Jump to content

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்


Recommended Posts

மிகவும் நல்லது.

உங்கள் கருத்துப்படி, "ரிக்வேதத்தின் நாயகன் சிவன்" அப்படித் தானே. :lol: இந்திரனையும், விஷ்ணுவையும் சிவன் படைத்தான் என்றால், சிவனை பரிவாரமாக ஆமர்த்த வேண்டிய தேவை என்ன? ஒருவரை பட்டைத்துவிட்டால் "படைத்தவர் பெரியவர்" அப்படியா?. காலத்தையும் கடந்தவன் என கூறப்படும் கடவுளை "படைத்தான்" என்று "காலத்துக்குள் இழுப்பது" எவ்வளவு முட்டாள்தனம் என்று புரிகிறதா? கடவுள் சக்தி மயானவன் என்று கூறுபவர்கள், கடவுளை படைத்தல் என்பது "சக்தியை படைத்தல்" என்று பொருள்படுவதை மறந்ததேனோ? உண்மையில் இங்கு "படைத்தல்" என்ற சொல்லே அர்த்தமற்றது. சக்தி பிரிக்கப்பட கூடியதா? ( Can the energy be divisible? Are there "different energies" or "different forms of energy?". )

வேதம் வேறு வேத நாயகன் வேறு அல்ல, அதனால் தான் வேதங்கள் சப்தபிரம்மம் எனப்படுகிறது. குணப் பிரம்மம், நிர்குண பிரம்மம், சப்தபிரம்மம் என்பதெல்லாம் எங்கும் நிறைந்திருக்கும் ஏகப்பிரம்மத்தையே குறிக்கும். விஞ்ஞானம் முழுதாக வரையரை செய்ய முடியாமல் String theory என்றும் Super String Theory என்றும் M Theory என்றும் இன்று வரை தடுமாறிக் கொண்டிருக்கும் Cosmic Energy யும் அந்த ஏகப்பிரம்மத்திற்குள்ளேயே அடங்கி விடுகிறது.

அதில் இந்திரன் என்றும், அக்னி என்றும், ருத்ரன் என்றும் குறிப்பிடப்படுவதெல்லாம் different forms of source energy தானே ஒழிய வேறல்ல. வேதங்களில் முழுமுதற் கடவுள், சிறு கடவுள் என்ற பேதங்கள் எல்லாம் சொல்லப்படவில்லை. எல்லாமே ஒரே சக்தியின் வெவ்வேறு அம்சம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இந்திரனை சிருஷ்டித்தான் என்பது பிரபஞ்ச சக்தி தன்னுள் உறைந்திருக்கும் அம்சங்களில் ஒன்றை உணர்த்தும் வண்ணம் தோற்றம் பெற்றது என்றே ஆகிறது.

ஒரே சக்தி ஏன் வெவ்வேறு அம்சங்களை பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டீர்களானால் ........

ஒருவன் மிகவும் பசியால் வாடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நல்ல காய் கனிகள் அவன் பசியை தீர்க்கும் அல்லவா? காய் கனிகளுக்கு பசி தீர்க்கும் சக்தி எப்படி வந்தது? மூல சக்தியான சூரிய சக்தி பல்வேறு உயிரியல் மாற்றங்களை அடைந்ததன் விளைவு அல்லவா காய்களும் கனிகளும்.

பசியால் களைத்தவனுக்கு காய்களையும் கனிகளையும் வழங்காது, வா காய்களும் கனிகளும் உருவாக காரணமான மூலசக்தியையே உனக்கு தருகிறேன் என்று கூறி அவனை சுட்டெரிக்கும் வெயிலின் கீழ் நிறுத்தினால் அவன் பசி தீருமா? அது போல் தான் மூல சக்தி ஒன்றே ஆனாலும் தேவைக்கேற்ப அது வேறுபட்ட அம்சங்களில் தோற்றுவிக்கப்படும் போது தான் அது வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகிறது.

இந்திரன் (இந்திரியம், நீர்), அக்னி(நெருப்பு) பிரக்ருதி (புவியீர்ப்பு) வருணன் (ஆகாயம்) இப்படி எம்மை சூழ உள்ள இயற்கையின் ஒவ்வொரு தோற்றங்களையும் தான் வேதங்கள் ஆராதிக்கிறது. எல்லாம் ஒரே சக்தியின் தோற்றுவாய்கள் என சொல்வதை 21ம் நூற்றாண்டின் M Theory யும் மறுக்கவில்லை.

நிலம், நீர், நெருப்பு......... என்று இயற்கை தன்னில் வேறுபாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறதா? அல்லது நீங்களே உங்கள் மனதில் "எண்ணங்கள் மூலம்" இந்த வேற்றுமைகளை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? இதில் எது உண்மை? இந்த இயற்கையைவேறுபிரித்து (divide) பார்க்கும் முட்டாள் கொள்கையை தந்தது யார்?

அப்படியனால் தாகம் வரும் சமயத்தில் கொஞ்சம் நெருப்பை அள்ளி குடித்து பாருங்கள். அப்போது தெரியும் இவை இயற்கையான வேறுபாடா இல்லை நமது எண்ணங்களின் கோளாறால் வந்த வேறுபாடா என்று :D

இன்னொன்று. வேதாந்தம் கூறுவது "சகல அறிவையும் கற்று மற" என்பதே. அதுதான் வேதத்தின் இறுதி.

சகலதையும் கற்று மற என்று வேதாந்தம் சொல்லவில்லை, அப்படி கற்றதும், கற்று விட்டோம் என்ற ஆணவத்தை மற என்று தான் வேதாந்தம் சொல்கிறது, இப்படி தப்பு தப்பாக எங்கே படிக்கிறீர்கள்? :rolleyes:

புரோத்தனும் நியூத்திரனும் என்று இன்னும் எத்தனை காலத்துக்கு கூறப்போகிறோம். அப்படியானால் இயற்கையின் மூலமான "மூலக்கூறை" கண்டுபிடித்துவிட்டோமா? அப்படியானால் ஏன் ஸ்ரிங் தியரி, கே-தியரி என்று மண்டையை போட்டு உடைக்கிறோம்? இன்னமும் மின்காந்த விசையும், ஈர்ப்பு விசையும் ஒன்று சேருதில்லை என்றுதானே சொல்கிறார்கள் (There are only two forces in nature. One is electro-magnetic force and the other one is gravity. Both never coincide )

String theory இருக்கிறது Super String theory இருக்கிறது M Theory இருக்கிறது. அது என்ன K Theory?

There are four forces in the nature not two

1. Gravity

2. Electromagnetic

3. Strong nuclear force (energy that holds neutrons and protons together in nucleus)

4. Weak nuclear force (energy that radiates when neutrons are transformed to protons - (neutron decay))

In short, the basis of string theory is to put all these 4 forces unified under one equation and later string theorists came up with 5 Super String Theories. M Theory is unification of those 5 super string theories. M theory is probably the best candidate on the way of finding Theory Of Everything (TOE).

உங்கள் விடுமுறை நாட்களில் இது பற்றி (String Theory, M theory) தனித்திரி ஆரம்பித்தீர்களானால் மிகவும் விரிவாக கலந்துரையடலாம். இங்கு நாம் செய்வது கருத்துப்பரிமாற்றங்கள் தான். வெற்றி பெறும் நோக்கில் நடத்தப்படும் பட்டிமன்றங்கள் அல்ல. அதனால் உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். நேரம் கிடைக்கும் நேரங்களில் மட்டும் வந்து கருத்துப்பரிமாற்றம் செய்யுங்கள். இது போன்ற கலந்துரையாடல்கள் நமது அறிவை தெளிவுபடுத்திக் கொள்ள கொஞ்சமாவது துணை நிற்குமானால் அதுவே உண்மையான வெற்றி.

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply

தயா!

இன்னுமொன்றை சொல்ல வேண்டும்

'இமைய வில் வாங்கிய ஈசன் "பங்கு உறை

உமையினை இகழ்ந்தனன் என்ன" ஓங்கிய

கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா

சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.

இதற்கும் தவறான அர்த்தத்தை தந்துள்ளீர்கள். இதில் கண் இமையைப் பற்றி எங்குமே வரவில்லை. "இமைய வில் வாங்கிய ஈசன்" என்பதற்கு "இமைய மலையை வில்லாக வளைத்த ஈசன்" என்றுதான் தமிழறிஞர்கள் அர்த்தம் சொல்கிறார்கள்.

இந்தப் பாடலில் கார்முகம் என்ற சொல்வருகிறது. வில்லை கார்முகம் என்றை சொல்லைப் பயன்படுத்தியும் கம்பர் குறிப்பிடுகிறார். மிதிலையில் சிவதனுசை படைவீரர்கள் கொண்டு வரும் போதும் கார்முகம் என்றே குறிப்பிடுகிறார். தேவதச்சன் விற்களை உருவாக்கியதை குறிப்பிடும் போதும் கார்முகம் என்றுதான் சொல்கிறார்.

இந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்றால் மலையை வில்லாக வளைத்த சிவன் உமையை அவமதித்த தக்கனின் வேள்வியை தன்னுடைய வில்லைக் கொண்டு அழித்தார் என்பதாகும்.

இந்த வில் இராமானால் முறிக்கப்பட்ட செய்தி கேட்ட தசரதன் இப்படி மகிழ்வதாக ஒரு பாடல் வருகிறது.

வெற்றிவேல் மன்னவன் தக்கன் வேள்வியில்

கற்றைவார் சடைமுடிக் கணிச்சி வானவன்

முற்றஏழ் உலகையும் வென்ற மூரிவில்

இற்றபே ரொலிகொல் அன்றுஇடித்தது ஈங்குஎன்றான்.

தக்கன் வேள்வியை அழித்ததும் ஏழு உலகத்தையும் வென்றதுமாகிய சிவனுடைய வில் இற்ற (முறிந்த) பேரொலி கேட்டு தசரதன் மகிழ்ந்தான் என்று இந்தப் பாட்டு கூறுகிறது.

தயா! இதற்கு மேலும் கம்பராமாயணம் சிவதனுசு, விஸ்ணுதனுசு பற்றிக்கூறவில்லை என்று அடம்பிடிக்காதீர்கள். தவறாக அர்த்தங்களையும் தயவுசெய்து இங்கு எழுதாதீர்கள்.

Link to comment
Share on other sites

ஆனால் கம்பராமாயணம், வான்மீகிராமாயணம் என்று இரண்டையும் கற்றவர்கள் சிவதனுசு, விஸ்ணுதனுசு பற்றி உறுதியாக சொல்கிறார்கள்.

ஆகவே கம்பராமாயணம் தெளிவாகச் சொல்வதை யாரும் திசை திருப்பி திரிபு படுத்த வேண்டாம்.

இங்கே ஒரு விடயத்தை கவனித்தீர்களா?

ஏற்கனவே விஸ்ணு மேலோகத்தில் சிவதனுசை சேதப்படுத்தியிருக்கிறார். பின்பு பூலோகத்தில் ராமராக வந்து மொத்தமாக முறித்துவிட்டு போயிருக்கிறார்.

நான் அறிந்தவரையில் வால்மீகி ராமாயணத்தில் விஷ்ணு தனுசு என்று குறிப்பிடப்படவில்லை. பரசுராமனின் தந்தை ஜமதக்கினியின் வில் என்றே வருகிறது..

அப்படியே விஷ்ணு தனுசு என்று கம்பன் குறிப்பிட்டிருந்தாலும், சிவனை விட விஷ்ணுவை உயர்வாக பாடியிருந்தாலும் அதை ஒரு மக்கள் கூட்டத்தின் ஒட்டு மொத்த கருத்தாக கொள்வது பகுத்தறிவல்லவே.

ஒரு படைப்பாளியின் படைப்பில் அவனது சொந்த விருப்பு வெறுப்புகளின் சாயல் கலந்தே இருக்காது என்று கூறி விட முடியாது.

உதாராணத்திற்கு உங்கள் எழுத்துக்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். இன்னும் 500 வருடம் கழித்து ஒருவர் உங்கள் கட்டுரைகளை வாசித்து விட்டு, தமிழர்கள் எல்லோரும் 500 வருடங்களுக்கு முன் மிகத்தீவிரமாக கடவுள் மறுப்பு செய்தார்கள் என்று நிறுவ முயன்றால் எப்படி இருக்கும்? :lol: அப்படி தான் இதுவும்.

Link to comment
Share on other sites

அட பாவியளா ராமாயணத்தை விட ராமர் பாலம் பற்றிய விவாதம் பெரிசா இருக்கும் போலைஇருக்கே. :lol::)

Link to comment
Share on other sites

தயா நீங்கள் வேண்டும் என்றே அர்த்தங்களை மாற்றி சொல்கிறீர்கள். இப்படி விவாதிப்பது அழகு அல்ல.

சரி! இப்பொழுது சில விடயங்களை விளக்குகிறேன்.

கம்பராமயாணத்தில் பரசுராமப்படலம் இரண்டு விற்களின் வரலாறையும் தெளிவாகச் சொல்கிறது. கம்பராமாயணத்தில் மேலே உள்ள பாடலின் தொடர்ச்சி அடுத்த பாடலில் இருக்கும். ஒன்றை மட்டும் படித்து விட்டு அர்த்தத்தை முடிவு செய்யக்கூடாது.

இரண்டு விற்களின் வரலாறும் கம்பராமாயணத்தில் இப்படி வருகின்றது.

ஒரு கால் வரு கதிராம் என ஒளிகால் வன உலையா

வருகார் தவழ் வடமேருவின் வலிசால்வன வையம்

அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவனதாம்

இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்நாள்.

ஒற்றைச் சக்கரத்தில வருகின்ற சூரியனைப் போன்றும், வடமேருவைப் போன்று வலிமையுள்ளதாயும், நிலத்தில் வாழுகின்ற மக்கள் அணுகவும் முடியாத தேவ தச்சனால் செய்யப்பட்ட இரண்டு விற்கள் முற்காலத்தில் இருந்தன.

கார்முகம் எண்று சொல்லியவை விற்கள் தான் நான் அதைப்பற்றி விபரிப்பதில் இருந்து விலகுக்கிரென்...

அதற்கும் முதல் இந்த பாடலை கம்பர் எழுதி இருக்கிறார்.... பரசுராமர் தன் வீரவில்லை பற்றி சொல்ல முதல் தன் வில்லை இராமருக்கு தர முன் வருகிறார்... யார் இந்த பரசுராமர் எண்றால் அவரும் விஸ்னுவின் ஆறவது அவதாரம் என்கிறார்கள்... அவர் தன் வில் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் கவி

மானம் மணி முடி மன்னவன், நிலை சோர்வுறல் மதியான்,

தான் அந் நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்;

'ஆன(ம்)முடை உமை அண்ணலை அந் நாள் உறு சிலைதான்

ஊனம் உளது; அதன் மெய்ந்நெறி கேள்!' என்று உரைபுரிவான்

அதாவது உறு வினை எனும் விதிவசதை தவிர வேறு விதங்களில் மன்னவர்கள் தன்நிலை சோர்வது அறிவு இல்லை... உமையானுக்கு கூட உறு ( விதி) செய்தது... ( சிலை என்பது போர்க்களம்) அதான் நீதி கேள் என்கிறார் கம்பர்.... இதை கேவலப்படுத்த ஒண்றும் இல்லை...

ஒரு கால் வரு கதிராம் என ஒளிகால் வன உலையா

வருகார் தவழ் வடமேருவின் வலிசால்வன வையம்

அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவனதாம்

இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்நாள்

இதன் அர்த்தம் தாங்கள் சொன்னவை இல்லை.....

அதாவது பால்கடலில் மேரு மலையை மத்தாக்கி வடமாகிய வாசுகிப்பாம்பால் கடைந்த போது வலியால் நஞ்சை கக்கியபோது... அருகில் மச்ச அவதாரம் எடுத்து வினை புரிந்த சக்கரம் கொண்ட விஸ்னுவோ.... அல்லது அதன் பால் விடம் உண்ட கண்டன் சிவனால் அமைய பெற்ற கார்முகம் ( இப்படி வராதா என்ன...??)

கடவுளுக்கு வில் செய்யும் கொல்லரா யார் அவர்..??

மிகுதிக்கு நேரம் போதவில்லை.....

Link to comment
Share on other sites

தயா!

சிலை என்பது போர்களம் என்று எங்கே படித்தீர்கள்? நீங்கள் கம்பராமாயணம் படிக்கவில்லை என்பது நன்கு விளங்குகின்றது

கம்பராமாயணம் முழுவதும் சிலை என்று சொல் பலநூறு முறைக்கு மேல் வருகிறது. சிலை என்பதற்கு வில் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு விளங்காது விட்டால், தமிழ் இலக்கியம் கற்ற யாரிடமாவது கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

நான் முன்பே சொன்னேன், கம்பர் வடமொழிச் சொற்களையும், வடமொழிப் பெயர்களையும் முடிந்தவரை தவிர்த்திருப்பார் என்று. வடமொழிப் பெயர்கள் வருகின்ற இடங்களில், அதைத் தவிர்த்து அவர்கள் செய்கின்ற தொழிலைக் கொண்டு அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெயர்கள் தமிழ் ஒலி நடையோடு ஒத்துப் போயிருந்தால் மாத்திரம் அவைகளை பயன்படுத்தியிருப்பார்.

இதை கம்பராமயாணம் படித்த அனைவரும் அறிவார்கள்.

தேவர்களின் தச்சனான விஸ்வகர்மா என்பவன் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. வான்மீகி இராமாயணம் விஸ்வகர்மா செய்த விற்கள் என்று சொல்கிறது. கம்பர் விஸ்வகர்மாவின் பெயரைத் தவிர்த்துக் கொண்டு, அவனுடைய தொழிலைச் சொல்லி விஸ்வகர்மாவைக் குறிப்பிடுகிறார்.

இவைகளை கம்பராமயாணம் படித்தால் புரிந்து கொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

"இராமர் பாலம்" தொடர்பான இக் கருத்தாடலில் இருந்து வேறு கருப்பொருளின் கீழ் கருத்தாடப்பட்ட சில கருத்துக்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு, இத் தலைப்பில் கருத்தாடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க "மனமும் அறிவும்" என்கிற தனித்தலைப்பாக "மெய்யெனப் படுவது" என்கிற பிரிவுள் இடப்பட்டுள்ளது. இராமர் பாலமும் - அதன் அரசியலும் - மதப் பின்னணியும் தொடர்பான கருத்துக்களை மட்டும் இங்கு பகிரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ராமர் பாலத்தை இடித்தால் மீண்டும் சுனாமி ஆபத்து'

ராமேசுவரம், ஆக. 27:

ராமர் பாலத்தை இடித்தால் மீண்டும் சுனாமி வரும்போது, கடலோரப் பகுதிகள் அழியும் அபாயம் உள்ளதாக, 250-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதாக டாக்டர் கல்யாணராமன் தெரிவித்தார்.

ராமேசுவரத்தில் ராமர் பால பாதுகாப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராமசேது பாலம் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் கல்யாண்ராமன் பேசியது:

ராமர் பாலம் உள்ள பகுதியில் தான் தோரியம் கிடைக்கிறது. உலகில் வேறு எங்கும் தோரியம் இல்லை.

ஒரு கிலோ தோரியம் ரூ. 1 கோடிக்கு விலை போகிறது.

25 கிலோ மணல் எடுத்தால் ஒரு கிலோ தோரியம் கிடைக்கும். ராமர் பாலம் தோரியம் எனும் அரியவகை பொக்கிஷத்தைத் தேக்கி வைத்துள்ளது.

ராமர் பாலத்தை இடிப்பதன் மூலம் இத் தோரியத்தை வீணாக்கி விட்டால், கடலோடு கடலாக கரைந்து விடும்.

பின்னர் நாம் தோரியத்தை அதிக விலை கொடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாங்கும் நிலை வரும்.

இந்திய அணுசக்திக்குத் தேவையான மூலப்பொருளை அழிக்க அமெரிக்கா சதித் திட்டம் போடுகிறது.

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மத்திய அரசு ராமர் பாலத்தை இடிக்கத் துணிந்துள்ளது. ராமர் பாலம் இடிக்கப்பட்டால் மீண்டும் சுனாமி வரும் போது தமிழக கடலோரப் பகுதிகள் அழிந்துவிடும் என 250-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதையும், அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.

தினமணி

Link to comment
Share on other sites

தோரியம் கதிர்வீச்சு அபாயம் கொண்ட பொருள் ...அதை எடுக்கும் பொழுது எற்படும் கதிர்வீச்சால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவர்...... எனவே தோரியம் மண்ணோடு இருப்பதே நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலத்தை சேதப்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சேது சமுத்திரத் திட்டப் பணியின் போது ராமர் பாலத்தைச் சேதப்படுத்தக் கூடாது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் ரூ.2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியின் போது ராமேஸ்வர ராமர் பாலம் இடிக்கப்பட வேண்டியுள்ளது என்று இப்பணி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பா.ஜ., வி.எச்.பி., உள்ளிட்ட கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர். இதனை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். இதனிடையே ராமர் பாலத்தைச் சேதப்படுத்தக் கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் சேது சமுத்திரத் திட்டப் பணியின் போது ராமர் பாலத்திற்குச் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தினமலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேது சமுத்திர திட்டத்தையும் பாதிப்புறச் செய்யாது..இராமாயண காலம் தொட்டு இருக்கும் புவியியல் கூறு பாதுகாக்கப்பட்டதில் திருப்திதான். எதிர்காலத்தில் இக்கூறு குறித்து விரிவான ஆய்வுகளுக்கு இடமளித்திருக்கிறது இந்தச் சர்ச்சை..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை

செப்டம்பர் 01, 2007

டெல்லி: ராமர் பாலத்தை செப்டம்பர்14ம் தேதி வரைக்கும் இடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் சேதுக் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ளவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் கால்வாய் அமைப்பதற்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில், இந்துக்கள் புனிதச் சின்னமாக கருதுவது ராமர் பாலம். அதை இடித்தாலோ, சேதப்படுத்தினாலோ அது லட்சக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளையும், மனதையும் புண்படுத்தும் செயலாகும்.

மேலும் நமது பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஈடு கட்ட முடியாத இழப்பாக அமைந்து விடும். ராமர் பாலத்தின் மீது துளையிடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். விரைவில் வெடிகுண்டு வைத்து பாலத்தைத் தகர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.

எனவே இதை அவசர வழக்காக கருதி விரைந்து விசாரித்து தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சுவாமி.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பி.நலோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மோகன் வாதிடுகையில், சுவாமி கூறுவதைப் போல அது பாலமே அல்ல. கால்சியப் படிவுகளால் ஆன இயற்கையான ஒரு அமைப்பு என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மோகன் பதில் ஏதும் சொல்லவில்லை.

ராமர் பாலம் இடிக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை அரசு அளிக்குமா என்றும் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மத்திய அரசின் வக்கீல் உறுதிமொழி அளிக்கவில்லை.

பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். செப்டம்பர் 14ம் தேதி வரை ராமர் பாலத்தை இடிக்கவோ, துளையிடவோ கூடாது. அதற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படக் கூடாது.

பாலத்துக்குச் சேதமில்லாத வகையில் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ளலாம் சென்று கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/09...ptember-14.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நல்ல விசயத்த சொல்லியிருக்கினம்.... ராமர் பாலத்துக்கு சேதம் வந்தா மனுசுடைஞ்சு போயிடும்.... தடை போடுவினமாம்..... ஆனா அதக் கடந்து ஈழத்தில இருக்கிற மக்களுக்கு சேதம் வந்தா வயைப்பொத்திக்கொண்டு இருப்பினம்.... அதுக்கும் ஏதாவது சுப்ரீம் கோட்டு தடை போட்டா நல்ல இருக்கும்.... :P முதல்ல உந்த சுப்ரீம் கோட் நீதிபதி பார்ப்பானா எண்டு தேடி பார்க்கணும்..... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படிச் சொல்லடி என்ர ராசாத்தி,

அதெப்படியக்கா உந்த நீதிபதிகள் கோடிக்கணக்கான இந்துக்களிட்ட எதாவது கருதுக்கனிப்பு வச்சவையே?

அப்ப உந்த இந்துக்கள் கோவிலில பிறப்பால பார்ப்பனரானவை தான் பூசை செய்யலாம் எண்டும் சொல்லுகினம்.உது மனித உரிமைகளை மீறிற விசயமா இல்லையோ. அப்ப சாதியத்தையும் இந்திய உயர் நீதி மன்றம் அங்கீகரிக்குமோ? உந்த உயர் நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு இருக்குதோ.

எல்லாரும் அச்சகராகலாம் எண்டு தமிழ்னாடு அரசு கொண்டு வந்த சட்டத்தையும் உந்த உயர் நீதி மன்றம் தான் தடை செய்தது.

ஆனாப்பாரக்கா இங்க லண்டனில, உந்த இந்துக்களின் நம்பிக்கையை விட மனித உயிர்களின் பாதுகாப்பும் வளமும் முன் நேற்றமும் தான் முக்கியம் எண்டு, சம்போ எண்ட மாட்டை கொல்ல வேணும் எண்டு சொன்னவங்கள்.

அனாப்பாருங்கோ உது இதோட முடியாது, இனி வேற கதயள் கனக்க இருக்கு, பிறகு சந்திப்பம் அப்ப நான் வரட்டா? கல்லுக் கனக் கிடக்கு எடுத்து வீசி விளயாடலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

இதை விட நல்ல ஒரு வழி இருக்கு.

மொட்டைத்தலை சங்கராச்சாரி வழக்கில் ஒரு நீதிபதி தான் அவருடைய பக்தன், ஆகவே இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன் என்று சொல்லி மறுத்துவிட்டார்.

அப்படியே இந்தியாவின் அனைத்து நீதிபதிகளும் "நான் இந்து, ராமர் பால வழக்கை விசாரிக்க மாட்டேன்" என்று சொல்லி மறுத்துவிடலாம். வழக்கும் ஒரு நூறு வருடம் நிலுவையில் இருக்கும். ராமர் பாலத்தையும் இடிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று-கருணாநிதி

செப்டம்பர் 01, 2007

சென்னை: ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று, அது பொறியாளர்களின் படைப்பல்ல என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: ராமர் பாலம்- உண்மையா?

பதில்: ராமாயணமே ஆரிய-திராவிடர் போராட்டத்தைத்தான் குறிக்கும் என்று பண்டித ஜவஹர்லால் நேருவும் மற்றும் பல வரலாற்றுப் பேராசிரியர்களும் வலுவான ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார்கள். எனவே ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று, பொறியாளர்களின் படைப்பு அல்ல.

சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கும் அதையொட்டிய மாநிலங்களுக்கும் எவ்வளவு பயன் விளையும், எத்தகைய பொருளாதார வளம் குவியும் என்பதையெல்லாம் நாட்டுப் பற்றுள்ள நல்லவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சேது சமுத்திர திட்டத்தை தடுக்க முடியாது-பாலு

இந் நிலையில் போரூரில் சிறுவர் பூங்கா, விளையாட்டுத் திடல் ஆகியவற்றை திறந்து வைத்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு பேசுகையில்,

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவாகும். இந்த தட்டத்தின் ஒரு பகுதிக்குத் தான் நீதிமன்றம் விதித்துள்ளது. அதுவும் 14ம் தேதி வரை தான் தடை, மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சேது சமுத்திர திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றி விடுவோம். அதை யாராலும் தடுக்க முடியாது. இந்தக் கனவு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/09...arunanidhi.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.