Jump to content

உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால் ரஷ்யாவின் ஐநா தூதர் வெளியேறினார்!

உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்று ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் குற்றம் சாட்டியதை அடுத்து, ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் இருந்து ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா வெளியேறினார்.

நியூயோர்க்கில் நடந்த பாதுகாப்பு சபைக் கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல்,

‘ரஷ்ய கூட்டமைப்பின் தூதர், நேர்மையாக இருக்கட்டும். வளரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்யா உணவுப் பொருட்களை ஒரு திருட்டு ஏவுகணையாகப் பயன்படுத்துகிறது.

ரஷ்யாவின் போரின் வியத்தகு விளைவுகள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன.இது உணவு விலைகளை உயர்த்துகிறது, மக்களை வறுமையில் தள்ளுகிறது மற்றும் முழு பிராந்தியங்களையும் சீர்குலைக்கிறது. இந்த உணவு நெருக்கடிக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு.

ரஷ்யாவால் அமுல்படுத்தப்பட்ட கடற்படை முற்றுகையின் காரணமாக உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் சிக்கிய மில்லியன் கணக்கான டன் தானியங்களை தானே பார்த்ததாக’ கூறினார்.

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ரஷ்யா தானியங்களைத் திருடி பயிர் நடவு மற்றும் அறுவடை செய்வதைத் தடுப்பதாகவும் மைக்கேல் குற்றம் சாட்டினார்.

இந்த கருத்துக்கள் நெபென்சியாவை வெளியேற்ற வழிவகுத்தது. அவர் வெளியேறும்போது, மைக்கேல் அவரிடம் நேரடியாக உரையாற்றினார்.

உக்ரைன் சமையல் எண்ணெய், சோளம் மற்றும் கோதுமை போன்ற தானியங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ரஷ்யாவும் அதிக அளவு தானியங்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஏற்றுமதி இல்லாததால் மாற்றுப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1285786

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1 hour ago, தமிழ் சிறி said:

இந்த உணவு நெருக்கடிக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு.

உருசியாவுக்கு எதிராக பாரிய பொருளாதாரத் தடை : ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி!!

திருநெல்வேலிக்கு அல்வா.🤫

திருப்பதிக்கே லட்டு. 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தனக்கு எண்டா சுளகு படக்கு படக்கு எண்டு அடிக்குமாம். 

ரசிய உர ஏற்றுமதிக்குத் தடை.  தானியங்களுக்குத் தடை. ஆனால் உக்ரேனியத் தானியங்களின் வருகை தடைப்பட்டதனால் ஐரோப்பிய சாதா மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பையொட்டி அழுகை. 

இந்த வட அமெரிக்க, ஐரோப்பிய் அரசுகள் நீதியாக நடந்துகொண்டதாக வரலாறே இல்லை. 😏

 

Turkey to help unblock Ukraine grain – media

Moscow, Kiev, and Ankara have reportedly agreed on a maritime “grain corridor”

Ukrainian wheat may soon be headed to world markets once again, under a proposal that would involve Turkish ships demining the waters around Odessa and sharing escort duties with the Russian Navy, multiple outlets reported on Monday. The “grain corridor” could help with food shortages in a number of countries in Africa and the Middle East, including Turkey itself. 

According to Bloomberg, quoting Ukrainian President Volodymyr Zelensky, Kiev is negotiating with the UN on how to export the grain, and is skeptical of a “tentative” deal between Russia and Turkey.

UN Under-Secretary-General for Humanitarian Affairs Martin Griffiths arrived in Moscow on June 3, for talks about restoring the shipments of grain from the Black Sea ports, according to Reuters.

source; RT.com 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

ஆபிரிக்காவுக்கு  ரஸ்யா  கொடுக்க இருக்கும் தானியங்களை தடுக்கும் மேற்கு நாடுகளின் இரட்டை வேடத்தை உலகறியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!“

 

EU சபைத் தலைவர் சரியாகக் கூறியுள்ளார். ரஸ்யா இந்த மானங்கெட்ட சபையில் இருந்து நிரந்தரமாக வெளியேறவேண்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனிய துறைமுகங்களை மூடி வைத்திருப்பதே உலக தானிய நெருக்கடிக்கு காரணம்.

ரஸ்யா இந்த துறைமுகம்க்கள் மீது தாக்காமல் விட்டால், உக்ரேன் இந்த துறைமுகங்களை சுற்றி கடல்கண்ணிவெடிகளை புதைக்காமல் விட்டால் மட்டுமே இது சசாத்தியமாகும்.

அல்லது ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை.

இல்லாவிட்டால் மாறி மாறி சாட்டி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

உக்ரேனிய தானியங்கள் தரைமூலம் ஐரோப்பாவுக்கு கொண்டுவர வாய்பிருப்பதால் - ஆபிரிக்க, ஆசிய நாடுகளுக்குத்தான் இது பெரிய அடியாக இருக்க போகிறது.

Link to comment
Share on other sites

போரினால்  யுக்ரேனில் உள்ள உணவு அவர்களுக்கே போதுமானது. ஐரோப்பா  இப்போது உணவுக்காக  யுக்ரேனில் தங்கி உள்ளது என்பது நகைப்புக்கு இடமானது.
இரண்டு நாடுகளும் சண்டை பிடிப்பதற்கு ஊக்குவிப்பது. பிறகு அவர்களின் உணவுக்கு, எண்ணைக்கு, வாயுவுக்கு என தங்கி இருப்பது. அத்தோடு பொருளாதார தடை 6 ஆவது கட்டமாக.

என்ன ஐரோப்பியர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்திகள் நிலைமையினை விரிவாக புரிந்துகொள்ள உதவும் என்கின்ற அடிப்படையில்  இங்கே  இணைக்கப்படுகிறது. Russia vs Ukraine  என்கின்ற வகையில் பார்க்க வேண்டியதில்லை 

Sputniknews.com

2022/06/08

Lavrov: Russia Ready for Talks With UN, Turkey, Ukraine on Grain Deliveries

3 hours ago
Earlier on Wednesday, Turkish Defence Minister Hulusi Akar said that there is certain progress in the discussion between Moscow, Ankara, Kiev and the UN on unblocking Ukrainian grain exports in the Black Sea, thanks to stakeholders having the will to resolve the crisis. 
Russian Foreign Minister Sergey Lavrov has stated that Moscow is ready to hold negotiations with counterparts from the UN, Turkey and Ukraine on grain deliveries.
 

 

RT.Com

June 08, 2022

Ukraine to halt coal and gas exports

The fuels will be needed in the country during the “most difficult winter,” President Zelensky says
 

Ukraine to halt coal and gas exports

© Getty Images / Bloomberg Creative Photos 

Ukraine will not be exporting gas and coal to other countries, President Volodymyr Zelensky said on Tuesday. He warned that the country is facing the “most difficult” winter since its independence 30 years ago, due to the ongoing military conflict with Russia.

........contd.

நிலைமை இன்னும் மோசமடையப்போகிறது.

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உக்ரேனிய துறைமுகங்களை மூடி வைத்திருப்பதே உலக தானிய நெருக்கடிக்கு காரணம்.

ரஸ்யா இந்த துறைமுகம்க்கள் மீது தாக்காமல் விட்டால், உக்ரேன் இந்த துறைமுகங்களை சுற்றி கடல்கண்ணிவெடிகளை புதைக்காமல் விட்டால் மட்டுமே இது சசாத்தியமாகும்.

அல்லது ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை.

இல்லாவிட்டால் மாறி மாறி சாட்டி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

உக்ரேனிய தானியங்கள் தரைமூலம் ஐரோப்பாவுக்கு கொண்டுவர வாய்பிருப்பதால் - ஆபிரிக்க, ஆசிய நாடுகளுக்குத்தான் இது பெரிய அடியாக இருக்க போகிறது.

உக்ரேனுக்கு எவ்வழியே நவீன ஆயுதங்கள் செல்கின்றனவோ அவ்வழியே தானியங்களையும் கொண்டு வரலாம் என்பது குமாரசாமியின் மாடல் கருத்து. :cool:

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Huge grain stockpile burned by Ukrainian nationalists – Moscow

Russia says a large granary in the port of Mariupol has been deliberately destroyed

Ukrainian troops set fire to tons of grain in the storages of the port of Mariupol. ©

Sputnik / RIA News 

The Russian Defense Ministry has accused Ukrainian “militants of the nationalist battalions”of deliberately setting fire to a large granary in Mariupol’s sea port while fleeing from Russian forces.

According to a statement, issued on Wednesday, the alleged act of arson was down to the unwillingness of the “militants” to leave grain supplies to Mariupol’s residents. As a result, according to the military, more than 50 thousand tons of grain were destroyed.

Edited by Kapithan
Link to comment
Share on other sites

கருங்கடலில் ஒடேசா துறைமுகம் அருகே உள்ள கண்ணி வெடிகளை  யூக்ரேன் அகற்ற வேண்டும். அப்போது தான் உணவு தானிய ஏற்றுமதி தொடரும்.----ரஸ்யா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு எவ்வழியே நவீன ஆயுதங்கள் செல்கின்றனவோ அவ்வழியே தானியங்களையும் கொண்டு வரலாம் என்பது குமாரசாமியின் மாடல் கருத்து. :cool:

நிச்சயமாக.

உங்கள் இந்த கொமெண்டுக்கு நகைப்புகுறி போட்டவர்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன் 🤣 - demand இருக்கும், விலை தரகூடிய இடத்துக்கு, பொருள் வெள்ளம் மேட்டில் இருந்து பள்ளத்துக்கு ஓடுவது போல் ஓடியே தீரும். இதுதான் சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை.

ஆயுதம் போகும் வழியில் உக்ரேனுக்கு மிஞ்சிய தானியம் ஐரொப்பாவிற்கு வரும் என்பது வெள்ளிடைமலை.

ஆனால் கருங்கடலில் இருந்து தானியம் போகாவிட்டால் - அதை ஜேர்மனிக்கு எடுப்பித்து, பின்னர் ஹம்பேர்க் ஊடாக தமக்கு எடுக்கும் கூலிச்சுமையை வறிய நாடுகள் தாங்குவது கடினம்.

இப்படி வறிய நாடுகள் வாங்காது போனால் - ஆபிரிக்காவில் தானிய பஞ்சம் வர, உக்ரேன், ஐரோப்பாவில் தானியம் தேங்குவதால் தானிய விலை குறையும் ஒரு முரண் நிலை கூட ஏற்படலாம்.

 

1 hour ago, nunavilan said:

கருங்கடலில் ஒடேசா துறைமுகம் அருகே உள்ள கண்ணி வெடிகளை  யூக்ரேன் அகற்ற வேண்டும். அப்போது தான் உணவு தானிய ஏற்றுமதி தொடரும்.----ரஸ்யா.

ஒடிசாவை கைப்பறும் இராணுவ முஸ்தீபுகளை ரஸ்யா கைவிட்டு, அந்த கடல் பிரதேசத்தில் இருந்து தன் கப்பல்களை விலக்கி கொள்ளல் வேண்டும். ஒடிசாவை தாக்கமாட்டோம் என ஒரு யுத்த சூனிய பகுதியை அறிவிக்க வேண்டும்.

அப்போ சர்வதேச மத்தியஸ்தில், பாதுகாப்போடு (துருக்கி நேவி) கண்ணிகள் அகற்றப்பட்டு கப்பல்கள் போய்வரலாம்.

ஆபிரிக்காவுக்கு வன்னியில் இருந்து முகமாலை ஊடாக உணவு போக வேண்டும் என வைப்போம். உணவு போக வேண்டும் என்பதற்காக முகமாலை முன்னரங்கில் கண்ணி வெடிகளை அகற்றி, தமது பாதுகாப்பை புலிகள் காள்விகுறியாக்க வேண்டும் என யாராவது கேட்டால் நாம் என்ன சொல்லி இருப்போம் ?

யுத்தம் எண்டு வந்தால் அவனவனுக்கு தன் பாதுகாப்புத்தான் பிரதானமாக இருக்கும்.

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இந்தச் செய்திகள் நிலைமையினை விரிவாக புரிந்துகொள்ள உதவும் என்கின்ற அடிப்படையில்  இங்கே  இணைக்கப்படுகிறது. Russia vs Ukraine  என்கின்ற வகையில் பார்க்க வேண்டியதில்லை 

Sputniknews.com

2022/06/08

Lavrov: Russia Ready for Talks With UN, Turkey, Ukraine on Grain Deliveries

3 hours ago
Earlier on Wednesday, Turkish Defence Minister Hulusi Akar said that there is certain progress in the discussion between Moscow, Ankara, Kiev and the UN on unblocking Ukrainian grain exports in the Black Sea, thanks to stakeholders having the will to resolve the crisis. 
Russian Foreign Minister Sergey Lavrov has stated that Moscow is ready to hold negotiations with counterparts from the UN, Turkey and Ukraine on grain deliveries.
 

 

RT.Com

June 08, 2022

Ukraine to halt coal and gas exports

The fuels will be needed in the country during the “most difficult winter,” President Zelensky says
 

Ukraine to halt coal and gas exports

© Getty Images / Bloomberg Creative Photos 

Ukraine will not be exporting gas and coal to other countries, President Volodymyr Zelensky said on Tuesday. He warned that the country is facing the “most difficult” winter since its independence 30 years ago, due to the ongoing military conflict with Russia.

........contd.

நிலைமை இன்னும் மோசமடையப்போகிறது.

 

8 hours ago, Kapithan said:

Huge grain stockpile burned by Ukrainian nationalists – Moscow

Russia says a large granary in the port of Mariupol has been deliberately destroyed

Ukrainian troops set fire to tons of grain in the storages of the port of Mariupol. ©

Sputnik / RIA News 

The Russian Defense Ministry has accused Ukrainian “militants of the nationalist battalions”of deliberately setting fire to a large granary in Mariupol’s sea port while fleeing from Russian forces.

According to a statement, issued on Wednesday, the alleged act of arson was down to the unwillingness of the “militants” to leave grain supplies to Mariupol’s residents. As a result, according to the military, more than 50 thousand tons of grain were destroyed.

இணைப்பதும், இணைக்காததும் உங்கள் இஸ்டம் கற்பிதன் ஆனால், என்னை பொறுத்தவரை Republican Party சம்பந்தமாக Fox செய்திகளை நம்புவதும், மேற்கின் நலன் சம்பந்தபட்டதில் பிபிசி, சி என் என்  எனபனவற்றை நம்புவதும், புலிகள் சம்பந்தமான விமர்சனம் யாழில் இருக்கும் என நம்புவதும், இலங்கை படைகளை லங்காபுவத் விமர்சிக்கும் என நம்புவதும், ஸ்புட்னிக், ஆர் டி யை ரஸ்யா விடயத்தில் நம்புவதும் ஒன்றுதான்.

Truth is the first casualty of war. 

இது இந்த யுத்தத்தில் இரு பகுதி சார்பு ஊடகங்களுக்கும் பொருந்தும். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு எவ்வழியே நவீன ஆயுதங்கள் செல்கின்றனவோ அவ்வழியே தானியங்களையும் கொண்டு வரலாம் என்பது குமாரசாமியின் மாடல் கருத்து. :cool:

தரமான கருத்து.

உக்கிரேன், இரஸ்சிய போர் ஆரம்பித்த போது உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்துவிடும் என்று இரஸ்சியா குற்றஞ்சாட்ட, உக்கிரேன் தன்னை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கவேண்டும் என கேட்டது.

மேற்கு நாடுகள் உக்கிரேனை நேட்டோவில் இணைத்திருந்தால் அப்போதே போர் முடிவுக்கு வந்திருக்கும், ஆனால்  மேற்கு திட்டவட்டமாகக்கூறிவிட்டது உக்கிரேனை நேட்டோவில் இணைப்பதில்லை என்று (ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்க மாட்டார்கள்).

இப்போது இரஸ்சியாவிற்கும் உக்கிரேனுக்கும் தெரியும் உக்கிரேனை மேற்கு நேட்டோவில் இணைக்காது என்று.

பின் எதனால் தொடர்ந்து இரஸ்சியா உக்கிரேனை தாக்குகிறது?

நேட்டோவில்தான் சேர முடியாது என தெரிந்த பின் சமாதானமாக உக்கிரேன் செல்லாமல், முன்பு போல் நேட்டோவில் தன்னை சேர்க்குமாறு கேளாமல், ஆயுதங்கள் தாருங்கள் சண்டை போட என ஏன் உக்கிரேன் வினவுகிறது?

இரஸ்சியா, உக்கிரேன் நோக்கம்தான் என்ன?

மேற்கு, உக்கிரேனை நேட்டோவில் இணைத்து ஒரு சிறிய முடிவின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்தானே? ஏன் அதனை செய்யாமல் போரை ஊக்கிவித்து, அழிவுக்கு வழிகோள்கிறது?

Edited by vasee
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

இணைப்பதும், இணைக்காததும் உங்கள் இஸ்டம் கற்பிதன் ஆனால், என்னை பொறுத்தவரை Republican Party சம்பந்தமாக Fox செய்திகளை நம்புவதும், மேற்கின் நலன் சம்பந்தபட்டதில் பிபிசி, சி என் என்  எனபனவற்றை நம்புவதும், புலிகள் சம்பந்தமான விமர்சனம் யாழில் இருக்கும் என நம்புவதும், இலங்கை படைகளை லங்காபுவத் விமர்சிக்கும் என நம்புவதும், ஸ்புட்னிக், ஆர் டி யை ரஸ்யா விடயத்தில் நம்புவதும் ஒன்றுதான்.

Truth is the first casualty of war. 

இது இந்த யுத்தத்தில் இரு பகுதி சார்பு ஊடகங்களுக்கும் பொருந்தும். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் 

இந்தச் செய்திகள் நிலைமையினை விரிவாக புரிந்துகொள்ள உதவும் என்கின்ற அடிப்படையில்  இங்கே  இணைக்கப்படுகிறது. Russia vs Ukraine  என்கின்ற வகையில் பார்க்க வேண்டியதில்லை 

என ஆரம்பத்திலே பதிவிட்டிருந்தேன்.

யாழ் களத்தில் மிகப் பெரும்பாலும் ஒரு பக்கச் சார்பான செய்திகள் மட்டுமே  இணைக்கப்பட்டு வருகின்றன. எனது ஒரே நோக்கம் யாழ் களத்தினருக்கு பல பக்க செய்திகளும் சேர வேண்டும்  என்பதே. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

தரமான கருத்து.

உக்கிரேன், இரஸ்சிய போர் ஆரம்பித்த போது உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்துவிடும் என்று இரஸ்சியா குற்றஞ்சாட்ட, உக்கிரேன் தன்னை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கவேண்டும் என கேட்டது.

மேற்கு நாடுகள் உக்கிரேனை நேட்டோவில் இணைத்திருந்தால் அப்போதே போர் முடிவுக்கு வந்திருக்கும், ஆனால்  மேற்கு திட்டவட்டமாகக்கூறிவிட்டது உக்கிரேனை நேட்டோவில் இணைப்பதில்லை என்று (ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்க மாட்டார்கள்).

இப்போது இரஸ்சியாவிற்கும் உக்கிரேனுக்கும் தெரியும் உக்கிரேனை மேற்கு நேட்டோவில் இணைக்காது என்று.

பின் எதனால் தொடர்ந்து இரஸ்சியா உக்கிரேனை தாக்குகிறது?

நேட்டோவில்தான் சேர முடியாது என தெரிந்த பின் சமாதானமாக உக்கிரேன் செல்லாமல், முன்பு போல் நேட்டோவில் தன்னை சேர்க்குமாறு கேளாமல், ஆயுதங்கள் தாருங்கள் சண்டை போட என ஏன் உக்கிரேன் வினவுகிறது?

இரஸ்சியா, உக்கிரேன் நோக்கம்தான் என்ன?

மேற்கு, உக்கிரேனை நேட்டோவில் இணைத்து ஒரு சிறிய முடிவின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்தானே? ஏன் அதனை செய்யாமல் போரை ஊக்கிவித்து, அழிவுக்கு வழிகோள்கிறது?

அயலவர்கள் அடிபடும்போது சமரச் செய்யாமல், ( ஒருவனுக்குச் சார்பாக)தானும் சண்டை பிடிக்காமல், ஒரு அயலவனுக்கு மட்டும் தடி எடுத்துக் கொடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும் ? 

ஒரு அயலவன் நன்றாக அடி வேண்டிச் சாக வேண்டும் (பழைய கோபம்). மற்றவன் சிறைக்குப் போனாலும்( தடி எடுத்துக் கொடுப்பவனுக்கு) எந்த அக்கறையும் இல்லை என்பதாகத்தானே   இருக்க முடியும். 

 

Link to comment
Share on other sites

45 minutes ago, vasee said:

உக்கிரேன், இரஸ்சிய போர் ஆரம்பித்த போது உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்துவிடும் என்று இரஸ்சியா குற்றஞ்சாட்ட, உக்கிரேன் தன்னை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கவேண்டும் என கேட்டது.

ரஸ்யாவை பலவீனமாக்க வேண்டும். அதற்கு நேரடியாக மோதாமல் யூக்ரேனை வைத்து அடிப்பிக்கிறது நேட்டோ. சீனாவுக்கு பாடம் படிப்பிக்க அவரது நண்பரான ரஸ்யாவை பலவீனமாக்க வேண்டும். பின்னர் சீனாவை தாக்குவது சுலபம் என்பதே அமெரிக்காவின் திட்டம். திட்டம் அரைக்கிணறு தாண்டி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.aninews.in/news/world/europe/ukrainian-troops-set-tonnes-of-wheat-corn-on-fire-when-leaving-mariupol-dpr20220606114640/

 

மரியபோலை விட்டு வெளியேறும் போது  யூக்ரேனிய படை தொன் கணக்கிலான கோதுமை, சோழத்தினை தீயிட்டு கொழுத்தினர். டொன்பாசில் உள்ள ரஸ்யர்களுக்கு சேரக்கூடாது என்ற கெட்ட எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, vasee said:

மேற்கு நாடுகள் உக்கிரேனை நேட்டோவில் இணைத்திருந்தால் அப்போதே போர் முடிவுக்கு வந்திருக்கும்,

இது ஒரு போதும் நடவாது. இதை கணிக்க தவறியதுதான் புட்டின் விட்ட மிக பெரும் பிழை.

அல்லது நேட்டோவில் ஒரு போதும் உக்ரேன் சேர்க்கப்படாது என தெரிந்து கொண்டே, அதை ஒரு சாட்டாக கொண்டு புட்டின் போரை தொடங்கி உள்ளார்.

போர் தொடங்க முன்பே நேட்டோவில் சேர சில வருடங்களுக்கு முன் உக்ரேன் போட்ட விண்ணப்பம் நிராகரிக்கபட்டுள்ளது.

ஒரு நாடு நேட்டோ அங்கத்தவராக ஒவ்வொரு நாட்டின் பாராளுமன்றமும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். 

உக்ரேனுக்காக தமது வீரர்களை சாக கொடுக்க யூகே, ஜேர்மனி, குறிப்பாக துருக்கி, ஹங்கேரி விடாது.

அதுவும் கூட, உக்ரேன் அங்கத்துவ விண்ணப்பத்தை போடும் வரை ஏன் புட்டின் பொறுக்கவில்லை?

இப்போ பின்லாந்து, சுபீடன் போட்ட பின் கூட சும்மா இருக்க நிர்பந்திக்க பட்டுள்ள புட்டின், ஏன் உக்ரேன் விண்ணப்பம் போடும் வரைக்குமாவது பொறுக்கவில்லை?

1 hour ago, vasee said:

இப்போது இரஸ்சியாவிற்கும் உக்கிரேனுக்கும் தெரியும் உக்கிரேனை மேற்கு நேட்டோவில் இணைக்காது என்று.

பின் எதனால் தொடர்ந்து இரஸ்சியா உக்கிரேனை தாக்குகிறது?

 

மிக சரியான கேள்வி. போரை தொடங்க புட்டின் சொன்னது இரெண்டு காரணம்தான்.

1. உக்ரேன் நேட்டோவில் சேரல்

2. மரியோபோலில் இருக்கும் அச்சோவ் பிரிகேட் போல நாசிகள் உக்ரேனில் உள்ளார்கள்.

நேட்டோவில் சேராது என உக்ரேன் சொல்லி விட்டது. ஆடிப் பிரிகேட் அழிக்கப்பட்டு, சரணடைந்து விட்டது. 

ஆகவே இனியும் உக்ரேனில் ரஸ்யபடைகளை வைத்திருக்காது, ரஸ்ய 2022 பெப்ரவரி எல்லைக்கு நகர்த்தினால் - நாளைக்கே போர் நிண்டு விடுமே?

இதை தடுப்பது என்ன? 

ரஸ்யா ஆரம்பத்தில் சொன்ன காரணங்கள் இப்போ இல்லை எனும் போது, அமெரிக்கா, செவ்வாஉ கிரகம் என யாரையும் குற்றம் சொல்லாமல் - போரை முடிவுக்கு கொண்டு வர ரஸ்யாவால் முடியும்.

ஆனால் செய்ய வில்லை.

ஏன்?

காரணம் மேலே சொன்னவை அல்ல ரஸ்யா போரை தொடங்க காரணங்கள்.

புட்டின் என்ற தனி மனிதனின் ஈகோ, ரஸ்யா 1990 இல் இழந்த ஆளுமையை மீட்டல், மீளவும் ஐரோப்பாவில் ஒரு ரஸ்ய-நோக்கு சுற்றை உருவாக்கல், நேட்டோவின்/அமெரிகாவின் ஆளுமையை ஐரோப்பாவில் தடுத்தல் - ஐரோப்பாவில் மிகுதி நாடுகள் எல்லாம் மதிக்கும்/பயப்படும் சக்தியாக ரஸ்யாவை ஆக்கல்.

இந்த நீண்ட கால நோக்கோடு முழு உக்ரேனையிம் பிடிப்பதுதான் ரஸ்யாவின் திட்டம்.

ஆகவேதான் படைகள் வடக்கே இருந்து கீவ் நோக்கி நகர்ந்தன. இதை உணர்ந்து கொண்டு (ஆட்சியும் வேறு என்பதால்) - சிரியா, லிபியா, ஒசேசியா, கிரிமியாவில் இருந்ததை போல, இருக்காமல் அமெரிக்கா முழு மூச்சாக இந்த முறை இறங்கியது.

இங்கே நடப்பது அடுத்த சில பத்து வருடங்களுக்கான உலக ஒழுங்கு பற்றிய சண்டை.

ஆகவேதான் சில நிலைகளை எட்டும் வரை ரஸ்யாவும் நிப்பாட்டாது, மேற்கும் சப்ளையை நிப்பாட்டாது.

48 minutes ago, Kapithan said:

யாழ் களத்தில் மிகப் பெரும்பாலும் ஒரு பக்கச் சார்பான செய்திகள் மட்டுமே  இணைக்கப்பட்டு வருகின்றன. எனது ஒரே நோக்கம் யாழ் களத்தினருக்கு பல பக்க செய்திகளும் சேர வேண்டும்  என்பதே. 

தனிப்பட்டு நான் யாழ் களத்தில் இந்த போர் பற்றிய செய்திகளை இணைப்பதில்லை. 

ஆனால் - ஒரு பக்க பிரச்சாரத்தை இணைப்பதால், மற்ற பக்க பிரச்சாரத்தையும் இணைக்கிறேன் - இரெண்டு பொய்யையும் வாசித்து மக்கள் உண்மையை அறியட்டும் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் நீங்கள் பார்க்க வேண்டும். 

என்னதான் ஒரு அஜண்டாவோடு இயங்கும் தளம் எண்டாலும் யாழுக்கும், இலங்கை ஆமியின் வெப்சைட்டிற்கும் ஒரு வித்தியாசம் நம்பகதன்மையில் இருக்கிறது.

அதே போல் ஒரு வித்தியாசம் பி பி சி/ சி என் என் ற்கும் ஸ்புட்னிக், ஆர் டி க்கும் இருப்பதாக நான் கருதுகிறேன்.

வேணும் எண்டால் ஆர் டி, ஸ்புட்னிக்கை ரூபர்ட் மேர்டொக்கின் டீவி, பத்திரிகைகளுடன் ஒப்பிடலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இது ஒரு போதும் நடவாது. இதை கணிக்க தவறியதுதான் புட்டின் விட்ட மிக பெரும் பிழை.

அல்லது நேட்டோவில் ஒரு போதும் உக்ரேன் சேர்க்கப்படாது என தெரிந்து கொண்டே, அதை ஒரு சாட்டாக கொண்டு புட்டின் போரை தொடங்கி உள்ளார்.

போர் தொடங்க முன்பே நேட்டோவில் சேர சில வருடங்களுக்கு முன் உக்ரேன் போட்ட விண்ணப்பம் நிராகரிக்கபட்டுள்ளது.

ஒரு நாடு நேட்டோ அங்கத்தவராக ஒவ்வொரு நாட்டின் பாராளுமன்றமும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். 

உக்ரேனுக்காக தமது வீரர்களை சாக கொடுக்க யூகே, ஜேர்மனி, குறிப்பாக துருக்கி, ஹங்கேரி விடாது.

அதுவும் கூட, உக்ரேன் அங்கத்துவ விண்ணப்பத்தை போடும் வரை ஏன் புட்டின் பொறுக்கவில்லை?

இப்போ பின்லாந்து, சுபீடன் போட்ட பின் கூட சும்மா இருக்க நிர்பந்திக்க பட்டுள்ள புட்டின், ஏன் உக்ரேன் விண்ணப்பம் போடும் வரைக்குமாவது பொறுக்கவில்லை?

மிக சரியான கேள்வி. போரை தொடங்க புட்டின் சொன்னது இரெண்டு காரணம்தான்.

1. உக்ரேன் நேட்டோவில் சேரல்

2. மரியோபோலில் இருக்கும் அச்சோவ் பிரிகேட் போல நாசிகள் உக்ரேனில் உள்ளார்கள்.

நேட்டோவில் சேராது என உக்ரேன் சொல்லி விட்டது. ஆடிப் பிரிகேட் அழிக்கப்பட்டு, சரணடைந்து விட்டது. 

ஆகவே இனியும் உக்ரேனில் ரஸ்யபடைகளை வைத்திருக்காது, ரஸ்ய 2022 பெப்ரவரி எல்லைக்கு நகர்த்தினால் - நாளைக்கே போர் நிண்டு விடுமே?

இதை தடுப்பது என்ன? 

ரஸ்யா ஆரம்பத்தில் சொன்ன காரணங்கள் இப்போ இல்லை எனும் போது, அமெரிக்கா, செவ்வாஉ கிரகம் என யாரையும் குற்றம் சொல்லாமல் - போரை முடிவுக்கு கொண்டு வர ரஸ்யாவால் முடியும்.

ஆனால் செய்ய வில்லை.

ஏன்?

காரணம் மேலே சொன்னவை அல்ல ரஸ்யா போரை தொடங்க காரணங்கள்.

புட்டின் என்ற தனி மனிதனின் ஈகோ, ரஸ்யா 1990 இல் இழந்த ஆளுமையை மீட்டல், மீளவும் ஐரோப்பாவில் ஒரு ரஸ்ய-நோக்கு சுற்றை உருவாக்கல், நேட்டோவின்/அமெரிகாவின் ஆளுமையை ஐரோப்பாவில் தடுத்தல் - ஐரோப்பாவில் மிகுதி நாடுகள் எல்லாம் மதிக்கும்/பயப்படும் சக்தியாக ரஸ்யாவை ஆக்கல்.

இந்த நீண்ட கால நோக்கோடு முழு உக்ரேனையிம் பிடிப்பதுதான் ரஸ்யாவின் திட்டம்.

ஆகவேதான் படைகள் வடக்கே இருந்து கீவ் நோக்கி நகர்ந்தன. இதை உணர்ந்து கொண்டு (ஆட்சியும் வேறு என்பதால்) - சிரியா, லிபியா, ஒசேசியா, கிரிமியாவில் இருந்ததை போல, இருக்காமல் அமெரிக்கா முழு மூச்சாக இந்த முறை இறங்கியது.

இங்கே நடப்பது அடுத்த சில பத்து வருடங்களுக்கான உலக ஒழுங்கு பற்றிய சண்டை.

ஆகவேதான் சில நிலைகளை எட்டும் வரை ரஸ்யாவும் நிப்பாட்டாது, மேற்கும் சப்ளையை நிப்பாட்டாது.

தனிப்பட்டு நான் யாழ் களத்தில் இந்த போர் பற்றிய செய்திகளை இணைப்பதில்லை. 

ஆனால் - ஒரு பக்க பிரச்சாரத்தை இணைப்பதால், மற்ற பக்க பிரச்சாரத்தையும் இணைக்கிறேன் - இரெண்டு பொய்யையும் வாசித்து மக்கள் உண்மையை அறியட்டும் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.

2014 ல் இருந்து அமெரிக்கா யூக்ரேனிய படையினருக்கு ஏன் பயிற்சி அளித்தார்கள்?? 

Quote

ஆனால் - ஒரு பக்க பிரச்சாரத்தை இணைப்பதால், மற்ற பக்க பிரச்சாரத்தையும் இணைக்கிறேன் - இரெண்டு பொய்யையும் வாசித்து மக்கள் உண்மையை அறியட்டும் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.

நாலு செய்தியை வாசித்தால் தான் உண்மை தெரிய வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

ரஸ்யாவை பலவீனமாக்க வேண்டும். அதற்கு நேரடியாக மோதாமல் யூக்ரேனை வைத்து அடிப்பிக்கிறது நேட்டோ. சீனாவுக்கு பாடம் படிப்பிக்க அவரது நண்பரான ரஸ்யாவை பலவீனமாக்க வேண்டும். பின்னர் சீனாவை தாக்குவது சுலபம் என்பதே அமெரிக்காவின் திட்டம். திட்டம் அரைக்கிணறு தாண்டி உள்ளது.

நிச்சயமாக. 

அமெரிக்கா இன்று ஒற்றை உலக சக்தியாக இருக்கிறது என்றால் அது சும்மா இருக்க கடவுள் கொடுத்ததல்ல. இதன் பின்னால் பல போர்கள், இராதப்திரங்கள், கழுத்தறுப்புகள் எல்லாம் இருக்கிறது.

அமெரிக்கா மட்டும் அல்ல, உலகை கட்டி ஆண்ட, அல்லது ஆள முயன்ற எல்லா சாம்ராஜ்யங்ஜளும், அவர்ற்றிக்கு போட்டியாக வந்த நாடுகளும் காலாகாலமாக செய்வதுதான் இது.

8 minutes ago, kalyani said:

2014 ல் இருந்து அமெரிக்கா யூக்ரேனிய படையினருக்கு ஏன் பயிற்சி அளித்தார்கள்?? 

க்ரிமியாவை ரஸ்யா பிட்த்தபோதே அடுத்த நகர்வுகளை அமெரிகா யோசிக்க தொடங்கி இருக்கும்.

ஆனால் பயிற்சி இந்தியா, ஜப்பான், இலங்கைக்கும் கூடத்தான் கொடுக்கிறார்கள். அதை வைத்து நேட்டோவில் சேர்ந்திருக்கும் என கூற முடியாது. ஆனால் கிரைமியாவின் பின், உக்ரேனின் மீதான அமெரிக்க பார்வை திரும்பியது எதிர்பார்க்க கூடியதுதான்.

19 minutes ago, kalyani said:

 

 

மரியபோலை விட்டு வெளியேறும் போது  யூக்ரேனிய படை தொன் கணக்கிலான கோதுமை, சோழத்தினை தீயிட்டு கொழுத்தினர். டொன்பாசில் உள்ள ரஸ்யர்களுக்கு சேரக்கூடாது என்ற கெட்ட எண்ணம்.

யாழ் இடப்பெயர்வின் போது தம் வசம் இருந்த கொண்டு செல்ல முடியாத பொருளாதார வளங்களை, உணவை எல்லாம் புலிகளும் மக்களும் “பாவம் ஆமிக்காரர் பசிச்சால் சாப்பிடட்டுடும்” என்ற நல்லெண்ணத்தில் அப்படியே விட்டு போயிருப்பார்கள் என்றா எண்ணுகிறீர்கள்?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் போரால் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்: உலக வர்த்தக அமைப்பு எச்சரிக்கை

  • டாம் எஸ்பினெர்
  • வணிக செய்தியாளர், பிபிசி செய்திகள்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

உணவு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேன் போரால் தொடங்கிய உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என, உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கோதுமை மற்றும் உரங்கள் பற்றாக்குறையால் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என, உலக வர்த்தக அமைப்பு தலைமை இயக்குனர் எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா பிபிசியிடம் தெரிவித்தார்.

லட்சக்கணக்கிலான டன்கள் அளவுக்கு தானியங்கள் சேமிப்புக் கிடங்களில் கிடத்தப்பட்டுள்ளன. அவை போர் காரணமாக யுக்ரேன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தானியங்களின் விலை உயர்வது "உண்மையில் வேதனைக்குரியது" என அவர் தெரிவித்தார்.

கோதுமை விலை உயர்வு

உலகளவில் கோதுமையை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக யுக்ரேன் உள்ளது. உலக சந்தையில் யுக்ரேனின் கோதுமை ஏற்றுமதி 9 சதவீதமாக உள்ளது. மேலும் அந்நாட்டின் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி 42 சதவீதம் என்ற அளவிலும் சோளம் ஏற்றுமதி 16% என்ற அளவிலும் இருக்கிறது.

தானிய விலைகள் உலக அளவில் உயர்ந்துவரும் நிலையில், கருங்கடல் துறைமுகங்களில் ரஷ்ய தடையாலும், கடற்கரையில் ரஷ்ய, யுக்ரேனிய கண்ணிவெடிகளாலும் யுக்ரேனில் 20 முதல் 25 மில்லியன் டன் கோதுமையை வெளியே அனுப்பமுடியாத நிலை உருவாகியுள்ளது.

 

கோதுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோதுமை விலை 59 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், சூரியகாந்தி எண்ணெய் விலை 30 சதவீதம், சோளத்தின் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஒகொன்ஜோ-இவேலா தெரிவித்தார்.

ஒடேசா மற்றும் மற்ற யுக்ரேனிய துறைமுகங்களிலிருந்து வெளியேறும் டேங்கர்களுக்காக, துருக்கிய கடற்படை துணையுடன் "தானிய வழித்தடத்தை' அமைப்பதற்கான முயற்சிகளை ஐ.நா மேற்கொண்டு வருகிறது.

ஆனால், கருங்கடலில் உள்ள யுக்ரேனிய துறைமுகங்களில் உள்ள கண்ணிவெடிகளை அந்நாடு அகற்ற வேண்டும் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

"யுக்ரேனிய துறைமுகங்களிலிருந்து வெளியேறி துருக்கிக்கு செல்லும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என, தினமும் கூறுகிறோம். துருக்கியின் ஒத்துழைப்புடன் இதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என, அவர் புதன்கிழமை தெரிவித்தார்.

இதனிடையே, கப்பல்களை அனுப்புவதற்கு முன்னர் "பயனுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள்" தங்களுக்கு தேவை என யுக்ரேன் தெரிவித்துள்ளது. கடலிலிருந்து ஒடேசாவைத் தாக்குவதற்கு அவ்வழித்தடத்தை ரஷ்யா பயன்படுத்தலாம் என யுக்ரேன் குரல் எழுப்பியுள்ளது.

பகுப்பாய்வு - தர்ஷினி டேவிட், உலக வர்த்தக செய்தியாளர்

400 மில்லியன் பேருக்கு உணவளிக்கும் வகையில் யுக்ரேன் தானியங்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், துறைமுகங்களுக்கான தடை காரணமாக அவற்றின் ஏற்றுமதியை வெகுவாக குறைத்திருப்பதாக ரஷ்யா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா இந்த பற்றாக்குறையை உணர்வதாக உள்ளன.

லிபியா, எரித்ரியா ஆகிய நாடுகள் 40% கோதுமையையும் லெபனான் 60% கோதுமையையும் யுக்ரேனிடமிருந்து பெறுகின்றன.

ஆனால், இந்த பற்றாக்குறையின் வலி உலகம் முழுவதும் உணரக்கூடியதாக உள்ளது. ரஷ்ய படையெடுப்புக்குப் பின் கோதுமை விலை மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளது.

இதனை உடனடியாக சரிசெய்ய முடியாது. வழித்தடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் போதுமான கப்பல்கள் இருந்தாலும், அவை பாதுகாப்பாக வெளியேற கருங்கடலில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். இதுவொரு கடினமான வழிமுறையாகும்.

லட்சக்கணக்கிலான மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக ஏற்கெனவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உலகத்தின் சில பகுதிகளில் சமூக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வழித்தடத்தை அமைக்க முடியாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டமாக இது இருக்கிறது. பசி வேதனைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்கள் நீண்டகால பொருளாதார, சமூக நெருக்கடியாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா

 

படக்குறிப்பு,

எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா

யுக்ரேனிலிருந்து ரயில்கள் மற்றும் டிரக்குகள் மூலமாக வெறும் 20 லட்சம் டன் தானியங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, ஒகொன்ஜோ-இவேலா தெரிவித்துள்ளார். இந்த பிரச்னைக்கு "விடை தேடுவது மிகவும் முக்கியமானது" என அவர் தெரிவித்தார்.

ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக கூறினார்.

"இதுதொடர்பாக ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட முடியுமா என்பது குறித்து ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற நீண்ட நேரத்தை அவர் செலவிட்டார்," என அவர் கூறினார்.

இது தொடர்பாக ஒப்பந்தம் ஏதும் உருவாகாவிட்டால், "உலக அளவில் பயங்கரமான சூழலாக இது மாறும்," என அவர் தெரிவித்தார்.

கருங்கடல் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்காவில் உள்ள 35 நாடுகள் உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதாகவும் 22 நாடுகள் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அவர் கூறினார்.

"இது என்ன மாதிரியான பெரிய தாக்கங்களை, குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் ஏற்படுத்தும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்" என அவர் தெரிவித்தார். "அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாம் மோசமான உணவு நெருக்கடிக்குள் செல்ல மாட்டோம் என நான் நம்புகிறேன்" என அவர் கூறினார்.

தற்போது அந்த பிராந்தியத்திலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட முடியாது என தெரிவித்த அவர், ஜூலை மாதத்தில் அறுவடை காலம் வருவதாக தெரிவித்தார். "இதனால் ஏற்கெனவே வீணான உணவுப்பொருட்களை ஒத்த அளவுக்கு தானியங்கள் வீணாகிவிடும், எனவே அடுத்த ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு இந்நிலைமை நீடிக்கலாம். இது உலகின் சில பகுதிகளுக்கு உண்மையில் பேரழிவை ஏற்படுத்தும்" என்றார் அவர்.

கொரோனா தொற்று, தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவையும் விநியோக சங்கிலி இடையூறுகளை மோசமாக்குகின்றன என்றார்.

மேலும் உணவுப்பொருட்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அவர் உலக நாடுகளின் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.

https://www.bbc.com/tamil/global-61741532

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இது ஒரு போதும் நடவாது. இதை கணிக்க தவறியதுதான் புட்டின் விட்ட மிக பெரும் பிழை.

அல்லது நேட்டோவில் ஒரு போதும் உக்ரேன் சேர்க்கப்படாது என தெரிந்து கொண்டே, அதை ஒரு சாட்டாக கொண்டு புட்டின் போரை தொடங்கி உள்ளார்.

போர் தொடங்க முன்பே நேட்டோவில் சேர சில வருடங்களுக்கு முன் உக்ரேன் போட்ட விண்ணப்பம் நிராகரிக்கபட்டுள்ளது.

ஒரு நாடு நேட்டோ அங்கத்தவராக ஒவ்வொரு நாட்டின் பாராளுமன்றமும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். 

உக்ரேனுக்காக தமது வீரர்களை சாக கொடுக்க யூகே, ஜேர்மனி, குறிப்பாக துருக்கி, ஹங்கேரி விடாது.

அதுவும் கூட, உக்ரேன் அங்கத்துவ விண்ணப்பத்தை போடும் வரை ஏன் புட்டின் பொறுக்கவில்லை?

இப்போ பின்லாந்து, சுபீடன் போட்ட பின் கூட சும்மா இருக்க நிர்பந்திக்க பட்டுள்ள புட்டின், ஏன் உக்ரேன் விண்ணப்பம் போடும் வரைக்குமாவது பொறுக்கவில்லை?

மிக சரியான கேள்வி. போரை தொடங்க புட்டின் சொன்னது இரெண்டு காரணம்தான்.

1. உக்ரேன் நேட்டோவில் சேரல்

2. மரியோபோலில் இருக்கும் அச்சோவ் பிரிகேட் போல நாசிகள் உக்ரேனில் உள்ளார்கள்.

நேட்டோவில் சேராது என உக்ரேன் சொல்லி விட்டது. ஆடிப் பிரிகேட் அழிக்கப்பட்டு, சரணடைந்து விட்டது. 

ஆகவே இனியும் உக்ரேனில் ரஸ்யபடைகளை வைத்திருக்காது, ரஸ்ய 2022 பெப்ரவரி எல்லைக்கு நகர்த்தினால் - நாளைக்கே போர் நிண்டு விடுமே?

இதை தடுப்பது என்ன? 

ரஸ்யா ஆரம்பத்தில் சொன்ன காரணங்கள் இப்போ இல்லை எனும் போது, அமெரிக்கா, செவ்வாஉ கிரகம் என யாரையும் குற்றம் சொல்லாமல் - போரை முடிவுக்கு கொண்டு வர ரஸ்யாவால் முடியும்.

ஆனால் செய்ய வில்லை.

ஏன்?

காரணம் மேலே சொன்னவை அல்ல ரஸ்யா போரை தொடங்க காரணங்கள்.

புட்டின் என்ற தனி மனிதனின் ஈகோ, ரஸ்யா 1990 இல் இழந்த ஆளுமையை மீட்டல், மீளவும் ஐரோப்பாவில் ஒரு ரஸ்ய-நோக்கு சுற்றை உருவாக்கல், நேட்டோவின்/அமெரிகாவின் ஆளுமையை ஐரோப்பாவில் தடுத்தல் - ஐரோப்பாவில் மிகுதி நாடுகள் எல்லாம் மதிக்கும்/பயப்படும் சக்தியாக ரஸ்யாவை ஆக்கல்.

இந்த நீண்ட கால நோக்கோடு முழு உக்ரேனையிம் பிடிப்பதுதான் ரஸ்யாவின் திட்டம்.

ஆகவேதான் படைகள் வடக்கே இருந்து கீவ் நோக்கி நகர்ந்தன. இதை உணர்ந்து கொண்டு (ஆட்சியும் வேறு என்பதால்) - சிரியா, லிபியா, ஒசேசியா, கிரிமியாவில் இருந்ததை போல, இருக்காமல் அமெரிக்கா முழு மூச்சாக இந்த முறை இறங்கியது.

இங்கே நடப்பது அடுத்த சில பத்து வருடங்களுக்கான உலக ஒழுங்கு பற்றிய சண்டை.

ஆகவேதான் சில நிலைகளை எட்டும் வரை ரஸ்யாவும் நிப்பாட்டாது, மேற்கும் சப்ளையை நிப்பாட்டாது.

தனிப்பட்டு நான் யாழ் களத்தில் இந்த போர் பற்றிய செய்திகளை இணைப்பதில்லை. 

ஆனால் - ஒரு பக்க பிரச்சாரத்தை இணைப்பதால், மற்ற பக்க பிரச்சாரத்தையும் இணைக்கிறேன் - இரெண்டு பொய்யையும் வாசித்து மக்கள் உண்மையை அறியட்டும் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.

நீங்கள் சொன்ன காரணங்கள் எல்லாம் சரிதான், இந்த போரில் அமெரிக்காவுக்கு நட்டமும் உண்டு அதனை விட இலாபமும் உண்டு, அதே போல் இரஸ்சியாவின் நிலையும் அதேதான், ஆனால் உக்கிரேனுக்கு இந்த போரால் நட்டம் மட்டுமே உள்ளது, ஆனாலும் இராஜதந்திர ரீதியாக இலங்கையில் ஜெயவர்த்தனா இந்தியாவின் பல்லை பிடுங்கி கிளிப் போட்டு, இன்றுவரை டிசைன் டிசைனா அட்ஜஸ்ட் செய்வது போல உக்கிரானால் ஏன் இரஸ்சியாவிற்கு செய்ய முடியவில்லை?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

நீங்கள் சொன்ன காரணங்கள் எல்லாம் சரிதான், இந்த போரில் அமெரிக்காவுக்கு நட்டமும் உண்டு அதனை விட இலாபமும் உண்டு, அதே போல் இரஸ்சியாவின் நிலையும் அதேதான், ஆனால் உக்கிரேனுக்கு இந்த போரால் நட்டம் மட்டுமே உள்ளது, ஆனாலும் இராஜதந்திர ரீதியாக இலங்கையில் ஜெயவர்த்தனா இந்தியாவின் பல்லை பிடுங்கி கிளிப் போட்டு, இன்றுவரை டிசைன் டிசைனா அட்ஜஸ்ட் செய்வது போல உக்கிரானால் ஏன் இரஸ்சியாவிற்கு செய்ய முடியவில்லை?.

இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது இந்தப் போர் நிச்சயம் இடம்பெற்றே இருக்கும். ஆனால் இங்கே ரஸ்யா முந்திக்கொண்டுவிட்டத. அதுதான் பலருக்குக் கடுப்பு. 

😀

9 Jun, 2022 09:59 
 

UN warns of global food ‘catastrophe’

Millions of people could go hungry if grain exports from Russia and Ukraine decline further, according to the United Nations
 

UN warns of global food ‘catastrophe’

© Getty Images / Revolu7ion93

Up to 181 million people in 41 countries could be hit by severe food shortages this year due to the conflict in Ukraine and its impact on grain and fertilizer exports, according to a UN report.

“Food should never be a luxury; it is a fundamental human right. And yet, this crisis may rapidly turn into a food catastrophe of global proportions,” the Crisis Response Group on Food, Energy and Finance report released on Wednesday warned.

RT. Com 2022/06/09

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.