Jump to content

Recommended Posts

இது 'விக்ரம்' திரைப்படம் பார்த்த பின்னரான எனது எண்ணத் துளிகளே. இது ஒரு முழுமையான விமர்சனம் அல்ல.

********************************

🔥 இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கே உரித்தான இதன் கதை, கதைக்களம் மட்டுமல்ல பார்வையாளரின் சிந்தனைக்குத் தீனி போடும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதையும் என்னை வெகுவாக ஆச்சரியத்துள்ளாக்கின!

🔥 முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இல்லாமல், ஆங்காங்கே அவசியமான உணர்வோட்டமான காட்சிகள், பரபரப்பான சம்பவங்கள், திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தமை என்னைப் படத்துடன் ஒன்ற வைத்தது.

🔥 வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் சில தருணங்களும் உண்டு; பாடல்களும் கதையோட்டத்துக்குத் தேவையான மட்டுப்படுத்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை படத்தின் விறுவிறுப்பைக் குறைக்காத அதேவேளை, நமது நெஞ்சின் படபடப்பைக் குறைக்கப் பயன்பட்டன எனக்கொள்ளலாம்! 

🔥 இயக்குனரின் முன்னைய திரைப்படமான 'கைதி' திரைப்படத்தில் தோன்றிய சில கதாபாத்திரங்கள் / சில சம்பவங்கள் தொடர்பான குறிப்புக்கள் 'விக்ரம்' படத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன; அத்துடன் 1987 இல் வெளியான கமலின் 'விக்ரம்' பற்றிய குறிப்புகளும் இப்புதிய 'விக்ரம்' படத்தில் உள்ளன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதுவித அனுபவம் என்பதால், சிலருக்கு சுவாரஸ்யமாகவும் ஏனையோருக்கு குழப்பமாகவும் இருக்கலாம். (இது எப்படி என்றால், ராமாயணப் பாத்திரமான அனுமன், மகாபாரதத்தில் வீமனைச் சந்திக்கும் நிகழ்வு போன்றது எனவும் கூறலாம்!). 

எனவே, மேற்கூறிய இரு திரைப்படங்களினதும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி மேலோட்டமாகவேனும் அறிந்து கொண்ட பின்னர் இப்படத்தைப் பார்ப்பது சிறந்தது. (பரீட்சைக்குச் செல்லும் முன்னர் சில பாடங்களை மீண்டும் ஒரு முறை revision செய்வது போல!)

🔥 விஜய் சேதுபதியின் புதுமையான முகபாவனைகள், உடல் மொழிகள் பிரம்மிக்க வைத்தாலும், வசனம் பேசுவதை இன்னும் மெருகூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. 

பஹத் பஸிலி்ன் மிடுக்கான நடையும், இயல்பான நடிப்பும், காதற் காட்சிகளில் சற்றே கனிந்து கசிவதும் ஒரு அற்புத நடிகரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவர் கண்களாலேயே மாயவித்தை செய்பவர்! 

கமலைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ! பல ரகங்களிலான நடிப்பை ஒரே படத்தில் தந்தது அவரது சிறப்பான மீள்வருகையாக அமைந்துள்ளது. நரேனுக்கு அறிவுரை கூறும் அந்த ஒரு காட்சியும், கழுகின் விழிகளும், சிங்கத்தின் கர்ஜனையுமான சண்டைக் காட்சிகளிலும் என்னை வெகுவாகக் கவர்ந்தார்.

சூர்யாவின் சில நிமிடங்களேயான திரைப்பிரசன்னம் ஆச்சரியம்! அவரது கதாபாத்திரமும் நான் எதிர்பாராதது! செம்பன் வினோத் ஜோஷ், நரேன், அர்ச்சனா ஆகியோரின் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை. 

இத்தனை பிரம்மாண்ட நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது போல் அமைவது மிக அரிது.

🔥பின்னணி இசையும், ஒளிப்பதிவும், சண்டைக் காட்சி இயக்கமும் இப்படத்துக்குக் கூடுதல் பலம் என்று நான் எழுதுவது சம்பிரதாயத்துக்காக அல்ல; என்னைப் படம் நிகழும் சூழலுக்கே மனோரீதியாகக் கடத்திச் சென்றன இவை!

நான் சண்டைக்காட்சிகளின் ரசிகன் அல்ல; எனினும், இப்படத்தில் அவை எனக்குச் சலிப்பூட்டவில்லை. அதிலும் ஒரு காட்சி திகைப்பூட்டுவதாகவும், அற்புதமாகவும் இருந்தது! பார்த்தவர்களுக்கு எதுவென்று புரியும்!

🔥 இவை நிற்க, இது U/A சான்றிதழ் பெற்ற படம் தான்;  எனினும், சிறுவர்களுக்கு உகந்த படமல்ல; வன்முறை, சண்டைக் காட்சிகளைக் காணத் தாங்க இயலாதோருக்கும் உரியதல்ல இப்படம்.

🔥 வசனங்கள் குறைவான, பரபரப்பான சம்பவங்களுடன் நகரும் சில பல காட்சிகள் சிலருக்குத் தெளிவின்மையை ஏற்படுத்தலாம்; இதனால் இப்படத்தை மீண்டும் பார்க்கவும் தோன்றலாம்! - பரவாயில்லை, மீளப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இது! 

🔥 இத்திரைப்படத்தில் ஆங்காங்கே சிறு குறைகள் இல்லாமல் இல்லை; அவற்றை எழுதி படத்தின் கதை/கதையோட்டம் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பவில்லை - No spoiler! 
(VFX காட்சிகளின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.)
தவிரவும், வழமை போல இப்படத்தின் விறுவிறுப்பான கதையும், காட்சிகளும், நடிப்புலக ஜாம்பவான்களின் திரைப் பிரசன்னமும் இச் சிறு குறைகளை மற/றைக்கச் செய்கின்றன! 

************************************

🔥🔥🔥மொத்தத்தில் 'விக்ரம்',

🔥 எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்திருந்தேனோ அதையும் விஞ்சி என்னை வியக்க வைத்த தரமான ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.

🔥 Class actorsஇன் mass & class ஆன, classicஆக காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கப்போகும் ஒரு உன்னதமான திரைச்சித்திரம்! 

🔥தமிழ் சினிமா என்ற வட்டத்தையும் தாண்டி, இந்திய, உலக சினிமா எனத் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது / விரிவுபடுத்தும். கூடவே, இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையையும் விரிவுபடுத்தியுள்ளது!

🔥இது ஓர் masterpieceஆ என்று தெரியாது; ஆனால், நிச்சயமாக தமிழ் / இந்திய சினிமாவில் இது ஒரு trendsetter ஆக அமைந்துள்ளது. 

🔥🔥🔥அந்த வகையில் இயக்குநரும், மொத்த படக்குழுவும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். 👏👏👏

நன்றி 😊

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரமான விமர்சனம்..........நன்றி மல்லிகை வாசம்........!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெண்திரையில் பார்க்கவா, விடவா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். முடிவு கிட்டிவிட்டது😀

  • Like 1
Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:

தரமான விமர்சனம்..........நன்றி மல்லிகை வாசம்........!  👍

மிக்க நன்றி சுவி அண்ணா. 😊🙏❤️

16 hours ago, கிருபன் said:

இன்று வெண்திரையில் பார்க்கவா, விடவா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். முடிவு கிட்டிவிட்டது😀

கிருபன், வெண்திரையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இது. 

படம் பார்த்தவுடன் உங்கள் விமர்சனத்தையும் அறிய ஆவல்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மல்லிகை வாசம் said:

இது 'விக்ரம்' திரைப்படம் பார்த்த பின்னரான எனது எண்ணத் துளிகளே. இது ஒரு முழுமையான விமர்சனம் அல்ல.

********************************

🔥 இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கே உரித்தான இதன் கதை, கதைக்களம் மட்டுமல்ல பார்வையாளரின் சிந்தனைக்குத் தீனி போடும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதையும் என்னை வெகுவாக ஆச்சரியத்துள்ளாக்கின!

🔥 முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இல்லாமல், ஆங்காங்கே அவசியமான உணர்வோட்டமான காட்சிகள், பரபரப்பான சம்பவங்கள், திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தமை என்னைப் படத்துடன் ஒன்ற வைத்தது.

🔥 வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் சில தருணங்களும் உண்டு; பாடல்களும் கதையோட்டத்துக்குத் தேவையான மட்டுப்படுத்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை படத்தின் விறுவிறுப்பைக் குறைக்காத அதேவேளை, நமது நெஞ்சின் படபடப்பைக் குறைக்கப் பயன்பட்டன எனக்கொள்ளலாம்! 

🔥 இயக்குனரின் முன்னைய திரைப்படமான 'கைதி' திரைப்படத்தில் தோன்றிய சில கதாபாத்திரங்கள் / சில சம்பவங்கள் தொடர்பான குறிப்புக்கள் 'விக்ரம்' படத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன; அத்துடன் 1987 இல் வெளியான கமலின் 'விக்ரம்' பற்றிய குறிப்புகளும் இப்புதிய 'விக்ரம்' படத்தில் உள்ளன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதுவித அனுபவம் என்பதால், சிலருக்கு சுவாரஸ்யமாகவும் ஏனையோருக்கு குழப்பமாகவும் இருக்கலாம். (இது எப்படி என்றால், ராமாயணப் பாத்திரமான அனுமன், மகாபாரதத்தில் வீமனைச் சந்திக்கும் நிகழ்வு போன்றது எனவும் கூறலாம்!). 

எனவே, மேற்கூறிய இரு திரைப்படங்களினதும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி மேலோட்டமாகவேனும் அறிந்து கொண்ட பின்னர் இப்படத்தைப் பார்ப்பது சிறந்தது. (பரீட்சைக்குச் செல்லும் முன்னர் சில பாடங்களை மீண்டும் ஒரு முறை revision செய்வது போல!)

🔥 விஜய் சேதுபதியின் புதுமையான முகபாவனைகள், உடல் மொழிகள் பிரம்மிக்க வைத்தாலும், வசனம் பேசுவதை இன்னும் மெருகூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. 

பஹத் பஸிலி்ன் மிடுக்கான நடையும், இயல்பான நடிப்பும், காதற் காட்சிகளில் சற்றே கனிந்து கசிவதும் ஒரு அற்புத நடிகரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவர் கண்களாலேயே மாயவித்தை செய்பவர்! 

கமலைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ! பல ரகங்களிலான நடிப்பை ஒரே படத்தில் தந்தது அவரது சிறப்பான மீள்வருகையாக அமைந்துள்ளது. நரேனுக்கு அறிவுரை கூறும் அந்த ஒரு காட்சியும், கழுகின் விழிகளும், சிங்கத்தின் கர்ஜனையுமான சண்டைக் காட்சிகளிலும் என்னை வெகுவாகக் கவர்ந்தார்.

சூர்யாவின் சில நிமிடங்களேயான திரைப்பிரசன்னம் ஆச்சரியம்! அவரது கதாபாத்திரமும் நான் எதிர்பாராதது! செம்பன் வினோத் ஜோஷ், நரேன், அர்ச்சனா ஆகியோரின் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை. 

இத்தனை பிரம்மாண்ட நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது போல் அமைவது மிக அரிது.

🔥பின்னணி இசையும், ஒளிப்பதிவும், சண்டைக் காட்சி இயக்கமும் இப்படத்துக்குக் கூடுதல் பலம் என்று நான் எழுதுவது சம்பிரதாயத்துக்காக அல்ல; என்னைப் படம் நிகழும் சூழலுக்கே மனோரீதியாகக் கடத்திச் சென்றன இவை!

நான் சண்டைக்காட்சிகளின் ரசிகன் அல்ல; எனினும், இப்படத்தில் அவை எனக்குச் சலிப்பூட்டவில்லை. அதிலும் ஒரு காட்சி திகைப்பூட்டுவதாகவும், அற்புதமாகவும் இருந்தது! பார்த்தவர்களுக்கு எதுவென்று புரியும்!

🔥 இவை நிற்க, இது U/A சான்றிதழ் பெற்ற படம் தான்;  எனினும், சிறுவர்களுக்கு உகந்த படமல்ல; வன்முறை, சண்டைக் காட்சிகளைக் காணத் தாங்க இயலாதோருக்கும் உரியதல்ல இப்படம்.

🔥 வசனங்கள் குறைவான, பரபரப்பான சம்பவங்களுடன் நகரும் சில பல காட்சிகள் சிலருக்குத் தெளிவின்மையை ஏற்படுத்தலாம்; இதனால் இப்படத்தை மீண்டும் பார்க்கவும் தோன்றலாம்! - பரவாயில்லை, மீளப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இது! 

🔥 இத்திரைப்படத்தில் ஆங்காங்கே சிறு குறைகள் இல்லாமல் இல்லை; அவற்றை எழுதி படத்தின் கதை/கதையோட்டம் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பவில்லை - No spoiler! 
(VFX காட்சிகளின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.)
தவிரவும், வழமை போல இப்படத்தின் விறுவிறுப்பான கதையும், காட்சிகளும், நடிப்புலக ஜாம்பவான்களின் திரைப் பிரசன்னமும் இச் சிறு குறைகளை மற/றைக்கச் செய்கின்றன! 

************************************

🔥🔥🔥மொத்தத்தில் 'விக்ரம்',

🔥 எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்திருந்தேனோ அதையும் விஞ்சி என்னை வியக்க வைத்த தரமான ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.

🔥 Class actorsஇன் mass & class ஆன, classicஆக காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கப்போகும் ஒரு உன்னதமான திரைச்சித்திரம்! 

🔥தமிழ் சினிமா என்ற வட்டத்தையும் தாண்டி, இந்திய, உலக சினிமா எனத் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது / விரிவுபடுத்தும். கூடவே, இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையையும் விரிவுபடுத்தியுள்ளது!

🔥இது ஓர் masterpieceஆ என்று தெரியாது; ஆனால், நிச்சயமாக தமிழ் / இந்திய சினிமாவில் இது ஒரு trendsetter ஆக அமைந்துள்ளது. 

🔥🔥🔥அந்த வகையில் இயக்குநரும், மொத்த படக்குழுவும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். 👏👏👏

நன்றி 😊

GIF transparent han applause - animated GIF on GIFER - by Bathis

வாவ்.... ஈழத்தமிழரில், இப்படி.. ஒரு சினிமா விமர்சகரா?  ❤️

நான் திரைப்படங்கள் பார்ப்பது மிக, மிக குறைவு.
அதில்.. ஆர்வமும் அதிகம்  இல்லை. 

ஆனால்... அபூர்வமாக சினிமா விமர்சனங்களை வாசிப்பதுண்டு.
அது போல்... மல்லிகை வாசம் எழுதிய விமர்சனத்தை வாசித்து ஆச்சரியப் பட்டேன். 👍

பிரபல பத்திரிகைகளில் கூட... இப்படி அழகாக விமர்சனத்தை 
எழுதும் ஆற்றல், அந்த விமர்சகர்களுக்கு இல்லை.

குறை கண்டு பிடிக்க முடியாதபடி... அனைத்து விடயங்களையும்...
உன்னிப்பாக அவதானித்து, எழுதிய விமர்சனத்தை ரசித்து வாசித்தேன். 👏

பாராட்டுக்கள்.. மல்லிகை வாசம். 🙂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நேற்று நண்பர்களின் சிபாரிசால் இப்படத்தை அகண்ட திரையில்(i-MAX) பார்த்தேன்.
படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்புடன் இருக்குமென தோன்றியது.

பிடித்த விடயம்:

கதாபாத்திரங்களின் செயல்கள்/குணங்கள் நாம் எதிர்பார்க்காத வகையில் திடீர் மாறுதல்கள், குறிப்பாக வேலைக்கார பெண்ணின் அதிரடி அதகளம் எதிர்பார்க்காத ஒன்று. 👌

முதல் பாதிவரை புதிரான ஊகிக்க முடியாத முடிச்சுகள்..🤔

ரசிக்காதவை:

சூர்யாவின் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை, ஜவ்வாக கதையை இழுத்த மாதிரி உணர்வு. 🙄

பாடல்களை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம், ரசிக்கும்படி இல்லை. 😡

 

முடிவாக, மற்றொரு கைதி2 படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@மல்லிகை வாசம்

நல்லதொரு திரைவிமர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

கிருபன், வெண்திரையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இது. 

படம் பார்த்தவுடன் உங்கள் விமர்சனத்தையும் அறிய ஆவல்! 😊

ராசவன்னியன் ஐயா சொன்னதுதான் எனக்கும் தோன்றியது. 

முதல்பாதி நேரம் போனதே தெரியவில்லை.

இரண்டாவது பாதி கைதி படத்தின் (தற்செயலாக போனவாரம்தான் பார்த்தேன்) தொடர்ச்சி போலிருந்தது. இரண்டாவது பாதியில் சில முடிச்சுக்களை இன்னும் பிந்தி அவிழ்த்திருக்கலாம். ஏஜென்ற் ரீனா ஆச்சரியம்.  

சூர்யா பார்ட் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம். அல்லது அவரையும் போட்டுத்தள்ளியிருக்கலாம் ( இன்னோர் 3 மணித்தியாலம் வெடிகுண்டுகளை வெடிக்கவைக்கத்தான் வேண்டுமா!)

வெண்திரையில் பார்க்கவேண்டிய படம்தான்👍🏾

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

வாவ்.... ஈழத்தமிழரில், இப்படி.. ஒரு சினிமா விமர்சகரா?  ❤️

நான் திரைப்படங்கள் பார்ப்பது மிக, மிக குறைவு.
அதில்.. ஆர்வமும் அதிகம்  இல்லை. 

ஆனால்... அபூர்வமாக சினிமா விமர்சனங்களை வாசிப்பதுண்டு.
அது போல்... மல்லிகை வாசம் எழுதிய விமர்சனத்தை வாசித்து ஆச்சரியப் பட்டேன். 👍

பிரபல பத்திரிகைகளில் கூட... இப்படி அழகாக விமர்சனத்தை 
எழுதும் ஆற்றல், அந்த விமர்சகர்களுக்கு இல்லை.

குறை கண்டு பிடிக்க முடியாதபடி... அனைத்து விடயங்களையும்...
உன்னிப்பாக அவதானித்து, எழுதிய விமர்சனத்தை ரசித்து வாசித்தேன். 👏

பாராட்டுக்கள்.. மல்லிகை வாசம். 🙂

தமிழ் சிறி அண்ணா, நானும் சமீப காலமாகத் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. ஆனால் இது போன்ற திரைப்படங்களைத் தவிர்க்க முடியவில்லை! இப்படம் ஏற்படுத்திய தாக்கம் தான் என்னை இங்கு எழுத வைத்தது. 😊

நான் எழுதியது முழுமையான விமர்சனம் இல்லை; படத்தின் தொழிநுட்ப அம்சங்களைப் பற்றி நான் பெரிதாக எழுதவில்லை.

பொறுமையாக வாசித்து என்னைப் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி தமிழ் சிறி அண்ணா! இந்த ஊக்குவிப்புத் தான் என் போன்றவர்களைத் தொடர்ந்தும் எழுதத் தூண்டுகிறது! 😊

மிக்க நன்றி குமாரசாமி அண்ணா. 😊🙏

3 hours ago, ராசவன்னியன் said:

குறிப்பாக வேலைக்கார பெண்ணின் அதிரடி அதகளம் எதிர்பார்க்காத ஒன்று. 👌

 

1 hour ago, கிருபன் said:

ஏஜென்ற் ரீனா ஆச்சரியம்.  

ராசவன்னியன் அண்ணா, கிருபன்,

பலரையும் ஆச்சரியப்பட வைத்த காட்சி இது. இவர் கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடன இயக்க உதவியாளராக / நடனக் கலைஞராக இருந்திருக்கிறாராம் என்பது கூடுதல் ஆச்சரியம்! 

Edited by மல்லிகை வாசம்
  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, ராசவன்னியன் said:

சூர்யாவின் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை, ஜவ்வாக கதையை இழுத்த மாதிரி உணர்வு. 🙄

 

29 minutes ago, கிருபன் said:

சூர்யா பார்ட் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம்.

லோகேஷின் அடுத்த படத்துக்கான lead என்கிறார்கள்; பார்ப்போம். 😊

3 hours ago, ராசவன்னியன் said:

முடிவாக, மற்றொரு கைதி2 படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

 

32 minutes ago, கிருபன் said:

இரண்டாவது பாதி கைதி படத்தின் (தற்செயலாக போனவாரம்தான் பார்த்தேன்) தொடர்ச்சி போலிருந்தது.

படத்தில் வரும் நரேனின் பாத்திரம், இறுதிக் காட்சியில் தோன்றும் சில பாத்திரங்கள் உண்மையிலேயே ''கைதி' உலகத்திலிருந்து' வந்தவை தான்! நடிகர் கார்த்தியின் குரல் கூட இறுதிக் காட்சியில் வருகிறது! 😀

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.