Jump to content

Recommended Posts

இது 'விக்ரம்' திரைப்படம் பார்த்த பின்னரான எனது எண்ணத் துளிகளே. இது ஒரு முழுமையான விமர்சனம் அல்ல.

********************************

🔥 இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கே உரித்தான இதன் கதை, கதைக்களம் மட்டுமல்ல பார்வையாளரின் சிந்தனைக்குத் தீனி போடும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதையும் என்னை வெகுவாக ஆச்சரியத்துள்ளாக்கின!

🔥 முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இல்லாமல், ஆங்காங்கே அவசியமான உணர்வோட்டமான காட்சிகள், பரபரப்பான சம்பவங்கள், திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தமை என்னைப் படத்துடன் ஒன்ற வைத்தது.

🔥 வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் சில தருணங்களும் உண்டு; பாடல்களும் கதையோட்டத்துக்குத் தேவையான மட்டுப்படுத்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை படத்தின் விறுவிறுப்பைக் குறைக்காத அதேவேளை, நமது நெஞ்சின் படபடப்பைக் குறைக்கப் பயன்பட்டன எனக்கொள்ளலாம்! 

🔥 இயக்குனரின் முன்னைய திரைப்படமான 'கைதி' திரைப்படத்தில் தோன்றிய சில கதாபாத்திரங்கள் / சில சம்பவங்கள் தொடர்பான குறிப்புக்கள் 'விக்ரம்' படத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன; அத்துடன் 1987 இல் வெளியான கமலின் 'விக்ரம்' பற்றிய குறிப்புகளும் இப்புதிய 'விக்ரம்' படத்தில் உள்ளன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதுவித அனுபவம் என்பதால், சிலருக்கு சுவாரஸ்யமாகவும் ஏனையோருக்கு குழப்பமாகவும் இருக்கலாம். (இது எப்படி என்றால், ராமாயணப் பாத்திரமான அனுமன், மகாபாரதத்தில் வீமனைச் சந்திக்கும் நிகழ்வு போன்றது எனவும் கூறலாம்!). 

எனவே, மேற்கூறிய இரு திரைப்படங்களினதும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி மேலோட்டமாகவேனும் அறிந்து கொண்ட பின்னர் இப்படத்தைப் பார்ப்பது சிறந்தது. (பரீட்சைக்குச் செல்லும் முன்னர் சில பாடங்களை மீண்டும் ஒரு முறை revision செய்வது போல!)

🔥 விஜய் சேதுபதியின் புதுமையான முகபாவனைகள், உடல் மொழிகள் பிரம்மிக்க வைத்தாலும், வசனம் பேசுவதை இன்னும் மெருகூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. 

பஹத் பஸிலி்ன் மிடுக்கான நடையும், இயல்பான நடிப்பும், காதற் காட்சிகளில் சற்றே கனிந்து கசிவதும் ஒரு அற்புத நடிகரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவர் கண்களாலேயே மாயவித்தை செய்பவர்! 

கமலைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ! பல ரகங்களிலான நடிப்பை ஒரே படத்தில் தந்தது அவரது சிறப்பான மீள்வருகையாக அமைந்துள்ளது. நரேனுக்கு அறிவுரை கூறும் அந்த ஒரு காட்சியும், கழுகின் விழிகளும், சிங்கத்தின் கர்ஜனையுமான சண்டைக் காட்சிகளிலும் என்னை வெகுவாகக் கவர்ந்தார்.

சூர்யாவின் சில நிமிடங்களேயான திரைப்பிரசன்னம் ஆச்சரியம்! அவரது கதாபாத்திரமும் நான் எதிர்பாராதது! செம்பன் வினோத் ஜோஷ், நரேன், அர்ச்சனா ஆகியோரின் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை. 

இத்தனை பிரம்மாண்ட நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது போல் அமைவது மிக அரிது.

🔥பின்னணி இசையும், ஒளிப்பதிவும், சண்டைக் காட்சி இயக்கமும் இப்படத்துக்குக் கூடுதல் பலம் என்று நான் எழுதுவது சம்பிரதாயத்துக்காக அல்ல; என்னைப் படம் நிகழும் சூழலுக்கே மனோரீதியாகக் கடத்திச் சென்றன இவை!

நான் சண்டைக்காட்சிகளின் ரசிகன் அல்ல; எனினும், இப்படத்தில் அவை எனக்குச் சலிப்பூட்டவில்லை. அதிலும் ஒரு காட்சி திகைப்பூட்டுவதாகவும், அற்புதமாகவும் இருந்தது! பார்த்தவர்களுக்கு எதுவென்று புரியும்!

🔥 இவை நிற்க, இது U/A சான்றிதழ் பெற்ற படம் தான்;  எனினும், சிறுவர்களுக்கு உகந்த படமல்ல; வன்முறை, சண்டைக் காட்சிகளைக் காணத் தாங்க இயலாதோருக்கும் உரியதல்ல இப்படம்.

🔥 வசனங்கள் குறைவான, பரபரப்பான சம்பவங்களுடன் நகரும் சில பல காட்சிகள் சிலருக்குத் தெளிவின்மையை ஏற்படுத்தலாம்; இதனால் இப்படத்தை மீண்டும் பார்க்கவும் தோன்றலாம்! - பரவாயில்லை, மீளப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இது! 

🔥 இத்திரைப்படத்தில் ஆங்காங்கே சிறு குறைகள் இல்லாமல் இல்லை; அவற்றை எழுதி படத்தின் கதை/கதையோட்டம் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பவில்லை - No spoiler! 
(VFX காட்சிகளின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.)
தவிரவும், வழமை போல இப்படத்தின் விறுவிறுப்பான கதையும், காட்சிகளும், நடிப்புலக ஜாம்பவான்களின் திரைப் பிரசன்னமும் இச் சிறு குறைகளை மற/றைக்கச் செய்கின்றன! 

************************************

🔥🔥🔥மொத்தத்தில் 'விக்ரம்',

🔥 எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்திருந்தேனோ அதையும் விஞ்சி என்னை வியக்க வைத்த தரமான ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.

🔥 Class actorsஇன் mass & class ஆன, classicஆக காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கப்போகும் ஒரு உன்னதமான திரைச்சித்திரம்! 

🔥தமிழ் சினிமா என்ற வட்டத்தையும் தாண்டி, இந்திய, உலக சினிமா எனத் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது / விரிவுபடுத்தும். கூடவே, இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையையும் விரிவுபடுத்தியுள்ளது!

🔥இது ஓர் masterpieceஆ என்று தெரியாது; ஆனால், நிச்சயமாக தமிழ் / இந்திய சினிமாவில் இது ஒரு trendsetter ஆக அமைந்துள்ளது. 

🔥🔥🔥அந்த வகையில் இயக்குநரும், மொத்த படக்குழுவும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். 👏👏👏

நன்றி 😊

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரமான விமர்சனம்..........நன்றி மல்லிகை வாசம்........!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெண்திரையில் பார்க்கவா, விடவா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். முடிவு கிட்டிவிட்டது😀

  • Like 1
Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:

தரமான விமர்சனம்..........நன்றி மல்லிகை வாசம்........!  👍

மிக்க நன்றி சுவி அண்ணா. 😊🙏❤️

16 hours ago, கிருபன் said:

இன்று வெண்திரையில் பார்க்கவா, விடவா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். முடிவு கிட்டிவிட்டது😀

கிருபன், வெண்திரையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இது. 

படம் பார்த்தவுடன் உங்கள் விமர்சனத்தையும் அறிய ஆவல்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மல்லிகை வாசம் said:

இது 'விக்ரம்' திரைப்படம் பார்த்த பின்னரான எனது எண்ணத் துளிகளே. இது ஒரு முழுமையான விமர்சனம் அல்ல.

********************************

🔥 இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கே உரித்தான இதன் கதை, கதைக்களம் மட்டுமல்ல பார்வையாளரின் சிந்தனைக்குத் தீனி போடும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதையும் என்னை வெகுவாக ஆச்சரியத்துள்ளாக்கின!

🔥 முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இல்லாமல், ஆங்காங்கே அவசியமான உணர்வோட்டமான காட்சிகள், பரபரப்பான சம்பவங்கள், திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தமை என்னைப் படத்துடன் ஒன்ற வைத்தது.

🔥 வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் சில தருணங்களும் உண்டு; பாடல்களும் கதையோட்டத்துக்குத் தேவையான மட்டுப்படுத்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை படத்தின் விறுவிறுப்பைக் குறைக்காத அதேவேளை, நமது நெஞ்சின் படபடப்பைக் குறைக்கப் பயன்பட்டன எனக்கொள்ளலாம்! 

🔥 இயக்குனரின் முன்னைய திரைப்படமான 'கைதி' திரைப்படத்தில் தோன்றிய சில கதாபாத்திரங்கள் / சில சம்பவங்கள் தொடர்பான குறிப்புக்கள் 'விக்ரம்' படத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன; அத்துடன் 1987 இல் வெளியான கமலின் 'விக்ரம்' பற்றிய குறிப்புகளும் இப்புதிய 'விக்ரம்' படத்தில் உள்ளன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதுவித அனுபவம் என்பதால், சிலருக்கு சுவாரஸ்யமாகவும் ஏனையோருக்கு குழப்பமாகவும் இருக்கலாம். (இது எப்படி என்றால், ராமாயணப் பாத்திரமான அனுமன், மகாபாரதத்தில் வீமனைச் சந்திக்கும் நிகழ்வு போன்றது எனவும் கூறலாம்!). 

எனவே, மேற்கூறிய இரு திரைப்படங்களினதும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி மேலோட்டமாகவேனும் அறிந்து கொண்ட பின்னர் இப்படத்தைப் பார்ப்பது சிறந்தது. (பரீட்சைக்குச் செல்லும் முன்னர் சில பாடங்களை மீண்டும் ஒரு முறை revision செய்வது போல!)

🔥 விஜய் சேதுபதியின் புதுமையான முகபாவனைகள், உடல் மொழிகள் பிரம்மிக்க வைத்தாலும், வசனம் பேசுவதை இன்னும் மெருகூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. 

பஹத் பஸிலி்ன் மிடுக்கான நடையும், இயல்பான நடிப்பும், காதற் காட்சிகளில் சற்றே கனிந்து கசிவதும் ஒரு அற்புத நடிகரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவர் கண்களாலேயே மாயவித்தை செய்பவர்! 

கமலைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ! பல ரகங்களிலான நடிப்பை ஒரே படத்தில் தந்தது அவரது சிறப்பான மீள்வருகையாக அமைந்துள்ளது. நரேனுக்கு அறிவுரை கூறும் அந்த ஒரு காட்சியும், கழுகின் விழிகளும், சிங்கத்தின் கர்ஜனையுமான சண்டைக் காட்சிகளிலும் என்னை வெகுவாகக் கவர்ந்தார்.

சூர்யாவின் சில நிமிடங்களேயான திரைப்பிரசன்னம் ஆச்சரியம்! அவரது கதாபாத்திரமும் நான் எதிர்பாராதது! செம்பன் வினோத் ஜோஷ், நரேன், அர்ச்சனா ஆகியோரின் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை. 

இத்தனை பிரம்மாண்ட நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது போல் அமைவது மிக அரிது.

🔥பின்னணி இசையும், ஒளிப்பதிவும், சண்டைக் காட்சி இயக்கமும் இப்படத்துக்குக் கூடுதல் பலம் என்று நான் எழுதுவது சம்பிரதாயத்துக்காக அல்ல; என்னைப் படம் நிகழும் சூழலுக்கே மனோரீதியாகக் கடத்திச் சென்றன இவை!

நான் சண்டைக்காட்சிகளின் ரசிகன் அல்ல; எனினும், இப்படத்தில் அவை எனக்குச் சலிப்பூட்டவில்லை. அதிலும் ஒரு காட்சி திகைப்பூட்டுவதாகவும், அற்புதமாகவும் இருந்தது! பார்த்தவர்களுக்கு எதுவென்று புரியும்!

🔥 இவை நிற்க, இது U/A சான்றிதழ் பெற்ற படம் தான்;  எனினும், சிறுவர்களுக்கு உகந்த படமல்ல; வன்முறை, சண்டைக் காட்சிகளைக் காணத் தாங்க இயலாதோருக்கும் உரியதல்ல இப்படம்.

🔥 வசனங்கள் குறைவான, பரபரப்பான சம்பவங்களுடன் நகரும் சில பல காட்சிகள் சிலருக்குத் தெளிவின்மையை ஏற்படுத்தலாம்; இதனால் இப்படத்தை மீண்டும் பார்க்கவும் தோன்றலாம்! - பரவாயில்லை, மீளப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இது! 

🔥 இத்திரைப்படத்தில் ஆங்காங்கே சிறு குறைகள் இல்லாமல் இல்லை; அவற்றை எழுதி படத்தின் கதை/கதையோட்டம் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பவில்லை - No spoiler! 
(VFX காட்சிகளின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.)
தவிரவும், வழமை போல இப்படத்தின் விறுவிறுப்பான கதையும், காட்சிகளும், நடிப்புலக ஜாம்பவான்களின் திரைப் பிரசன்னமும் இச் சிறு குறைகளை மற/றைக்கச் செய்கின்றன! 

************************************

🔥🔥🔥மொத்தத்தில் 'விக்ரம்',

🔥 எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்திருந்தேனோ அதையும் விஞ்சி என்னை வியக்க வைத்த தரமான ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.

🔥 Class actorsஇன் mass & class ஆன, classicஆக காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கப்போகும் ஒரு உன்னதமான திரைச்சித்திரம்! 

🔥தமிழ் சினிமா என்ற வட்டத்தையும் தாண்டி, இந்திய, உலக சினிமா எனத் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது / விரிவுபடுத்தும். கூடவே, இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையையும் விரிவுபடுத்தியுள்ளது!

🔥இது ஓர் masterpieceஆ என்று தெரியாது; ஆனால், நிச்சயமாக தமிழ் / இந்திய சினிமாவில் இது ஒரு trendsetter ஆக அமைந்துள்ளது. 

🔥🔥🔥அந்த வகையில் இயக்குநரும், மொத்த படக்குழுவும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். 👏👏👏

நன்றி 😊

GIF transparent han applause - animated GIF on GIFER - by Bathis

வாவ்.... ஈழத்தமிழரில், இப்படி.. ஒரு சினிமா விமர்சகரா?  ❤️

நான் திரைப்படங்கள் பார்ப்பது மிக, மிக குறைவு.
அதில்.. ஆர்வமும் அதிகம்  இல்லை. 

ஆனால்... அபூர்வமாக சினிமா விமர்சனங்களை வாசிப்பதுண்டு.
அது போல்... மல்லிகை வாசம் எழுதிய விமர்சனத்தை வாசித்து ஆச்சரியப் பட்டேன். 👍

பிரபல பத்திரிகைகளில் கூட... இப்படி அழகாக விமர்சனத்தை 
எழுதும் ஆற்றல், அந்த விமர்சகர்களுக்கு இல்லை.

குறை கண்டு பிடிக்க முடியாதபடி... அனைத்து விடயங்களையும்...
உன்னிப்பாக அவதானித்து, எழுதிய விமர்சனத்தை ரசித்து வாசித்தேன். 👏

பாராட்டுக்கள்.. மல்லிகை வாசம். 🙂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நேற்று நண்பர்களின் சிபாரிசால் இப்படத்தை அகண்ட திரையில்(i-MAX) பார்த்தேன்.
படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்புடன் இருக்குமென தோன்றியது.

பிடித்த விடயம்:

கதாபாத்திரங்களின் செயல்கள்/குணங்கள் நாம் எதிர்பார்க்காத வகையில் திடீர் மாறுதல்கள், குறிப்பாக வேலைக்கார பெண்ணின் அதிரடி அதகளம் எதிர்பார்க்காத ஒன்று. 👌

முதல் பாதிவரை புதிரான ஊகிக்க முடியாத முடிச்சுகள்..🤔

ரசிக்காதவை:

சூர்யாவின் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை, ஜவ்வாக கதையை இழுத்த மாதிரி உணர்வு. 🙄

பாடல்களை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம், ரசிக்கும்படி இல்லை. 😡

 

முடிவாக, மற்றொரு கைதி2 படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@மல்லிகை வாசம்

நல்லதொரு திரைவிமர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

கிருபன், வெண்திரையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இது. 

படம் பார்த்தவுடன் உங்கள் விமர்சனத்தையும் அறிய ஆவல்! 😊

ராசவன்னியன் ஐயா சொன்னதுதான் எனக்கும் தோன்றியது. 

முதல்பாதி நேரம் போனதே தெரியவில்லை.

இரண்டாவது பாதி கைதி படத்தின் (தற்செயலாக போனவாரம்தான் பார்த்தேன்) தொடர்ச்சி போலிருந்தது. இரண்டாவது பாதியில் சில முடிச்சுக்களை இன்னும் பிந்தி அவிழ்த்திருக்கலாம். ஏஜென்ற் ரீனா ஆச்சரியம்.  

சூர்யா பார்ட் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம். அல்லது அவரையும் போட்டுத்தள்ளியிருக்கலாம் ( இன்னோர் 3 மணித்தியாலம் வெடிகுண்டுகளை வெடிக்கவைக்கத்தான் வேண்டுமா!)

வெண்திரையில் பார்க்கவேண்டிய படம்தான்👍🏾

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

வாவ்.... ஈழத்தமிழரில், இப்படி.. ஒரு சினிமா விமர்சகரா?  ❤️

நான் திரைப்படங்கள் பார்ப்பது மிக, மிக குறைவு.
அதில்.. ஆர்வமும் அதிகம்  இல்லை. 

ஆனால்... அபூர்வமாக சினிமா விமர்சனங்களை வாசிப்பதுண்டு.
அது போல்... மல்லிகை வாசம் எழுதிய விமர்சனத்தை வாசித்து ஆச்சரியப் பட்டேன். 👍

பிரபல பத்திரிகைகளில் கூட... இப்படி அழகாக விமர்சனத்தை 
எழுதும் ஆற்றல், அந்த விமர்சகர்களுக்கு இல்லை.

குறை கண்டு பிடிக்க முடியாதபடி... அனைத்து விடயங்களையும்...
உன்னிப்பாக அவதானித்து, எழுதிய விமர்சனத்தை ரசித்து வாசித்தேன். 👏

பாராட்டுக்கள்.. மல்லிகை வாசம். 🙂

தமிழ் சிறி அண்ணா, நானும் சமீப காலமாகத் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. ஆனால் இது போன்ற திரைப்படங்களைத் தவிர்க்க முடியவில்லை! இப்படம் ஏற்படுத்திய தாக்கம் தான் என்னை இங்கு எழுத வைத்தது. 😊

நான் எழுதியது முழுமையான விமர்சனம் இல்லை; படத்தின் தொழிநுட்ப அம்சங்களைப் பற்றி நான் பெரிதாக எழுதவில்லை.

பொறுமையாக வாசித்து என்னைப் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி தமிழ் சிறி அண்ணா! இந்த ஊக்குவிப்புத் தான் என் போன்றவர்களைத் தொடர்ந்தும் எழுதத் தூண்டுகிறது! 😊

மிக்க நன்றி குமாரசாமி அண்ணா. 😊🙏

3 hours ago, ராசவன்னியன் said:

குறிப்பாக வேலைக்கார பெண்ணின் அதிரடி அதகளம் எதிர்பார்க்காத ஒன்று. 👌

 

1 hour ago, கிருபன் said:

ஏஜென்ற் ரீனா ஆச்சரியம்.  

ராசவன்னியன் அண்ணா, கிருபன்,

பலரையும் ஆச்சரியப்பட வைத்த காட்சி இது. இவர் கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடன இயக்க உதவியாளராக / நடனக் கலைஞராக இருந்திருக்கிறாராம் என்பது கூடுதல் ஆச்சரியம்! 

Edited by மல்லிகை வாசம்
  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, ராசவன்னியன் said:

சூர்யாவின் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை, ஜவ்வாக கதையை இழுத்த மாதிரி உணர்வு. 🙄

 

29 minutes ago, கிருபன் said:

சூர்யா பார்ட் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம்.

லோகேஷின் அடுத்த படத்துக்கான lead என்கிறார்கள்; பார்ப்போம். 😊

3 hours ago, ராசவன்னியன் said:

முடிவாக, மற்றொரு கைதி2 படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

 

32 minutes ago, கிருபன் said:

இரண்டாவது பாதி கைதி படத்தின் (தற்செயலாக போனவாரம்தான் பார்த்தேன்) தொடர்ச்சி போலிருந்தது.

படத்தில் வரும் நரேனின் பாத்திரம், இறுதிக் காட்சியில் தோன்றும் சில பாத்திரங்கள் உண்மையிலேயே ''கைதி' உலகத்திலிருந்து' வந்தவை தான்! நடிகர் கார்த்தியின் குரல் கூட இறுதிக் காட்சியில் வருகிறது! 😀

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.