Jump to content

பொருளாதார நெருக்கடி ; மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் நெருக்கடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நெருக்கடி ; மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் நெருக்கடி

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடி காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை உட்பட ஏனைய மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கான உணவு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் துரிதகரமான செயற்படுத்த வேண்டும் என மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

பொருளாதார நெருக்கடி மனிதர்களுக்கு மாத்திரமல்ல,விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிருகங்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மிருகக்காட்சிசாலை நிர்வாகம் எதிர்க்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று வனஜீவராசிகள் திணைக்களத்தில் இடம்பெற்றது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, எரிபொருள் தட்டுப்பாட்டினால் தேசிய சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, உணவு மற்றும் ஏனைய மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணிகளினால் விலங்குகளுக்கான உணவு விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கான உணவு பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வழக்கிலுள்ள யானைகளை பராமரிக்கும் பொறுப்பு மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த யானைகளுக்கான வருடாந்த பராமரிப்பு செலவு 45 மில்லியனாக காணப்படுகிறது. வரவு –செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட மானியமும் நிறைவுப்பெற்றுள்ளது.

மிருகக்காட்சிசாலைக்கு தேவையான உணவு பொருட்களை விநியோகிக்கும் தரப்பினருக்கு மாத்திரம் 59 மில்லியன் நிலுவை தொகை செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வருடத்தின் இறுதி பகுதிக்கு தேவையான மானியத்துடன் குறைக்கும் பட்சத்தில் தற்போதைய நிலைமைக்கு அமைய 120 மில்லியன் அளவு நிதி அவசியமாகும்.

இக்காரணிகளை கருத்திற்கொண்டு தேவையான மானியத்தை பெற்றுக்கொள்ள திறைச்சேரியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாக வனஜூவராசிகள் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிறுவன அடிப்படையில் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ளும் செயற்திட்டங்களை தயார் செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி மனிதர்களுக்கு மாத்திரமல்ல உயிரினங்களுக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிருகங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அமைச்சர் அதிகாரிகளிடம் உறுதியளித்தார்.
 

 

https://www.virakesari.lk/article/128600

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இது மனிதருக்கும் நடக்கப் போகுது.
ஆனாலும்… இந்தியா, ஶ்ரீலங்காவை கைவிடாது என்ற நம்பிக்கை உண்டு. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நாளைக்கு இது மனிதருக்கும் நடக்கப் போகுது.
ஆனாலும்… இந்தியா, ஶ்ரீலங்காவை கைவிடாது என்ற நம்பிக்கை உண்டு. 😎

ஏதோ மனிதருக்கு  சொர்க்கம் கிடைக்கிற  மாதிரித்தான் கதை  போகுது?

ஆனால் பட்டினிச்சாவு  கண  தூரத்தில்???

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நாளைக்கு இது மனிதருக்கும் நடக்கப் போகுது.
ஆனாலும்… இந்தியா, ஶ்ரீலங்காவை கைவிடாது என்ற நம்பிக்கை உண்டு. 😎

ஸ்ரீலங்காவை கைவிடாது ஆனால் லங்காவின்  பல முக்கிய பகுதிகள் வருமானம் தரும் விமான நிலையங்கள் துறைமுகம்கள் Adani Enterprises Ltd இந்த கம்பெனி அல்லது வேறு பெயரில் அதானி சகோதரர்களால் வேட்டை யாடப்படும் ஏற்கனவே மீடியாக்களில் பெரிதாக பேசப்படாமல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மறுபடியும் இந்திய நிறுவனம்களுக்கு இம்முறை அதிக காலத்துக்கு 50 வருடகாலப்பகுதிக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது ஆங்கிலேயர்களின் உபயோகத்துக்கு பிறகு 15 தாங்கிகளுக்கு மேல் மிகுதி உபயோகப்படுத்த வலிமையின்றி இருக்கிறார்கள் இம்முறை 25 தாங்கிகள் மிகுதி இலங்கையின் பராமரிப்பில் என்கிறார்கள் .

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.