Jump to content

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்


Recommended Posts

அயின்ச்ரைன் அய்யா நீங்கள் சுத்திரமாதிரி எனக்குப்படுது, இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக குறிப்பிட்ட பந்தி

பிறகு இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக போட்ட பந்தி

இடையில இருந்தது மாயமா மறைஞ்சு திரிவுபட்டு வேறமாதிரியான தோற்றப்பாட்ட தரேல்ல?

சுத்தலாம் ஆனா இப்பிடி சுத்த கூடாது :angry:

சுத்திச் சுழட்டுவது நமது வேலையல்ல.

எதுக்கும் நீங்கள் பக்கம் 6, பதிவு #108 சென்று அங்கிருந்து தொடர்ந்து வரவும்.

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply

இறைவனை பூசை செய்கின்ற எல்லோரும் பார்ப்பான் என்று நான் எங்குமே சொல்லவில்லை.

நெடுக்காலபோவான்! வேண்டுமென்றே சொல்லாத விடயங்களை சொன்னதாகவும், சொன்ன கருத்துக்களின் அர்த்தத்தை திரித்தும் வாதிட வேண்டாம்.

நீங்கள் இராவணனை பார்ப்பனன் என்றீர்கள். நான் அதை இல்லையென்று தர்க்கித்தேன்.

இராவணன் வேதம் கற்றவனாக இருக்கலாம். ஆனால் ஆரியர்களின் பார்வையில் அவன் "மேலோன்" அல்ல. மேலே உள்ள தலையில் இருந்து பிறந்த பரசுராமன் தண்டிக்கப்படவில்லை.

கீழே உள்ள காலில் இருந்து பிறந்த திராவிடன் இராவணன் தண்டிக்கப்படுகின்றான்.

ஆரியரின் பார்வையில் "கீழோன்" ஆகிய இராவணன் வேதங்கள் கற்றதும் ஒரு குற்றமாக பார்க்கப்பட்டிருக்கலாம். (இங்கே சம்புகனை நினைவுபடுத்துகிறேன்)

மொத்தத்தில் இராவணன் பார்ப்பனன் என்பது தவறான வாதம். இராவணனின் திராவிட வீச்சை தாங்க முடியாதவர்கள் உருவாக்கிவிட்ட புரளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பண்பாடு என்பது தனிச்சொல். இது தமிழர் பண்பாடு என எடுக்கமுடியுமா என்பது போல் உள்ளது உங்கள் கேள்வி. :D:D

இராமாயணம் என்பது "ஒரு சமூகத்துக்காக" அவர்களால் எழுதப்பட்டது. இதைத்தான் கத்திக் கத்தி சொல்கிறேன். இது புனைகதையேயன்றி வேறல்ல.

எமது கருத்தாடலின் சுருக்கம்....

1. இராமாயாணம்.. வெறும் புனைகதையல்ல. புவியியல் சான்றுகளை உள்ளடக்கி இருக்கும் ஒரு சமூகத்துக்கான இலக்கியம். அதில் உள்ள வரலாற்றுச் சான்றுகளை ( அது புவியியல் சார்ந்தும் இருக்கலாம்.. பிறவாகவும் இருக்கலாம்) அறிவியல் கொண்டு அணுக வேண்டும் இனங்காண வேண்டும் என்பதுதான் எமது கருத்தின் இலக்கு.

2. இராமாயணம் என்பது வான்மீகியின் படைப்பு என்பதுக்கும் அப்பால் சங்க காலத்திலேயே தமிழர் இலக்கியங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. அதுவும் வான்மீகி கையாளாத விடயங்களைக் கையாண்டிருப்பதானது.. இராமாயணத்துக்கும் தமிழுக்கும் இடையில் நெருங்கிய வரலாற்றுப் பின்னணி இருந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது.

3. காலத்துக்குக் காலம் இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் மீள் படைப்பாளிகளின் சிந்தனையோட்டத்துக்கு ஏற்ப சித்தரிக்கப்பட்டிருப்பட்டு இருப்பினும் எல்லாவற்றிற்கும் ஒரு பொதுவான அடிப்படை உண்டு. அதன் பின்னணி ஆராயப்பட வேண்டியது.

4. ஆரிய திராவிட பாகுபாட்டுக்கு இராமாயணம் சான்றழிப்பதாக கருதிட எந்த அடிப்படையும் இல்லை.

5. இராமாயணப்படி.. இராமன்.. ஆரியன் என்பதற்கும்.. இராவணன் திராவிடன் என்பதற்கும் எந்த அடிப்படைகளும் கிடையாது.

6. இராமாயணக் கருத்துப்படி இலங்கை வேந்தனாக இராவணன் சிவ வழிபாட்டை செய்துள்ளான். சமீபத்திய ஆய்வுகளின் படி பண்டைத்தமிழ் நாகரிகத்தில் சிவ வழிபாடு முதன்மை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்க தாகும்.

7. தமிழர்களின் வரலாறு சிவ வழிபாட்டோடு இணைந்தது என்பதால் மதம் என்ற அடிப்படையை விலக்கி வைத்து தமிழர் வரலாற்றை அணுகுவது சிறந்த அணுகுமுறையல்ல.

8. இராமாயணத்தில் சாதியக் காப்பு செய்யப்பட்டுள்ளதானது தவறான நிலை. இராமன் என்ற பாத்திரத்துக்கு தெய்வத்தன்மை அளித்திருப்பதால் அது பார்பர்னிய வடிவம் அல்ல. இராமன் விபீடணனின் உற்ற நண்பன். குகனின் உற்ற நண்பன். அனுமனின் உற்ற நண்பன். சடாயுவின் உற்ற நண்பன். இப்படி வர்க்க பேதமற்ற நிலையை சமூகதிற்கு காட்ட பல இலக்கிய உருவகிப்புக்கள் இராமாயணத்தில் உண்டு.

9. வேத நூல்களைக் கற்றது அல்லது கற்பது என்பது பார்பர்னிய சொத்துடமையல்ல. வேத நூல்களை கற்பவர்கள் பார்பர்னியர்களும் அல்ல. ஆனால் வேத நூல்களைக் கற்றவர்கள் தற்காலத்தில் கல்வி கற்றவர்கள் போல மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு.. ஆரிய பார்பர்னிய கருத்தியல் திரிபுகளை செய்வது அநாவசியமானது.

10. இராமர் பாலம் என்பதை தமிழில் தமிழருக்கு இனங்காட்டியது கம்பராமாயணம் தான். அந்த வகையில் அது நிஜமான புவியியல் கூறு ஒன்றின் அடையாளப்படுத்தலின் முன்னோடியாகும்.

11. விமானப்பறப்பை சிந்தித்த அளவில் மனிதப் பறப்புக்கான சிந்தனையின் பிறப்பிடமாக இராமாயணமும் விளங்கிறதாக இனங்காட்டலாம்.

12. இராமாயணம் எடுத்துக் கையாண்ட புவியியல் தோற்றங்கள் இன்றும் உலகில் எஞ்சி இருப்பதானது இராமாயணம் வெறும் புளுகுகளை மட்டும் கூறுகின்றது என்பதற்கு அப்பால் அறிவியல் கொண்டு ஆராயப்படக் கூடிய அம்சங்களைக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்வதும் அறிவியல் கொண்டு ஆராய்வதும்.. தமிழர் பாரம்பரிய தொடர்புகள் அவற்றிற்கிடையே இருக்கா என்று நோக்குவதும் முக்கியமாகும்.

13. நாசா தான் உத்தியோக பூர்வமாக இராமர் பாலம் பற்றிய அறிக்கையை வெளியிடல்ல என்று கூறி இருப்பதுடன்.. இந்திய அரசியல்வாதிகளின் தேவை கருதி செய்மதிப்படம் மூலமான ஒரு பகுப்பாய்வு அறிக்கை மட்டும் நாசாவை சேர்ந்த சிலரால் அளிக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம்.. இராமர் பாலம் தொடர்பான எந்த அகழ்வாராய்ச்சியும் செய்யப்படல்ல என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அகழ்வாராய்ச்சிகள் செய்யாமல் எப்படி உயிர் சுவடுகள் எதுவும் அங்கு இல்லை என்பதை உறுதிப்படக் கூற முடியும்...??!

14. நாசாவின் அறிக்கை பெறப்பட்ட வழிமுறைகள் பற்றிய தெளிவான அறிவியல் தொழில்நுட்ப வழிமுறை விபரங்கள் எவையும் வெளியிடப்படாமை.. அவர்கள் கையாண்ட அறிவியல் வழிமுறைகள் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது.

இவையே எமது கருத்துக்களில் நாம் பிரதிபலித்துள்ளோம்.

இவற்றோடு உடன்படுபவர்களும் உண்டு.. இல்லாதோரும் உண்டு.

எமது நிலைப்பாடுகளில் இருந்து மாறக் கூடிய அளவுக்கு பலமான ஆதாரங்கள் எதனையும் யாரும் இங்கு முன்வைக்காதது மட்டுமன்றி மீண்டும் மீண்டும்.. ஆரிய.. பார்பர்னிய.. திராவிட.. புளுகுமூட்டை என்ற தங்களின் வாதங்களுக்காக திரிபுகளை கையாண்டு கருத்துக்களை விதண்டாவாதமாக முன் வைத்ததைத் தவிர.. இராமர் பாலத்துக்கான புவியியல் அடிப்படை விளக்கத்தை கூட இங்கு பெற முடியல்ல.

இத்தோடு இங்கு எமது பக்க வாதத்தை நிறைவு செய்கின்றோம்.

நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8. இராமாயணத்தில் சாதியக் காப்பு செய்யப்பட்டுள்ளதானது தவறான நிலை. இராமன் என்ற பாத்திரத்துக்கு தெய்வத்தன்மை அளிந்ததால் அது பார்பர்னிய வடிவம் அல்ல. இராமன் விபீடணனின் உற்ற நண்பன். குகனின் உற்ற நண்பன். அனுமனின் உற்ற நண்பன. சடாயுவின் உற்ற நண்பன். இப்படி வர்க்க பேதமற்ற நிலையை சமூகதிற்கு காட்ட பல இலக்கிய உருவகிப்புக்கள் இராமாயணத்தில் உண்டு.

அதை விட இராமன் திருமணம் செய்த சீதை என்பவள் அரசகுமாரி என்று உறுதிப்படுத்த முடியாது. அவளை ஜனகமன்னர் வயல்கரையில் இருந்து எடுத்துத் தான் வளர்த்திருந்தார். அங்கே இராமன் திருமணம் செய்த போது சாதி வகுப்பாக அதை நோக்கவில்லை. சந்தேகம் எதையும் கிளப்பவில்லை.

இங்கே இராவணன், இராமன் கதை கதைப்பது என்பது தங்களுக்குள்ள ஆரிய வெறியை நியாயப்படுத்தவும், தங்களின் புளித்துப் போன கொள்ளைக்கு உயிர் கொடுக்கவே அன்றி உண்மையோடு அல்ல.

இராமயணம் புனைகதை என்று சொல்லிக் கொண்டே இங்கே அவன் திராவிடன் என்று சொல்வது எதிர்மறைக்கருத்து சொல்வது எல்லாம், திராவிடம் என்ற பெயரில் வெறியைக்கொட்டுவதன் வெளிப்பாடாகும்.

கருமையான தமிழன் என்ற நிலையை மாற்றி, ஆரியனோடு தம்பத்திய வாழ்க்கையில் ஒன்றிணைந்து, கறுப்பும், பழுப்புமாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு, திராவிடம் என்ற பெயரில் கூத்தடிக்கின்றார்கள்.

இங்கே இவர்கள் சொல்லுகின்ற குற்றவாளி என்பது வெறுமனே பார்ப்பானி கிடையாது. அனைத்து மேல்தட்டு வர்க்கமு;ம தான். அது நாயக்கர் வம்சம் உற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுத்திச் சுழட்டுவது நமது வேலையல்ல.

எதுக்கும் நீங்கள் பக்கம் 6, பதிவு #108 சென்று அங்கிருந்து தொடர்ந்து வரவும்.

மன்னிக்கோனும் அயின்ச்ரைன் அய்யா, இவ்வளவு அறிவுள்ள நீங்களய் பிழைவிடமாட்டியளே. நான் தான் கவனிக்கேல்ல. ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை விட இராமன் திருமணம் செய்த சீதை என்பவள் அரசகுமாரி என்று உறுதிப்படுத்த முடியாது. அவளை ஜனகமன்னர் வயல்கரையில் இருந்து எடுத்துத் தான் வளர்த்திருந்தார். அங்கே இராமன் திருமணம் செய்த போது சாதி வகுப்பாக அதை நோக்கவில்லை. சந்தேகம் எதையும் கிளப்பவில்லை.

இங்கே இராவணன், இராமன் கதை கதைப்பது என்பது தங்களுக்குள்ள ஆரிய வெறியை நியாயப்படுத்தவும், தங்களின் புளித்துப் போன கொள்ளைக்கு உயிர் கொடுக்கவே அன்றி உண்மையோடு அல்ல.

இராமயணம் புனைகதை என்று சொல்லிக் கொண்டே இங்கே அவன் திராவிடன் என்று சொல்வது எதிர்மறைக்கருத்து சொல்வது எல்லாம், திராவிடம் என்ற பெயரில் வெறியைக்கொட்டுவதன் வெளிப்பாடாகும்.

கருமையான தமிழன் என்ற நிலையை மாற்றி, ஆரியனோடு தம்பத்திய வாழ்க்கையில் ஒன்றிணைந்து, கறுப்பும், பழுப்புமாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு, திராவிடம் என்ற பெயரில் கூத்தடிக்கின்றார்கள்.

இங்கே இவர்கள் சொல்லுகின்ற குற்றவாளி என்பது வெறுமனே பார்ப்பானி கிடையாது. அனைத்து மேல்தட்டு வர்க்கமு;ம தான். அது நாயக்கர் வம்சம் உற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.

தூயாண்னைக்கு துண்டா நிறவெறி வர்க்கவெறி வம்ச வெறி இல்லையே.

B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இருக்கா இல்லையா என்பதை மற்றவர்கள் தான் சொல்லவேண்டும். ஆனால் திராவிடம் என்ற பெயரில் நடக்கின்ற கூத்துக்கு நான் உடன்பாடில்லை. அது சுத்த ஏமாத்து.

தமிழ் தேசியம் என்ற ஒரு கொள்கைக்கு ஊடாகவே எதையும் நான் அணுகவிரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கபராமாயாணம் அது கூறுகிறபடியான கால எல்லையில் அது நிகழ்ந்துருக்கிறது உண்மையானால் அந்தகாலத்து நாகரிகத்துக்கு ஆடை துணிகூட கிடைத்திருக்க வாய்பில்லை, அப்படி இருக்க சமூகவியல் பண்புகள் எல்லாம் கதையில் அளக்கப் படுகிற மாதிரி யான வளர்ச்சி எங்கே இருந்து கிடைத்திருக்கும்?

மனித வரலாற்றின் துவக்கதுக்கு முன்பே தோன்றி அழிந்து போன இக்காலம் அறிந்திராத உயிரினங்களின் வரலாற்று சான்றுகள் கூட இந்த அறிவியல் ஆய்வு எடுத்தெடுத்து தருகிறது, ஆனால் இப்படி புவியையே கடவுள் பதவியோடு ஆண்ட இராமனினதோ? அல்ல அவர்காலத்து எதுவுமோ இன்னும் கிடைக்கவில்லை.

அறிவியலின் பார்வைக்கு.

பலவருடங்களுக்கு முன்னுள்ள உலகப்படம் அப்படியே எக்காலமும் அச்சொட்டாக இருக்க முடியாது அதன் தரை எல்லைகளின் நிலை.

எமது அறிவுக்கு தெரிந்ததாகவே இந்தியாவின் பல கரையோரக் கிராமங்கள் கடலால் கொள்ளப் பட்டமை யாவரும் அறிந்தவிடயமே!

இப்படி கம்பரின் கற்பனைக்காலத்தில் இப்போது இருந்த உருவ அமைப்பைவிட சற்று முன்னேற்ற கரமாய் இருந்திருக்கலாம் இராமர் பாலம் என்று சொல்லப்படுகின்ற அந்த மண்திட்டி, அந்த மண்திட்டியின் புராதன வரலாற்றுக்கும் சேர்த்து கதை விட்டிருக்கிறார் அந்தக்காலத்துக்கு,

அங்கே இதுமட்டுமா இன்னும் பல எத்தனையோ மண்திட்டுக்கள் ஆங்காங்கே இருக்கின்ததே!

பல ஆண்டுகளுக்கு முன்னே வல்லை வெளியின் தரை அமைப்பை ஒத்ததாகவே அந்த நில அமைப்பும் இருந்திருக்கலாம், காலஒட்டத்தால் தண்ணீரின் உயரமும் அதிகரித்திருக்கவே முடியும் இந்த நிலைமையாலே அந்த வரம்பும் காணாமல் போய் இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

நான் உந்த கன்றாவியள் ஒண்டையும் முதல் பக்கத்தில இருந்து வாசிக்கேல. எல்லாம் புழுத்துப்போன பழய வாதங்களத்தான் திரும்பத் திரும்ப எல்லாரும் வந்து கொட்டுகினம். ஏதோ நடக்கட்டும். ஆனா சிலதுகள பொதுவா சொல்லிட்டு போறன்.....................................

எப்பிடி எதுக்கா ஈழத்தில தமிழ்த் தேசியத்த தூக்கவேண்டிய கட்டாயம் வந்திச்சோ அதமாதிரியான கட்டாயமும் அவசியமும் தான் நீங்க சொல்லுற >>திராவிடக் கூத்தையும்<< தூக்கிறதுக்கு காரணமா இருந்திச்சு. நீங்க சிங்களத் தேசியத்தின்ர ஆதிக்கத்துக்கு எதிரா தமிழ்த் தேசியத்த முன்வச்சு அதுக்காக வாதாடுறதயும் .... இன்னொராள் தன்ர பார்வையில் >>தமிழ் தேசியக் கூத்து<< எண்டுதான் சொல்லுவார். தமிழ் தேசியத்த நிறுவுறதுக்காக நீங்களும் தமிழற்ற வரலாறு, அது இதெண்டு ஆயிரக்கணக்கில புழுகுகளயும் திரிபுகளயும் செய்யிறீங்க எண்டு இன்னொராள் சொல்லுவார். இந்தியாவில திராவிடத் தேசியம் ஒண்டும் சும்மா பொழுதுபோக்குக்காக வரல. அது தேவையான நேரத்தில சரியான ஒரு கருத்தியல் அடித்தளத்தில தான் கட்டப்பட்டிருக்கு. பார்ப்பனியர்களில இனவெறி காட்டுறது எண்டு நீங்க சொல்லுறத அப்பிடியே திரிப்பி போட்டா ........................ நீங்க >>சிங்களவன், மோட்டு சிங்களவன், சிங்களப் பேரினவாதம், சிங்கள ஆதிக்கம்<< எண்டு சொல்லுறதுகளும் சிங்களவர்கள் மேல உங்களுக்கு இருக்கிற இனவெறி தான்.

புராணத்திலயும் புனைகதையளிலயும் அந்தக்காலத்திலயே அறிவியல் கண்டுபிடிப்புகள் நிறைய செஞ்சிட்டினம். அந்தக்காலத்திலயே எல்லாத்தையும் சொல்லி வச்சிட்டினம் எண்டு சொல்லுற முட்டாத்தனங்கள முதலில விடுங்கோ. ஒரு கதைய நாங்க எடுத்த அது அந்த மனுசன் வாழுற காலத்த பிரதிபலிக்கத்தான் செய்யும். அதான் ஒரு படைப்பு. அதுக்காக அதில சொல்லியிருக்கிறத வரலாறு எண்டு சொல்லுற முட்டாத்தனங்கள நிப்பாட்டுங்கோ. யாழ்களத்தில இருந்தே நிறைய உதாரணங்கள காட்டலாம். உதாரணமா டன் அண்ணா யாழ் உறுப்பினர்களின்ர பொங்கல் விழா எண்டும் ரசிகை அக்கான்ர திருமண நிகழ்வெண்டும் ஒரு கற்பனை நகைச்சுவைக் கதை எழுதினவர். அதில ரசிகை அக்கான்ர திருமணம் உண்மையா நடந்த சம்பவம். அதுக்கு யாழ் உறுப்பினர்கள் போனதெண்டது கற்பனை. இந்தக் கதைய பத்து வருசத்துக்கு பிறகு ஒராள் வேற எங்கயோ ஒரு பேப்பர் துண்டில >>ரசிகையின்ர திருமண நிகழ்வு<< எண்ட தலைப்போட மட்டும் வாசிக்கிறார் எண்டு வையுங்கோ. அவர் அதில எழுதப்பட்டிருக்கிற எல்லாத்தையும் உண்மையா நடந்ததா வரலாற்று தகவலா எடுத்துக்கொண்டாரெண்டால் எப்பிடி இருக்குமோ அப்பிடித்தான் இருக்கு உங்கட வாதங்களும்.

அதமாதிரி மனுசன் தான் பாக்கிற விசயங்கள எழுதி வைக்கிறான். தான் அனுபவிக்கிற விசயங்கள எழுதிழ வைக்கிறான். அதில தன்ர பார்வையோட மட்டுந்தான் அவன் எழுதுறான். தன்ர கற்பனையள கலக்கிறான். தனக்கு சார்பான விசயங்கள பிரமாண்டமாக்கிறான். தனக்கு சார்பில்லாத தனக்கு பிடிக்காத விசயங்கள தவிர்த்துக் கொள்ளுறான். இது எல்லாருக்குமே பொருந்தும்.... ராமாயணத்த வரலாறு மண்ணாங்கட்டி எண்டு சொல்லுறவைக்கும் பொருந்தும்....... திராவிடத் தேசியம் பேசுறவைக்கும் பொருந்தும்........... தமிழ்த்தேசியம் பேசுறவைக்கும் பொருந்தும்.......

உந்த புராணக்காரரின்ர விஞ்ஞான அறிவென்னெண்டு எங்களுக்கு தெரியுந்தானே...... சூரியன பாம்பு விழுங்குதெண்டுற பென்னாம்பெரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்ப கண்டுபிடிச்சவை தானே அவை. தான் பாக்கிறத தன்ர கற்பனை வடிவங் கொடுத்து சொல்லுறதுக்கு பேர் விஞ்ஞானக் கண்டுபிடிப்பில்ல. ஒண்ட சொன்னா அதுக்கான ஆதாரங்கள், காரணங்களோட சொன்னாத்தான் அது விஞ்ஞானம்....... அறிவியல். சும்மா சூரியன பாம்பு விழுங்குது, தாலி கட்டிறதில விஞ்ஞான நோக்கம் இருக்கு, பொட்டு வைக்கிறதில அறிவியல் பார்வை இருக்கு எண்டு சொல்லிக்கொண்டு திரியாதேங்கோ.... இதுக்குள்ள வெளிநாட்டுக்காரன் அதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சு சொன்னா பிறகு.... உடன துள்ளிக் குதிச்சுக்கொண்டு வந்திடுவினம்..... அப்பவே எங்கட மதத்தில எல்லாம் சொல்லியிருந்தது..... எண்டுகொண்டு....

ஏன் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிச்சு சொல்லுறதுக்கு முதல் உங்களால காரணங்கள கண்டுபிடிச்சு சொல்ல முடியல?

சூரியன சந்திரன் மறைக்கிறத நானும் பார்த்தால் ஒவ்வொராக்களும் தங்கட கற்பனைக்கு ஒண்ட சொல்லுவினம். நான் சொல்லுவன் சூரியன் செத்துப்போட்டெண்டு. இன்னொராள் சொல்லும் சூரியன் இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்திட்டெண்டு. இன்னொராள் சொல்லும். சூரியன் குப்புறப் பிரண்டு கிடக்கெண்டு. இப்பிடி ஆளாளுக்கு ஒரு கற்பனைய சொல்லுவினம். ஆனா யார் அதுக்கு காரணம் என்ன, ஏன் அப்பிடி நடக்கெண்டு கண்டுபிடிச்சு சொல்லுகினமோ அதுக்கு பேர் தான் விஞ்ஞானம் அல்லாட்டி அறிவியல். மற்றதெல்லாம் கற்பனை. தான் பார்த்த விசயத்த பூசி மெழுகி சொன்ன புனைவு. இந்த வித்தியாசங்கள முதலில விளங்கிக் கொள்ளுங்கோ.

ராமர் பாலம் எண்டு வான்மீகி சொன்னாரோ கம்பர் சொன்னாரோ எனக்கு அத பற்றி கவலயில்ல. ஆனா ஆளாளுக்கு அந்த இந்திய இலங்கை இடையில இருக்கிற தொடுப்ப தங்கட கற்பனைக்கு சொல்லலாம். நானும் யாழ் களத்தில ஒரு கதை எழுதி வைக்கிறன். அந்தக் கதையில் இந்த இந்திய இலங்கை தொடுப்பு ஒரு சுரங்கப் பாதையெண்டும்..... தமிழீழ போராட்டம் நடக்கிற காலத்தில இந்தியாவுக்கு போய் வாறதுக்காக தமிழாக்களால கட்டப்பட்டது எண்டும்..... அதில பூனைக்குட்டியும் ஒரு பிடி மண்ணை எடுத்து தன்னாலான உதவிய செஞ்சது எண்டும் எழுதி வைக்கிறன். ஒரு 1000 வருசம் கழிச்சு நான் எழுதின கதையின்ர ஏதாவது ஒரு பிரதி யாரிட்டயாவது போய்ச் சேரும் தானே. அப்ப நீங்க சொல்லுற இந்தப் பாலம் தமிழன் கட்டின சுரங்கம் எண்டு எல்லாரும் நம்பட்டும். :P

விஞ்ஞானம் இருக்கு அறிவியல் இருக்கு தொழில்நுட்பம் இருக்கு கண்டுபிடிப்பு இருக்கு வரலாறு இருக்கு எண்டு சொல்லுற கனவான்கள் எல்லாம் இப்பிடி புழுகித் தள்ளுறத விட்டிட்டு வலுவான காரணத்தோட ஆதாரத்தோட எல்லாத்தையும் நிறுவுங்கோ. அபஇபிடி நிறுவாத வரைக்கும் நீங்க சொல்லுறதெல்லாத்தையும் கற்பனை புனைகதையெண்டுதான் நான் சொல்லுவன்.......................... அதுக்கு நான் ஆதாரமோ காரணமோ சொல்லத்தேவையில்ல. B)

கீழ இருக்கிற படங்கள பாருங்கோ:

Martian_face_viking.jpg

MARS%203D%20SOURCE%20IMAGE.jpg

Face-on-Mars_perspective410.jpg

இந்த படங்கள் செவ்வாய்க் கிரகத்தில எடுத்த படங்கள். மனித முகம் மாதிரி தோற்றமளிக்கிற படங்கள். யாரின் தலையிது? யாரின்ர முகத்தோற்றம் இது? நாசா எடுத்த படங்கள் இவை. அங்க வாழ்ந்த அலியன்களின்ரயா இருக்கலாம் எண்டு கொஞ்சக் காலம் கதை அடிபட்டது. ஆனா இப்ப கிட்டடில அது சும்மா அப்பிடி தோற்றமளிக்குது எண்டு சொல்லுப்பட்டுச்சு......... முகில பாத்தா எங்களுக்கு அதில அவ்வையார் இருக்கிற மாதிரி இருக்கிறதுதானே... அதமாதிரி முகலப் பாத்து நாங்கள் நிறய கற்பனையள் பண்றனாங்கள் தானே.... எங்களுக்கு தெரிஞ்ச உருவங்கள் தெரியுற மாதிரி.... அதுதான் இதுவும் எண்டு சொல்லிச்சினம்..... optical illussion எண்டு.... வாசிக்கிறாக்கள் உங்க எங்கயும் செய்திப்பக்கங்களில விஞ்ஞானத்தளங்களில ஓடிப்போய் புரட்டி பாருங்கோ face on mars எண்டு கூகிளில தேடினியள் எண்டால் நிறைய கிடைக்கும்.

---------------------

எனக்கென்னவோ எல்லாம் எங்கட ராமாயணத்தில சொல்லியிருக்கு எண்டுதான் படுது. இப்பதான் வெளிநாட்டுக்காரங்கள் உதுகள கண்டுபிடிக்கிறாங்கள்.

இது ராமன் கொய்த ராவணின்ர பத்து தலையளில ஒரு தலையா இருக்குமா??? இல்லாட்டி ராமன் கடைசியா செவ்வாய்க்கிரகத்தில ஆருக்கும் சாபம் போட்டு அது இப்பிடி ஆகிட்டுதோ? ராமாயணத்த பிச்சு பிரிச்சு மேஞ்சு பாருங்கோ.... அதுக்குள்ள நிறைய அறிவியல் தகவல்கள் கிடக்கும்........ :P

Link to comment
Share on other sites

இந்த படங்கள் செவ்வாய்க் கிரகத்தில எடுத்த படங்கள். மனித முகம் மாதிரி தோற்றமளிக்கிற படங்கள். யாரின் தலையிது? யாரின்ர முகத்தோற்றம் இது? நாசா எடுத்த படங்கள் இவை

ராமர் செவ்வாயிலையும் வாழ்ந்தவராம் அடுத்த பிறப்பை செவ்வாயில சீதையோட பிறந்தவராம் அங்கு ஏவுகனை சோதனை நடத்தி[அதுதாப்பா அக்கினி அஸ்திரம் நாக அஸ்திரம்] பரிசோதித்தவராம் தன் முகத்தை எதிர்காலத்தில் நாசா படம் எடுத்து தன்னையும் தன்னை பற்றிய புழுடாக்களையும் நம்பும் அதிபுத்திசாலிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக உருவாக்கியவராம்.தற்போது அடுத்த தலைமுறை ஏவுகனை ரக்கட் தொழில்நுட்பத்துடன் வியாழனில் பாலம் கட்டி கொன்டு இருகின்றாராம் முடிஞ்சால் அதையும் காப்பாத்துங்கோ

Link to comment
Share on other sites

தமிழத் தேசிய விடுதலைப் போரை நடாதுவதாகச் சொல்லிக் கொள்ளும் புலிகலின் மூத்த உறுபினர்களான இளங்குமரனும்,யோகியும் அண்மைய நிலவரம் நிகழ்வில் ஏன் ஆரியர் ,வர்ணாச்சிரமம்,பார்ப்பனர் என்று பேசியிருக்கினம்.இவை பேசிற தமிழத் தேசியம் வேறையோ இல்லை இங்க களத்தில தமிழத் தேசியத்திற்க்குத் தான் எனது ஆதரவு என்று சொல்லுறவை எந்தத் தமிழத் தேசியத்தைப்பற்றிக் கதைக்கினம்?இவை தங்களூக்கெண்டு எதாவது புது வரைவிலக்கணம் வச்சிருக்கினமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் அண்ணா நீங்க எல்லாத்துக்கயும் புலியளயும் தமிழீழ போராட்டத்தையும் கொண்டு வந்து தலைப்பை திசை திருப்புறீங்கள். நீங்கள் இப்பிடித்தான் எப்பவும். உங்களால பதில் கருத்து எழுதேலாட்டி போராட்டத்தை இழுத்து எல்லாரையும் மடக்கலாம் எண்டு பாக்கிறியள். :P

இளங்குமரன் அண்ணாவும் யோகி அண்ணாவும் சொன்னா அது புலியளின்ர கருத்தா? அது தலைவற்ற கருத்தா?

சும்மா டமில் தேசியம் எண்டுகொண்டு. அப்பிடியெண்டா என்ன?

விட்டா இங்க சிலபேர் தமிழர் எண்ட இனமே இல்லையெண்டு சொல்லுவினம். இதுக்குள்ள நீங்க டமிழ் தேசியம் எண்டுகொண்டு நிக்கிறீங்க. தமிழ்த் தேசியம் எண்டுறது சிலபேர் சிங்கள ஆக்களில இருக்கிற இனவெறியால தூக்கிபிடிக்கினம். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டியாரே நாசா அனிமேட் பண்ணினதுகள் எல்லாம் உண்மையாகுமோ..??!

நாசா கூட திருத்தங்களைச் செய்துள்ளது. அதுபோக நாசா பகிரங்கமாகவே தான் இராமர் பாலம் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்று வேற கூறியிருக்கிறது..! :D

உங்கள் பதிவையும் சான்றுகளையும் பார்க்க நகைச்சுவை அரங்கில் இருப்பது போன்ற உணர்வு..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யோகியண்ணாவும் இளங்குமரன் அண்ணாவும் அவற்றை உச்சரிக்கக் கூடாது அப்படி எங்கும் சட்டம் இருக்கு என்றில்லையே. அவர்கள் உச்சரிச்சு விட்டதற்காக அதுதான் தமிழ் தேசியம் என்றும் கொள்ள வேண்டும் என்றும் இல்ல. அவர்களும் எழுதி வைத்துள்ள வரலாறுகளைத் தான் படிச்சிட்டுக் கதைக்கினம். காலமாற்றத்தோடு நவீன அறிவியல் மாற்றத்தோடு வருபனவற்றை உள்வாங்கும் வரலாற்றுப் பதிவுகளை அவர்கள் படிக்க நேரும் போது அவர்கள் பேசும் தொனியும் மாறும்.

நேற்றுவரை மாவிலாறு அணையை மூடிட்டு கிழக்கில் அரை அடியையும் கைவிடோம் என்ற எழிலன் இன்று அதையே உச்சரிக்க முடியுமா..??! அதுபோலத்தான்...இதுவும்.. மாற்றங்களூடு பதிவுகள் வரும் போது வரலாறுகள் திருத்தப்படும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டியாரே நாசா அனிமேட் பண்ணினதுகள் எல்லாம் உண்மையாகுமோ..??!நாசா கூட திருத்தங்களைச் செய்துள்ளது. அதுபோக நாசா பகிரங்கமாகவே தான் இராமர் பாலம் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்று வேற கூறியிருக்கிறது..! :D உங்கள் பதிவையும் சான்றுகளையும் பார்க்க நகைச்சுவை அரங்கில் இருப்பது போன்ற உணர்வு..! :lol::D
:D:D நாசா மட்டுமா அனிமேட் பண்ணுது :P :P நாசாக்கு முதல் இராமயணத்த வச்சே எங்கட மதத்தில நாங்கள் எல்லாம் அனிமேட் பண்ண வெளிக்கிட்டம்..................... :P

ஏன் யோகியண்ணாவும் இளங்குமரன் அண்ணாவும் அவற்றை உச்சரிக்கக் கூடாது அப்படி எங்கும் சட்டம் இருக்கு என்றில்லையே. அவர்கள் உச்சரிச்சு விட்டதற்காக அதுதான் தமிழ் தேசியம் என்றும் கொள்ள வேண்டும் என்றும் இல்ல. அவர்களும் எழுதி வைத்துள்ள வரலாறுகளைத் தான் படிச்சிட்டுக் கதைக்கினம். காலமாற்றத்தோடு நவீன அறிவியல் மாற்றத்தோடு வருபனவற்றை உள்வாங்கும் வரலாற்றுப் பதிவுகளை அவர்கள் படிக்க நேரும் போது அவர்கள் பேசும் தொனியும் மாறும்.நேற்றுவரை மாவிலாறு அணையை மூடிட்டு கிழக்கில் அரை அடியையும் கைவிடோம் என்ற எழிலன் இன்று அதையே உச்சரிக்க முடியுமா..??! அதுபோலத்தான்...இதுவும்.. மாற்றங்களூடு பதிவுகள் வரும் போது வரலாறுகள் திருத்தப்படும்..! :D
ஏன் சொல்லேலாது? இண்டைக்கு " கிழக்கை (அரை அடியையும்) கைவிடுவோம்" எண்டு எழிலன் அண்ணா எங்கயும் சொன்னவரோ?????? :P
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D நாசா மட்டுமா அனிமேட் பண்ணுது :P :P நாசாக்கு முதல் இராமயணத்த வச்சே எங்கட மதத்தில நாங்கள் எல்லாம் அனிமேட் பண்ண வெளிக்கிட்டம்..................... :P

அனிமேசனின் முன்னோடிகளும் நாங்கள் தான் என்றீங்க. ம்ம்.. நல்லது.. நாங்க யாரு...! :D:D

Link to comment
Share on other sites

இல்லை சில பேர் சிங்கள ஆமியக் கொல்லுறது தான் தமிழத் தேசியம் எண்ட விளக்கத்தில இருக்கினம் எண்டுதான் நானும் விளங்கிக் கொள்ளுறன்.அதால தான் எனக்கு இருக்கிற பிரச்சினை ஏன் அப்ப யோகியும்,இளங்குமரனும் மினக்கெட்டு இதுகளைக் கதைக்கினம் எண்டு விளங்கேல்ல?

அதுக்குத் தான் கேக்கிறன் தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு? இந்தப் பிரச்ச்னை எல்லத் தலைப்பிலையும் சிலருக்கு இருக்குது.யாழ்க்களத்தில் எங்க பாத்தாலும் இருக்குது.பிறகு எப்படிச் சொல்லுவியள் நான் தலைப்பைத் திசை திருப்பிறன் எண்டு.முதலில தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு விளங்கினாத் தான் அதைப் பற்றிக் கதைக்கலாம்.

வரலாறு எண்டா என்ன அது யாரால் எப்படி எழுதப்படுகுது எண்டு தெரியாமா அந்த நாள் முதலா சிலர் எதோ எல்லம் புலம்பிக் கொண்டிருகினம்.

னேற்று நடந்த சம்பவந்தைப் பார்த்த மூன்று பேர் அதை மூண்டு விதமாச் சொல்லலாம்.இதில வர்லாறு அறிவியல் ஆதாரம் அகழ்வாரச்சி எண்டு சும்ம புலாட விட்டுக் கொன்டிருக்கினம்.

பரண விதாரண எழுதாத வரலாறா இல்லை மகாவம்சம் சொல்லாத புரட்டா?

வரலாறை வெண்டவன் தான் எழுதுவான்.தமிழத் தேசியம் வெல்லுது எண்டா ,தமிழத் தேசியம் சொல்லுறது தான் வரலாறு.

திராவிடர் வெல்லுகினம் எண்டா திராவிடர் சொல்லுறது தான் வரலாறு.ஆரியர் வெண்டு ஒரு வரலாற்றை எழுதி வச்சாங்கள் எண்டா, சிங்களவ்ர் ஒரு வரலாற்றை தங்கலுக்குச் சார்பா எழுதி வச்சாங்கள் எண்டா இப்ப நாங்கள் அதை மாத்தி எழுதுவம்.அதற்க்கு ஆதாரமா மீண்டும் அகழ்வராச்சிகளையும் எமக்குச் சாதகமான சான்றுகளையும் காட்டுவம்.

இடையில இங்க சும்மா புலம்பிக் கொண்டிருக்காமா , யாழ்க் களத்தில உருப்படியாச் செய்ய கன விசயங்கள் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிமேசனின் முன்னோடிகளும் நாங்கள் தான் என்றீங்க. ம்ம்.. நல்லது.. நாங்க யாரு...!

பின்ன........ ராமர் பாலத்தையே நாங்க அனிமேட் பண்ணின ஆக்களாச்செ.... அதுவும் கவிதையாலயே அனிமேற் பண்ணின ஆக்கள் நாங்க.... :P

இல்லை சில பேர் சிங்கள ஆமியக் கொல்லுறது தான் தமிழத் தேசியம் எண்ட விளக்கத்தில இருக்கினம் எண்டுதான் நானும் விளங்கிக் கொள்ளுறன்.அதால தான் எனக்கு இருக்கிற பிரச்சினை ஏன் அப்ப யோகியும்,இளங்குமரனும் மினக்கெட்டு இதுகளைக் கதைக்கினம் எண்டு விளங்கேல்ல?

அதான் எனக்கும் விளங்கேல.... official ஆ யாராவது டமில் தேசியம் எண்டா என்னெண்டு definition குடுத்தால் நல்லது. அப்பிடியே விக்கிபீடியாவிலயும் போட்டுவிட்டால் நிம்மதி. இல்லாட்டி ராமர் பாலம் மாதிரி தமிழ்த்தேசியத்துக்கும் ஆளாளுக்கு ஓரு கற்பனைக் கதைய அவிட்டு விடுவினம்.

உதாரணமா:

தமிழ்த் தேசியம் எண்டால் சிங்கள ஆமிய கொல்லுறது (நன்றி நாரதர் அண்ணா)

தமிழ்த் தேசியம் எண்டால் இந்துமதக் கோட்பாட்டை பின்பற்றுறது.

தமிழ்த் தேசியம் எண்டால் யாழ் களத்தில வீரவணக்கம் சொல்லுறது.

தமிழ்த் தேசியம் எண்டால் வெளிநாட்டுக்கு ஓடிப்போறது.

தமிழ்த் தேசியம் எண்டால் வெளிநாட்டில இருந்து "நாங்கள் வீரப்பரம்பரை" எண்டு கவிதை எழுதுறது.

தமிழ்த் தேசியம் எண்டால் தமிழில கண்டன அறிக்கை விடுறது.

தமிழ்த் தேசியம் எண்டால் ........... மிச்சம் நாளைக்கு வந்து எழுதுறன் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில உருப்படியாச் செய்ய கருசணை கொண்டிருக்கிறனீங்க எல்லாம் எதுக்கு.. இதுக்குள்ள புகுந்து வாழைத்தோட்டத்துக்குள்ள புகுந்த மதம் பிடிச்ச யானையாட்டம்...??! பொறுக்காதே..! :lol::D

கவிதையில அனிமேட் பண்ணின படியாத்தான் இப்ப நாசா பண்ணுது.. இல்ல நாசா.. சற்றலைட்ட ரஸ்சியாவுக்கு மேலால திருப்பிட்டு.. உளவு பார்த்திட்டு இருக்கும்..! :D:D

Link to comment
Share on other sites

சேது சமுத்திரத் திட்டம் நிறவேற்றப்படுவது, தமிழ் நாட்டில் இருக்கும் திராவிட அரசின் அரசியற் பலம் சார்ந்த விடயம்.கலைஞர் சொல்லியுள்ளது போல் ஆரிய வர்ணாச்சிரமக் கருத்தியலை முன் நிறுத்தும் சக்திகள் அயோத்தி இராமர் கோவிலை முன் வைத்து நாடத்தியது போல்,தமிழ் நாட்டிலும் சேது சமுதிரத் திட்டத்திற்க்கு எதிராக களம் இறங்க விழைகின்றன.ஈற்றில் வெல்வது யார் என்பது எவரின் அரசியற் பலம் வெல்கிறது என்பதைப் பொறுத்தது.

இதில இங்க அந்த ஆதராம் இந்த ஆதாரம் எனக்குத் தான் அறிவியல் தெரியும் எண்டு சும்ம வெத்துவெட்டு விவாதம் செயிறதி விட்டுப்போட்டு ,வரலாறு எண்டா என்ன அது எவ்வாறு உருவாக்கப் படுகிறது? அரசியலுக்கும் வரலாற்றுக்கும் ஆன தொடர்பு என்ன? பண்டைய தமிழர் ,திராவிடர் வரலாறு என்ன என்று கொஞ்சமாவது படித்து விட்டு விவாதிக்கலாம்.

பிடிச்ச முயலுக்கு மூன்று கால் எண்டு அந்தக் காலம் முதல் சாகும் வரை சொல்லிக் கொண்டு இருக்கப் போறியளோ?இந்த விவாத்தில் எழுதிப் பயன் இல்லை என்று தான் எழுதாம இருந்தான்.சிலரின் கருதுக்கள் எல்லை மீறிப்போவதையும், சிலர் தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு விளக்கம் சொல்ல முற்படுவதையும், இன்னும் சிலர் பரந்த வாசிப்பை உடைய இளங்குமரன் அண்ணாவுக்கு என்ன தெரியும் என்கிற வகையிலும் எழுத முற்படும் போது பேசாமல் இருக்க முடியவில்லை

இளங்குமரன் பேசியவை இன்றைய வரலாற்றின் வாசிப்புக்கள்.கலா நிதி இந்திரபால எழுதிய .

'இலங்கையில் தமிழர்-ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, பொது ஆண்டிற்கு முன்(கி.மு) 300 முதல் பொது ஆண்டு (கி.பி) 1200 வரை' என்னும் நூலில் இருந்து சொல்லப்பட்ட பல விடய்ங்கள் அந்தப்பேச்சில் உண்டு.

//அவர்களும் எழுதி வைத்துள்ள வரலாறுகளைத் தான் படிச்சிட்டுக் கதைக்கினம். காலமாற்றத்தோடு நவீன அறிவியல் மாற்றத்தோடு வருபனவற்றை உள்வாங்கும் வரலாற்றுப் பதிவுகளை அவர்கள் படிக்க நேரும் போது அவர்கள் பேசும் தொனியும் மாறும்.//

அவர் வருங்காலத்தில் நான் சொல்லுறைத் தான் சொல்லுவார் எண்டு என்ன சாத்திரம் பாத்துபோட்டே சொல்லுறியள்?

நெடுக்கல போவான் இணைக்கும் இணைய இணைப்புக்கள் தான் நவீன அறிவியல் மாற்றத் தோடு வரும் வரலாற்றுப் பதிவுகளா? அதை யாரு சொல்ல வேணும்? இப்படி முன்னர் குருவி எண்டு ஒருத்தரும் சொல்லி கனக்க இணைப்புகளை இணச்சவர்,பழைய ஆக்களுக்கு நாபகம் இருக்கும்.அதை ஒவ்வொண்டாப்படிச்சு அது ஏன் தவறனது எண்டு எழுதி இருக்கிறன்.இணயத்தில பல பேர் பல உள் நோக்கஙக்ளோடு பலவற்றை எழுதி இருப்பார்கள்.எதை யார் என்ன தளத்தில் என்ன சொல்லி உள்ளர்கள் என்பதை வைதுத் தான் அவற்றின் உண்மை பொய்களை நாங்கள் ஏற்ருக் கொள்ள முடியும்.சும்மஒ முயலுக்கு மூண்டு கால் எண்டு நிறுவ வேணும் எண்டு போட்டு கூகிள் ஆண்டவரிட்ட கேட்டுப்பெறுகிற இணைப்புக்கள் எல்லாம் அறிவியல் இல்லை.உந்தப் பேக்கட்டலை எப்ப நிப்பட்டப் போறியள்? உப்படி உங்கட நேரத்தியும் வீணக்கி மற்றவையின்ர நேரத்தியும் ஏன் வீணக்கிறியள்? இந்த நேரத்திற்க்கு போய் நான் மேல சொன்னதுகளை வாசியுங்கோ, பிரியோசனமா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில உருப்படியாச் செய்ய கருசணை கொண்டிருக்கிறனீங்க எல்லாம் எதுக்கு.. இதுக்குள்ள புகுந்து வாழைத்தோட்டத்துக்குள்ள புகுந்த மதம் பிடிச்ச யானையாட்டம்...??! பொறுக்காதே..! :lol::D

கவிதையில அனிமேட் பண்ணின படியாத்தான் இப்ப நாசா பண்ணுது.. இல்ல நாசா.. சற்றலைட்ட ரஸ்சியாவுக்கு மேலால திருப்பிட்டு.. உளவு பார்த்திட்டு இருக்கும்..! :D:D

மொத்தத்தில அனிமேட் பண்ணினதெண்டு புரிஞ்சா சரி :P :P

Link to comment
Share on other sites

இல்லை சில பேர் சிங்கள ஆமியக் கொல்லுறது தான் தமிழத் தேசியம் எண்ட விளக்கத்தில இருக்கினம் எண்டுதான் நானும் விளங்கிக் கொள்ளுறன்.அதால தான் எனக்கு இருக்கிற பிரச்சினை ஏன் அப்ப யோகியும்,இளங்குமரனும் மினக்கெட்டு இதுகளைக் கதைக்கினம் எண்டு விளங்கேல்ல?

அதுக்குத் தான் கேக்கிறன் தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு? இந்தப் பிரச்ச்னை எல்லத் தலைப்பிலையும் சிலருக்கு இருக்குது.யாழ்க்களத்தில் எங்க பாத்தாலும் இருக்குது.பிறகு எப்படிச் சொல்லுவியள் நான் தலைப்பைத் திசை திருப்பிறன் எண்டு.முதலில தமிழத் தேசியம் எண்டா என்ன எண்டு விளங்கினாத் தான் அதைப் பற்றிக் கதைக்கலாம்.

நாரதரே!!

என்னை பொறுத்தவரை "இனங்களின் தேசியம்" என்பதை வார்த்தைகளினாலோ அல்லது வகுப்புக்களினாலோ இன்னொருவருக்கு விளக்கிவிட முடியாது. இனங்களின் தேசியம் என்பது (எங்களை பொறுத்தவரை தமிழ்த்தேசியம்) அந்த இனக் குழுமத்தில் இருக்கும் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் பீறிட்டு எழவேண்டிய எண்ணங்களின் தொகுப்பு. இது சதாரணமான எண்ணங்களா என்றால், இல்லை. அந்த இனத்தின் உயிர்வாழ்க்கை, வாழிடம், மொழி, கலை, கலாச்சாரம், தொடர்பாடல், பாதுகாப்பு இன்னோரன்ன அடிப்படை குணாம்சங்களை எந்தப் பேரழிவிலிருந்தும் பாதுகாக்கும் ஆன்ம வல்லமை, எண்ணங்களினூடு ஒவ்வொருவரையும் சென்றடைகிறது, இறுகப் பிணைக்கிறது. இந்த மிக உன்னதமான, ஆழமான எண்ணங்களின் தொகுப்பு, ஓரளவிற்கு "இனத்தின் தேசியம்" என்பதை புரிந்துகொள்ள நாம் எடுக்கக்கூடிய முதற்படி என நினைக்கிறேன்.

ஒரு இனம் அடக்கி, ஒடுக்கி ஆளப்படும்வரை, இந்த "தேசியக் கருத்துக்கள்" அவர்கள் ஆழ்மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் என நினைக்கிறேன். அடிமை வாழ்க்கை மட்டுமல்ல, "நாம் அடிமையாக்க பட்டிருக்கிறோம்" என என்று ஒருவன் மனதில் பட்டவர்த்தனமாக தெரிகிறதோ, அன்றே இந்த "தேசிய உணர்வு" கொழுந்து விட்டெரிய ஆரம்பிக்கும். இதில் அவனுடைய கலை, பண்டைய நாகரீகம் என்பன மிகப் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. இதனால்தான் தேசிய எழுச்சி பெறும் ஒவ்வொரு இனமும், அதன் தூய, புடம்போடப்பட்ட, அப்பழுக்கற்ற "தன் சுய நாகரீக பண்பாட்டு விழுமியங்களை" முற்றுமுழுதாக அறிந்துகொள்வது மிக அவசியாமாகிறது. இலக்கியங்களில் தேடல்களும், தொல்பொருள் ஆய்வுகளும் இதனால்தான் வேகம்பெறுகிறது.

தேசிய உனர்வுகொண்ட ஒர்ருவன் தன் ஆளுமைக்கேற்ப, அந்த தேசியத்தின் உயிர்மூச்சை அடுத்தவருக்கு எடுத்து செல்கிறான். போராளியாக, கவிஞ்ஞனாக, கலைஞ்ஞனாக, அறிஞ்ஞனாக, விஞ்ஞானியாக இவர்களின் இயலுமைக்கு ஏற்றதாக, அந்த "தேசிய உணர்ச்சி பிரவாகம்" இவர்களை மாற்றிவிடுகிறது. தேசியம் என்ற பெரு விருட்ஷத்தினை தாங்கிப்பிடிக்கும் பல விழுதுகளாக இவர்கள் மாறிவிடுகின்றனர்.

தேசிய உணர்வை மூச்சாக சுவாசிக்கும், போராளிக்கும் கவிஞ்ஞனுக்கும் இடையில் பேதம் இருப்பதில்லை. நெருப்பில் சூடென்றும், குளிரானதென்றும் இருப்பதில்லை. அதைப் போலவே இவர்களும்.

சரி. இந்த உயிரோடு கலந்துவிட்ட, தொடர் சங்கிலியாக ஒவ்வொருவரையும் பிணைக்கும் இந்த "தேசிய உணர்வு" தான் ஆதிக்க சக்த்திகள் எதிகொள்ளும் மிகப்பெரும் சவால்; ஆயுதம். உணர்வுகள் கொல்லப்பட்ட, அல்லது சிதைக்கப்பட்ட இனம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஈழத்தில் ஆக்கிரமிப்பாளர் செய்துவருவதும் "இந்த தேசிய உணர்வை கொல்லுதல்" ஆகும். ஈழம் தவிர்ந்த வெளியிடங்களில் இந்தக் கூட்டம் செய்ய துடிப்பதும் இதையே. வெளியிடங்களில் ஆட்கொலை மூலம் பயத்தை ஏற்படுத்தி இதனை செய்ய முடியாதிருப்பதால் கலாச்சார சீர்கேடுகள் மூலம் இதை சாதிக்கிறார்கள். இதற்குத்தான் முன்னமே குறிப்பிட்டேன்; "தன் கலை, கலாச்சார பண்பாடுகளை" முற்றாக, பிழையற அறிந்து கொள்ளுதல் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் கட்டாய கடமை. திரிபுகளை நுணுகி ஆராய்ந்து தூயனவற்றை சேகரித்தல் தற்போதைய காலத்தின் கட்டாயம்.

ஏதோ என் அறிவுக்கு பட்டதை எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கல போவான் இணைக்கும் இணைய இணைப்புக்கள் தான் நவீன அறிவியல் மாற்றத் தோடு வரும் வரலாற்றுப் பதிவுகளா? அதை யாரு சொல்ல வேணும்? இப்படி முன்னர் குருவி எண்டு ஒருத்தரும் சொல்லி கனக்க இணைப்புகளை இணச்சவர்,பழைய ஆக்களுக்கு நாபகம் இருக்கும்.அதை ஒவ்வொண்டாப்படிச்சு அது ஏன் தவறனது எண்டு எழுதி இருக்கிறன்.இணயத்தில பல பேர் பல உள் நோக்கஙக்ளோடு பலவற்றை எழுதி இருப்பார்கள்.எதை யார் என்ன தளத்தில் என்ன சொல்லி உள்ளர்கள் என்பதை வைதுத் தான் அவற்றின் உண்மை பொய்களை நாங்கள் ஏற்ருக் கொள்ள முடியும்.சும்மஒ முயலுக்கு மூண்டு கால் எண்டு நிறுவ வேணும் எண்டு போட்டு கூகிள் ஆண்டவரிட்ட கேட்டுப்பெறுகிற இணைப்புக்கள் எல்லாம் அறிவியல் இல்லை.உந்தப் பேக்கட்டலை எப்ப நிப்பட்டப் போறியள்? உப்படி உங்கட நேரத்தியும் வீணக்கி மற்றவையின்ர நேரத்தியும் ஏன் வீணக்கிறியள்? இந்த நேரத்திற்க்கு போய் நான் மேல சொன்னதுகளை வாசியுங்கோ, பிரியோசனமா இருக்கும்.

நினைக்கல்ல.. உங்களால் குறித்த இணைப்புக்கள் தொடர்பில் அறிவியல் விளக்கம் தர முடிஞ்சிருக்கும் என்று. நீங்கள் பதிலுக்கு ஏதாவது கேள்வியைக் கேட்டிட்டு தப்பி ஓடி இருப்பீர்கள். இல்ல தனி நபர் தாக்குதலை ஆரம்பிச்சிருப்பீர்கள். இல்ல எனக்கு வேற உருப்படியான வேலை இருக்கு யாழ் குப்பைத் தொட்டி என்றிட்டுப் போயிருப்பீங்க.

உங்களுடைய பல கருத்துக்கள் கருத்துக்களுக்குப் பதிலான உங்கள் கருத்துக்களாக வருவதிலும் கருத்தாளர்களை நோக்கி அவர் அப்படி போட்டார்.. இவரும் அப்படிப் போடுறார் என்று தான்.. வருகிறது. விடயம் தொடர்பில் உங்கள் கருத்தைச் சொன்னால் விளக்கமளிக்க உதவியா இருக்கும்.

உங்களுடைய மரபணுவியல் விளக்கத்தை சில இடங்களில் கண்டு வியந்திருக்கிறேன். காரணம்.. மரமணுவியல் கூட அப்படி ஒரு விளக்கத்தை கொண்டிருக்கல்ல என்றால் பாருங்களன்..!

யோகி அண்ணன் இளங்குமரன் அண்ணன் கருத்துப் பகிர்வுகளைச் செய்யினம் என்றது.. அவர்கள் ஆரியரை.. திராவிடரை.. பார்பர்னியர்.. பிராமணரை உச்சரிக்கினம் என்றது... அதுதான் தமிழ் தேசியம் என்பது உங்கள் கருத்தா... இல்ல.. :lol:

Link to comment
Share on other sites

:lol: ஈழத்திருமகன் நல்ல தளத்தில் கருத்தாடலைக் கொண்டு சென்றிருக்கிறிர்கள்,

நீங்கள் சொன்ன அனேகமானவற்றுடன் எனக்கு உடன் பாடு உண்டு.தேசிய உணர்வு என்பது ஒருவன் அடக்கப்படும் போது தான் எழுதுகிறது.பலர் அவ்வாறு உணரும் போது அவர்களுக்கிடையே ஒரு பிணைப்பு வருகிறது.அந்தப் பிணைப்பே விடுதலைப்போராட்டங்களாக மாறுகிறது.இந்த அடிப்படை தேசிய உணர்வாகட்டும், மார்க்க்ஸின் வர்க்கப் போரட்டம் ஆகட்டும், ஏன் பின்லாடனின் இசுலாமிய அடிப்படை வாதமாக்கட்டும் எல்லவற்றிற்க்கும் பொருந்தும்.எங்கே எவனொருவன் தனக்கு அனீதி இழைக்கப்படுகிறது என்று உனருகிறானோ ,எந்தத் தளத்தில் அது இழைக்கப்டுகிறதோ அந்தத் தளத்திர்க்கு எதிர்மறையான தளத்தில் கருத்தாக்கங்கள்,கோட்பாடுகள் உருப்பெறுகிறது.

சிங்களப் பேரினவாத்திற்கு எதிர்னிலையாகவே தமிழத் தேசியம் ஈழத்தில் உருப்பெற்றது.ஆனால் அதற்கு முன்னமே பார்ப்பனீயம் என்னும் வருணாச்சிரமத்திற்க்கு எதிராகத் திராவிடம் என்னும் அடையாளம் உருப்பெற்றது.ஆனால் இந்த இடத்தில் தூய இனம் என்பது அர்த்தமற்றது.அறிவியலுக்கும் முரணானது.அதனால் தான் தூய இனத்தை நிறுவ முற்பட்ட கிட்லர் தோற்றுப்போனான்.மனிதர்கள் எல்லோரும் அடிப்படையில் ஒரே இனம்.ஆனால் மனிதக்குழுமங்களினது வரலாறு அவற்றிற்கிடையேயான வளப் பங்கீட்டிற்கான போட்டியுடன் சம்பந்தப்பட்டது.வடக்கே இருந்து இடம் பெயர்ந்த ஆரியர் என்னும் இனக்குழுமம் , உள்ளூரின் இருந்த திராவிட இனக்குழுமத்தை அடக்கியாள ஏற்படுத்தப்பட்டதே வர்னாச்சிரமமும் அவர்கள் கொண்டு வந்த ஆகம மதமும் மற்ற எல்லம்மும்.அதன் வரலாற்றுத் தொடர்ச்சி தான் இன்றைய சாதிய அடுக்கு.இந்தக் கருதியலுக்கு எதிராக கிழர்ந்து எழுந்ததே திராவிடக் கருத்தியல்.இந்திய உபக கண்டத்தில் வர்னாச்சிரமும்,சாதிய அடுக்கும் ஒடுக்கு முறையும் இருக்கும் வரை திரவிடக் கருத்தியல் இருக்கும்.

அதே போல் சிங்களப்பேரினவாதம் உருவாக்கிய சிறிலங்கா சிங்களவரினுடையது எங்கிற கருதியலுக்கு எதிர்னிலையாகத் தோன்றியதே தமிழ்த் தேசியம்.சிங்கள் இனவாதம் இருக்கும் வரை தமிழத் தேசியமும் இருக்கும்,சிங்கள இனவாதம் அற்று விடும் போது தமிழத் தேசியமும் அற்று விடும்.அதன் பின்னர் எந்த நிலையில் அடக்குறை நிகழ்கிறதோ அதற்க்கு எதிரான தளத்தில் இன்னொரு கருத்தியல் மக்களைஇணைக்கும்.இது தான் வரலாற்ரு இயங்கியல்.இதிலே காலம் காலமாக எழுப்பபடும் கருதியலுக்கு ஏற்றதாக வரலாறு என்பது வியாக்கியானம் செய்யப்படும்.ஆங்கிலேயர் ஆண்ட போது இருந்த வரலார்றுப் புத்தகங்கள் இப்போது உபகண்டத்தில் இல்லை.இலங்கையில் ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் எங்கள் சமூகக் கல்விப்புத்தகத்தில் மாற்றங்கள் நிகழவில்லையா அதே போல் தான்.

கடைசியில் வெல்லவது இராமர் அல்ல மனிதர்களே

Link to comment
Share on other sites

இன்னொரு விடயம் விடுபட்டது.கலை கலாச்சாரம் என்பதிலும் தூயது என்று எதைக் குறிப்பிடலாம்.கலையும் கலாச்சாரமும் மாறிக்கொன்டு வருவது. இதில் எந்தக் காலத்தையது தூயது எது கலந்தது என்று பிரிப்பதுவும் கடினம்.ஆனால் ஆளும் வர்க்கத்தால் அதன் அடக்குமுறைக்காக சுரண்டலுக்காக்கத் திணிக்கப்படவற்றை நீக்கி விடுதல் அந்த இனக் குழுமத்தின் தனி அடையாளத்தை உறுதி செய்ய அதன் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும் அடக்கப்படும் கருதியலில் இருந்து விடுபடவும் அவசியமானதாக இருக்கலாம்.ஆனால் அதுவும் அந்தப் போராட்டம் வென்றெடுக்கப்படும் போது வேறு திசைகளில் செல்லலாம்.ஏனெனில் இன்று பிரதான முரணாக இருக்கும் இன முரண் அற்றுப்போகும் வேளையில் உருப்பெறும் இன்னொரு முரணின் பாற்பட்டு புதிய அடையாளங்கள் ஏற்படலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.