Jump to content

உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக உணவு மொத்த உற்பத்தியில் ஒரு வீதத்தைத்தான் உக்ரேன் உற்பத்தி செய்வதாகவும், மேற்குநாடுகள்தான் உலக உணவு நெருக்கடி என்கின்ற விடயத்தை உருவாக்கி ஊதிப் பெருப்பிப்பதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் துருக்கியில் வைத்து கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

ஆனால் உக்கிரேனுக்கு இந்த போரால் நட்டம் மட்டுமே உள்ளது, ஆனாலும் இராஜதந்திர ரீதியாக இலங்கையில் ஜெயவர்த்தனா இந்தியாவின் பல்லை பிடுங்கி கிளிப் போட்டு, இன்றுவரை டிசைன் டிசைனா அட்ஜஸ்ட் செய்வது போல உக்கிரானால் ஏன் இரஸ்சியாவிற்கு செய்ய முடியவில்லை?.

உக்ரேனின் அதிபர் செலன்ஸ்கி மட்டும் அல்லாது, உக்ரேனியர்களில் பலர் ரஸ்யாவுடன் நெகிழ்வு போக்கை எடுக்க இயலாதவர்களாகவே தென்படுகிறார்கள்.

பிட்டினை போலவே அல்லது அதை விட தெளிவாக செலன்ஸிக்கும் நேட்டோவில் சேர்க்க மாட்டார்கள் என்பது தெரிந்திருக்கும். நேட்டோவில் சேர்ப்போம் என யாரும் அவருக்கு உறுதி கொடுக்கவில்லை. அது மட்டும் இல்லாது, சாதாராணமாக எமக்கெந் தெரியும் விடயம், துருக்கி, ஹங்கேரியில் இருக்கும் அரசுகள் மாறும் வரையாவது நேட்டோவில் சேர்வது நடக்காது என்பது.

அப்படி இருக்க, போர் தொடங்கி சில மாதங்களில் கைவிட்ட நேட்டோ கோரிக்கையை, தொடங்க முன்னமே கைவிட்டிருக்கலாம்.

அதே போல இப்போ ஒரு இஞ்சியை தானும்  விட்டுக்கொடோம் என்ற வீராப்பும் கூட கனகாலம் நிலைக்க போவதில்லை.

மேற்கின் ஆதரவை திரட்டியதில் செலன்ஸ்கி கணிசமான வெற்றியை அடைந்திருந்தாலும், கடைசியில் டொன்பாசை இழத்தல் என்பதுடந்தான் இந்த போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன்.

செலன்ஸ்கியின் அணுகுகுமுறை என நான் நினைப்பது.

1. செலனஸ்கி அவரை ஔ சூழ உள்ளவர்கள் தீவிர உக்கேனிய தூய்மை வாதிகள்.

2. அவர்களை பொறுத்த மட்டில் - உக்ரேனின் ethnic Ukrainians இருக்கும் பகுதிகளை, ஒட்டு மொத்தமாக, தனியே எடுத்து - அதை லத்வியா, பல்கேரியா போல ஒரு ஈயு, நேட்டோ நாடாக விரும்புகிறார்கள். ரஸ்ய மொழி பேசும் மக்களை, முடிந்தால் உக்ரேனிய மயப்படுத்துவது, இல்லை என்றால், முடிந்தளவு நில இழப்புடன் ரஸ்யாவிடம் சேர விடுவது.

3. யுத்தம் தொடங்க முதலே உக்ரேனை முழுதாக ரஸ்ய மயப்படுத்தும் வேலை திட்டங்கள் தொடங்கி இருந்ததையும் அறிந்திருப்பீர்கள். இப்போ அதே நோக்கை, புட்டின் தானாக தொடங்கிய போரின் மூலம் அடைய எண்ணுகிறார்கள். என்னை பொறுத்தவரை Russia-free (எல்லா வகையிலும்) Ukraine ஐ அடைவதற்க்கான ஒரு அதிக ரிஸ்க் உள்ள ஆனால் விரைவான வழியாக போரை கருதுவதாக படுகிறது.

அசோவ் பிரிகேட் பற்இ கேள்வி பட்டிருப்பீர்கள். அதே போல் செலன்ஸ்கி உட்பட்ட பலரும் மிக உக்கிரமான உக்ரேனிய தேசியவாதிகள். இல்லை உக்ரேனிய தூய்மைவாதிகள் என்றே சொல்லலாம்.

சுருங்க சொல்லின், தமது கிழக்கு பகுதி நிலங்களில் முடிந்தளவு குறைவான நிலங்களை இழந்தபடி,, அரசியல், மொழி, கலாச்சாரத்தில் 100% ரஸ்ய-நீக்கத்தை செய்ய முடியும் என்றால், உயிர், உடமை, நில இழப்பை அதற்காக விலையாக கொடுக்க தயராக இருக்கிறார்கள்.

இதுதான் செலன்ஸ்கியின் end game என நான் நினைக்கிறேன்.

அதாவது உக்ரேனிய இனத்தில் கலந்து விட்டதாக அவர்கள் கருதும் ரஸ்ய நிழலை (தமிழ் நாட்டில் தமிழர்களிடம் ஏனைய இனம் ஒன்றின் ஆளுமை படிந்து விட்டதாக சொல்லபடுவதும் இதே போல் ஒரு விடயம்தான்) , அகற்றி, உக்ரேனை, மண்ணை, இனத்தை, மொழியை, தூய-உக்ரேன் ஆக்குவதற்கு கொடுக்கபட கூடிய விலையாக போரை அவர்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன்.

 

 

 

6 hours ago, Kapithan said:

இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது இந்தப் போர் நிச்சயம் இடம்பெற்றே இருக்கும். ஆனால் இங்கே ரஸ்யா முந்திக்கொண்டுவிட்டத. அதுதான் பலருக்குக் கடுப்பு. 

 

இல்லை, புட்டின் ரஸ்யயலைவராக  ரஸ்யா மேலாண்மையை மேம்படுத்தும் உலக அரசியலை 2008க்கு பின் கைகொள்டிராவிடில் இப்போதும் G8 இல் இருக்கும்.

புட்டின் இல்லாமல் போனதும் நாளைக்கே நிலைமை மாறவும் கூடும்.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உக்ரேனின் அதிபர் செலன்ஸ்கி மட்டும் அல்லாது, உக்ரேனியர்களில் பலர் ரஸ்யாவுடன் நெகிழ்வு போக்கை எடுக்க இயலாதவர்களாகவே தென்படுகிறார்கள்.

பிட்டினை போலவே அல்லது அதை விட தெளிவாக செலன்ஸிக்கும் நேட்டோவில் சேர்க்க மாட்டார்கள் என்பது தெரிந்திருக்கும். நேட்டோவில் சேர்ப்போம் என யாரும் அவருக்கு உறுதி கொடுக்கவில்லை. அது மட்டும் இல்லாது, சாதாராணமாக எமக்கெந் தெரியும் விடயம், துருக்கி, ஹங்கேரியில் இருக்கும் அரசுகள் மாறும் வரையாவது நேட்டோவில் சேர்வது நடக்காது என்பது.

அப்படி இருக்க, போர் தொடங்கி சில மாதங்களில் கைவிட்ட நேட்டோ கோரிக்கையை, தொடங்க முன்னமே கைவிட்டிருக்கலாம்.

அதே போல இப்போ ஒரு இஞ்சியை தானும்  விட்டுக்கொடோம் என்ற வீராப்பும் கூட கனகாலம் நிலைக்க போவதில்லை.

மேற்கின் ஆதரவை திரட்டியதில் செலன்ஸ்கி கணிசமான வெற்றியை அடைந்திருந்தாலும், கடைசியில் டொன்பாசை இழத்தல் என்பதுடந்தான் இந்த போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன்.

செலன்ஸ்கியின் அணுகுகுமுறை என நான் நினைப்பது.

1. செலனஸ்கி அவரை ஔ சூழ உள்ளவர்கள் தீவிர உக்கேனிய தூய்மை வாதிகள்.

2. அவர்களை பொறுத்த மட்டில் - உக்ரேனின் ethnic Ukrainians இருக்கும் பகுதிகளை, ஒட்டு மொத்தமாக, தனியே எடுத்து - அதை லத்வியா, பல்கேரியா போல ஒரு ஈயு, நேட்டோ நாடாக விரும்புகிறார்கள். ரஸ்ய மொழி பேசும் மக்களை, முடிந்தால் உக்ரேனிய மயப்படுத்துவது, இல்லை என்றால், முடிந்தளவு நில இழப்புடன் ரஸ்யாவிடம் சேர விடுவது.

3. யுத்தம் தொடங்க முதலே உக்ரேனை முழுதாக ரஸ்ய மயப்படுத்தும் வேலை திட்டங்கள் தொடங்கி இருந்ததையும் அறிந்திருப்பீர்கள். இப்போ அதே நோக்கை, புட்டின் தானாக தொடங்கிய போரின் மூலம் அடைய எண்ணுகிறார்கள். என்னை பொறுத்தவரை Russia-free (எல்லா வகையிலும்) Ukraine ஐ அடைவதற்க்கான ஒரு அதிக ரிஸ்க் உள்ள ஆனால் விரைவான வழியாக போரை கருதுவதாக படுகிறது.

அசோவ் பிரிகேட் பற்இ கேள்வி பட்டிருப்பீர்கள். அதே போல் செலன்ஸ்கி உட்பட்ட பலரும் மிக உக்கிரமான உக்ரேனிய தேசியவாதிகள். இல்லை உக்ரேனிய தூய்மைவாதிகள் என்றே சொல்லலாம்.

சுருங்க சொல்லின், தமது கிழக்கு பகுதி நிலங்களில் முடிந்தளவு குறைவான நிலங்களை இழந்தபடி,, அரசியல், மொழி, கலாச்சாரத்தில் 100% ரஸ்ய-நீக்கத்தை செய்ய முடியும் என்றால், உயிர், உடமை, நில இழப்பை அதற்காக விலையாக கொடுக்க தயராக இருக்கிறார்கள்.

இதுதான் செலன்ஸ்கியின் end game என நான் நினைக்கிறேன்.

அதாவது உக்ரேனிய இனத்தில் கலந்து விட்டதாக அவர்கள் கருதும் ரஸ்ய நிழலை (தமிழ் நாட்டில் தமிழர்களிடம் ஏனைய இனம் ஒன்றின் ஆளுமை படிந்து விட்டதாக சொல்லபடுவதும் இதே போல் ஒரு விடயம்தான்) , அகற்றி, உக்ரேனை, மண்ணை, இனத்தை, மொழியை, தூய-உக்ரேன் ஆக்குவதற்கு கொடுக்கபட கூடிய விலையாக போரை அவர்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன்.

 

 

 

இல்லை, புட்டின் ரஸ்யயலைவராக  ரஸ்யா மேலாண்மையை மேம்படுத்தும் உலக அரசியலை 2008க்கு பின் கைகொள்டிராவிடில் இப்போதும் G8 இல் இருக்கும்.

புட்டின் இல்லாமல் போனதும் நாளைக்கே நிலைமை மாறவும் கூடும்.

நீங்கள் கூறுவது சரிதான், இரஸ்சியா பெருமளவில் பொருளாதார நலனை அடையப்போகிறது, பாவம் உக்கிரேனிய மக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

நீங்கள் கூறுவது சரிதான், இரஸ்சியா பெருமளவில் பொருளாதார நலனை அடையப்போகிறது, பாவம் உக்கிரேனிய மக்கள்.

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான் 

நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்😢.

உக்ரேனியர்கள் மட்டும் அல்ல, 18 வயதில் ஏன் போகிறோம், எங்கே போகிறோம் என தெரியாமல் உக்ரேனில் வந்து நிற்கும், இறக்கும் ரஸ்ய குழந்தைகளும் அனுதாபத்துக்குரியவர்களே.

தவிரவும், ரஸ்ய பொருளாதாரம் எண்ணை லாபம் கூடினாலும், அடுத்த வழிகளில் மிக மோசமாக பாதிக்கப்படுள்ளது.

20 வளர்ந்த பொருளாதாரங்களில் 20 இடத்தில் வளர்சி வீதம் இருக்கும் என கணிகிறார்கள்(19 வது யூகேயாம்).

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

புட்டின் இல்லாமல் போனதும் நாளைக்கே நிலைமை மாறவும் கூடும்.

ஐரோப்பிய அரசியல்வாதிகள் யுத்தத்த முடிவை விட புட்டினின் ஆயுள் நாட்களையே எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
அந்தளவிற்கு ரஷ்யாவின் இயற்கைவளங்கள் இவர்களுக்கு தேவைப்படுகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

7 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய அரசியல்வாதிகள் யுத்தத்த முடிவை விட புட்டினின் ஆயுள் நாட்களையே எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
அந்தளவிற்கு ரஷ்யாவின் இயற்கைவளங்கள் இவர்களுக்கு தேவைப்படுகின்றது.

ரஸ்யாவின்  இயற்கை வளங்களும் தேவை. அதே நேரம் ஐரோப்பியர் பொருளாதார த்டையும் கட்டம் கட்டமாக போடுகிறார்கள்.அதாவது தமது மக்கள் சுகபோகமாக வாழ வேண்டும். மற்றையவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

ரஸ்யாவின்  இயற்கை வளங்களும் தேவை. அதே நேரம் ஐரோப்பியர் பொருளாதார த்டையும் கட்டம் கட்டமாக போடுகிறார்கள்.அதாவது தமது மக்கள் சுகபோகமாக வாழ வேண்டும். மற்றையவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.

ஐரோப்பியர்களது, அமெரிக்கர்களது வரலாறு அதுதானே. 

தக்கன பிழைக்கும் என்பதை இராசதந்திரத்தின் அடிநாதமாகக் கொள்கிறார்கள். 

Greed ன் இன்னொரு பெயர்  இராசதந்திரம்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பிய அரசியல்வாதிகள் யுத்தத்த முடிவை விட புட்டினின் ஆயுள் நாட்களையே எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
அந்தளவிற்கு ரஷ்யாவின் இயற்கைவளங்கள் இவர்களுக்கு தேவைப்படுகின்றது.

நிச்சயமாக - இங்கே பிரச்சனை ரஸ்யாவோடு அல்ல - புடிடினோடு மட்டுமே.

அவரோடு கூட அல்ல - அவர் தன்னை ஐரோப்பாவின் பெரும் சக்தியாக நிலை நிறுத்த முனைவதில் மட்டுமே.

உங்களுக்கு 1988-90 க்கு முந்திய ஜேர்மனி நிச்சயம் நினைவுக்கு இருக்கும். ரஸ்ய வளங்கள் ஏதும் இல்லாமலும் ஐரோப்பா துரித வளர்ச்சி கண்ட காலம் அது.

இப்போ 20 வருடங்களாக ஏற்பட்டு விட்ட ரஸ்ய-தங்கி இருத்தலை திடீரென உடைக்கும் போது தற்காலிக பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கவியலாதது.

ஆனால் - ஐரோப்பா-தாஸ்ய வர்தக உறவு முறிவை - 5 வருடத்தில் புதியவகை ஏரிசக்தி மூலங்கள் ( nuclear, hydrogen, renewable energy) மூலம் சரிகட்டும் இயலுமை ஜேர்மனி, யூகே, பிராண்சுக்கு உண்டு.

அதன் பின் நீண்டகால இழப்பு பெரிதும் ரஸ்யாவுக்குத்தான்.

இயற்கை வளம் மட்டும் ஒரு நாடு நல்லா வர போதாது - அப்படி என்றால் கொங்கோ, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள்தான் உலகை ஆள வேண்டும்.

ஒப்பீட்டளவில் பொருளாதார சுதந்திரம், ஜனநாயகம் என்பனவே ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற அடிப்படைகள்.

ஒரு பெற்றோல் வள நாடாக இருந்தபடி, டாங்கிகள் போர் முனையில் பெற்றோல் இல்லாது நிக்கும் அளவுக்கு ஊழலில் திளைக்க்கும் நாடு ரஷ்யா - அங்கே ஒரு அமைப்பு முறை மாற்றம் இல்லாது - ஒட்டு மொத்த நாடும் ஜேர்மனி போல ஒரு சமச்சீர் முன்னேற்ற்த்தை அடைவது கடினம்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ஐரோப்பியர்களது, அமெரிக்கர்களது வரலாறு அதுதானே. 

தக்கன பிழைக்கும் என்பதை இராசதந்திரத்தின் அடிநாதமாகக் கொள்கிறார்கள். 

Greed ன் இன்னொரு பெயர்  இராசதந்திரம்.

 

ஐரோப்பியர்களின், அமெரிக்காவின் முந்தானையில் தொங்கி கொண்டு இருக்கும் கனடாவை மறந்து விட்டீர்கள் பாஸ்🤣.

அல்லது உங்கள் தார்மீக கோபம் எல்லாம் நீங்கள் சம்பந்தபடாத நாடுகளின் மீது மட்டுமோ?

பிகு

நேட்டோ நாடுகளில் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் பொருளாதார மேன்மை, opportunities, standard of living எல்லாமே இந்த நீங்கள் குறிப்பிடும் American-Canadian-European_Brtish-Australian -NZ GREED இன் மேல் தான் கட்டி எழுப்பபட்டுள்ளது.

நல்ல தெருக்கள் முதல், நல்ல வைத்திய சேவை, நல்ல சம்பளம்,food security, physical security, job security எல்லாம் இந்த greed இனால் வந்தவையே.

வெனிசுலாவுக்கும், கனடாவுக்கும்  என்ன வித்தியாசம்? இந்த greed தான்.

இந்த greed ஐ வெறுக்கும் நாங்கள் இந்த நாடுகளை விட்டு நீங்கி, எமது சொந்த நாட்டிலோ அல்லது ரஸ்யாவிலோ குறைந்த பட்சம் வெனிசுலாவிலோ போய் இருந்து இப்படி விமர்சிப்பதுதான் நியாயம்.

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

ஐரோப்பியர்களின், அமெரிக்காவின் முந்தானையில் தொங்கி கொண்டு இருக்கும் கனடாவை மறந்து விட்டீர்கள் பாஸ்🤣.

அல்லது உங்கள் தார்மீக கோபம் எல்லாம் நீங்கள் சம்பந்தபடாத நாடுகளின் மீது மட்டுமோ?

பிகு

நேட்டோ நாடுகளில் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் பொருளாதார மேன்மை, opportunities, standard of living எல்லாமே இந்த நீங்கள் குறிப்பிடும் American-Canadian-European_Brtish-Australian -NZ GREED இன் மேல் தான் கட்டி எழுப்பபட்டுள்ளது.

நல்ல தெருக்கள் முதல், நல்ல வைத்திய சேவை, நல்ல சம்பளம்,food security, physical security, job security எல்லாம் இந்த greed இனால் வந்தவையே.

வெனிசுலாவுக்கும், கனடாவுக்கும்  என்ன வித்தியாசம்? இந்த greed தான்.

இந்த greed ஐ வெறுக்கும் நாங்கள் இந்த நாடுகளை விட்டு நீங்கி, எமது சொந்த நாட்டிலோ அல்லது ரஸ்யாவிலோ குறைந்த பட்சம் வெனிசுலாவிலோ போய் இருந்து இப்படி விமர்சிப்பதுதான் நியாயம்.

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

அமெரிக்கா  என்றால் கனடாவும் சேர்த்தி தலைவா 🤣

பெரிய அடிமை சிறிய அடிமை என்று வேறுபாடுளதோ..😀

32 minutes ago, goshan_che said:

ஐரோப்பியர்களின், அமெரிக்காவின் முந்தானையில் தொங்கி கொண்டு இருக்கும் கனடாவை மறந்து விட்டீர்கள் பாஸ்🤣.

அல்லது உங்கள் தார்மீக கோபம் எல்லாம் நீங்கள் சம்பந்தபடாத நாடுகளின் மீது மட்டுமோ?

பிகு

நேட்டோ நாடுகளில் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் பொருளாதார மேன்மை, opportunities, standard of living எல்லாமே இந்த நீங்கள் குறிப்பிடும் American-Canadian-European_Brtish-Australian -NZ GREED இன் மேல் தான் கட்டி எழுப்பபட்டுள்ளது.

நல்ல தெருக்கள் முதல், நல்ல வைத்திய சேவை, நல்ல சம்பளம்,food security, physical security, job security எல்லாம் இந்த greed இனால் வந்தவையே.

வெனிசுலாவுக்கும், கனடாவுக்கும்  என்ன வித்தியாசம்? இந்த greed தான்.

இந்த greed ஐ வெறுக்கும் நாங்கள் இந்த நாடுகளை விட்டு நீங்கி, எமது சொந்த நாட்டிலோ அல்லது ரஸ்யாவிலோ குறைந்த பட்சம் வெனிசுலாவிலோ போய் இருந்து இப்படி விமர்சிப்பதுதான் நியாயம்.

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

இதைத்தான் இராசதந்திரம் என்பது. 🤣

"உள்ளிருந்தே கொல்லும் வியாதி" 😉

47 minutes ago, goshan_che said:

நிச்சயமாக - இங்கே பிரச்சனை ரஸ்யாவோடு அல்ல - புடிடினோடு மட்டுமே.

அவரோடு கூட அல்ல - அவர் தன்னை ஐரோப்பாவின் பெரும் சக்தியாக நிலை நிறுத்த முனைவதில் மட்டுமே.

உங்களுக்கு 1988-90 க்கு முந்திய ஜேர்மனி நிச்சயம் நினைவுக்கு இருக்கும். ரஸ்ய வளங்கள் ஏதும் இல்லாமலும் ஐரோப்பா துரித வளர்ச்சி கண்ட காலம் அது.

இப்போ 20 வருடங்களாக ஏற்பட்டு விட்ட ரஸ்ய-தங்கி இருத்தலை திடீரென உடைக்கும் போது தற்காலிக பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கவியலாதது.

ஆனால் - ஐரோப்பா-தாஸ்ய வர்தக உறவு முறிவை - 5 வருடத்தில் புதியவகை ஏரிசக்தி மூலங்கள் ( nuclear, hydrogen, renewable energy) மூலம் சரிகட்டும் இயலுமை ஜேர்மனி, யூகே, பிராண்சுக்கு உண்டு.

அதன் பின் நீண்டகால இழப்பு பெரிதும் ரஸ்யாவுக்குத்தான்.

இயற்கை வளம் மட்டும் ஒரு நாடு நல்லா வர போதாது - அப்படி என்றால் கொங்கோ, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள்தான் உலகை ஆள வேண்டும்.

ஒப்பீட்டளவில் பொருளாதார சுதந்திரம், ஜனநாயகம் என்பனவே ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற அடிப்படைகள்.

ஒரு பெற்றோல் வள நாடாக இருந்தபடி, டாங்கிகள் போர் முனையில் பெற்றோல் இல்லாது நிக்கும் அளவுக்கு ஊழலில் திளைக்க்கும் நாடு ரஷ்யா - அங்கே ஒரு அமைப்பு முறை மாற்றம் இல்லாது - ஒட்டு மொத்த நாடும் ஜேர்மனி போல ஒரு சமச்சீர் முன்னேற்ற்த்தை அடைவது கடினம்

நம்பீட்டம் பாஸ்

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த greed ஐ வெறுக்கும் நாங்கள் இந்த நாடுகளை விட்டு நீங்கி, எமது சொந்த நாட்டிலோ அல்லது ரஸ்யாவிலோ குறைந்த பட்சம் வெனிசுலாவிலோ போய் இருந்து இப்படி விமர்சிப்பதுதான் நியாயம்.

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

சொல்ல வேண்டிய உண்மைகளை மிக சிறப்பாக சொன்னீர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் ,பல திரிகளில் உங்கள் கருத்துக்களை அவதானித்தத்தில் உங்களுக்கு இங்கிருந்து கொண்டு சிங்கள அரசை விமர்சிக்க கூட தகுதி இல்லை என்று நினைக்கிறேன் 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கோசான் ,பல திரிகளில் உங்கள் கருத்துக்களை அவதானித்தத்தில் உங்களுக்கு இங்கிருந்து கொண்டு சிங்கள அரசை விமர்சிக்க கூட தகுதி இல்லை என்று நினைக்கிறேன் 

அக்கா,

நான் சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராக எழுந்த தமிழர்  அரசியலான, தமிழ் தேசிய அரசியலை, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதை ஏற்றவன்.  இலங்கை தீவில் தமிழர் தமது தாயக நிலப்பரப்பில் சுயாட்சி அதிகாரம் உடையோர் என்ற நிலைப்பட்டில் எப்போதும் உள்ளவன்.

ஆகவே ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இலங்கை என்ற  பெளத்த, சிங்கள, சோல்பரியாப்புக்கு பிந்திய இலங்கையிடம் எனக்கு எந்த உரிமையும் இல்லை, விசுவாசமும் இருக்க தேவையில்லை.

தமிழர் தலைமைகளை நான் விமர்சிக்க கூடாது, குறிப்பாக விடுதலை புலிகளை விமர்சிக்க கூடாது என சொன்னால் - அதை நான் எப்போதும் ஏற்று கோள்வேன்.

எனது அவர்கள் பற்றிய ஒவ்வொரு விமர்சனமும் - எனது அருகதை இன்மை பற்றிய புரிதலோடே எழுகிறது என்பதை இங்கே பல தடவை எழுதியுள்ளேன்.

அவர்கள் மட்டும் அல்ல இதய சுத்தியோடு (இடையில் நரி வேலை பார்க்காமல்) இன உணர்வோடு அரசியல், போராட்டம் செய்த எவரையும் விமர்சிக்கும் உரிமை என்னிடம் இல்லை என்பது ஏலவே ஏற்று கொண்டதுதான். 

பிகு

அடேய் சாதா காக்காவ சொன்னா, அண்டங்காக்காய்கெல்லாம் கோவம் வருதுடா சாமி என்ற விவேக் பகிடி நியாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல🤣.

4 hours ago, Kapithan said:

இதைத்தான் இராசதந்திரம் என்பது. 🤣

"உள்ளிருந்தே கொல்லும் வியாதி" 😉

நான் இதையே தன்னை தானே ஏமாற்றுதல் என அழைப்பேன்😎.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

Russian President Vladimir Putin recently addressed an audience in St Petersburg, Russia where he said Western sanctions are backfiring and the reason why global gas and food prices are sky rocketing. Putin further says Russia’s economy will grow regardless of Western sanctions, adding Moscow is turning to Africa, Asia, and Latin America to strengthen its relations. This, despite independent forcasts saying the Russian economy is declining.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

 

நான் இதையே தன்னை தானே ஏமாற்றுதல் என அழைப்பேன்😎.

இராசதந்திரம் என்பது த்ன்னைத்தானே ஏமாற்றுதல் என்று பொருள்படும் என்கிறீர்கள். ம்ம்ம்ம்ம்.......

அட இது நன்னாருக்கே...

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2022 at 18:58, goshan_che said:

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான் 

நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்😢.

உக்ரேனியர்கள் மட்டும் அல்ல, 18 வயதில் ஏன் போகிறோம், எங்கே போகிறோம் என தெரியாமல் உக்ரேனில் வந்து நிற்கும், இறக்கும் ரஸ்ய குழந்தைகளும் அனுதாபத்துக்குரியவர்களே.

தவிரவும், ரஸ்ய பொருளாதாரம் எண்ணை லாபம் கூடினாலும், அடுத்த வழிகளில் மிக மோசமாக பாதிக்கப்படுள்ளது.

20 வளர்ந்த பொருளாதாரங்களில் 20 இடத்தில் வளர்சி வீதம் இருக்கும் என கணிகிறார்கள்(19 வது யூகேயாம்).

 

பொதுவாக போர், அழிவை, ஆக்கிரப்பிற்கு உள்ளாகும் மக்களிற்கே அதிகம் வழங்குகிறது, அது பொருளாதார ரீதியாகவும் மனித அவலங்கள் ஊடாகவும்.

இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைய முண்டியடித்துகொள்கிறார்கள் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம் என கருதுகிறேன்.

அது ஒரு பொருளாதார தற்கொலைக்கு சமன்.

நேட்டோவில் இணைய வேண்டுமானால்  தமது மொத்த தேசிய வருமானத்தில் குறித்த சதவிகிதம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படவேண்டும்  , அத்துடன் அவர்களது ஆயுத தளபாடத்தினை மேற்கின் ஆயுதங்கள் கொண்டு நவீன மயப்படுத்த வேண்டும், என கூறப்படுகிறது.

இந்த போரினூடாக பெருமளவில் நன்மை பெறும் நாடு அமெரிக்கா மட்டுமே.

இதுக்கு சாட்சிகாரனின் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழலாம் ( இரஸ்சியாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யலாம்).

இந்த புதிய இழுபறியில் இரஸ்சியாவின் நிலை தக்க வைக்கப்பட்டால் தற்போது நிலவும் அமெரிக சார்பு பொருளாதார தளம்பல் நிலை முடிவுக்கு வரும், புதிய பொருளாதார வலுச்சமனிலை உருவாகும் அது இலங்கை மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பட்டினியினை நோக்கி தள்ளப்படும் மக்களை காப்பாற்றும் என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, vasee said:

இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைய முண்டியடித்துகொள்கிறார்கள் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம் என கருதுகிறேன்.

 

இதை பற்றி இன்னொரு திரியில் விளங்க நினைப்பவனுக்கு பதிலாக எழுதி உள்ளேன்  .

நாங்கள் சில சம்பந்தபடாத தமிழர்கள்  என்னதான் குத்தி முறிந்தாலும், ஜோர்ஜியர்கள், உக்ரேனியர்கள், போலிஷ், பினிஷ், சுவீடிஷ், லத்வியன், மோல்டோவன், இன்னும் பல தேசிய இனங்கள், ரஸ்யா தமது இன, மொழி அடையாளத்தை அழித்து விடும் என பயபடுகிறார்ஜள்.

உண்மையில் ஒரு சமுத்திரத்துக்கு அப்பால் உள்ள அமெரிக்காவை விட, அருகில் உள்ள ரஸ்யாவைதான் இவர்கள் நம்ப வேண்டும், ஆனால் நிலமை அப்படி இல்லை.

ஏனென்றால் எம்மை விட இந்த தேசிய இனங்களுக்கு ரஸ்யாவை பற்றி தெரியும்.

ஆகவே தனியே பொருளாதாரம் மட்டும் சம்பந்தபட்ட விடயம் அல்ல இது.

ரஸ்யாவின்-பின்லாந்து மீதான அணுகுமுறை பற்றி ஜஸ்டின் அண்ணா எழுதிய ஒரு அருமையான கட்டுரை உள்ளது. முடிந்தால் வாசிக்கவும். அதுதான், மிரட்டி நிலத்தை பறித்து, ரஸ்யமயமாக்கி, அடிமை கொள்வதுதான் ஐரோப்பாவில் ரஸ்யாவின் அணுகுமுறை. 

இவ்வாறு தேசிய இன அடையாளத்தை, பாரம்பரிய நிலத்தை, சுய நிர்ணய உரிமையை ரஸ்யா பறிக்கும் என்பதை அறிந்துதான் இந்த நாடுகள் எல்லாம், பெரிய பாதுகாப்பு, பொருளாதார ரிஸ்க் எடுத்தும் நேட்டோவில் சேர்கிறன.

உக்ரேன் யுத்தம் ஆரம்பமாகிய பின், ரஸ்யாவின் பின்லாந்து மீதான அணுகுமுறையையும், நேட்டோவில் சேர்வது தொடர்பாக பொனிஷ் மக்களினதும் போக்கை அவதானித்தால் நான் சொல்வது புரியும்.

நேட்டோவில் சேர்ந்து தப்பி விடலாம் என்ற நிலையை - இந்த நாட்டு அரசுகள் மட்டும் அல்ல, மக்களில் பெரும்பாலோனோரும் விரும்புகிறார்கள்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன கேள்வி

ரஸ்யாவினை மிக மூர்கமாக எதிர்பவர்கள் யார்?

அமெரிக்கா, பிரிட்டன் - இவர்கள் எதிர்க்கும் காரணம் வேறு (ஏகாதிபத்திய போட்டி).

இவர்களை தாண்டி?

உக்ரேன், போலந்து, ரொமேனியா, ஸ்லொவீனியா, ஜோர்ஜியா, லத்வியா…

இவர்களுக்கு எல்லாம் என்ன ஒற்றுமை?

1. ஒரு காலத்தில் ரஸ்யாவால் அடக்கி ஆளபட்ட தேசிய இனங்கள்

2. எல்லாருக்கும் ரஸ்யாவோடு எல்லை உண்டு அல்லது நெருங்கிய நில அமைவிடம் உண்டு.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதை பற்றி இன்னொரு திரியில் விளங்க நினைப்பவனுக்கு பதிலாக எழுதி உள்ளேன்  .

நாங்கள் சில சம்பந்தபடாத தமிழர்கள்  என்னதான் குத்தி முறிந்தாலும், ஜோர்ஜியர்கள், உக்ரேனியர்கள், போலிஷ், பினிஷ், சுவீடிஷ், லத்வியன், மோல்டோவன், இன்னும் பல தேசிய இனங்கள், ரஸ்யா தமது இன, மொழி அடையாளத்தை அழித்து விடும் என பயபடுகிறார்ஜள்.

உண்மையில் ஒரு சமுத்திரத்துக்கு அப்பால் உள்ள அமெரிக்காவை விட, அருகில் உள்ள ரஸ்யாவைதான் இவர்கள் நம்ப வேண்டும், ஆனால் நிலமை அப்படி இல்லை.

ஏனென்றால் எம்மை விட இந்த தேசிய இனங்களுக்கு ரஸ்யாவை பற்றி தெரியும்.

ஆகவே தனியே பொருளாதாரம் மட்டும் சம்பந்தபட்ட விடயம் அல்ல இது.

ரஸ்யாவின்-பின்லாந்து மீதான அணுகுமுறை பற்றி ஜஸ்டின் அண்ணா எழுதிய ஒரு அருமையான கட்டுரை உள்ளது. முடிந்தால் வாசிக்கவும். அதுதான், மிரட்டி நிலத்தை பறித்து, ரஸ்யமயமாக்கி, அடிமை கொள்வதுதான் ஐரோப்பாவில் ரஸ்யாவின் அணுகுமுறை. 

இவ்வாறு தேசிய இன அடையாளத்தை, பாரம்பரிய நிலத்தை, சுய நிர்ணய உரிமையை ரஸ்யா பறிக்கும் என்பதை அறிந்துதான் இந்த நாடுகள் எல்லாம், பெரிய பாதுகாப்பு, பொருளாதார ரிஸ்க் எடுத்தும் நேட்டோவில் சேர்கிறன.

உக்ரேன் யுத்தம் ஆரம்பமாகிய பின், ரஸ்யாவின் பின்லாந்து மீதான அணுகுமுறையையும், நேட்டோவில் சேர்வது தொடர்பாக பொனிஷ் மக்களினதும் போக்கை அவதானித்தால் நான் சொல்வது புரியும்.

நேட்டோவில் சேர்ந்து தப்பி விடலாம் என்ற நிலையை - இந்த நாட்டு அரசுகள் மட்டும் அல்ல, மக்களில் பெரும்பாலோனோரும் விரும்புகிறார்கள்.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, இது இலங்கையில் சீன தலையீட்டினை விட இந்திய தலையீடு பல மடங்கு பரவாயில்லை, ஆனால் இலங்கை பெரும்பான்மை (தமிழ் மக்களிடமும் கூட) மக்களிடம் இந்தியா தொடர்பான வரலாறு ரீதியான அச்ச உணர்வை போன்றது.

ஆக்கிரமிப்பாளரின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளது, உதாரணமாக அவுஸ்ரேலியாவில் உள்ள பழங்குடியினரின் நிலை 3 ஆம் தர நிலையில் உள்ளது.

ஆக்கிரமிப்பாளர் தமது ஆக்கிரமிப்பு தினத்தினை தேசிய தினமாகக்கொண்டாடப்படும் அவலம் மேற்கிலும் நிகழ்கிறது.

இந்த இரஸ்சிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புக்கொடி தூக்கும் மேற்கு நாட்டவர்கள் தம்மால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக சிந்திக்கும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

நான் மேற்கு நாட்டவரின் தவறுகளை சுட்டி காட்டுவதனால் இரஸ்சியாவின் தவறுகளை நியாப்படுத்துவதாகாது.

7 minutes ago, goshan_che said:

ஒரு சின்ன கேள்வி

ரஸ்யாவினை மிக மூர்கமாக எதிர்பவர்கள் யார்?

அமெரிக்கா, பிரிட்டன் - இவர்கள் எதிர்க்கும் காரணம் வேறு (ஏகாதிபத்திய போட்டி).

இவர்களை தாண்டி?

உக்ரேன், போலந்து, ரொமேனியா, ஸ்லொவீனியா, ஜோர்ஜியா, லத்வியா…

இவர்களுக்கு எல்லாம் என்ன ஒற்றுமை?

1. ஒரு காலத்தில் ரஸ்யாவால் அடக்கி ஆளபட்ட தேசிய இனங்கள்

2. எல்லாருக்கும் ரஸ்யாவோடு எல்லை உண்டு அல்லது நெருங்கிய நில அமைவிடம் உண்டு.

 

 

சரியான கேள்விதான், உண்மையினை சொன்னால் எனக்கு பதில் தெரியாது.

இது perception எனப்படும் உணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம், கற்கால மனித எஞ்சிய பாதுகாப்பு பொறி முறை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, இது இலங்கையில் சீன தலையீட்டினை விட இந்திய தலையீடு பல மடங்கு பரவாயில்லை, ஆனால் இலங்கை பெரும்பான்மை (தமிழ் மக்களிடமும் கூட) மக்களிடம் இந்தியா தொடர்பான வரலாறு ரீதியான அச்ச உணர்வை போன்றது.

ஆக்கிரமிப்பாளரின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளது, உதாரணமாக அவுஸ்ரேலியாவில் உள்ள பழங்குடியினரின் நிலை 3 ஆம் தர நிலையில் உள்ளது.

ஆக்கிரமிப்பாளர் தமது ஆக்கிரமிப்பு தினத்தினை தேசிய தினமாகக்கொண்டாடப்படும் அவலம் மேற்கிலும் நிகழ்கிறது.

இந்த இரஸ்சிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புக்கொடி தூக்கும் மேற்கு நாட்டவர்கள் தம்மால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக சிந்திக்கும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

நான் மேற்கு நாட்டவரின் தவறுகளை சுட்டி காட்டுவதனால் இரஸ்சியாவின் தவறுகளை நியாப்படுத்துவதாகாது.

நிச்சயமாக. ஆனால் மேற்கு நாடுகள் ஒரு குறைந்த ஜனநாயக நாடுகளாக இருப்பதால்தான் - இப்போ காலம் கடந்த பின்னாவது இவற்றை மீளாய்வு, மன்னிப்பு, நட்ட ஈடு என்று சிந்திக்கும் அளவுக்கு போகிறார்கள்.

அண்மையில் அடிமைகள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக பிரிட்டனில் போராடங்கள் நடந்து, பல சிலைகள் அகற்றபட்டன. அதேபோல் கொலம்பஸ் தினம் பற்றிய அமெரிக்க விழிப்புணர்வு, அவுஸ்ரேலியாவில் அபர்ஜினிகளுக்கு இழைக்கப்ட்ட அநீதி பற்றி பேசல்.

அதே போல் அவுஸ்ரேலியாவில் வெள்ளை குடியேறிகள் உருவாக்கிய வளமான நாட்டில் போய் இருந்து தான் நாமும் வாழ்கிறோம். நாம் யாரும் அபர்ஜினி ரிசர்வேசனில் போய் வாழ்வதில்லை. அதே வெள்ளை குடியேறிகள் கட்டி எழுப்பிய சுரண்டல் பொருளாதாரத்தை நாமும் முண்டு கொடுத்து நிமிர்துகிறோம். 

ஆகவே அபர்ஜினிகளிம் சுரண்டலில் நாமும் நேரடி பங்குதாரரே.

இது எமது கொள்கைக்கு உகந்தது அல்ல என்றால் நாம் சொந்த நாடு திரும்பலாம்.

இதை தயவு செய்து தனிபட்டு தாக்குவதாக கருத வேண்டாம், இது மேற்கில் வாழும் நான் உட்பட்ட எல்லாருக்கும் பொருந்தும்.

ஆகவே ஏகாதிபத்தியம்,சுரண்டல் என்பன தனியே நேட்டோவுக்கி மட்டும், அமெரிக்காவுக்கு மட்டும் உரியதல்ல.

ரஸ்யா, சீனா, சவுதி, இந்தியா…எல்லாருமே தமது வலுவுக்கு ஏற்ப இதை செய்கிறார்கள்.

இந்த நாடுகளில் விரும்பி வந்து வாழும், பொருளாதார பங்களிப்பு செய்யும் நாமும் கூட இதில் பாதிரவாளிகளே.

தார்மீக வழு எல்லாரிடமும் உண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

நேட்டோவில் சேர்ந்து தப்பி விடலாம் என்ற நிலையை - இந்த நாட்டு அரசுகள் மட்டும் அல்ல, மக்களில் பெரும்பாலோனோரும் விரும்புகிறார்கள்.

ஓம் இதை அந்த நாடுகளை சேர்ந்த சிலரிடம் நேரடியாக அறித்தனான். நாங்கள் உக்ரேனோ ஸ்லொவீனியா போன்ற ரஸ்யாவால் அடக்கி ஒடுக்கபட்ட நாடுகளை சேர்ந்தவர்களாக எங்களை கற்பனை பண்ணி பாருங்கள் நேட்டோவில் சேரசொல்லி கேட்கும் ஊர்வலத்தில் முன்னுக்கு நிற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆகவே அபர்ஜினிகளிம் சுரண்டலில் நாமும் நேரடி பங்குதாரரே.

 

இந்த குற்ற உணர்வு எனக்கும் உண்டு.

9 minutes ago, goshan_che said:

இது எமது கொள்கைக்கு உகந்தது அல்ல என்றால் நாம் சொந்த நாடு திரும்பலாம்.

 

போக மாட்டேன், எனது சிந்தனை மிகவும் தட்டையானது ஏனென்றால் ஒப்பீட்டளவில் இங்குள்ளவர்களுடன் ஒப்பிடும்போது நான் கல்வியறிவற்றவன், என்னால் A தவறு என்றால் B தான் சரி என சிந்திக்க முடியாது.

11 minutes ago, goshan_che said:

இதை தயவு செய்து தனிபட்டு தாக்குவதாக கருத வேண்டாம், இது மேற்கில் வாழும் நான் உட்பட்ட எல்லாருக்கும் பொருந்தும்.

 நிச்சயமாக இல்லை, எல்லோரும் ஒரு வகையில் Hypocrite .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

யாழ் இடப்பெயர்வின் போது தம் வசம் இருந்த கொண்டு செல்ல முடியாத பொருளாதார வளங்களை, உணவை எல்லாம் புலிகளும் மக்களும் “பாவம் ஆமிக்காரர் பசிச்சால் சாப்பிடட்டுடும்” என்ற நல்லெண்ணத்தில் அப்படியே விட்டு போயிருப்பார்கள் என்றா எண்ணுகிறீர்கள்?

எடுக்க முடியாததை விட்டு விட்டு போவதற்கும் எரித்து விட்டு போவதுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு என புரியவில்லையா??

Quote

ஏனென்றால் எம்மை விட இந்த தேசிய இனங்களுக்கு ரஸ்யாவை பற்றி தெரியும்.

நீங்கள் அமெரிக்காவை பற்றி ஆப்கானிஸ்தான், ஈராக் ,லிபியா, வியட்நாம் போன்ற நாடுகளில் கேட்டு பார்க்கலாம். அமெரிக்காவை நீங்கள் ஜனநாயக நாடு என்று முத்திரை குத்தியும் உள்ளீர்கள். பிரிட்டன் பற்றி சொல்லவே தேவை இல்லை. எப்படியான திருடர் என்பதையும் உலகறியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

என்ன பெரிய ஜனநாயக நாடு என்கிறீர்கள். விமர்சனம் செய்ய முடியாமல் சிறிலங்காவில் இருந்த அடிமை மாதிரி இருக்க வேண்டும் என்கிறீர்களா?  ஈராக்கில்,ஆப்கானிஸ்தானில் நேட்டோ கும்பலாக குண்டுகளை போடுகிறார்கள். நீங்கள் செய்வது சரி என்று சொல்வதா உங்கள் வாதம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

போக மாட்டேன், எனது சிந்தனை மிகவும் தட்டையானது ஏனென்றால் ஒப்பீட்டளவில் இங்குள்ளவர்களுடன் ஒப்பிடும்போது நான் கல்வியறிவற்றவன், என்னால் A தவறு என்றால் B தான் சரி என சிந்திக்க முடியாது.

நானும் போக மாட்டேன். இதில் கல்விக்கு பெரிய வகிபாத்திரம் இருப்பதாக தெரியவில்லை. பிழைத்தல் (survival) என வரும் போது எல்லா மனிதரின் சிந்தனையும் தட்டையானதுதான்.

 

2 hours ago, vasee said:

நிச்சயமாக இல்லை, எல்லோரும் ஒரு வகையில் Hypocrite .

நன்றி. உண்மை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.