Jump to content

இலங்கையில் திடீரென அதிகரித்த துப்பாக்கி கலாசாரம் - 4 தினங்களில் ஐவர் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் திடீரென அதிகரித்த துப்பாக்கி கலாசாரம் - 4 தினங்களில் ஐவர் உயிரிழப்பு

25 நிமிடங்களுக்கு முன்னர்
 

துப்பாக்கிப் பிரயோகம்

இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாக அதிக அளவிலான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இதன்படி, கடந்த 4 நாட்களில் மாத்திரம் ஐந்து துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை துப்பாக்கி பிரயோகம்

தங்காலை பகுதியில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேப் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அஹங்கம துப்பாக்கி பிரயோகம்

அஹங்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

துப்பாக்கிப் பிரயோகம்

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 27 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அளுத்கம துப்பாக்கி பிரயோகம்

அளுத்கம பகுதியில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 43 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லாரி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

பாணந்துறை துப்பாக்கி பிரயோகம்

பாணந்துறை பகுதியில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட மற்றுமொரு துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த இருவரில் ஒருவர் மீது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருந்தனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 30 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐவர் உயிரிழப்பு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த துப்பாக்கி பிரயோகங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களுக்கும், போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் தொடர்புகள் காணப்படலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் போலீஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61711889

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் நோக்கத்திற்காக... சிறுமிகளை கடத்தி கொலை செய்தல்,
அடுத்தடுத்து... துப்பாக்கி சூடு போன்றவை எல்லாம்,
அரசியல் கொந்தளிப்பிலிருந்து... மக்களை, திசை திருப்ப... 
போடும், நாடகமாக கூட இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சிரி லங்கா இத்தனை காலமும் சொர்க்க புரியாக இருந்தது போல போகிறது சீச்சீச்சீ யின் தலையங்கம்..🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு பஞ்சத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர ஏற்கனவே தென்னிலங்கையில் குவிந்து கிடக்கும் சட்டவிரோத ஆயுதங்கள் ராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள் புதிய கொலைவெறி குழுக்களை உற்பத்தி பண்ணும் ராணுவமோ போலீசோ கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும் வடகிழக்கு விதி விலக்கல்ல எதை விரும்ப வில்லையோ அதை நோக்கி செல்கின்றனர் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஏதோ சிரி லங்கா இத்தனை காலமும் சொர்க்க புரியாக இருந்தது போல போகிறது சீச்சீச்சீ யின் தலையங்கம்..🤣

கொஞ்சம் பொறுங்கோ அப்பு....இன்னும் வரும். 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சி – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

முகத்துவாரம் துப்பாக்கிச்சூடு – உயிரிழந்த இளைஞன் குறித்து வெளிவந்த தகவல்!

கொழும்பு – முகத்துவாரம் – ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் வந்த இருவரால் நேற்று மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கொழும்பு – அளுத்மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1285740

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.