Jump to content

இரண்டு மாதங்களில்... உணவு, நெருக்கடி? நிலாந்தன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களில் உணவு நெருக்கடி? நிலாந்தன்.

இரண்டு மாதங்களில்... உணவு, நெருக்கடி? நிலாந்தன்.

“செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு” என்று தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிபதிகளைச் சந்தித்தபின் அவர் ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.”கோத்தபாயவின் தவறான விவசாயக் கொள்கையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.ரசாயன உரமும் இல்லை, சேதன உரமும் இல்லை.உரத்தட்டுப்பாட்டுடன் இப்பொழுது எரிபொருள் பிரச்சினையும் சேர்ந்துள்ளது.எரிபொருள்,உரம் இரண்டும் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாதுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”ஒரு வருடத்திற்கு மாத்திரம் 33 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. டொலர் நெருக்கடியால் அதுவும் இல்லை. தவறான உரக் கொள்கையால் பெரும்போக விவசாயத்தில் விளைச்சல் 60 சதவிகிதத்தால் குறைந்துவிட்டது.எதிர்வரும் காலத்தில் பெரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. நடுத்தரவர்க்க மக்களால் கொள்வனவு செய்யமுடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கிறது.ஓகஸ்ட் செப்டம்பர் மாதப் பகுதிகளில் உணவு நெருக்கடி வரலாம்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்குள் பயிற்செய்கையில் ஈடுபடத் தவறினால்,நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

“எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முடியாது” என முன்னாள் விவசாயத்துறை பணிப்பாளர் கே.பி குணவர்தன தெரிவித்துள்ளார்.”கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களின் நுகர்வுக்கு அவசியமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.எனினும்,கடந்த பெரும்போகத்தின்போது, இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதால், நெல் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளில் கிடைக்கும் அறுவடை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்டவாறு விவசாயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் கருத்து தெரிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓர் உணவு நெருக்கடி தொடர்பாக எச்சரித்திருந்தார்.அவரும் அடுத்த ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இரவில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு என்று எச்சரித்திருந்தார்.

நிலவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சூம் சந்திப்பின்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கைத்தீவு இதுவரை சந்தித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதார அதிர்ச்சிகளின் போது நாட்டை பாதுகாத்தது விவசாயம்தான் என்று அவர் அதில் கூறினார். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் உரக் கொள்கையில் கை வைத்தார். ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.அவருக்கு முன் ஆட்சி செய்த எல்லாத் தலைவர்களுமே விவசாய வாக்காளர்களை கவர்வதற்காக ரசாயன உரத்துக்கு மானியம் வழங்கினார்கள். அவருடைய தமையனார் மஹிந்தவும் அவ்வாறு மானியம் வழங்கினார். இதனால் விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு உரப்பை ஒன்றை 350 ரூபாயிலிருந்து 450 வரை ரூபாய் வரையிலும் மானிய விலையில் வழங்கியது. ஆனால் கோத்தாபய ஜனாதிபதியாக வந்ததும் நாட்டை ராணுவத்தனமாக இயற்கை உரத்துக்கு மாற்றவிழைந்தார்.

அது பெருந்தொற்று நோய்க் காலம். ஏற்கனவே இனப்பிரச்சினை காரணமாக நொந்து போயிருந்த பொருளாதாரம்,ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பினால் நொந்து போயிருந்த பொருளாதாரம், ஏற்கனவே கோத்தபாயவின் வரிக் குறைப்பினால் நொந்து போயிருந்த பொருளாதாரம், அரசாங்கத்தின் புதிய உரக் கொள்கையால் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. பேராசிரியர் அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டியதுபோல இதற்குமுன் வந்த எல்லாப் பொருளாதார அதிரச்சிகளில் இருந்தும் நாட்டை பாதுகாத்த விவசாயம், இந்த முறை நாட்டைப் பாதுகாக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.கடந்த போகங்களில் செயற்கை உரப் பாவனை குறைந்தபடியால் விளைச்சல் 20 வீதம் அளவே கிடைத்தது என்று விவசாயிகள் பொதுவாகக் கூறுகிறார்கள்.ஒரு பகுதி விவசாயிகள் 12 விகிதம்தான் கிடைத்தது என்று முறைப்பாடு செய்கிறார்கள்.

இயற்கை உரம் ஓர் உன்னதமான கொள்கை. பூமியைப் பாதுகாக்க விரும்பும் எவரும் அதை ஏற்றுக் கொள்வர். ஆனால் தன் நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினரை ஈவிரக்கமின்றி புழு பூச்சிகளைப் போல கொன்றொழித்து யுத்தத்தை வெற்றிகொண்ட ஒருவர், நாட்டின் மண்ணை நேசிக்கிறேன் மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக ரசாயன உரத்தை நிறுத்துகிறேன் என்று கூறியது ஓர் அக முரணே.

பொருளாதார நெருக்கடியானது மக்களால் தாங்க முடியாத ஒரு வளர்ச்சியை அடைந்தபொழுது, முன்னைய காலங்களைப் போல அந்த அதிர்ச்சியை தாங்கக் கூடிய நிலையில் விவசாயம் இருக்கவில்லை. இவை அனைத்தினதும் திரட்டப்பட்ட விளைவே மக்களை வீதிக்குக் கொண்டுவந்தது.

விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக அரசாங்கம் ரசாயன உரத்தை அனுமதித்தது. ஆனால் மானியத்தை நிறுத்தியது.மேலும் ரசாயன உர விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தது. ஆனால் டொலர் பிரச்சினையால் திட்டமிட்டபடி ரசாயன உரத்தை கொண்டு வரமுடியவில்லை.இப்பொழுது இந்தியாவில் இருந்து பெறக்கூடிய உரத்துக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அந்த உரத்தில் இருக்கக்கூடிய நைட்ரஜனின் அளவு போதாது என்ற ஒரு சந்தேகமும் உண்டு. எதுவாயினும் அந்த உரம் இம்முறை கால போகத்துக்குள் வந்துசேராது என்று விவசாயிகள் அச்சமடைகிறார்கள். இம்முறை கால போகத்திற்கு ஒப்பீட்டளவில் பிந்தி விதைத்த விவசாயிகள் கிட்டதட்ட 30 நாட்களுக்குள் உரம் கிடைத்தால் விளைச்சலில் மாற்றத்தை காட்டலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன.

அதேசமயம் கள்ளச்சந்தையில் உரம் ஒரு பை 45000 ரூபாய் போகிறது.அந்த விலைக்கு உரத்தை வாங்கி கமம் செய்த ஒரு விவசாயி எந்த விலைக்கு நெல்லை விற்பார்? இப்பொழுது நெல் ஒரு கிலோவின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக போகிறது. ரசாயன உரம் நிறுத்தப்பட முன்பு அரசாங்கம் மானிய விலையில் 350 இலிருந்து 450 ரூபாய் வரையிலும் ஒரு உரப்பையை வழங்கியது. அப்பொழுது நெல்லின் விலை ஒரு மூட்டை ஆயிரம் வரை போனது. ஆனால் இப்பொழுது நெல்லின் விலை ஒரு மூட்டை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் உரத்தை வாங்கி பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயி எந்த விலைக்கு நெல்லை விற்பார்? அந்த விலைக்கு நெல்லை வாங்க நடுத்தர வர்க்கத்தாலும் முடியாது போகலாம் என்பதை இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். அப்படியென்றால் ஏழைகளின் பாடு எப்படியிருக்கும்? குறிப்பாக தமிழ் மக்கள் என்ன செய்ய போகிறார்கள்?

தமிழ்மக்கள் இயல்பாகவே சேமிக்கும் பழக்கம் உடையவர்கள். இப்பொழுதும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மணித்தியாலக் கணக்காக வரிசையில் நின்று மோட்டார் சைக்கிளின் வயிறு முட்ட பெட்ரோலை நிரப்பி கொண்டு வந்து வீட்டில் அதை குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து போத்தல்களில் சேமிக்கும் பலரைரைக் காணலாம்.தமிழ்மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்த காரணிகளில் முக்கியமானது சீதனம். தவிர இயல்பாகவே முன்னெச்சரிக்கை உணர்வு மிக்க மக்கள். குறிப்பாக யுத்த காலத்தில் அந்த முன்னெச்சரிக்கை உணர்வு சேமிப்பு பழக்கத்தை மேலும் ஊக்குவித்தது.இப்பொழுது பொருளாதார நெருக்கடியின் பொழுதும் தமிழ் மக்களை பாதுகாக்க போவது, அல்லது தமிழ்மக்கள் ஓரளவுக்காவது சமாளித்துக்கொண்டு தப்பிப் பிழைக்க காரணமாக அமையப் போவது அவர்களுடைய சேமிப்பு பழக்கம்தான். இது முதலாவது.

இரண்டாவதாக, தமிழ்ப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி வெளிநாட்டு காசில் தங்கியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பணம் இப்பொழுது டொலரின் பெறுமதி காரணமாக பல மடங்காகப் பெருகி வருகிறது. எனவே அதுவும் தமிழ் மக்களுக்கு ஒரு பலந்தான்.

எனினும்,அதற்காக தமிழ் மக்கள் சும்மாயிருக்கக்கூடாது.ஒரு நெருக்கடியை முன் அனுமானித்து முன்னெச்சரிக்கையோடு சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். தானியங்களைச் சேமிக்க வேண்டும். வீட்டுத்தோட்டத்தில் அக்கறை காட்ட வேண்டும். தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இது தொடர்பாக தமிழ் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும், நம்பிக்கை ஊட்ட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க கூறியதுபோல உணவு நெருக்கடி ஒன்று வரலாம் வராமலும் போகலாம். ஆனால் அதை நோக்கி தமிழ் மக்களைத் தயார்படுத்த வேண்டிய ஒரு பொறுப்பு கட்சிகளுக்கும் செயற்பாட்டு அமைப்புக்களுக்கும் அதிகாரிகளுக்கும் உண்டு.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அவ்வாறான முன்னாயத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.தமிழ்ப் பண்பாட்டில் ஏற்கனவே புழக்கத்தில் காணப்பட்ட சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது.தமிழ்ப் பாரம்பரியத்தில் ஏற்கனவே காணப்பட்ட சிறுதானியங்களுக்கு “இராச தானியம்” என்ற பெயரை வழங்கி ஒரு நிகழ்வு இன்று காலை அச்சுவேலி பத்தமேனி பகுதியில் இடம்பெற உள்ளது. இதில் விவசாயிகளுக்கு இலவசமாக சிறுதானியங்கள் வழங்கப்படும்.அவர்கள் அறுவடை முடிந்ததும் தமக்கு வழங்கப்பட்ட விதை தானியத்துக்குப் பதிலாக அதன் இரண்டு மடங்கு தானியத்தை பசுமை இயக்கத்துக்கு வழங்க வேண்டும்.அது மீண்டும் மறுசூழற்சிக்கு வழங்கப்படும்.தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் முன்னுதாரணத்தை ஏனைய கட்சிகளும் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆர்வமுடைய தரப்புக்களும் பின்பற்றலாம். மேலும் புதிய வித்தியாசமான திட்டங்களையும் யோசிக்கலாம்.

தமிழ் மக்கள் உடனடியாக முன்னாயத்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இப்பொழுது உயிர் பிழைத்திருக்கும் பெரும்பாலான தமிழர்கள் போரினால் உமிழ்ந்து விடப்பட்டவர்களே.போர்க்கால அனுபவம் எல்லா நெருக்கடிகளின் போதும் தமிழ் மக்களுக்கு உதவும். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் வருவது வரட்டும் என்று வாளாயிருக்கக்கூடாது.

https://athavannews.com/2022/1284319

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்... இரண்டு மாதங்களில் உணவு நெருக்கடி ஏற்படும் என்று... பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கிறார்கள். தமிழ்மக்கள்... உடனடியாக, வீட்டுத் தோட்டதில்... அந்த நெருக்கடியை சமாளிக்கக் கூடிய வகையில், பயிர்களை நட்டு எச்சரிக்கையாக இருக்கவும்.

இரண்டு மாத கால அவகாசம், மிகக் குறைவு என்பதால்... இன்றே ஆயத்தப் படுத்துங்கள். மக்களுக்கு... விழிப்புணர்வு ஊட்டவும், ஆலோசனை வழங்கவும்.... பல்கலைக்கழகங்களும், கமநல சேவை உத்தியோகத்தர்களும் முன் வர வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபோகம் செய்வதற்குப் போதிய தண்ணீர் கட்டுக்கரைக்குளத்தில் இருந்தும், வயலை உழுவதற்கு எரிபொருள் இல்லாததாலும், உரம் இன்மையாலும் இம்முறை சிறுபோகம் செய்ய முடியவில்லை.

இது எனது நண்பனின் ஒரு கிழமைக்கு முந்தைய  வாக்குமூலம்.

☹️

  • Sad 2
Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில்... இரண்டு மாதங்களில் உணவு நெருக்கடி ஏற்படும் என்று... பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கிறார்கள். தமிழ்மக்கள்... உடனடியாக, வீட்டுத் தோட்டதில்... அந்த நெருக்கடியை சமாளிக்கக் கூடிய வகையில், பயிர்களை நட்டு எச்சரிக்கையாக இருக்கவும்.

இரண்டு மாத கால அவகாசம், மிகக் குறைவு என்பதால்... இன்றே ஆயத்தப் படுத்துங்கள். மக்களுக்கு... விழிப்புணர்வு ஊட்டவும், ஆலோசனை வழங்கவும்.... பல்கலைக்கழகங்களும், கமநல சேவை உத்தியோகத்தர்களும் முன் வர வேண்டும்.

வெளி நாடுகளிலும் தான் வர போகுதாம். நாங்களும் சும்மா இருக்க முடியாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சிறுபோகம் செய்வதற்குப் போதிய தண்ணீர் கட்டுக்கரைக்குளத்தில் இருந்தும், வயலை உழுவதற்கு எரிபொருள் இல்லாததாலும், உரம் இன்மையாலும் இம்முறை சிறுபோகம் செய்ய முடியவில்லை.

இது எனது நண்பனின் ஒரு கிழமைக்கு முந்தைய  வாக்குமூலம்.

☹️

போகம் செய்தாலும் அரிவி வெட்ட ஆக்கள் இல்லையாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Hana said:

வெளி நாடுகளிலும் தான் வர போகுதாம். நாங்களும் சும்மா இருக்க முடியாது

இப்பவே... இங்கு உணவுப் பொருட்களின் விலை தாறு, மாறாக ஏறிக் கொண்டு போகின்றது.
1 € விற்ற சூரியகாந்தி  எண்ணைப் போத்தல், 5 € விற்கிறார்கள்.
சரி தமிழ்க்  கடையில் என்ன மாதிரி இருக்குது என்று போய் பார்த்தால்...
1 கிலோ முருங்கக்காய் 9 € விற்கிறார். 
சுத்தமான ஆனைக் கோட்டை நல்லெண்ணை, 1 லீற்றர் 6 € என்று இருந்தது.´
சூரியகாந்தியை விட... நல்லெண்ணை உடம்புக்கு நல்லது என்று விட்டு,
4 போத்தல் நல்லெண்ணையை வாங்கிக் கொண்டு வந்திட்டன்.

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சுத்தமான ஆனைக் கோட்டை நல்லெண்ணை, 1 லீற்றர் 6 € என்று இருந்தது.´
சூரியகாந்தியை விட... நல்லெண்ணை உடம்புக்கு நல்லது என்று விட்டு,
4 போத்தல் நல்லெண்ணையை வாங்கிக் கொண்டு வந்திட்டன்.

இத்தாலிக்காரர்ரை ஓலிவன் எண்ணை நூறு வீதம் சுத்தம் சுகாதாரம். உடம்புக்கும் நல்லது.

நல்லெண்ணை இஞ்சத்தையான் காலநிலைக்கு சரிவருமோ எண்டது எனக்கு சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

வயலை உழுவதற்கு எரிபொருள் இல்லாததாலும், உரம் இன்மையாலும் இம்முறை சிறுபோகம் செய்ய முடியவில்லை 

☹️

மாடு வைத்து உழுது பலகையடிக்கலாமே? நாட்டில் மாட்டுக்கும் பஞ்சமா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பகிடி said:

மாடு வைத்து உழுது பலகையடிக்கலாமே? நாட்டில் மாட்டுக்கும் பஞ்சமா?

ஒரு இரவில் நடக்கும் காரியமா ? 

நண்பன் இன்னொன்றையும் கூறினான்.

அவனது குடும்பத்தினரிடம் 200க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. அவற்றை பகலில் மேய்ப்பதற்கு(சாய்ப்பதற்கு) 2000 ரூபாயும் சாப்பாடு, தேனீர் கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் வருகிறார்கள் இல்லையாம். 

இத்தனைக்கும் வேலை இல்லாமல் பலர் ஊரில் சும்மா திரிகிறார்களாம். 

😔

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினிச் சாவைத் தவிர்க்க வீட்டுத் தோட்டங்களை அமைப்பது அவசியம் – மஹிந்த அமரவீர

பட்டினிச் சாவைத் தவிர்க்க.... வீட்டுத் தோட்டங்களை அமைப்பது, அவசியம் – மஹிந்த அமரவீர

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பஞ்சத்தை எதிர்கொள்வதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிலங்களிலும் உணவுப் பயிர்களை பயிரிடுவது மிகவும் அவசியமானது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பஞ்சத்தை எதிர்கொள்வதற்கான சாவால்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் “உணவு கிடைக்கவில்லை என்றால் நிதி இருப்பதில் அர்த்தமில்லை. எனவே, கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நிலத்திலும் உணவுப் பயிர்களை வளர்ப்பதே செய்ய வேண்டும், ”என்று அவர் குறிப்பிட்டார் .

அத்துடன் அனைத்து அமைச்சர்களும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்க வேண்டும் என்பதோடு நாடு எதிர்கொள்ளும் சவாலை முறியடிக்க, விவசாய அதிகாரிகளுடன் அரசு ஊழியர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

https://athavannews.com/2022/1284444

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

மாடு வைத்து உழுது பலகையடிக்கலாமே? நாட்டில் மாட்டுக்கும் பஞ்சமா?

இவையெல்லாம் உடனே நடைபெறும் சாத்தியமில்லை.. அத்துடன், மேலே Kapithan அண்ணா கூறியதைத்தான் எனது சகோதரியும் கூறினார்.. இரசயான உரத்தை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தீடீர் என நிறுத்தியதுடன் இப்பொழுது எரிபொருளும் இல்லாதமையால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலை, ஆனால் காலப்போக்கில் இவற்றை மீள உருவாக்கலாம் ஏனெனில் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் பழைய முறைகளை(மாடு வைத்து உழுதல் etc) நாடவைக்கும் என நினைக்கிறேன்!


கடந்த தைமாதம் அங்கே நின்றிருந்த பொழுது, அரிவி வெட்டு உள்ளது வருகிறீயா என சித்தி கேட்ட, சிறு வயது நினைவுகளில், அரிவி வெட்டும் ஆட்களுடன் போய் கதைக்கலாம் என அங்கே போனால், இப்படி ஒன்று வந்து நின்றது👇🏽.. 

9-AB2912-D-C05-D-464-A-BCE4-FAFBB5523-F1

எனது ஆர்வம் எல்லாம் போய்விட்டது.. ஏன் இப்படி என சித்தியிடம் கேட்டால் COVID ஒரு காரணம் மற்றைய இடங்களில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை, மற்றும் ஊரில் உள்ளவர்கள் கூட வருகிறார்கள் இல்லை என்றார்.. 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகிடி said:

மாடு வைத்து உழுது பலகையடிக்கலாமே? நாட்டில் மாட்டுக்கும் பஞ்சமா?

பழகின மாடு வேணுமே! இயந்திரங்களை நம்பி எல்லாத்தையும் விட்டாச்சு. எங்கட ஊரில் 2/3 பேரிடம் தான் உழவு செய்யக்கூடிய மாடுகள் இருக்கிறது.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவையெல்லாம் உடனே நடைபெறும் சாத்தியமில்லை.. அத்துடன், மேலே Kapithan அண்ணா கூறியதைத்தான் எனது சகோதரியும் கூறினார்.. இரசயான உரத்தை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தீடீர் என நிறுத்தியதுடன் இப்பொழுது எரிபொருளும் இல்லாதமையால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலை, ஆனால் காலப்போக்கில் இவற்றை மீள உருவாக்கலாம் ஏனெனில் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் பழைய முறைகளை(மாடு வைத்து உழுதல் etc) நாடவைக்கும் என நினைக்கிறேன்!


கடந்த தைமாதம் அங்கே நின்றிருந்த பொழுது, அரிவி வெட்டு உள்ளது வருகிறீயா என சித்தி கேட்ட, சிறு வயது நினைவுகளில், அரிவி வெட்டும் ஆட்களுடன் போய் கதைக்கலாம் என அங்கே போனால், இப்படி ஒன்று வந்து நின்றது👇🏽.. 

9-AB2912-D-C05-D-464-A-BCE4-FAFBB5523-F1

எனது ஆர்வம் எல்லாம் போய்விட்டது.. ஏன் இப்படி என சித்தியிடம் கேட்டால் COVID ஒரு காரணம் மற்றைய இடங்களில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை, மற்றும் ஊரில் உள்ளவர்கள் கூட வருகிறார்கள் இல்லை என்றார்.. 

நீங்கள் சொல்வது சரிதான்.. போகப் போகத் தான் அடுத்தடுத்த பொறி முறைகள் நடைமுறைக்கு வரும்.

வீட்டில் இனி காஸ் அடுப்பு இல்லை விறகு அடுப்புத்தான் என்று அப்பா சொன்னதும், முந்தி பாவித்த உமி அடுப்பு ஒன்று வாங்கலாமே என்று சொன்னதும் அவரும் நீங்கள் சொன்னதைத்தான் சொன்னார்.. எல்லாம் இனி இனிதான் திரும்ப வரும் என்று..

5 hours ago, Kapithan said:

ஒரு இரவில் நடக்கும் காரியமா ? 

நண்பன் இன்னொன்றையும் கூறினான்.

அவனது குடும்பத்தினரிடம் 200க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. அவற்றை பகலில் மேய்ப்பதற்கு(சாய்ப்பதற்கு) 2000 ரூபாயும் சாப்பாடு, தேனீர் கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் வருகிறார்கள் இல்லையாம். 

இத்தனைக்கும் வேலை இல்லாமல் பலர் ஊரில் சும்மா திரிகிறார்களாம். 

😔

 

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

நீங்கள் சொல்வது சரிதான்.. போகப் போகத் தான் அடுத்தடுத்த பொறி முறைகள் நடைமுறைக்கு வரும்.

வீட்டில் இனி காஸ் அடுப்பு இல்லை விறகு அடுப்புத்தான் என்று அப்பா சொன்னதும், முந்தி பாவித்த உமி அடுப்பு ஒன்று வாங்கலாமே என்று சொன்னதும் அவரும் நீங்கள் சொன்னதைத்தான் சொன்னார்.. எல்லாம் இனி இனிதான் திரும்ப வரும் என்று..

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

இலங்கையரசினால் போடப்பட்ட பொருளாதார தடை காலத்தில், செயற்கை உரத்தடை, பெற்றோல், மின்சார தடை என இப்போதுள்ள அனைத்து பிரச்ச்சினைகளும் இருந்தது.

ஆனால் நிலமை இந்தளவுக்கு கைமீறி போகவில்லை.

தற்போது இலங்கையில் பற்றாக்குரையாக இருப்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பான உழைக்கும் வர்க்கம்.

நான்நினக்கிறேன், தற்போதய வட பகுதி உழைக்கும் வர்க்கத்தினை வெளிநாட்டிற்கு தாரை வார்த்து கொடுத்துவிட்ட்டது போல இருக்கிறது (விடுமுறையில் சென்றாலும் உழைக்கும் எண்ணம் உள்ள உழைக்கும் வர்க்கம்).

இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவரது கருத்துகளைப்பார்க்கும் போது (என்னை தவிர்த்து) அதனை உறுதிப்படுத்துவதுபோல இருக்கிறது.

எனது கருத்து தவறானதாக இருக்கலாம், அத்துடன் அங்குள்ள எமது மக்களை குறை சொல்லும் வகையிலும் கூறப்படவில்லை.

முயற்சி என்பது ஆரம்பத்தில் மிக சிறியதாகவிருக்கும் ஆனால் அதுதான் அடிப்படை.

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
 குடி உயர கோன் உயரும்"

எவ்வளவு சிறப்பாக பொருளாதர அடிப்படை தத்துவத்தை சாதாரண நடைமுறையில் சொல்லி சென்றுள்ளார். 

முதலில் செய்யவேண்டியது வரப்பு கட்டவேண்டும் அதுதான் முயற்சி, அதனால் தண்ணி வளம் பெருகி, பயிர் விளைச்சல் அதிகர்த்து, மக்கள் செல்வச்செழிப்பு பெறுவர், மக்கள் செழித்தால் நாடு செழிக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, பகிடி said:

 

 

2 hours ago, பகிடி said:

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

பிறகுதான் விளங்கும்  /என்ஜினீரிலும் பார்க்க அவர்கள் பரவாயில்லை என்று.😀

Edited by Hana
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

தோட்டம் செய்யிறதை கேவலமாய் பார்க்கும் வரைக்கும் ஒழுங்கான சோறுகறி  கோப்பைக்கு வராது.பஞ்சமும் தீராது.

வருத்தங்களை கொண்டு வாற ரெடிமேட் சாப்பாடுகள் தான் தஞ்சம்.🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவையெல்லாம் உடனே நடைபெறும் சாத்தியமில்லை.. அத்துடன், மேலே Kapithan அண்ணா கூறியதைத்தான் எனது சகோதரியும் கூறினார்.. இரசயான உரத்தை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தீடீர் என நிறுத்தியதுடன் இப்பொழுது எரிபொருளும் இல்லாதமையால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலை, ஆனால் காலப்போக்கில் இவற்றை மீள உருவாக்கலாம் ஏனெனில் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் பழைய முறைகளை(மாடு வைத்து உழுதல் etc) நாடவைக்கும் என நினைக்கிறேன்!


கடந்த தைமாதம் அங்கே நின்றிருந்த பொழுது, அரிவி வெட்டு உள்ளது வருகிறீயா என சித்தி கேட்ட, சிறு வயது நினைவுகளில், அரிவி வெட்டும் ஆட்களுடன் போய் கதைக்கலாம் என அங்கே போனால், இப்படி ஒன்று வந்து நின்றது👇🏽.. 

9-AB2912-D-C05-D-464-A-BCE4-FAFBB5523-F1

எனது ஆர்வம் எல்லாம் போய்விட்டது.. ஏன் இப்படி என சித்தியிடம் கேட்டால் COVID ஒரு காரணம் மற்றைய இடங்களில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை, மற்றும் ஊரில் உள்ளவர்கள் கூட வருகிறார்கள் இல்லை என்றார்.. 

இதைக் கதைக்க வெளிக்கிட்டா இண்டைக்கு கதைச்சு முடியாது பிரபா. 

வெறுத்துப் போகும். 😔

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, பகிடி said:

 

அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்? 🤣

அம்பி வேண்டாம் ரெமோ தான் வேண்டும் என்றால் வாழுவது கஸ்டம்.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இலங்கையரசினால் போடப்பட்ட பொருளாதார தடை காலத்தில், செயற்கை உரத்தடை, பெற்றோல், மின்சார தடை என இப்போதுள்ள அனைத்து பிரச்ச்சினைகளும் இருந்தது.

ஆனால் நிலமை இந்தளவுக்கு கைமீறி போகவில்லை.

தற்போது இலங்கையில் பற்றாக்குரையாக இருப்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பான உழைக்கும் வர்க்கம்.

நான்நினக்கிறேன், தற்போதய வட பகுதி உழைக்கும் வர்க்கத்தினை வெளிநாட்டிற்கு தாரை வார்த்து கொடுத்துவிட்ட்டது போல இருக்கிறது (விடுமுறையில் சென்றாலும் உழைக்கும் எண்ணம் உள்ள உழைக்கும் வர்க்கம்).

இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவரது கருத்துகளைப்பார்க்கும் போது (என்னை தவிர்த்து) அதனை உறுதிப்படுத்துவதுபோல இருக்கிறது.

எனது கருத்து தவறானதாக இருக்கலாம், அத்துடன் அங்குள்ள எமது மக்களை குறை சொல்லும் வகையிலும் கூறப்படவில்லை.

முயற்சி என்பது ஆரம்பத்தில் மிக சிறியதாகவிருக்கும் ஆனால் அதுதான் அடிப்படை.

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
 குடி உயர கோன் உயரும்"

எவ்வளவு சிறப்பாக பொருளாதர அடிப்படை தத்துவத்தை சாதாரண நடைமுறையில் சொல்லி சென்றுள்ளார். 

முதலில் செய்யவேண்டியது வரப்பு கட்டவேண்டும் அதுதான் முயற்சி, அதனால் தண்ணி வளம் பெருகி, பயிர் விளைச்சல் அதிகர்த்து, மக்கள் செல்வச்செழிப்பு பெறுவர், மக்கள் செழித்தால் நாடு செழிக்கும்.

Vasee, நீங்கள் கூறுவது போல முழுமையாக தாரைவார்த்து கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

அங்கேயும் சிறு கைத்தொழில் முயற்சிகள், விவசாயத்தை பகுதி நேர வேலையாக பார்த்தபடி அவர்களது துறைசார் வேலைகளை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய கொள்வனவு முறைகள்/எண்ணங்களிலும் சில மாற்றங்கள் தேவை. உதாரணத்திற்கு இலங்கையின் தற்பொழுதுள்ள நிலைக்கு முன்பு, அங்கே சுய கைத்தொழில் செய்யும் சிறு கைத்தொழிலாளர்களில் எத்தனை பேருக்கு உள்நாட்டு வெளிநாட்டு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது? கற்பகம் வணிக நிலையம், யாழ் கைத்தொழில் வளாகம் வெறுமையாக இருக்கும் ஆனால் Laksalaல் கூட்டமாக இருக்கும். இது எனக்கு தெரிந்த ஒரு உதாரணம்.

அதே போல இன்னொரு விடயம், எனது சகோதரி கூறினார், நானும் அதனை அவதானித்தேன். இப்பொழுது பாரம்பரியமாக சில தொழில்களை செய்து வந்தவர்கள் அனேகமாக படித்து முன்னேற அந்த இடைவெளியை நிரப்ப முடியவில்லை, எங்களது சமூகம் வேலைகளின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டதால் சில வேலைகளை செய்ய மற்றவர்களிற்கு விருப்பமில்லை. (eg: carpentry or brick layering etc). இது இலகுவில் மாறும் போலத் தெரியவில்லை. 

உள்ளூர் வேலையாட்களையும் வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களையும் நடத்தும் விதம் மாறவேண்டும், நம்பிக்கை வைக்கவேண்டும். சில தேவையற்ற விடயங்களை அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அங்கே போகும் சமயங்களில் உணர்ந்தேன்.

அதே போல இப்பொழுது அங்கே வாழும் இளைய சமூதாயம்(பெரும்பாலானவர்கள்) போர் நடந்த சமயத்தில் சிறுவர்களாகவோ, அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், அவர்களிற்கு நாங்கள் போர் காலத்தில் வாழ்ந்த விதங்களை பற்றி முழுமையாக/ஒழுங்காக கூறவில்லையோ எனவும் யோசிப்பதுண்டு. வாழ்க்கைமுறைகளில் மற்றும் சிந்தனைகளில் மாற்றம்(நல்லது கெட்டது இரண்டுமே உள்ளது. தீய சிந்தனைகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது). இனி அதனை உணருவார்கள் என நினைக்கிறேன். 

இவையெல்லாம் எனது தனிப்பட்ட அவதானிப்புகள் மட்டுமே. மற்றவர்களிற்கு இதைவிட அதிகமாகவும் தெரிந்திருக்கும். 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதைக் கதைக்க வெளிக்கிட்டா இண்டைக்கு கதைச்சு முடியாது பிரபா. 

வெறுத்துப் போகும். 😔

உண்மைதான் அண்ணா!, ஆனால் ஒட்டுமொத்தமாக அப்படியே விடவும் முடியவில்லை! 

என்னைப்பொறுத்தவரை இயலுமானவரையில் அவர்களது சிந்தனையிலும் மாற்றங்களையும், சிறு முயற்சிகளுக்கும் வழிகளை காண்பிக்கிறோம்.. நல்ல விடயங்களை இயலுமானவரையில் வெளியே கொண்டு வர விரும்புகிறோம். அவ்வளவுதான்.. let’s see!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2022 at 09:09, தமிழ் சிறி said:

இப்பவே... இங்கு உணவுப் பொருட்களின் விலை தாறு, மாறாக ஏறிக் கொண்டு போகின்றது.
1 € விற்ற சூரியகாந்தி  எண்ணைப் போத்தல், 5 € விற்கிறார்கள்.
சரி தமிழ்க்  கடையில் என்ன மாதிரி இருக்குது என்று போய் பார்த்தால்...
1 கிலோ முருங்கக்காய் 9 € விற்கிறார். 
சுத்தமான ஆனைக் கோட்டை நல்லெண்ணை, 1 லீற்றர் 6 € என்று இருந்தது.´
சூரியகாந்தியை விட... நல்லெண்ணை உடம்புக்கு நல்லது என்று விட்டு,
4 போத்தல் நல்லெண்ணையை வாங்கிக் கொண்டு வந்திட்டன்.

சிறி 5 மாதத்தின் பின் நியூயோர்க் வந்து கடைக்கு போய் சாமான்கள் வாங்க தலை சுத்துது.

பால் கலன் 3 டெலர் விற்றது இப்போ 4.50-5.50 வரை கடைக்கு கடை வித்தியாசமாக உள்ளது.
மற்றைய சாமானுகளும் இதே மாதிரியே.

தெரியாத்தனமா இளைப்பாறி விட்டனோ என்று முழுசுகிறேன்.

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சிறி 5 மாதத்தின் பின் நியூயோர்க் வந்து கடைக்கு போய் சாமான்கள் வாங்க தலை சுத்துது.

பால் கலன் 3 டெலர் விற்றது இப்போ 4.50-5.50 வரை கடைக்கு கடை வித்தியாசமாக உள்ளது.
மற்றைய சாமானுகளும் இதே மாதிரியே.

தெரியாத்தனமா இளைப்பாறி விட்டனோ என்று முழுசுகிறேன்.

இங்கும் அதே நிலை தான்...
விலை ஏறாத பொருட்களே இல்லை எனலாம்.
எங்கு போய், நிற்கப் போகிறதோ தெரியவில்லை.
உக்ரைன் போர் முடிய, அந்த நாட்டு அபிவிருத்தி என்று கிளம்புவார்கள்.
அதை நினைக்க... பகீர் என்று இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு.

ஐரோப்பாவிலும் ஆண்டாண்டு காலமாக டிரெக்டரும், ஹாவஸ்டரும் பாவிக்கவில்லை. நான்கள் 80க்கு பிறகு ஐரோப்பாவை, அமெரிக்காவை பார்த்து விட்டு - இங்கே அப்படி இருக்கவில்லை என நினைக்க கூடாது. இங்கேயும் உழவில் குதிரை உட்பட்ட விலங்குகள் பயன்படுத்த பட்டன. 

ஆனால் எமக்கு சில பத்து வருடங்கள் முன்பே அவர்கள் தமது விவசயத்தை இயந்திர மயப்படுத்து விட்டார்கள்.

நாளைக்கு ஐரோப்பாவில் உரப்பஞ்சம், எரிபொருள் பஞ்சம் வந்தாலும் இதை விட மோசமாக இருக்கும் நிலமை. அப்போ போய் ஏன் ஐரோபாவில் குதிரை கட்டி உழக்கூடாது என்று கேட்போமா?

இலங்கை மக்கள், காஸ் அடுப்புக்கு, டிரக்டெருக்கு, ஹாவஸ்டருக்கு மாறியது அல்ல பிரச்சனை. இது வளர்ந்து வரும் நாடுகள் எல்லாவறிலும் நடப்பதுதான்.

இந்த அடிப்படை பொருளாதார உபகரணகளை கூட இயக்க முடியாத அளவுக்கு நாட்டை போட்டு அடித்த  பைத்தியகார அரசுதான் பிரச்சனை.

கொலிடேயில் போகும் எமக்கு மனிதர்கள் அரிவி வெட்டுவதை, மாடு உழுவதை, விறகு அடுப்பில் சமைப்பதை பார்க்க nostalgia வாக, இனிமையாக இருக்கும்தான். ஆனால் இலங்கை என்பது “புலம்பெயர் தமிழருக்கான மியூசிய”ம் இல்லை. 

இங்கே நாம் அனுபவிக்கும் வசதிகளை, கொஞ்சம் காலம் பிந்தியாவது அவர்களும் அனுபவிப்பார்கள். இங்கே இருக்கும் தொழில் சார் நடைகுறைகள் அங்கேயும் போகும்.

2022 பொருளாதார நெருக்கடி வரும் என எதிர்பார்த்து அந்த மக்கள் 1990, 80,70,60 இல் இருந்தபடியே இருந்திருக்க வேண்டுமா?

ஆகவே ஹாவஸ்டர் வப்ததும், கட்டுமரத்தை கைவிட்டு பைபர்கிளாஸ் இயந்திர  படகுக்கு மாறியதும், டிரெக்டெரால் உழுவதும் இல்லை பிரச்சனை - இப்போ இவற்றை கைவிட்டு மீண்டும் பழைய, வினைத்திறனற்ற (ineffective ways of farming) விவசாய முறைக்கு மக்கள் போக வேண்டி இருப்பதுதான்  பிரச்சனை. 

போகத்தான் வேண்டும் வேறு வழியில்லை ஆனால் மக்கள் முன்பே மாறாமல் பழைய முறைகளில் தேங்கி இருந்திருக்கலாம் என்பது ஏற்புடையதல்ல.

Edited by goshan_che
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் இந்த “மாடு நெருக்க வெட்கம்” என்பது பற்றி.

இங்கே எழுதிய பலர், புலம்பெயர் தேசத்தில் வந்து அக்கவுண்டனாக, எஞ்சினியராக, வைத்தியராக இன்னும் பல white collar படிப்புக்களை படித்தவர்கள். நமது வாழ்க்கை துணைகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாரும் கூட இதே துறைகளில்தான்.

நீங்கள் ஏன் யாரும் ஊரில் நிண்டு மாடு மேய்க்கப்போகவில்லை?

சரி அதை விடுங்கள் - வெளிநாட்டில் விவசாயம், மீன் பிடி தொழிலை யாரும் இழிவாக பார்ப்பதில்லை - அப்படி இருக்க எத்தனை புலம்பெயர் தமிழர்கள் விவசாய நிலங்களில், மீன் பிடி படகுகளில் வேலை செய்கிறார்கள்? 3 தலைமுறையாக போகிறது விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இல்லை.

ஆனால் ஊரில் இருப்பவனை மட்டும் ஏன் மாடு மேய்க போககூடாது எண்டு நாம் கேட்ப்போம்🤣.

 

Edited by goshan_che
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உக்ரைன் போர் முடிய, அந்த நாட்டு அபிவிருத்தி என்று கிளம்புவார்கள்.
அதை நினைக்க... பகீர் என்று இருக்கின்றது.

அப்ப புட்டின் போரில் வென்று, முழு உக்ரேனையும் கைப்ற்றுவார் என்று நீங்கள் கூறியது பொய்யா அண்ணா🤣

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.