Jump to content

காதல் பொன் மானே - காசு வேணுமடி என்னன்பே - மோசடி உலகம் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதல் பொன் மானே - காசு வேணுமடி என்னன்பே - மோசடி உலகம் 

சில மாதங்களுக்கு முன்னர், நடிகர் ஆரியா, ஜேர்மன் வாழ் தமிழ் பெண் ஒருவரை சமூக ஊடகம் ஊடாக அடிக்கடி பேசி திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து, பணம் வாங்கி ஏமாத்தியதாக செய்தி வந்தது.

சென்னை போலீசார் இதுகுறித்து சிலரை கைது செய்தனர். ஆர்யாவுக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை என்றும் அறிவித்தனர்.

இங்கே பலர் கூட, போலீசார் காசு வாங்கிக் கொண்டு ஆர்யாவை தப்ப வைத்து இருப்பார்கள் என்று எழுதினார்கள். இலங்கையில் கூட, முகப்புத்தக மோசடி ஒன்றில், கண்டியில் ஒரு விதவை ஆசிரியையிடம்  25 லட்ச்சம் மோசடி குறித்து போலீசார் அறிவித்து இருந்தனர்.

இன்று செவ்வாய் காலை, பிபிசி யில் ஒளிபரப்பிய நிகழ்வு ஒன்றில் இந்த வகை மோசடியில், மேற்கு ஆப்பிரிக்கர்கள் (அநேகமாக நைஜீரியர்கள்) எப்படி அதி நவீனத்துவம் கொண்டு இயங்குகிறார்கள் என்பதை விளக்கினார்கள். 

பெண்களை, முக்கியமாக தனிமையில் வாடும் நடுத்தர பெண்களை இவர்கள் இலக்கு வைக்கிறார்கள்.

ஜோர்ஜ் குளூனி, ஜோன்னி டெப் போன்ற சமூகத்தில் பிரபல்யமான முகங்களை எடுத்துக்கொண்டு, அவர்கள் விடியோவில் வேறு எங்கோ பேசும் துண்டுகளை எடுத்து, அந்த பெண்கள், போனில், பேசும்போது வலையில் விழுந்து விட்டால்,  ஸ்கைப் மூலம் தொடர்பு கொள்வார்கள். 

இன்டர்நெட் தொடர்பு சரியில்லை என்று சொல்லிக்கொண்டே, how are you போன்ற, குறித்த பிரபல நபர், வீடியோவில் வேறு யாருக்கோ சொன்ன, துண்டுகளை ஓட வைத்து, அந்த பெண்ணுக்கு சொல்லப்படுவதாக காட்டுவர். பெண்ணால் கேட்க்கப்படும் கேள்விக்குரிய பதில் வீடியோ இல்லாவிடில், விடியோவை நிறுத்தி படம் மட்டும் அப்படியே தெரிவதாக வைத்துக்கொண்டு, அவர்கள் குரல் மட்டும் வரும்.

பெண்ணும், இன்டர்நெட் கோளாறு என்று ஏமாறுவர். இவற்றினை சிறப்பாக ஒழுங்கிணைக்க, மென்பொருளை பாவிக்கிறார்கள் என்பதால், சந்தேகமும் வராது என்கிறார், நிகழ்ச்சிக்கு வந்த ஒரு IT பொறியாளர்.

வழக்கு பிரச்சனையில் இருக்கும் டெப்பும், காதல் ரசம் சொட்டி...... வழக்கு முடித்து, உன்னுடன் வந்து நிம்மதியாக இருக்கப்போகிறேன் என்பார்..... வழக்கு நடத்த... கடனாக, காசு கேட்பார். 

கேட்பவர்.... நைஜீரியன் கறுவல் என்றால், காசா கிடைக்கும்... அது, யாருக்கும் தெரியாத, ரகசிய காதலன், ஜோர்ஜ் குளூனி, மனைவியை விவாகரத்து செய்து விட்டு இருக்கும் ஜோனி டெப்.... அல்லது பில் கேட் (10 பில்லியன், தர்ம காரியம் ஒன்றுக்கு கொடுக்கிறேன் அன்பே, உனது பெயரிலும் கொஞ்சம் போக வேண்டமா என்று உருகுவார்)

ஏமாந்து போன பெண்ணும், பணம் அனுப்புவார்....

டெப்பும், மேலும் தேறும் வரை காதல் பொன்மானே என்று பொலிவார். அதுக்கு மேல் தேறாது என்றவுடன், காணாமல் போவார்.

ஆக.... romance கடந்து finance போகும் போது விழித்துக் கொள்ளுங்கள் என்கிறது பிபிசி.

டேட்டிங் தளங்களிலேயே இந்த காதல் ஆரம்பித்து, அந்த தளங்களுக்கு வெளியே தள்ளிக்கொண்டு போயே பணம் பறிக்கிறார்கள்.

ஆகவே, டேட்டிங் தளங்களில் உள்ள, பாதுகாப்பு, இல்லாமல் போகிறது. இத்தகைய தளங்களுக்கு வெளியே வருமாறு கோரப்பட்டால், சந்தேகமுறுங்கள் என்கிறது பிபிசி.

அனைத்துக்கும் மேலாக, பண கோரிக்கை வந்தால், மோசடியின் ஆரம்பம் என்று சமிக்கை என்று புரிந்த கொள்ளுங்கள். எவ்வளவு விரைவாக, முறிக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்கள் பணம் தப்பும் என்கிறது பிபிசி.

கேட்பது இனாமாக அல்ல, கடனாக....

போனால், வராது. 

ஏமாந்த சில பெண்களை காட்டினார்கள். தமது முட்டாள் தனம்  குறித்து, தம் மேலே கோபப்பட்டார்கள். தனது மகள் எச்சரித்திருந்தும், தனது இணைய காதலை ரகசியமாக வைத்திருக்க விரும்பியதால், £45,000 இழந்து விட்டதாக ஒரு பெண் அழுதார்.

இன்னோரு பெண்ணோ, காசு போனால் பரவாயில்ல.... அந்த இனைய தெய்வீக காதல், பொய்யா (கோபால்) என்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை என்று புலம்பினார். அவ்வளவு தூரம் காதல் ரசம் சொட்டி, காசை கிளப்பி இருக்கிறார்கள். 

இப்போது, ஆர்யா விடயத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது.

நாளை, விஜயும் வருவார், அஜித்தும் வருவார்.... தகப்பன், வைத்திய செலவுக்கு, காசு கேட்டு, கலியாணம் கட்டாத சிம்புவும் வரலாம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாத்துபவர்கள் இருப்பார்கள். 

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆக.... romance கடந்து finance போகும் போது விழித்துக் கொள்ளுங்கள் என்கிறது பிபிசி.

டேட்டிங் தளங்களிலேயே இந்த காதல் ஆரம்பித்து, அந்த தளங்களுக்கு வெளியே தள்ளிக்கொண்டு போயே பணம் பறிக்கிறார்கள்.

ஆகவே, டேட்டிங் தளங்களில் உள்ள, பாதுகாப்பு, இல்லாமல் போகிறது. இத்தகைய தளங்களுக்கு வெளியே வருமாறு கோரப்பட்டால், சந்தேகமுறுங்கள் என்கிறது பிபிசி.

அனைத்துக்கும் மேலாக, பண கோரிக்கை வந்தால், மோசடியின் ஆரம்பம் என்று சமிக்கை என்று புரிந்த கொள்ளுங்கள். எவ்வளவு விரைவாக, முறிக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்கள் பணம் தப்பும் என்கிறது பிபிசி.

கேட்பது இனாமாக அல்ல, கடனாக....

போனால், வராது. 

வணக்கம் நாதமுனி அண்ணா!! ரமணிசந்திரன் உங்களுடைய கட்டுரையின் தலைப்புகளைப் பார்த்து வியக்கப்போகிறார் 😁.. 

ஆனாலும் எழுதிய விஷயம் போல நிறைய நடக்கிறது.. இந்த documentary, Netflixல் வந்தது.. காதல் கண்ணை மறைக்க எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் இந்த பெண்கள் என்பதை நினைக்க கவலையாக இருந்தது.. ஆனாலும் ஏமாற்றுபவர்கள் தப்பித்துக்கொண்டே போகிறார்கள்.. 

தகவலுக்கு நன்றி!!

1 hour ago, Nathamuni said:

கேட்பவர்.... நைஜீரியன் கறுவல் என்றால், காசா கிடைக்கும்..

ஆபிரிக்கர்களை விளித்து எழுதிய இந்த சொல் சரியானதா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆபிரிக்கர்களை விளித்து எழுதிய இந்த சொல் சரியானதா? 

பின்னூட்டத்துக்கு நன்றி...

நீங்கள் 'political corrections' குறித்து மிகவும் கரிசனை கொள்கிறீர்கள்.

பிபிசி யில், நாசூக்கா, When we analysed the IP address, it was from West Africa where, these kind of activities are at very high level', என்றார்கள்.

கறுவல்களை அப்படித்தானே சொல்கிறோம். இங்கே வெள்ளை என்றும் சொல்கிறோமே. ஒரு நிறுவனத்தில், இன்று போய், நேற்று பேசிய நபர் இல்லாவிடில், பெயர் தெரியாவிடில், எப்படி அவரை குறிப்பிடுவீர்கள்? I was served by an African guy yesterday / A black gentleman served me yesterday..... 

நாம பிரௌன்.... இல்லையா.

கருவேப்பிலை மரம் வளர்ப்பில்..... தேடிப்பிடிச்சு ஒரு வெள்ளையம்மாவை கொண்டுவந்திருக்கிறேன்...

எப்படி வளர்க்கிறது என்று விளங்கப்படுத்திறா, பாருங்கள் என்று போட்டேனே.

அது சரி... இது பிழையா?

அனைத்துக்கும் மேலே, இவர்கள் எமகாதக திருடர்கள்....தமது முகத்தை காட்டாமல், பிரபலமான வெள்ளையர் முகத்தினை காண்பித்து, பணத்தினை பிடுங்குவது, சரியானதுதானா?  வெள்ளையர்களாக நடித்து, அவர்கள் செய்வதே, இன ஏமாற்று வாதம் அல்லவா?

அதேவேளை, தளத்தில் நீக்கப்பட்ட சொற்கள் உள்ளன. நீக்....(neg...) என்று அவர்களை குறித்த சொல், முன்னர் நீக்கப்பட்டுள்ளது. 

அனைத்துக்கும் மேலே.... நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்... வேலை நடுவே.... ஸ்ட்ரெஸ் குறைக்கவே வருகிறோம்...

அழகான பெண்கள் குறித்து கருத்தும் கூட... நகைசுவைக்கானது...

சீரியஸ் ஆக அனைத்தையுமே எடுக்கிறீர்கள் போலுள்ளது. ரிலாக்ஸ் ப்ளீஸ்..... 

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பின்னூட்டத்துக்கு நன்றி...

நீங்கள் 'political corrections' குறித்து மிகவும் கரிசனை கொள்கிறீர்கள்.

பிபிசி யில், நாசூக்கா, When we analysed the IP address, it was from West Africa where, these kind of activities are at very high level', என்றார்கள்.

கறுவல்களை அப்படித்தானே சொல்கிறோம். இங்கே வெள்ளை என்றும் சொல்கிறோமே. ஒரு நிறுவனத்தில், இன்று போய், நேற்று பேசிய நபர் இல்லாவிடில், பெயர் தெரியாவிடில், எப்படி அவரை குறிப்பிடுவீர்கள்? I was served by an African guy yesterday / A black gentleman served me yesterday..... 

நாம பிரௌன்.... இல்லையா.

கருவேப்பிலை மரம் வளர்ப்பில்..... தேடிப்பிடிச்சு ஒரு வெள்ளையம்மாவை கொண்டுவந்திருக்கிறேன்...

எப்படி வளர்க்கிறது என்று விளங்கப்படுத்திறா, பாருங்கள் என்று போட்டேனே.

அது சரி... இது பிழையா?

அனைத்துக்கும் மேலே, இவர்கள் எமகாதக திருடர்கள்....தமது முகத்தை காட்டாமல், பிரபலமான வெள்ளையர் முகத்தினை காண்பித்து, பணத்தினை பிடுங்குவது, சரியானதுதானா?  வெள்ளையர்களாக நடித்து, அவர்கள் செய்வதே, இன ஏமாற்று வாதம் அல்லவா?

அதேவேளை, தளத்தில் நீக்கப்பட்ட சொற்கள் உள்ளன. நீக்....(neg...) என்று அவர்களை குறித்த சொல், முன்னர் நீக்கப்பட்டுள்ளது. 

அனைத்துக்கும் மேலே.... நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்... வேலை நடுவே.... ஸ்ட்ரெஸ் குறைக்கவே வருகிறோம்...

அழகான பெண்கள் குறித்து கருத்தும் கூட... நகைசுவைக்கானது...

சீரியஸ் ஆக அனைத்தையுமே எடுக்கிறீர்கள் போலுள்ளது. ரிலாக்ஸ் ப்ளீஸ்..... 

அந்த அழகான பெண்கள் விடயத்தை நான் சீரியசாக எடுக்கவில்லை..😊.. 

மேலும், எனக்கு தெரிந்த வீட்டில் பதின்ம வயது பிள்ளையிடம்(இங்கே பிறந்து வளர்ந்தவர்) ஆபிரிக்கர்களை இப்படி கூறுவதுண்டு என கதைப்பொழுது அப்படி கதைப்பது சரியல்ல என்றார்.. அதனால்தான் உங்களிடம் கேட்டேன். நிறத்தை வைத்தோ உருவத்தை வைத்தோ கதைப்பதை அனேகர் விரும்புவதில்லை எ்ன்றுதான் அறிந்திருந்தேன்.. அவ்வளவுதான்.. 

அதே போல நீங்கள் கூறிய கறிவேப்பிலை கதையை பாரக்கவில்லை என்பதால் கருத்து கூறமுடியவில்லை..  

உங்களது ஆலேசனைக்கும் நன்றி!!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அந்த அழகான பெண்கள் விடயத்தை நான் சீரியசாக எடுக்கவில்லை..😊.. 

மேலும், எனக்கு தெரிந்த வீட்டில் பதின்ம வயது பிள்ளையிடம்(இங்கே பிறந்து வளர்ந்தவர்) ஆபிரிக்கர்களை இப்படி கூறுவதுண்டு என கதைப்பொழுது அப்படி கதைப்பது சரியல்ல என்றார்.. அதனால்தான் உங்களிடம் கேட்டேன். நிறத்தை வைத்தோ உருவத்தை வைத்தோ கதைப்பதை அனேகர் விரும்புவதில்லை எ்ன்றுதான் அறிந்திருந்தேன்.. அவ்வளவுதான்.. 

அதே போல நீங்கள் கூறிய கறிவேப்பிலை கதையை பாரக்கவில்லை என்பதால் கருத்து கூறமுடியவில்லை..  

உங்களது ஆலேசனைக்கும் நன்றி!!

இங்கே, வந்த புதிதில், எனது அண்ணா, KFC யில் வேலை பார்த்தார்.

யோவ் பாக்கி, இரண்டு துண்டு சிக்கன் தான் என்று கேட்ப்பார்கள் என்றார். Dogs & Blacks are not allowed என்று board போட்டு வைத்திருந்த நாடு....

இப்போது காலம் மாறி விட்டது.

நிறத்தினை வைத்து தான் இப்போதும் பேசுகிறார்கள்.

அரச படிவங்களை நிரப்பும்போது, பிரிட்டிஷ் வைட், பிரிட்டிஷ் பிளாக், பிரிட்டிஷ் ஏசியன் என்று குறியீடு செய்யுமாறு தான் கேட்க்கிறார்கள்.

ஆகவே அதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அந்த அழகான பெண்கள் விடயத்தை நான் சீரியசாக எடுக்கவில்லை..😊.. 

மேலும், எனக்கு தெரிந்த வீட்டில் பதின்ம வயது பிள்ளையிடம்(இங்கே பிறந்து வளர்ந்தவர்) ஆபிரிக்கர்களை இப்படி கூறுவதுண்டு என கதைப்பொழுது அப்படி கதைப்பது சரியல்ல என்றார்.. அதனால்தான் உங்களிடம் கேட்டேன். நிறத்தை வைத்தோ உருவத்தை வைத்தோ கதைப்பதை அனேகர் விரும்புவதில்லை எ்ன்றுதான் அறிந்திருந்தேன்.. அவ்வளவுதான்.. 

அதே போல நீங்கள் கூறிய கறிவேப்பிலை கதையை பாரக்கவில்லை என்பதால் கருத்து கூறமுடியவில்லை..  

உங்களது ஆலேசனைக்கும் நன்றி!!

நான் ஒரு கறுப்பு  மனிதன் என்று சொல்வதில் பெருமை கொள்பவர்கள் அவர்கள் நாங்கள் கருப்பாக இருந்தும் கறுப்பை  ஏளனமாக பார்க்கும் கூட்டம் .  அந்த பதின்ம வயது பிள்ளளையிடம் கேட்டு இருக்கலாம் எப்படி அவர்களை அழைப்பது என்று  நூற்றாண்டுகளாக  மறைமுகமாக எமது ஜீனில் மறைமுகமாக எழுதப்பட்ட தாழ்வு மனப்பான்மை .

கறுப்பை  கறுப்பென்று கூறாமல் என்னவென்று சொல்வது ?

சில சொற்களை மறக்க நினைக்கிறார்கள் அவை  இங்கு வேண்டாம் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

இங்கே, வந்த புதிதில், எனது அண்ணா, KFC யில் வேலை பார்த்தார்.

யோவ் பாக்கி, இரண்டு துண்டு சிக்கன் தான் என்று கேட்ப்பார்கள் என்றார். Dog & Blacks are not allowed என்று board போட்டு வைத்திருந்த நாடு....

இப்போது காலம் மாறி விட்டது.

நிறத்தினை வைத்து தான் இப்போதும் பேசுகிறார்கள்.

அரச படிவங்களை நிரப்பும்போது, பிரிட்டிஷ் வைட், பிரிட்டிஷ் பிளாக், பிரிட்டிஷ் ஏசியன் என்று குறியீடு செய்யுமாறு தான் கேட்க்கிறார்கள்.

ஆகவே அதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

சில சொற்கள் ஏற்புடயன். சிலது இல்லை.

White (வெள்ளை), black (கறுப்பு), ஆசியன் என்பது ஏற்புடையது.

ஆனால் பிளக்கி (கறுவல்?) பாக்கி, நிகர், வைட்டி, ஏற்புடையதல்ல.

அதே போலத்தான் coloured man என்பது ஏற்புடையது அல்ல. ஆனால் man of colour ஏற்புடையது.

இது தனியே political correctness மட்டும் அல்ல. உங்கள் வேலையிடத்யில் போய் “a black man delivered these flowers” என்றீர்களானால் ஒரு தப்பும் இல்லை. அதையே “ a blackie delivered these flowers” என்றால் பிரச்சனை வரும்.

ஒருவரை அவரின் நிறத்தால் அடையாளம் சொல்வதை ஏற்கிறார்கள் (describing one’s skin colour - black man/ woman) ஆனால் அதையே சுருக்கி அல்லது வேறு வகையில் திரிபுபடுத்யுவதை, patronising அல்லது தாழ்மைபடுத்துதல் என எண்ணுகிறார்கள் (பிளக்கி, பாக்கி, ). 

இதில் கறுவல், செவ்வல், நரையன் என்பவை இரெண்டாம் வகை. கறுப்பு, வெள்ளை, பழுப்பு என்ற pure description of colour முதல் வகை என நினைக்கிறேன்.

ஆனால் இவை காலத்தின் படியும், இடத்தின் படியும் கூட மாறும்.

ஒரு காலத்தில் ஜிப்சி என்பது ஓகே. இப்போ travellers.

அதே போல் பப் மூடியபின் வெறியில் ரோட்டில் நிண்டு பாக்கி எண்டு கத்தும் மனிதனை யாரும் பொருட்படுத்தாமல் போகலாம், ஆனால் அதே ஆள் ஒரு மணதியலாத்தின் பின் A&E போய் வைத்தியசாலை சிப்னதியை பாக்கி எண்டு ஏசினால் விளைவு வேற மாரி இருக்கும்.

இடம், பொருள், ஏவல் …. 

 

12 minutes ago, பெருமாள் said:

நான் ஒரு கறுப்பு  மனிதன் என்று சொல்வதில் பெருமை கொள்பவர்கள் அவர்கள் நாங்கள் கருப்பாக இருந்தும் கறுப்பை  ஏளனமாக பார்க்கும் கூட்டம் .  அந்த பதின்ம வயது பிள்ளளையிடம் கேட்டு இருக்கலாம் எப்படி அவர்களை அழைப்பது என்று  நூற்றாண்டுகளாக  மறைமுகமாக எமது ஜீனில் மறைமுகமாக எழுதப்பட்ட தாழ்வு மனப்பான்மை .

கறுப்பை  கறுப்பென்று கூறாமல் என்னவென்று சொல்வது ?

சில சொற்களை மறக்க நினைக்கிறார்கள் அவை  இங்கு வேண்டாம் .

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சில சொற்கள் ஏற்புடயன். சிலது இல்லை.

White (வெள்ளை), black (கறுப்பு), ஆசியன் என்பது ஏற்புடையது.

ஆனால் பிளக்கி (கறுவல்?) பாக்கி, நிகர், வைட்டி, ஏற்புடையதல்ல.

அதே போலத்தான் coloured man என்பது ஏற்புடையது அல்ல. ஆனால் man of colour ஏற்புடையது.

இது தனியே political correctness மட்டும் அல்ல. உங்கள் வேலையிடத்யில் போய் “a black man delivered these flowers” என்றீர்களானால் ஒரு தப்பும் இல்லை. அதையே “ a blackie delivered these flowers” என்றால் பிரச்சனை வரும்.

ஒருவரை அவரின் நிறத்தால் அடையாளம் சொல்வதை ஏற்கிறார்கள் (describing one’s skin colour - black man/ woman) ஆனால் அதையே சுருக்கி அல்லது வேறு வகையில் திரிபுபடுத்யுவதை, patronising அல்லது தாழ்மைபடுத்துதல் என எண்ணுகிறார்கள் (பிளக்கி, பாக்கி, ). 

இதில் கறுவல், செவ்வல், நரையன் என்பவை இரெண்டாம் வகை. கறுப்பு, வெள்ளை, பழுப்பு என்ற pure description of colour முதல் வகை என நினைக்கிறேன்.

ஆனால் இவை காலத்தின் படியும், இடத்தின் படியும் கூட மாறும்.

ஒரு காலத்தில் ஜிப்சி என்பது ஓகே. இப்போ travellers.

அதே போல் பப் மூடியபின் வெறியில் ரோட்டில் நிண்டு பாக்கி எண்டு கத்தும் மனிதனை யாரும் பொருட்படுத்தாமல் போகலாம், ஆனால் அதே ஆள் ஒரு மணதியலாத்தின் பின் A&E போய் வைத்தியசாலை சிப்னதியை பாக்கி எண்டு ஏசினால் விளைவு வேற மாரி இருக்கும்.

இடம், பொருள், ஏவல் …. 

 

பங்கு... ஆங்கிலம்.... தமிழ்... ரெண்டையும் போட்டு சிப்பிலி ஆடி இருக்கிறியள்... 😁

அதை விடுங்கோ..... மெயின் விசயத்துக்கு வாங்கோ...

நம்ம சந்திரிகா உங்கினை விம்பிள்டன் பக்கம் தனிமையிலே தான் இருக்கிறவாம் எண்டு பெருமாள் சொல்லுறார்........ விசாரியுங்கோ...

நைஜீரியன் லிங்க் ஒண்டு இருக்குது.... காசும் பார்த்தும் ஆகுது.... அவவுக்கு பொழுது போன மாதிரியும் இருக்குமெல்லே... 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

பங்கு... ஆங்கிலம்.... தமிழ்... ரெண்டையும் போட்டு சிப்பிலி ஆடி இருக்கிறியள்... 😁

அதை விடுங்கோ..... மெயின் விசயத்துக்கு வாங்கோ...

நம்ம சந்திரிகா உங்கினை விம்பிள்டன் பக்கம் தனிமையிலே தான் இருக்கிறவாம் எண்டு பெருமாள் சொல்லுறார்........ விசாரியுங்கோ...

நைஜீரியன் லிங்க் ஒண்டு இருக்குது.... காசும் பார்த்தும் ஆகுது.... அவவுக்கு பொழுது போன மாதிரியும் இருக்குமெல்லே... 😜

🤣 விம்பிள்டனோ? இல்லையப்பா. ஹார்ட்வர்ட்சியர், ரட்லெட். பெரிய யூத தலைகள் எல்லாம் இருக்கிற ஏரியா.

ஷென்லி டெஸ்கோவுக்கு போத்தல் வாங்க வருவா 🤣. கேட்டுப் பாக்கட்டே?🤣.

சனத் கோவிக்க மாட்டாரோ?🤣 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மேலும், எனக்கு தெரிந்த வீட்டில் பதின்ம வயது பிள்ளையிடம்(இங்கே பிறந்து வளர்ந்தவர்)

அவர்களிலும் பார்க்க (பதின்ம வயது), நீங்கள் காமன் சென்ஸ் கூடுதலாக உள்ளவர் என்பது எனது பார்வை. அந்த வயதில் எமக்கு இருந்த street smartness இங்குள்ள பிள்ளைகளுக்கு இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தமான ஒரு பதிவு அண்மையில் இணைத்திருந்தேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சில சொற்கள் ஏற்புடயன். சிலது இல்லை.

White (வெள்ளை), black (கறுப்பு), ஆசியன் என்பது ஏற்புடையது.

ஆனால் பிளக்கி (கறுவல்?) பாக்கி, நிகர், வைட்டி, ஏற்புடையதல்ல.

அதே போலத்தான் coloured man என்பது ஏற்புடையது அல்ல. ஆனால் man of colour ஏற்புடையது.

இது தனியே political correctness மட்டும் அல்ல. உங்கள் வேலையிடத்யில் போய் “a black man delivered these flowers” என்றீர்களானால் ஒரு தப்பும் இல்லை. அதையே “ a blackie delivered these flowers” என்றால் பிரச்சனை வரும்.

ஒருவரை அவரின் நிறத்தால் அடையாளம் சொல்வதை ஏற்கிறார்கள் (describing one’s skin colour - black man/ woman) ஆனால் அதையே சுருக்கி அல்லது வேறு வகையில் திரிபுபடுத்யுவதை, patronising அல்லது தாழ்மைபடுத்துதல் என எண்ணுகிறார்கள் (பிளக்கி, பாக்கி, ). 

இதில் கறுவல், செவ்வல், நரையன் என்பவை இரெண்டாம் வகை. கறுப்பு, வெள்ளை, பழுப்பு என்ற pure description of colour முதல் வகை என நினைக்கிறேன்.

ஆனால் இவை காலத்தின் படியும், இடத்தின் படியும் கூட மாறும்.

ஒரு காலத்தில் ஜிப்சி என்பது ஓகே. இப்போ travellers.

அதே போல் பப் மூடியபின் வெறியில் ரோட்டில் நிண்டு பாக்கி எண்டு கத்தும் மனிதனை யாரும் பொருட்படுத்தாமல் போகலாம், ஆனால் அதே ஆள் ஒரு மணதியலாத்தின் பின் A&E போய் வைத்தியசாலை சிப்னதியை பாக்கி எண்டு ஏசினால் விளைவு வேற மாரி இருக்கும்.

இடம், பொருள், ஏவல் …. 

 

3 hours ago, பெருமாள் said:

சில சொற்களை மறக்க நினைக்கிறார்கள் அவை  இங்கு வேண்டாம் .

உங்கடை ஏரியா பிரிக்ஸ்டன்  நில் இருந்து தூரத்தானே பிளந்து கட்டி இருக்கிறியள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

 

உங்கடை ஏரியா பிரிக்ஸ்டன்  நில் இருந்து தூரத்தானே பிளந்து கட்டி இருக்கிறியள் .

🤣 எங்களுக்கு கிட்ட ஸ்டோன்பிரிஜ், ஹால்ஸ்டன் இருக்கெல்லே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

நான் ஒரு கறுப்பு  மனிதன் என்று சொல்வதில் பெருமை கொள்பவர்கள் அவர்கள் நாங்கள் கருப்பாக இருந்தும் கறுப்பை  ஏளனமாக பார்க்கும் கூட்டம் .  அந்த பதின்ம வயது பிள்ளளையிடம் கேட்டு இருக்கலாம் எப்படி அவர்களை அழைப்பது என்று  நூற்றாண்டுகளாக  மறைமுகமாக எமது ஜீனில் மறைமுகமாக எழுதப்பட்ட தாழ்வு மனப்பான்மை .

கறுப்பை  கறுப்பென்று கூறாமல் என்னவென்று சொல்வது ?

சில சொற்களை மறக்க நினைக்கிறார்கள் அவை  இங்கு வேண்டாம் .

பெருமாள் அண்ணா! எங்களவர்களை விடுவோம், அவர்களுக்கு கருப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மை இருக்கோ இல்லையோ ஆனால் எனது பள்ளிக்கூட நாட்களில் இந்த வேறுபாடுகளை நானும் அனுபவதித்து இருக்கிறேன். ஆனால் அது என்னைப் பாதித்ததும் இல்லை, தாழ்வு மனபாங்கையும் ஏற்படுத்தியதில்லை ஏனெனில் அதனை நாங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்திலும் எங்களது மற்றைய செயல்களிலுமே தங்கியுள்ளது. இது எனது தனிப்பட்ட அனுபவம்/கருத்து. 

ஆனால் பொதுவாக ஒரு இனத்தவரை பெயர் தெரியாத விடத்து அல்லது பெயர் தெரியாமல் அடையாளப்படுத்தும் பொழுது Caucasian build/appearance or African Black or Pacific Islanders or South Asian or Asian etc  என்பார்கள்.. ஆனால் நிறத்தை/உருவ அமைப்பை வைத்து இப்படி அழைப்பதில்லை அது விரும்பப்படுவதும் இல்லை என்பதுதான் நான் அறிந்தது..  

Anyway அண்ணா, எனக்கு அந்த பதின்மவயது பிள்ளையின் சிந்தனை பிடித்திருந்தது.. சரியெனவும் பட்டது. 
நாதமுனி அண்ணா இந்த மாதிரி fraudபற்றி கூறியதை நான் திசை திருப்ப விரும்பவில்லை. வாசித்த பொழுது மனதில் பட்டது, அதனை எழுதினேன். அவ்வளவுதான். 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் பொதுவாக ஒரு இனத்தவரை பெயர் தெரியாத விடத்து அல்லது பெயர் தெரியாமல் அடையாளப்படுத்தும் பொழுது Caucasian build/appearance or African Black or Pacific Islanders or South Asian or Asian etc  என்பார்கள்.. ஆனால் நிறத்தை/உருவ அமைப்பை வைத்து இப்படி அழைப்பதில்லை அது விரும்பப்படுவதும் இல்லை என்பதுதான் நான் அறிந்தது..  

 

அது... அவுஸ்திரேலியாவில்....

இங்க வேறு கதை.. 🙏

Edited by Nathamuni
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.