Jump to content

இயேசுநாதர் தெரிந்தெடுத்த 12 சீடர்கள்!


Recommended Posts

இயேசுநாதர் தெரிந்தெடுத்த 12 சீடர்கள்!

இம்மானிட குலத்தின் மீட்பராக இவ்வுலகில் தோன்றியவர் இயேசுபிரான் என்பதை அறிவோம். இவரை பின்பற்றும் கோடிக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இயேசுநாதரின் தோற்றம், பின்னர் அவரது போதனைகளைப் பொறுக்காமல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தது குறித்தும் ஏற்கனவே அறிந்தோம்.

இந்த கட்டுரையில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, அவரது போதனைகளைப் பின்பற்றிய 12 சீடர்கள் பற்றியும், அதன்பின் வந்த 2 சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

இஸ்ரேலின் பெத்லகேம் என்னும் ஊரில் சுமார் இரண்டாயிரத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் இவ்வுலகில் பிறந்தார். இவரின் தந்தை யோசேப்பு, தாயார் மரியாள் ஆவர்.

இயேசுபிரான் வாழ்ந்த முப்பத்து மூன்றரை ஆண்டுகளில் கடைசி மூன்றரை ஆண்டுகள் அவரே தெரிந்தெடுத்த 12 சீடர்கள் அவருடன் இருந்தனர்.

12 சீடர்களின் பெயர்கள் : (மத்தேயு 10 : 2-4)

1. பரிசுத்த சீமோன் (பேதுரு என்று அழைக்கப்பட்டவர்)

2. பரிசுத்த அந்திரேயா

3. பரிசுத்த யாக்கோபு (செபெதேயுவின் குமாரன்)

4. பரிசுத்த யோவான்

5. பரிசுத்த பிலிப்பு

6. பரிசுத்த பர்த்தலேமியு

7. பரிசுத்த தோமா

8. பரிசுத்த மத்தேயு

9. பரிசுத்த யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்)

10. பரிசுத்த ததேயு

11. பரிசுத்த சீமோன் (கானானியன்)

12. யூதாஸ் காரியோத் (இயேசுவைக் காட்டிக் கொடுத்ததால் இவரின் பெயருக்கு முன்பு பரிசுத்த என்ற வார்த்தை சேர்க்கப்படமாட்டாது.)

யூதாஸ் காரியோத் சீடர் பங்கினை இழத்தல் :

இயேசுநாதரின் போதனைகளை அன்றிருந்த ரோமானிய அரசும், யூத மதவாதிகளும் சிறிதும் விரும்பவில்லை. இயேசுவை பழித் தீர்க்க வகை தேடினர். அவரைப் பிடித்து பழி சுமத்த சதி செய்தனர். இத்திட்டத்தின் படி இயேசுநாதரின் பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்தை அணுகி 30 வெள்ளிக்காசுகளை கொடுத்தனர். இதற்கு கைமாறாக காரியோத், இயேசுநாதரைக் காட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டு அதன்படியே செய்தான். ரோமானிய அரசு, குற்றமற்ற இயேசுவின் மேல் பழி சுமத்தியது, இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

இப்பாவச் செயலைக் கண்ட யூதாஸ் மனமுடைந்தான். குற்றமில்லா இரத்தத்திற்கு பழியாகிவிட்டதை எண்ணி வேதனையடைந்து தான் வாங்கிய 30 வெள்ளியை வாங்கியவர்களிடம் கொடுக்கச் சென்றான். அவர்களோ மறுத்துவிட, அப்பணத்தை தேவாலயத்தில் எறிந்துவிட்டு தூக்குக் கயிற்றில் உயிர் விட்டான். (மத். 27 : 5)

பின் வந்த 2 சீடர்கள் :

1. பரி. மத்தியா : இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, தம் சீடர்களுக்கு காட்சித் தந்து விடை பெற்றுச் சென்றார். இந்நிலையில் இச்சீடர்கள் தம்முடன் இல்லாத யூதாஸ் காரியோத்துக்குப் பதிலாக மத்தியா என்பவனை 12-ம் சீடனாகச் சேர்த்துக் கொண்டனர். (அப்போஸ்தலர் 1 : 26)

2. பரி. பவுல் : பன்னிரெண்டு சீடர்களைத் தவிர மேலும் ஒருவர் இயேசுநாதரின் மனமார்ந்த சீடனாக வாழ்ந்தார். அவர்தான் பரி. பவுல் என்பவர்.

இவர் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் இயற்பெயர் சவுல். தன் இள வயதிலிருந்து யூத மதக் கோட்பாடுகளில் வைராக்கியமுள்ளவராக இருந்தார். சொல்லப் போனால் ஒரு யூத மத வெறியனாகவும் இருந்தார். இயேசுநாதரின் மறைவிற்குப் பின் வந்த தலைச்சிறந்த குழுத் தலைவர்களில் ஒருவரான ஸ்தேவான் என்பவரின் கொலையில் பங்கு உள்ளவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர்.

தன் 35-ம் வயதில் இயேசுவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். வரலாற்றின்படி கி.பி. 54-68க்கிடையில் நீரோ மன்னனாட்சியில் தியாக மரணமடைந்தார்.

விவிலியத்தில் (பைபிள்) இயேசுநாதர் பிறப்பும், பிறப்பிற்கு பின் நடந்தவைகளை குறித்து எழுதிய நூல்கள் பகுதிக்கு புதிய ஏற்பாடு என்று பெயர். இதில் 27 நூல்கள் உள்ளன. இவற்றில் 13 நூல்கள் பரி. பவுல் எழுதியனவாகும்.

இயேசுநாதர் உரைத்தபடி, அவர் மறைவுக்குப் பின் இறைச் செய்தியை பல நாடுகளுக்கும் ஏந்திச் சென்றவர் பரி. பவுல் என்பதை விவிலியத்தில் காணலாம்.

சீடர்களின் பின்னணி :

பன்னிருவரில் பரி. பேதுரு, பரி. யாக்கோபு, பரி. யோவான் என்பவர்கள் இயேசுவிடம் நெருக்கமானவர்களாகக் கருதப்பட்டார்கள். இதற்குச் சான்றாக இயேசுபிரான் சிலுவையில் அறைவதற்கு நள்ளிரவில் அவரைப் பிடிக்க வந்தபோது அவருடன் இருந்தவர்கள் இம்மூவரே. பரி. அந்திரேயா என்பவர் பரி. பேதுருவின் சகோதரர். இந்நால்வரும் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தனர். இயேசு இவர்களை தெரிந்து கொண்டு, "என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களை பிடிக்கிறவர்களாக்குகிறேன்" என்றழைத்தார்.

பரி. மத்தேயு சீடராவதற்கு முன் வரி வசூலிப்பவராகயிருந்தார். பன்னிரு சீடரில் பெரும்பாலோர் இஸ்ரேல் நாட்டிலுள்ள, கலிலேயா, கப்பர்நகூம், பெத்சாயிதா பட்டணங்களைச் சேர்ந்தவர்கள்.

தலைவன் எவ்வழியோ சீடர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்றாற்போல் இவர்களும் இயேசுநாதர் கொடுத்த அதிகாரத்தின் பேரில் இறை போதனையை செய்யலாயினர். நோயுற்றோரை, ஊனமுற்றோரை, அசுத்த ஆவி பிடித்தோரை குணமாக்கினர்.

பரி. தோமா இயேசுநாதரின் கட்டளைப்படி இறைச் செய்தியை உலகிற்கு அறிவித்தார். இந்திய நாட்டிற்கும் அவர் வந்ததையும், சென்னையிலுள்ள மயிலாப்பூரில் அவர் கொலை செய்யப்பட்டு மரித்தார் என்பதையும் சரித்திர வாயிலாக அறியலாம்.

பரி. சீமோன் (பேதுரு), பரி. யோவான், பரி. மத்தேயு, பரி. யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்), பரி. ததேயு ஆகியோர் எழுதிய நூல்கள் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன.

பன்னிருவரில் யூதாஸ் காரியோத் இயேசுவைக் காட்டிக் கொடுத்து தூக்கிலிட்டுக் கொண்டான். மற்றவர்களில், பரி. மத்தேயு தவிர எவரும் இயற்கை மரணம் எய்தவில்லை. சிலர் தியாக மரணம் எய்தினர். பலர் சிலுவையில் அறையப்பட்டனர். கி.பி. 100 இறுதிக்குள் சீடர்கள் அனைவரும் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தனர் என்று வரலாறு தெரிவிக்கிறது.

Link to comment
Share on other sites

தகவல்களிற்கு மிக்க நன்றி! :lol: வாசிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. நான் படித்தது பரி.யோவான் (சென்.ஜோன்ஸ்) கல்லூரியில். நீங்கள் கூறிய 4வது சீடரின் பெயரில் அமைந்த கல்லூரியில் என்று நினைக்கின்றேன். மதங்கள் என்பவை எமக்காக - மனிதருக்காக உருவாக்கப்பட்டவை. எந்த மதத்தில் என்ன நல்ல விடயம் கூறப்பட்டாலும் அதைப் பின்பற்றுவதும், என்ன கூடாதவிடயம் கூறப்பட்டாலும் அதைப் புறக்கணிப்பதும் எனது கொள்கை. எனக்கு தனிப்பட மதம் என்று ஒன்றும் இல்லை. யூத மதவாதிகளிற்கும் யேசுவிற்கும் இடையில் நடந்த பிரச்சனைகளை பற்றி கொஞ்சம் கூறமுடியுமா? யூதாஸ் காரியோத் என்று ஒரு சீடனுக்கு பெயர் வைக்கப்பட்டது அவன் யூத மதத்தை சார்ந்து இருந்ததாலா? யூத மதம் பற்றியும் கொஞ்சம் கூறமுடியுமா? யூத மதம் யேசுவின் கொள்கைகளில் இருந்து விலகி இருந்ததா? இப்போதும் யூதர்கள் இயேசுவை காட்டிக்கொடுத்தவர்கள் என்றவகையில் பிரச்சனைப்படுத்தப் படுவதாக எங்கோ வாசித்த நினைவு [அந்த கடைசியாக வந்த இயேசு சம்மந்தமான ஒரு ஆங்கிலப் படத்தில் அவ்வாறு காட்டப்பட்டது என நினைக்கின்றேன்]. நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பைபிள் பற்றிய உங்கட தகவலுக்கு நன்றிகள்.

இருந்தாலும் எனக்கும் சில சந்தேகங்கள் இருக்குது. பழைய பைபிள் ஏற்பாட்டில உந்தப் 12 சீடர்களும் தொகுத்து வழங்கின அதிகாரங்களும் இருக்குது. ஆனா அவை சொல்லுகின்ற ஒரே வரலாறுகள் குழப்பாக இருக்குது ஏன். ஒருத்தர் வம்சவழியில் 20 தலைமுறைகள் இருக்குது எண்டால் மற்றவர், 14, 10 என்று ஒவ்வொருவங்களுக்கிடையேயும், வம்ச வழி வேறுபடுதே ஏன்?

அவ்வாறே, சண்டைக்குப் போகுறது பற்றிச் சொன்னா, ஒருத்தர் 10,000 பேர் சண்டைக்குப் போகுது எண்டு சொன்னால், மற்றவர் ஒரு லட்சம் பேர் சண்டைக்குப் போகுது என்கின்றார். ஒரு சைபர் கூடினதால வந்த பிரச்சனை எண்டு சொல்லாதிங்கோ. ஏனென்றால் சைபரைக் கண்டு பிடிச்சது, இந்தியர்கள். பைபிள் தொகுக்கின்ற நேரம் சைபர் இருந்ததில்லை.

அந்தச் சண்டை எண்டது தாவிது மன்னர் காலத்தில் நடந்த சண்டை போல. வடிவாக ஞாபகமில்லை. அந்த மன்னர் வரலாற்றில் தான், படைவீரன் ஒருத்தரின் மனுசி மேல அவர் கண்ணு வைச்சதாகவும், படைவீரனைச் சண்டைக்கு அனுப்பி போடச் சொல்லிப் போட்டு, அவரின் மனுசியை அனுபவித்தாகவும் பைபிள் சொல்லுது.

அடுத்தவன் மனுசி மேல கண்ணு வைச்சாலும் பரவாயில்லை. தந்தைக்கு அவரின் மகள்மார் மது அருந்தக் கொடுத்துப் போட்டு, அவர் கூட குற்றம் புரிந்தாகவும், சகோதரி கூட தவறாகத் தமையன் நடந்ததாகவும் முறைதவறிய அசிங்கத்தை எல்லாம் பைபிள் கொண்டிருக்குதே?

புனித நூல், தலையில் வைச்சுப் படுத்தால் நோய் குணமாகும் என்ற ஐதீகம் இதனால் பொருந்துமோ?

பைபிளில் பார்த்தால் ஜேசுநாதர் பிறந்த பின்னர், அவற்ற 27ம் வயது வரைக்கும், இடைப்பட்ட காலத்தைப் பற்றிச் சொல்லவே இல்லை. எங்க அவற்ற இடைப்பட்ட வரலாறு போனது. சிலர் சொல்லுகினம், இடைப்பட்ட வரலாறு என்றால் சாதாரணவாழ்க்கை வாழ்ந்தவர் அது தான் அதைப் பற்றிக் காணோம் எண்டு. அப்படிப் பார்த்தாலும் பிறக்கும்போது வரலாறு சொல்லப்படுவதால், அப்போது ஞானம் இருந்ததாகவும், இடையில் விட்டுப் போய் 27 வயதில் வந்ததாகவும் அர்த்தப்படுமோ?

கடைசியாக இஜேசு நாதர் எங்கட பாவங்களைச் சுமந்து கொண்டு மரித்தார் என்றாங்கள். அப்படிப் பார்த்தால் எங்களுக்கு ஒரு பாவமும் இப்ப இருக்கக்கூடாதே? ஏன் இருக்குது?

Link to comment
Share on other sites

புனித நூல், தலையில் வைச்சுப் படுத்தால் நோய் குணமாகும் என்ற ஐதீகம் இதனால் பொருந்துமோ?

பல மதத்தவர்கள் தமது புனித நூலுக்கு மிகுந்த மதிப்பு கொடுக்கின்றனர். சீக்கிய மதத்தவர்கள் புனிதநூலை தமது வீட்டில் உள்ள ஒரு குழந்தையாக - குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினராக பாவனை செய்தே வழிபடுவார்கள். அந்த நூலுக்கு ஆடை, படுப்பதற்கு கட்டில் என்று கூட உள்ளது. தினமும் எழுந்ததும் அவர்கள் புனிதநூலிலேயே முழிப்பார்கள். இதேபோல் படுக்குமுன் அந்த புனிதநூலையே கடைசியாக பார்ப்பார்கள். குழந்தை ஒன்று பிறந்தால் அவர்களின் மத குரு அந்த புனிதநூலின் ஒரு பக்கத்தை எழுந்தமானமாக புரட்டும் போது அந்த பக்கத்தில் என்ன எழுத்து இருக்கின்றதோ அந்த எழுத்திலேயே குழந்தைக்கு பெயரும் வைப்பார்கள். இந்த புனிதநூலை மனிதர்களிற்கு மரியாதை செய்து கதைப்பது போல் அந்த நூலை அவர் படுத்து இருக்கிறார், அவர் சாப்பிடுகின்றார் என்று சொல்லியே கதைப்பார்கள். ஏனென்றால் இந்த நூலை அவர்கள் சீக்கிய மதத்தை உருவாக்கிய ஞானியாகவே பார்க்கின்றார்கள். எனவே, புனிதநூலை வழிபடுவதும், வருத்தம் மாறுவதும் எல்லாம் எமது நம்பிக்கையிலேயே இருக்கிறது.

Link to comment
Share on other sites

விவிலியத்தின் விளக்கம் விவிலிய நூல் (BIBLE) கிறித்துவர்களின் புனித நூலாகும். ஆங்கிலத்தில் பைபிள் என்பது கிரேக்க வார்த்தையான பிப்லியா (BIBLIA)வின் மொழிபெயர்ப்பாகும். பிப்லியா என்றால் புத்தகங்கள் என்று கிரேக்க மொழியில் கூறுவர். இப்புனித நூல் பழைய ஏற்பாடு (Old Testament), புதிய ஏற்பாடு (New Testament) என்று இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இயேசுநாதரின் பிறப்புக்கு முன் நடந்தவைகளின் தொகுப்பு பழைய ஏற்பாடாகும். இயேசுநாதரின் பிறப்பும், அதன்பின் ஏறக்குறைய 100 ஆண்டுகள் வரை நிகழ்ந்தவைகளின் தொகுப்பு புதிய ஏற்பாடாகும். இயேசுநாதரின் பிறப்பின் அடிப்படையில்தான் இன்றைய உலக சரித்திரமும் கி.மு. (BC), கி.பி. (AD) என்று பிரித்துக் காண்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பழைய ஏற்பாடு : இப்பகுதி உலக தோற்றமுதல் பல நிகழ்ச்சிகளை காலப் பகுதிக்கேற்ப பலரால் எழுதப்பட்ட தொகுப்பாகும். இது பழம் பெரும் நிகழ்வுகளை கொண்டுள்ளதால் தொன்றுதொட்டு வாய்மொழி வாயிலாகவும், பின்னர் மனிதன் எழுதும் திறனைப் பெற்றபோது காலப் பகுதிக்கேற்ப எபிரேயு (Hebrew), அரமைக் (Aramaic), சிரியாக் (Syriac), லத்தீன் (Latin), கிரேக்கம் (Greek) என்னும் மொழிகளில் எழுத்து வடிவம் பெற்றது. இதில் சில மொழிகள் இப்போது வழக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் :I. ஆகமம் (PENTATEUCH) (5) :1. ஆதியாகமம் 2. யாத்திராகமம் 3. லேவியாகமம் 4. எண்ணாகமம் 5. உபாகமம். II. சரித்திரம் (HISTORICAL) (12) :1. யோசுவா 2. நியாயாதிபதிகள் 3. ரூத் 4. I சாமுவேல்5. II சாமுவேல்6. I ராஜாக்கள்7. II ராஜாக்கள்8. I நாளாகமம்9. II நாளாகமம்10. எஸ்றா 11. நெகேமியா 12. எஸ்தர் III. பாடல் (POETICAL) (5) : 1. யோபு 2. சங்கீதம் 3. நீதிமொழிகள் 4. பிரசங்கி 5. உன்னதப்பாட்டு IV. தீர்க்கதரிசனம் (PROPHETICAL) : பெரிய தீர்க்கதரிசிகள் (MAJOR PROPHETS) (5) :1. ஏசாயா 2. ஏரேமியா 3. புலம்பல்4. எசேக்கியல் 5. தானியேல் சிறிய தீர்க்கதரிசிகள் (MINOR PROPHETS) (12) :1. ஓசியா 2. யோவேல் 3. ஆமோஸ் 4. ஓபதியா 5. யோனா 6. மீகா 7. நாகூம் 8. ஆபகூக்9. செப்பனியா 10. ஆகாய் 11. சகரியா 12. மல்கியா பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் (Books of Apocrypha) : கத்தோலிக்க கிறித்துவர்கள் (Catholics) மேலே குறிப்பிட்ட 39 புத்தகங்களுடன் 7 புத்தகங்களை சேர்த்து மொத்தம் 46 புத்தகங்களை பழைய ஏற்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 1. தொபியாசு ஆகமம் 2. யூதித் ஆகமம் 3. ஞான ஆகமம் 4. சீராக் ஆகமம் 5. பாரூக் ஆகமம் 6. I மக்கபே ஆகமம்7. II மக்கபே ஆகமம்இது கிறித்துவர்களிடையே பெரிய வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் யூதர்களின் 46 புத்தகங்களடங்கிய கிரேக்க மொழி பெயர்ப்பு (Greek Translation) பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர். புராடஸ்டன்ட் கிறித்துவர்கள் (Protestant-Christians) 39 புத்தகங்களடங்கிய எபிரேயு பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர். புதிய ஏற்பாடு : புதிய ஏற்பாட்டில் 27 ஆகமங்கள் உள்ளன. அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம் : I. வாழ்க்கை வரலாறு (BIOGRAPHICAL) (5) :1. மத்தேயு 2. மாற்கு 3. லூக்கா 4. யோவான்II. வரலாறு (HISTORICAL) (1) :(1) அப்போஸ்தலருடைய நடபடிகள்III. பரி. பவுலின் நிரூபம் (PAULINE EPISTLES) (14) :1. ரோமர் 2. I கொரிந்தியர்3. II கொரிந்தியர்4. கலாத்தியர் 5. எபேசியர் 6. பிலிப்பியர் 7. கொலொசெயர் 8. I தெசலோனிக்கியர்9. II தெசலோனிக்கியர்10. I தீமோத்தேயு11. II தீமோத்தேயு12. தீத்து 13. பிலமோன் 14. எபிரேயர் IV. மற்றைய நிரூபம் (GENERAL EPISTLES) (7) :1. யாக்கோபு 2. I பேதுரு3. II பேதுரு4. I யோவான்5. II யோவான்6. III யோவான்7. யூதா V. தீர்க்கதரிசனம் (PROPHETICAL)(1) வெளிப்படுத்தின விசேஷம் ஆக, பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் சேர்த்து கத்தோலிக்க கிறித்துவர்கள் 73 (46+27) புத்தகங்களடங்கிய விவிலிய நூலை பின்பற்றுகின்றனர். புராடஸ்டன்ட் கிறித்துவர்களின் விவிலிய நூல் 66 (39+27) புத்தகங்களை கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் என்றாலே பரலோகத்தில் (Heaven) மகிழ்ச்சி. பூலோகத்தில் (Earth) சமாதானம் என்பதாகும். கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அனுசரிக்கும் நாளாகும். ஆதிச் திருச்சபையினர் கிறிஸ்துவின் பிறப்பை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடுவது என்று முடிவெடுத்தனர். இந்நாள் சரித்திரத்தில் புகழ்பெற்ற நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இயேசுவின் பிறப்பை வைத்துதான் கி.மு. என்றும், கி.பி. என்றும் வரலாற்றின் காலம் கணிக்கப்படுகிறது.உலக இரட்சகர் :இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகிற்கு முதன்முதல் அறிவித்தவன் கர்த்தருடைய தூதன் என்பதை விவிலிய நூலில் இவ்வாறு காணலாம். "இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர், உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்". (லூக் 2 : 10-11)இயேசு இவ்வுலகின் ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் செய்தியிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. இயேசுபிரான், இஸ்ரேல் நாட்டிலுள்ள எருசலேம் நகருக்கு 10 கி.மீ. தெற்கே உள்ள பெத்லகேம் என்ற சிற்றூரில் புறநகர் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பது வரலாறு. ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கோ, சாதியினருக்கோ, இனத்திற்கோ, உலகில் உள்ள ஒரு பகுதியினருக்கோ சொந்தமானவர் அல்ல. இதில் ஒரு சந்தேகமுமில்லை. ஏனென்றால் அவர் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமான ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் நற்செய்தி தெளிவாகக் கூறுவதைக் காணலாம். சமாதானப் பிரபு :இந்த தூதர்கள் கூறிய மற்றுமொரு பிறப்பின் செய்தி என்னவென்றால், "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்பதாகும். (லூக் 2 : 14).இச்செய்தியில் பூமிக்கு பொதுவாக குறிப்பிட்டிருப்பது சமாதானமாகும். இச்சமாதானம் இப்பிரபஞ்சத்தின் இயல்பான எதிர்பார்ப்பு என்பதில் ஐயமில்லை. நமக்கு மனதில் சமாதானம் வேண்டும். உடலில் சமாதானம் வேண்டும். குடும்பத்தில் சமாதானம் வேண்டும். அயலகத்தில் சமாதானம் வேண்டும். நம் நாட்டில், உலகில் சமாதானம் என்று எங்கும் சமாதானம் தேவை என்பதை நாம் அறிவோம். இயேசுபிரான் பிறந்த நாட்களில் ரோம அரசனாக இருந்தவர் அகஸ்துராயன் (Agustus Ceasar). அன்று வாழ்ந்த எழுத்தாளர்களில் எபிக்டெடஸ் (Epictetus) என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் ரோம அரசனைப் பற்றி குறிப்பிடும்போது, அகஸ்துராயனால் தரையிலும், கடலிலும் நடக்கும் யுத்தங்களிலிருந்து மக்களுக்கு சமாதானம் கொடுக்க முடியுமே தவிர, மக்களின், கவலை, உணர்ச்சி, வேதனை நிமித்தம் சமாதானம் கொடுக்க இயலாது என்று அவர் கூறியுள்ளார்.எனவே, இந்த உலகம் தரக்கூடாத சமாதானத்தை கொடுக்கவே இயேசு இவ்வுலகில் வந்தார் என்பதை நாம் விவிலிய நூலில் காணலாம். (யோவான் 14 : 27)மேலும், இயேசுபிரான் உலகில் பிறக்கப் போகிறார் என்று அவர் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் உரைத்த தீர்க்கதரிசியான ஏசாயா, இயேசுவை சமாதானப் பிரபு என்று கூறியிருப்பதையும் விவிலிய நூலில் இவ்வாறு காணலாம்.அவர் நாமம் : அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு எனப்படும். (ஏசாயா 9 : 8)முன் குறிக்கப்பட்டவர் :உலக வரலாற்றில் இப்போது எத்தனையோ தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். ஆனால் யாருமே அவர்களை குழந்தையாகப் பாவித்துக் கொண்டு கொண்டாடுவதை நாம் காண்பதில்லை. இயேசு இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பதை வரலாற்றின் மூலம் அறிகிறோம். இது ஒரு எதிர்பாராத விபத்தல்ல. அவரின் பிறப்பை உலகம் முழுவதும் பேச்சு, நடை, பாடல் என்று பல வழிகளில் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அதில் ஒன்று இயேசுவை குழந்தையாக கொண்டாடப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால் அவர் பிறக்கும்போதே மீட்பராக வெளிப்பட்டார். இயேசு என்னும் மன்னர்களின் மன்னன் யாரிடத்தில், எந்த வம்சத்தில், எங்கு பிறக்கப் போகிறார் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைக்கப்பட்டுவிட்டதை விவிலியம் இவ்வாறு கூறுகிறது.ஏசாயா 7 : 14 - "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்".மீகா 5 : 2 - "இஸ்ரேலை ஆளப் போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்".ஏசாயா 9 : 7 - "தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி... சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்".இது மட்டுமல்ல. இயேசு பிறப்பதற்கு முன், அவருடைய தகப்பனாகிய யோசேப்புக்கு கர்த்தருடைய தூதன் தோன்றி சொப்பனத்தில் வெளிப்படுத்தியதாவது : மத்தேயு 1 : 21 - "அவள் (மரியாள்) ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" என்றான், என்பதாகும்.பிரபஞ்ச மன்னனும், பூலோக மன்னனும் :இப்பிரபஞ்ச அரசனான இயேசுவுக்கு பிறப்பிலிருந்தே எதிர்ப்பு இருந்தது. இயேசு பிறந்தபோது ஏரோது மன்னன் ஆட்சியிலிருந்தான். இப்பிரபஞ்ச அதிகாரியான இயேசுவின், அவரின் படைப்பான நட்சத்திரம் ஒன்று இவ்வுலகிற்கு இயேசுவை வரவேற்பது போல வானில் தோன்றியது. இதைக் கண்ட அந்நாட்டு ஞானிகள் ஏதோ, அரசர் பிறந்துவிட்டார் என்று ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு அரச புதல்வன் பிறக்கவில்லை என்பதை அறிந்தனர். இச்செய்தியை கேட்ட ஏரோது மன்னன் கலக்கமடைந்தான். தன் நாட்டில் வேறொரு அரசன் பிறந்திருப்பது அவனுக்கு திகிலை உண்டாக்கியது. ரகசியமாக ஞானிகளை அழைத்து, பிள்ளை பிறந்த காலத்தை கேட்டறிந்தான். பிள்ளையை அவர்கள் விசாரித்துக் கண்டபின் அவனிடம் அறிவிக்கச் சொல்லி அனுப்பிவைத்தான்.ஞானிகள் நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து இயேசு பிறந்த இடத்தை அடைந்தனர். தாங்கள் கொண்டு வந்த பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் போன்ற காணிக்கைகளை வைத்து வணங்கினர். ஆனால், திரும்ப ஏரோதுவிடம் போக வேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டனர். ஆகவே, வேறு வழியாக தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள். இந்நிலையில் கர்த்தரின் தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கும் காணப்பட்டு, ஏரோது கொலைச் செய்யத் தேடுவான். ஆகையால் பிள்ளையை கூட்டிக் கொண்டு எகிப்துக்கு ஓடிவிடச் சொன்னான். யோசேப்பும் அப்படியே செய்தான். ஏரோது, தான் ஞானிகளால் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோபமடைந்து, ஞானிகளிடம் விசாரித்த காலத்தின்படி இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைச் செய்தான். ஏரோதின் ஆணை இறையரசர் இயேசுவின் உலக வாழ்க்கைப் பயணத்தை தடுக்க முடியவில்லை.இயேசுபிரான் வாழ்ந்த நாட்களில் அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை பின்பற்றும் மக்கள் தங்கள் எண்ணங்களும் செயல்களும் மாறி அவர்கள் புதிய வாழ்க்கைமுறையை பின்பற்றுகின்றனர். அது மக்களின் செயல்களுக்கு விளக்கம் கூறி தீமையிலிருந்து விலகி வாழ்வதற்கு வழி செய்கிறது. இதனால் உலக பண்பாட்டில் மாற்றமும், நாகரீக வளர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது. உலகமெங்கிலும் டிசம்பர் 25-ம் தேதி கிறித்துவர்களும், அவரைப் பின்பற்றுவோரும் இயேசுவின் பிறப்பை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக, தங்கள் வீடுகளில் பெரிய நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரித்து தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார் என்று அறிவித்து மகிழ்கின்றனர் என்பதை நாம் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் இயேசு பிறந்தது டிசம்பர் 25 ம் திகதி. அவர் பிறந்ததை வைத்தே ஆங்கில வருடங்கள் கணிக்கப்படுகிறது. அதாவது ஆங்கிலப் புதுவருடங்கள் வருகிறது. ஆனால் ஆங்கிலப் புதுவருடம் ஜனவரி முதலாம் திகதி தானே வருகிறது. ஏன் டிசம்பர் 25 ம்திகதி வருவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பைபிளை கிறிஸ்தவர்களின் புனித நூல் என்கின்றியள். ஆனால் அது எழுதப்பட்ட மூலநூலோ, மொழியோ இண்டைக்குப் பாவனையில் இல்லையே. அது எங்க போட்டுது?

சொல்லப் போனா, ரோமராட்சியத்திற்குப் பிறகு,

அதைத் தங்கட கைக்குள்ள கொண்டு வந்த, வத்திக்கான் அதில நிறைய மாற்றங்களைச் செய்து போட்டுது. உண்மையான பைபிளே இப்ப இல்லை. தங்களுக்கு விருப்பமான பொருத்தமான வகையில திருத்தங்கள் செய்திட்டனம்.

இயேசுபிரான்இ இஸ்ரேல் நாட்டிலுள்ள எருசலேம் நகருக்கு 10 கி.மீ. தெற்கே உள்ள பெத்லகேம் என்ற சிற்றூரில் புறநகர் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பது வரலாறு. ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கோஇ சாதியினருக்கோஇ இனத்திற்கோஇ உலகில் உள்ள ஒரு பகுதியினருக்கோ சொந்தமானவர் அல்ல. இதில் ஒரு சந்தேகமுமில்லை. ஏனென்றால் அவர் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமான ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் நற்செய்தி தெளிவாகக் கூறுவதைக் காணலாம். சமாதானப் பிரபு :இந்த தூதர்கள் கூறிய மற்றுமொரு பிறப்பின் செய்தி என்னவென்றால்இ "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும்இ மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்பதாகும். (லூக் 2 : 14).இச்செய்தியில் பூமிக்கு பொதுவாக குறிப்பிட்டிருப்பது சமாதானமாகும்

ஜேசுநாதர் எல்லோருக்கும் பொதுவானவர் என்று கதையைத் திரிக்கின்றியள். ஆனால் மத்தேயுவில் இப்படிச் சொல்லுது

21. பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

25. அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.

26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

அவற்ற உலகமும், நினைப்பும் இஸ்ரவேல் என்ற யூதரின் உலகமாகவே இருந்தது. அவர்களை நல்வழிப்படுத்தவமும், அவங்க தான் உலகத்தில் உயர்ந்தவர்கள் எண்ட எண்ணப்பாடும் அவருக்கு இருந்தது. மற்றவங்களை 3ம் தரப் பிரஜைகளாகத் தான் அவர் மதித்தார். அப்படி இருக்கேக்க எல்லோருக்கும் பொதுவானவர் எண்டு எப்படிச் சொல்லுறியள்.

இதிலேயே வடிவாகத் தெரியும். ஜேசுநாதரின் கருத்துக்கள் மாற்றப்பட்டதாலும், அவை மாற்றப்பட்டு உண்மை அர்த்தம் சிதைக்கப்பட்டதாலும் தான் இறைவன், குரானைப் பூமிக்கு அனுப்பி வைச்சதாக இசுலாமியர்கள் சொல்லுகின்றார்கள். அதிலும் ஒரு நியாயம் இருக்குது. அங்க ஈஸா என்று வாற நபிகள் தான் இயேசு நாதர். இப்படி நிறைய ஒற்றுமை இருக்குது.

இசுலாமியர்கள் இப்ராகிம் என்று பெயர் உச்சரிச்சா, அதைக் கிறிஸ்தவர்கள் ஆப்ரகாம் என்று உச்சரிப்பாங்கள். சொல்லப்போனால் உண்மையான கிறிஸ்தவங்கள் என்று யாரும் சொல்ல விரும்பின அவங்க குரானைத் தான் பின்பற்ற வேண்டி வரும்.

ஆனா என்ன சோகம் எண்டால் யூதர்கள் கெட்டுப்போனார்கள், அவர்களைத் திருத்த வந்தேன் என்று சொன்ன ஜேசுநாதரால கடைசி வரைக்கும் தன்னுடைய வழிக்கு யூதரைக் கொண்டுவர முடியல்ல. அவங்க இன்று வரைக்கும் ஜேசுநாதரை மதிக்கல்ல. ஆனா மற்றவங்க அவரைப் பின்பற்றி தாங்க 2ம் பிரஜைகள், எஜமானின் கோப்பையில் இருந்து விழுகின்ற உணவைத் தின்னும் எச்சில் நாய்க்குட்டிகள் எண்டு நிருபிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

என்னங்க, பைபிளை மாத்தி தங்களுக்கு ஏற்ற மாதிரி எழுதி வைத்து இருக்கின்றார்களா? அப்படி என்றால் திருவள்ளுவரின் திருக்குறள், மற்றும் பகவத் கீதை போன்றவையும் ஒரிஜினலில் இருந்து வேறானவையாக இருக்க சந்தர்ப்பம் இருக்கின்றதா?

சரி, நான் ஒரு கேள்வி கேட்கின்றேன், தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். பைபிள் வேதாகமத்தில் குறிப்பிடப்படாத நமக்கு தெரிந்த ஒரு முக்கியமான விலங்கு எது? [இந்த கேள்வியை பொது அறிவு சோதனை ஒன்றில் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் கேட்டார்கள்]

Link to comment
Share on other sites

சரி, நான் ஒரு கேள்வி கேட்கின்றேன், தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். பைபிள் வேதாகமத்தில் குறிப்பிடப்படாத நமக்கு தெரிந்த ஒரு முக்கியமான விலங்கு எது? [இந்த கேள்வியை பொது அறிவு சோதனை ஒன்றில் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் கேட்டார்கள்]

பூனை :)

Link to comment
Share on other sites

ஓம் சரியான பதில்... கெட்டிக்காரன்.. :) எப்படி தெரியும்? சும்மா ஒரு ஊகமா இல்லாட்டி பைபிள் வேதாகமத்தை படித்து உள்ளீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன். அக்காலத்தில் பூனை என்பது மனிதனின் செல்லப்பிராணியாக இருந்ததில்லை போல. அது தான் அது இடம்பெறவில்லை.

எனக்கு ஒரு சந்தேகம் இயேசு பிறந்தது டிசம்பர் 25 ம் திகதி. அவர் பிறந்ததை வைத்தே ஆங்கில வருடங்கள் கணிக்கப்படுகிறது. அதாவது ஆங்கிலப் புதுவருடங்கள் வருகிறது. ஆனால் ஆங்கிலப் புதுவருடம் ஜனவரி முதலாம் திகதி தானே வருகிறது. ஏன் டிசம்பர் 25 ம்திகதி வருவதில்லை.
அதுவும் நல்லதற்கே. இல்லை என்றால் அதற்கும் மதச்சாயம் பூசி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டைக் கதைப்பார்கள். பிறகு குழப்பமாகப் போடும்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523  முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும். 74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!
    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.