். தானியங்களைச் சேமிக்க வேண்டும். வீட்டுத்தோட்டத்தில் அக்கறை காட்ட வேண்டும். தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இது தொடர்பாக தமிழ் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும், நம்பிக்கை ஊட்ட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க கூறியதுபோல உணவு நெருக்கடி ஒன்று வரலாம் வராமலும் போகலாம். ஆனால் அதை நோக்கி தமிழ் மக்களைத் தயார்படுத்த வேண்டிய ஒரு பொறுப்பு கட்சிகளுக்கும் செயற்பாட்டு அமைப்புக்களுக்கும் அதிகாரிகளுக்கும் உண்டு.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அவ்வாறான முன்னாயத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.தமிழ்ப் பண்பாட்டில் ஏற்கனவே புழக்கத்தில் காணப்பட்ட சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது.தமிழ்ப் பாரம்பரியத்தில் ஏற்கனவே காணப்பட்ட சிறுதானியங்களுக்கு “இராச தானியம்” என்ற பெயரை வழங்கி ஒரு நிகழ்வு இன்று காலை அச்சுவேலி பத்தமேனி பகுதியில் இடம்பெற உள்ளது. இதில் விவசாயிகளுக்கு இலவசமாக சிறுதானியங்கள் வழங்கப்படும்.அவர்கள் அறுவடை முடிந்ததும் தமக்கு வழங்கப்பட்ட விதை தானியத்துக்குப் பதிலாக அதன் இரண்டு மடங்கு தானியத்தை பசுமை இயக்கத்துக்கு வழங்க வேண்டும்.அது மீண்டும் மறுசூழற்சிக்கு வழங்கப்படும்.தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் முன்னுதாரணத்தை ஏனைய கட்சிகளும் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆர்வமுடைய தரப்புக்களும் பின்பற்றலாம். மேலும் புதிய வித்தியாசமான திட்டங்களையும் யோசிக்கலாம்.

தமிழ் மக்கள் உடனடியாக முன்னாயத்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இப்பொழுது உயிர் பிழைத்திருக்கும் பெரும்பாலான தமிழர்கள் போரினால் உமிழ்ந்து விடப்பட்டவர்களே.போர்க்கால அனுபவம் எல்லா நெருக்கடிகளின் போதும் தமிழ் மக்களுக்கு உதவும். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் வருவது வரட்டும் என்று வாளாயிருக்கக்கூடாது.

https://athavannews.com/2022/1284319

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்... இரண்டு மாதங்களில் உணவு நெருக்கடி ஏற்படும் என்று... பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கிறார்கள். தமிழ்மக்கள்... உடனடியாக, வீட்டுத் தோட்டதில்... அந்த நெருக்கடியை சமாளிக்கக் கூடிய வகையில், பயிர்களை நட்டு எச்சரிக்கையாக இருக்கவும்.

இரண்டு மாத கால அவகாசம், மிகக் குறைவு என்பதால்... இன்றே ஆயத்தப் படுத்துங்கள். மக்களுக்கு... விழிப்புணர்வு ஊட்டவும், ஆலோசனை வழங்கவும்.... பல்கலைக்கழகங்களும், கமநல சேவை உத்தியோகத்தர்களும் முன் வர வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபோகம் செய்வதற்குப் போதிய தண்ணீர் கட்டுக்கரைக்குளத்தில் இருந்தும், வயலை உழுவதற்கு எரிபொருள் இல்லாததாலும், உரம் இன்மையாலும் இம்முறை சிறுபோகம் செய்ய முடியவில்லை.

இது எனது நண்பனின் ஒரு கிழமைக்கு முந்தைய  வாக்குமூலம்.

☹️

  • Sad 2
Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில்... இரண்டு மாதங்களில் உணவு நெருக்கடி ஏற்படும் என்று... பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கிறார்கள். தமிழ்மக்கள்... உடனடியாக, வீட்டுத் தோட்டதில்... அந்த நெருக்கடியை சமாளிக்கக் கூடிய வகையில், பயிர்களை நட்டு எச்சரிக்கையாக இருக்கவும்.

இரண்டு மாத கால அவகாசம், மிகக் குறைவு என்பதால்... இன்றே ஆயத்தப் படுத்துங்கள். மக்களுக்கு... விழிப்புணர்வு ஊட்டவும், ஆலோசனை வழங்கவும்.... பல்கலைக்கழகங்களும், கமநல சேவை உத்தியோகத்தர்களும் முன் வர வேண்டும்.

வெளி நாடுகளிலும் தான் வர போகுதாம். நாங்களும் சும்மா இருக்க முடியாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சிறுபோகம் செய்வதற்குப் போதிய தண்ணீர் கட்டுக்கரைக்குளத்தில் இருந்தும், வயலை உழுவதற்கு எரிபொருள் இல்லாததாலும், உரம் இன்மையாலும் இம்முறை சிறுபோகம் செய்ய முடியவில்லை.

இது எனது நண்பனின் ஒரு கிழமைக்கு முந்தைய  வாக்குமூலம்.

☹️

போகம் செய்தாலும் அரிவி வெட்ட ஆக்கள் இல்லையாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Hana said:

வெளி நாடுகளிலும் தான் வர போகுதாம். நாங்களும் சும்மா இருக்க முடியாது

இப்பவே... இங்கு உணவுப் பொருட்களின் விலை தாறு, மாறாக ஏறிக் கொண்டு போகின்றது.
1 € விற்ற சூரியகாந்தி  எண்ணைப் போத்தல், 5 € விற்கிறார்கள்.
சரி தமிழ்க்  கடையில் என்ன மாதிரி இருக்குது என்று போய் பார்த்தால்...
1 கிலோ முருங்கக்காய் 9 € விற்கிறார். 
சுத்தமான ஆனைக் கோட்டை நல்லெண்ணை, 1 லீற்றர் 6 € என்று இருந்தது.´
சூரியகாந்தியை விட... நல்லெண்ணை உடம்புக்கு நல்லது என்று விட்டு,
4 போத்தல் நல்லெண்ணையை வாங்கிக் கொண்டு வந்திட்டன்.

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சுத்தமான ஆனைக் கோட்டை நல்லெண்ணை, 1 லீற்றர் 6 € என்று இருந்தது.´
சூரியகாந்தியை விட... நல்லெண்ணை உடம்புக்கு நல்லது என்று விட்டு,
4 போத்தல் நல்லெண்ணையை வாங்கிக் கொண்டு வந்திட்டன்.

இத்தாலிக்காரர்ரை ஓலிவன் எண்ணை நூறு வீதம் சுத்தம் சுகாதாரம். உடம்புக்கும் நல்லது.

நல்லெண்ணை இஞ்சத்தையான் காலநிலைக்கு சரிவருமோ எண்டது எனக்கு சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

வயலை உழுவதற்கு எரிபொருள் இல்லாததாலும், உரம் இன்மையாலும் இம்முறை சிறுபோகம் செய்ய முடியவில்லை 

☹️

மாடு வைத்து உழுது பலகையடிக்கலாமே? நாட்டில் மாட்டுக்கும் பஞ்சமா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பகிடி said:

மாடு வைத்து உழுது பலகையடிக்கலாமே? நாட்டில் மாட்டுக்கும் பஞ்சமா?

ஒரு இரவில் நடக்கும் காரியமா ? 

நண்பன் இன்னொன்றையும் கூறினான்.

அவனது குடும்பத்தினரிடம் 200க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. அவற்றை பகலில் மேய்ப்பதற்கு(சாய்ப்பதற்கு) 2000 ரூபாயும் சாப்பாடு, தேனீர் கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் வருகிறார்கள் இல்லையாம். 

இத்தனைக்கும் வேலை இல்லாமல் பலர் ஊரில் சும்மா திரிகிறார்களாம். 

😔

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினிச் சாவைத் தவிர்க்க வீட்டுத் தோட்டங்களை அமைப்பது அவசியம் – மஹிந்த அமரவீர

பட்டினிச் சாவைத் தவிர்க்க.... வீட்டுத் தோட்டங்களை அமைப்பது, அவசியம் – மஹிந்த அமரவீர

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பஞ்சத்தை எதிர்கொள்வதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிலங்களிலும் உணவுப் பயிர்களை பயிரிடுவது மிகவும் அவசியமானது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பஞ்சத்தை எதிர்கொள்வதற்கான சாவால்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் “உணவு கிடைக்கவில்லை என்றால் நிதி இருப்பதில் அர்த்தமில்லை. எனவே, கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நிலத்திலும் உணவுப் பயிர்களை வளர்ப்பதே செய்ய வேண்டும், ”என்று அவர் குறிப்பிட்டார் .

அத்துடன் அனைத்து அமைச்சர்களும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்க வேண்டும் என்பதோடு நாடு எதிர்கொள்ளும் சவாலை முறியடிக்க, விவசாய அதிகாரிகளுடன் அரசு ஊழியர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

https://athavannews.com/2022/1284444

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

மாடு வைத்து உழுது பலகையடிக்கலாமே? நாட்டில் மாட்டுக்கும் பஞ்சமா?

இவையெல்லாம் உடனே நடைபெறும் சாத்தியமில்லை.. அத்துடன், மேலே Kapithan அண்ணா கூறியதைத்தான் எனது சகோதரியும் கூறினார்.. இரசயான உரத்தை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தீடீர் என நிறுத்தியதுடன் இப்பொழுது எரிபொருளும் இல்லாதமையால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலை, ஆனால் காலப்போக்கில் இவற்றை மீள உருவாக்கலாம் ஏனெனில் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் பழைய முறைகளை(மாடு வைத்து உழுதல் etc) நாடவைக்கும் என நினைக்கிறேன்!


கடந்த தைமாதம் அங்கே நின்றிருந்த பொழுது, அரிவி வெட்டு உள்ளது வருகிறீயா என சித்தி கேட்ட, சிறு வயது நினைவுகளில், அரிவி வெட்டும் ஆட்களுடன் போய் கதைக்கலாம் என அங்கே போனால், இப்படி ஒன்று வந்து நின்றது👇🏽.. 

9-AB2912-D-C05-D-464-A-BCE4-FAFBB5523-F1

எனது ஆர்வம் எல்லாம் போய்விட்டது.. ஏன் இப்படி என சித்தியிடம் கேட்டால் COVID ஒரு காரணம் மற்றைய இடங்களில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை, மற்றும் ஊரில் உள்ளவர்கள் கூட வருகிறார்கள் இல்லை என்றார்.. 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகிடி said:

மாடு வைத்து உழுது பலகையடிக்கலாமே? நாட்டில் மாட்டுக்கும் பஞ்சமா?

பழகின மாடு வேணுமே! இயந்திரங்களை நம்பி எல்லாத்தையும் விட்டாச்சு. எங்கட ஊரில் 2/3 பேரிடம் தான் உழவு செய்யக்கூடிய மாடுகள் இருக்கிறது.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவையெல்லாம் உடனே நடைபெறும் சாத்தியமில்லை.. அத்துடன், மேலே Kapithan அண்ணா கூறியதைத்தான் எனது சகோதரியும் கூறினார்.. இரசயான உரத்தை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தீடீர் என நிறுத்தியதுடன் இப்பொழுது எரிபொருளும் இல்லாதமையால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலை, ஆனால் காலப்போக்கில் இவற்றை மீள உருவாக்கலாம் ஏனெனில் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் பழைய முறைகளை(மாடு வைத்து உழுதல் etc) நாடவைக்கும் என நினைக்கிறேன்!


கடந்த தைமாதம் அங்கே நின்றிருந்த பொழுது, அரிவி வெட்டு உள்ளது வருகிறீயா என சித்தி கேட்ட, சிறு வயது நினைவுகளில், அரிவி வெட்டும் ஆட்களுடன் போய் கதைக்கலாம் என அங்கே போனால், இப்படி ஒன்று வந்து நின்றது👇🏽.. 

9-AB2912-D-C05-D-464-A-BCE4-FAFBB5523-F1

எனது ஆர்வம் எல்லாம் போய்விட்டது.. ஏன் இப்படி என சித்தியிடம் கேட்டால் COVID ஒரு காரணம் மற்றைய இடங்களில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை, மற்றும் ஊரில் உள்ளவர்கள் கூட வருகிறார்கள் இல்லை என்றார்.. 

நீங்கள் சொல்வது சரிதான்.. போகப் போகத் தான் அடுத்தடுத்த பொறி முறைகள் நடைமுறைக்கு வரும்.

வீட்டில் இனி காஸ் அடுப்பு இல்லை விறகு அடுப்புத்தான் என்று அப்பா சொன்னதும், முந்தி பாவித்த உமி அடுப்பு ஒன்று வாங்கலாமே என்று சொன்னதும் அவரும் நீங்கள் சொன்னதைத்தான் சொன்னார்.. எல்லாம் இனி இனிதான் திரும்ப வரும் என்று..

5 hours ago, Kapithan said:

ஒரு இரவில் நடக்கும் காரியமா ? 

நண்பன் இன்னொன்றையும் கூறினான்.

அவனது குடும்பத்தினரிடம் 200க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. அவற்றை பகலில் மேய்ப்பதற்கு(சாய்ப்பதற்கு) 2000 ரூபாயும் சாப்பாடு, தேனீர் கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் வருகிறார்கள் இல்லையாம். 

இத்தனைக்கும் வேலை இல்லாமல் பலர் ஊரில் சும்மா திரிகிறார்களாம். 

😔

 

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

நீங்கள் சொல்வது சரிதான்.. போகப் போகத் தான் அடுத்தடுத்த பொறி முறைகள் நடைமுறைக்கு வரும்.

வீட்டில் இனி காஸ் அடுப்பு இல்லை விறகு அடுப்புத்தான் என்று அப்பா சொன்னதும், முந்தி பாவித்த உமி அடுப்பு ஒன்று வாங்கலாமே என்று சொன்னதும் அவரும் நீங்கள் சொன்னதைத்தான் சொன்னார்.. எல்லாம் இனி இனிதான் திரும்ப வரும் என்று..

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

இலங்கையரசினால் போடப்பட்ட பொருளாதார தடை காலத்தில், செயற்கை உரத்தடை, பெற்றோல், மின்சார தடை என இப்போதுள்ள அனைத்து பிரச்ச்சினைகளும் இருந்தது.

ஆனால் நிலமை இந்தளவுக்கு கைமீறி போகவில்லை.

தற்போது இலங்கையில் பற்றாக்குரையாக இருப்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பான உழைக்கும் வர்க்கம்.

நான்நினக்கிறேன், தற்போதய வட பகுதி உழைக்கும் வர்க்கத்தினை வெளிநாட்டிற்கு தாரை வார்த்து கொடுத்துவிட்ட்டது போல இருக்கிறது (விடுமுறையில் சென்றாலும் உழைக்கும் எண்ணம் உள்ள உழைக்கும் வர்க்கம்).

இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவரது கருத்துகளைப்பார்க்கும் போது (என்னை தவிர்த்து) அதனை உறுதிப்படுத்துவதுபோல இருக்கிறது.

எனது கருத்து தவறானதாக இருக்கலாம், அத்துடன் அங்குள்ள எமது மக்களை குறை சொல்லும் வகையிலும் கூறப்படவில்லை.

முயற்சி என்பது ஆரம்பத்தில் மிக சிறியதாகவிருக்கும் ஆனால் அதுதான் அடிப்படை.

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
 குடி உயர கோன் உயரும்"

எவ்வளவு சிறப்பாக பொருளாதர அடிப்படை தத்துவத்தை சாதாரண நடைமுறையில் சொல்லி சென்றுள்ளார். 

முதலில் செய்யவேண்டியது வரப்பு கட்டவேண்டும் அதுதான் முயற்சி, அதனால் தண்ணி வளம் பெருகி, பயிர் விளைச்சல் அதிகர்த்து, மக்கள் செல்வச்செழிப்பு பெறுவர், மக்கள் செழித்தால் நாடு செழிக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, பகிடி said:

 

 

2 hours ago, பகிடி said:

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

பிறகுதான் விளங்கும்  /என்ஜினீரிலும் பார்க்க அவர்கள் பரவாயில்லை என்று.😀

Edited by Hana
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

தோட்டம் செய்யிறதை கேவலமாய் பார்க்கும் வரைக்கும் ஒழுங்கான சோறுகறி  கோப்பைக்கு வராது.பஞ்சமும் தீராது.

வருத்தங்களை கொண்டு வாற ரெடிமேட் சாப்பாடுகள் தான் தஞ்சம்.🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவையெல்லாம் உடனே நடைபெறும் சாத்தியமில்லை.. அத்துடன், மேலே Kapithan அண்ணா கூறியதைத்தான் எனது சகோதரியும் கூறினார்.. இரசயான உரத்தை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தீடீர் என நிறுத்தியதுடன் இப்பொழுது எரிபொருளும் இல்லாதமையால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலை, ஆனால் காலப்போக்கில் இவற்றை மீள உருவாக்கலாம் ஏனெனில் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் பழைய முறைகளை(மாடு வைத்து உழுதல் etc) நாடவைக்கும் என நினைக்கிறேன்!


கடந்த தைமாதம் அங்கே நின்றிருந்த பொழுது, அரிவி வெட்டு உள்ளது வருகிறீயா என சித்தி கேட்ட, சிறு வயது நினைவுகளில், அரிவி வெட்டும் ஆட்களுடன் போய் கதைக்கலாம் என அங்கே போனால், இப்படி ஒன்று வந்து நின்றது👇🏽.. 

9-AB2912-D-C05-D-464-A-BCE4-FAFBB5523-F1

எனது ஆர்வம் எல்லாம் போய்விட்டது.. ஏன் இப்படி என சித்தியிடம் கேட்டால் COVID ஒரு காரணம் மற்றைய இடங்களில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை, மற்றும் ஊரில் உள்ளவர்கள் கூட வருகிறார்கள் இல்லை என்றார்.. 

இதைக் கதைக்க வெளிக்கிட்டா இண்டைக்கு கதைச்சு முடியாது பிரபா. 

வெறுத்துப் போகும். 😔

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, பகிடி said:

 

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

அம்பி வேண்டாம் ரெமோ தான் வேண்டும் என்றால் வாழுவது கஸ்டம்.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இலங்கையரசினால் போடப்பட்ட பொருளாதார தடை காலத்தில், செயற்கை உரத்தடை, பெற்றோல், மின்சார தடை என இப்போதுள்ள அனைத்து பிரச்ச்சினைகளும் இருந்தது.

ஆனால் நிலமை இந்தளவுக்கு கைமீறி போகவில்லை.

தற்போது இலங்கையில் பற்றாக்குரையாக இருப்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பான உழைக்கும் வர்க்கம்.

நான்நினக்கிறேன், தற்போதய வட பகுதி உழைக்கும் வர்க்கத்தினை வெளிநாட்டிற்கு தாரை வார்த்து கொடுத்துவிட்ட்டது போல இருக்கிறது (விடுமுறையில் சென்றாலும் உழைக்கும் எண்ணம் உள்ள உழைக்கும் வர்க்கம்).

இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவரது கருத்துகளைப்பார்க்கும் போது (என்னை தவிர்த்து) அதனை உறுதிப்படுத்துவதுபோல இருக்கிறது.

எனது கருத்து தவறானதாக இருக்கலாம், அத்துடன் அங்குள்ள எமது மக்களை குறை சொல்லும் வகையிலும் கூறப்படவில்லை.

முயற்சி என்பது ஆரம்பத்தில் மிக சிறியதாகவிருக்கும் ஆனால் அதுதான் அடிப்படை.

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
 குடி உயர கோன் உயரும்"

எவ்வளவு சிறப்பாக பொருளாதர அடிப்படை தத்துவத்தை சாதாரண நடைமுறையில் சொல்லி சென்றுள்ளார். 

முதலில் செய்யவேண்டியது வரப்பு கட்டவேண்டும் அதுதான் முயற்சி, அதனால் தண்ணி வளம் பெருகி, பயிர் விளைச்சல் அதிகர்த்து, மக்கள் செல்வச்செழிப்பு பெறுவர், மக்கள் செழித்தால் நாடு செழிக்கும்.

Vasee, நீங்கள் கூறுவது போல முழுமையாக தாரைவார்த்து கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

அங்கேயும் சிறு கைத்தொழில் முயற்சிகள், விவசாயத்தை பகுதி நேர வேலையாக பார்த்தபடி அவர்களது துறைசார் வேலைகளை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய கொள்வனவு முறைகள்/எண்ணங்களிலும் சில மாற்றங்கள் தேவை. உதாரணத்திற்கு இலங்கையின் தற்பொழுதுள்ள நிலைக்கு முன்பு, அங்கே சுய கைத்தொழில் செய்யும் சிறு கைத்தொழிலாளர்களில் எத்தனை பேருக்கு உள்நாட்டு வெளிநாட்டு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது? கற்பகம் வணிக நிலையம், யாழ் கைத்தொழில் வளாகம் வெறுமையாக இருக்கும் ஆனால் Laksalaல் கூட்டமாக இருக்கும். இது எனக்கு தெரிந்த ஒரு உதாரணம்.

அதே போல இன்னொரு விடயம், எனது சகோதரி கூறினார், நானும் அதனை அவதானித்தேன். இப்பொழுது பாரம்பரியமாக சில தொழில்களை செய்து வந்தவர்கள் அனேகமாக படித்து முன்னேற அந்த இடைவெளியை நிரப்ப முடியவில்லை, எங்களது சமூகம் வேலைகளின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டதால் சில வேலைகளை செய்ய மற்றவர்களிற்கு விருப்பமில்லை. (eg: carpentry or brick layering etc). இது இலகுவில் மாறும் போலத் தெரியவில்லை. 

உள்ளூர் வேலையாட்களையும் வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களையும் நடத்தும் விதம் மாறவேண்டும், நம்பிக்கை வைக்கவேண்டும். சில தேவையற்ற விடயங்களை அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அங்கே போகும் சமயங்களில் உணர்ந்தேன்.

அதே போல இப்பொழுது அங்கே வாழும் இளைய சமூதாயம்(பெரும்பாலானவர்கள்) போர் நடந்த சமயத்தில் சிறுவர்களாகவோ, அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், அவர்களிற்கு நாங்கள் போர் காலத்தில் வாழ்ந்த விதங்களை பற்றி முழுமையாக/ஒழுங்காக கூறவில்லையோ எனவும் யோசிப்பதுண்டு. வாழ்க்கைமுறைகளில் மற்றும் சிந்தனைகளில் மாற்றம்(நல்லது கெட்டது இரண்டுமே உள்ளது. தீய சிந்தனைகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது). இனி அதனை உணருவார்கள் என நினைக்கிறேன். 

இவையெல்லாம் எனது தனிப்பட்ட அவதானிப்புகள் மட்டுமே. மற்றவர்களிற்கு இதைவிட அதிகமாகவும் தெரிந்திருக்கும். 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதைக் கதைக்க வெளிக்கிட்டா இண்டைக்கு கதைச்சு முடியாது பிரபா. 

வெறுத்துப் போகும். 😔

உண்மைதான் அண்ணா!, ஆனால் ஒட்டுமொத்தமாக அப்படியே விடவும் முடியவில்லை! 

என்னைப்பொறுத்தவரை இயலுமானவரையில் அவர்களது சிந்தனையிலும் மாற்றங்களையும், சிறு முயற்சிகளுக்கும் வழிகளை காண்பிக்கிறோம்.. நல்ல விடயங்களை இயலுமானவரையில் வெளியே கொண்டு வர விரும்புகிறோம். அவ்வளவுதான்.. let’s see!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2022 at 09:09, தமிழ் சிறி said:

இப்பவே... இங்கு உணவுப் பொருட்களின் விலை தாறு, மாறாக ஏறிக் கொண்டு போகின்றது.
1 € விற்ற சூரியகாந்தி  எண்ணைப் போத்தல், 5 € விற்கிறார்கள்.
சரி தமிழ்க்  கடையில் என்ன மாதிரி இருக்குது என்று போய் பார்த்தால்...
1 கிலோ முருங்கக்காய் 9 € விற்கிறார். 
சுத்தமான ஆனைக் கோட்டை நல்லெண்ணை, 1 லீற்றர் 6 € என்று இருந்தது.´
சூரியகாந்தியை விட... நல்லெண்ணை உடம்புக்கு நல்லது என்று விட்டு,
4 போத்தல் நல்லெண்ணையை வாங்கிக் கொண்டு வந்திட்டன்.

சிறி 5 மாதத்தின் பின் நியூயோர்க் வந்து கடைக்கு போய் சாமான்கள் வாங்க தலை சுத்துது.

பால் கலன் 3 டெலர் விற்றது இப்போ 4.50-5.50 வரை கடைக்கு கடை வித்தியாசமாக உள்ளது.
மற்றைய சாமானுகளும் இதே மாதிரியே.

தெரியாத்தனமா இளைப்பாறி விட்டனோ என்று முழுசுகிறேன்.

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சிறி 5 மாதத்தின் பின் நியூயோர்க் வந்து கடைக்கு போய் சாமான்கள் வாங்க தலை சுத்துது.

பால் கலன் 3 டெலர் விற்றது இப்போ 4.50-5.50 வரை கடைக்கு கடை வித்தியாசமாக உள்ளது.
மற்றைய சாமானுகளும் இதே மாதிரியே.

தெரியாத்தனமா இளைப்பாறி விட்டனோ என்று முழுசுகிறேன்.

இங்கும் அதே நிலை தான்...
விலை ஏறாத பொருட்களே இல்லை எனலாம்.
எங்கு போய், நிற்கப் போகிறதோ தெரியவில்லை.
உக்ரைன் போர் முடிய, அந்த நாட்டு அபிவிருத்தி என்று கிளம்புவார்கள்.
அதை நினைக்க... பகீர் என்று இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு.

ஐரோப்பாவிலும் ஆண்டாண்டு காலமாக டிரெக்டரும், ஹாவஸ்டரும் பாவிக்கவில்லை. நான்கள் 80க்கு பிறகு ஐரோப்பாவை, அமெரிக்காவை பார்த்து விட்டு - இங்கே அப்படி இருக்கவில்லை என நினைக்க கூடாது. இங்கேயும் உழவில் குதிரை உட்பட்ட விலங்குகள் பயன்படுத்த பட்டன. 

ஆனால் எமக்கு சில பத்து வருடங்கள் முன்பே அவர்கள் தமது விவசயத்தை இயந்திர மயப்படுத்து விட்டார்கள்.

நாளைக்கு ஐரோப்பாவில் உரப்பஞ்சம், எரிபொருள் பஞ்சம் வந்தாலும் இதை விட மோசமாக இருக்கும் நிலமை. அப்போ போய் ஏன் ஐரோபாவில் குதிரை கட்டி உழக்கூடாது என்று கேட்போமா?

இலங்கை மக்கள், காஸ் அடுப்புக்கு, டிரக்டெருக்கு, ஹாவஸ்டருக்கு மாறியது அல்ல பிரச்சனை. இது வளர்ந்து வரும் நாடுகள் எல்லாவறிலும் நடப்பதுதான்.

இந்த அடிப்படை பொருளாதார உபகரணகளை கூட இயக்க முடியாத அளவுக்கு நாட்டை போட்டு அடித்த  பைத்தியகார அரசுதான் பிரச்சனை.

கொலிடேயில் போகும் எமக்கு மனிதர்கள் அரிவி வெட்டுவதை, மாடு உழுவதை, விறகு அடுப்பில் சமைப்பதை பார்க்க nostalgia வாக, இனிமையாக இருக்கும்தான். ஆனால் இலங்கை என்பது “புலம்பெயர் தமிழருக்கான மியூசிய”ம் இல்லை. 

இங்கே நாம் அனுபவிக்கும் வசதிகளை, கொஞ்சம் காலம் பிந்தியாவது அவர்களும் அனுபவிப்பார்கள். இங்கே இருக்கும் தொழில் சார் நடைகுறைகள் அங்கேயும் போகும்.

2022 பொருளாதார நெருக்கடி வரும் என எதிர்பார்த்து அந்த மக்கள் 1990, 80,70,60 இல் இருந்தபடியே இருந்திருக்க வேண்டுமா?

ஆகவே ஹாவஸ்டர் வப்ததும், கட்டுமரத்தை கைவிட்டு பைபர்கிளாஸ் இயந்திர  படகுக்கு மாறியதும், டிரெக்டெரால் உழுவதும் இல்லை பிரச்சனை - இப்போ இவற்றை கைவிட்டு மீண்டும் பழைய, வினைத்திறனற்ற (ineffective ways of farming) விவசாய முறைக்கு மக்கள் போக வேண்டி இருப்பதுதான்  பிரச்சனை. 

போகத்தான் வேண்டும் வேறு வழியில்லை ஆனால் மக்கள் முன்பே மாறாமல் பழைய முறைகளில் தேங்கி இருந்திருக்கலாம் என்பது ஏற்புடையதல்ல.

Edited by goshan_che
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் இந்த “மாடு நெருக்க வெட்கம்” என்பது பற்றி.

இங்கே எழுதிய பலர், புலம்பெயர் தேசத்தில் வந்து அக்கவுண்டனாக, எஞ்சினியராக, வைத்தியராக இன்னும் பல white collar படிப்புக்களை படித்தவர்கள். நமது வாழ்க்கை துணைகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாரும் கூட இதே துறைகளில்தான்.

நீங்கள் ஏன் யாரும் ஊரில் நிண்டு மாடு மேய்க்கப்போகவில்லை?

சரி அதை விடுங்கள் - வெளிநாட்டில் விவசாயம், மீன் பிடி தொழிலை யாரும் இழிவாக பார்ப்பதில்லை - அப்படி இருக்க எத்தனை புலம்பெயர் தமிழர்கள் விவசாய நிலங்களில், மீன் பிடி படகுகளில் வேலை செய்கிறார்கள்? 3 தலைமுறையாக போகிறது விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இல்லை.

ஆனால் ஊரில் இருப்பவனை மட்டும் ஏன் மாடு மேய்க போககூடாது எண்டு நாம் கேட்ப்போம்🤣.

 

Edited by goshan_che
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உக்ரைன் போர் முடிய, அந்த நாட்டு அபிவிருத்தி என்று கிளம்புவார்கள்.
அதை நினைக்க... பகீர் என்று இருக்கின்றது.

அப்ப புட்டின் போரில் வென்று, முழு உக்ரேனையும் கைப்ற்றுவார் என்று நீங்கள் கூறியது பொய்யா அண்ணா🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.