Jump to content

உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, kalyani said:

எடுக்க முடியாததை விட்டு விட்டு போவதற்கும் எரித்து விட்டு போவதுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு என புரியவில்லையா??

இல்லை அவர்களும் எடுத்து செல்ல முடியாததை அழித்து விட்டே போனார்கள். சில இடங்களில் துலாக்களில் கூட பொறி வெடிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அங்கே மட்டும் அல்ல, நாஜி படைகள் ஸ்டாலின்கிராட் உட்பட்ட ரஸ்ய நகரங்களை குளிர்காலம் வரமுதல் கைபற்றிய போது அங்கும் இவ்வாறு விலகி சென்ற செம் படை உணவு உற்பத்தி வளங்களை அழித்து விட்டே விலகியது. அதனால் ஏற்பட்ட உணவு பற்றாகுறையே குளிர் காலத்தில் நாஜி படைகள் தோற்க ஒரு பெரும் காரணமாகியது. இதற்கு முன்னர் ரஸ்யாவில் நெப்போலியனின் படைகளுக்கும் இது நடந்தது.

சொல்ல வருவது - இப்படி செய்தது சரி என்றல்ல - இது ஒரு வழமையான யுத்த தந்திரம். நினைவில் இருந்து சொல்கிறேன் - சரி பார்க்கவில்லை - இதை மக்களை குறிவைத்து செய்தால் யுத்த குற்றம், எதிரி படைகளை குறிவைத்து செய்தால் (எதிரியின் வினியோகத்தை தாக்கல்) - யுத்த குற்றம் அல்ல.

31 minutes ago, kalyani said:

நீங்கள் அமெரிக்காவை பற்றி ஆப்கானிஸ்தான், ஈராக் ,லிபியா, வியட்நாம் போன்ற நாடுகளில் கேட்டு பார்க்கலாம்.

கேட்டு தெரிந்த படியால்தான் ரஸ்யா கிழக்கு ஐரோப்பாவில் செய்யும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் அதே தொனியில் அமெரிகா இந்த நாடுகளில் செய்வதையும் விமர்சிக்க முடிகிறது.

ரஸ்ய விமர்சகன் = அமெரிக்க ஆதரவாளன் என்ற உங்கள் சூத்திரம் மிகவும் எளிமையானதும், பிழையானதும்.

25 minutes ago, kalyani said:

என்ன பெரிய ஜனநாயக நாடு என்கிறீர்கள். விமர்சனம் செய்ய முடியாமல் சிறிலங்காவில் இருந்த அடிமை மாதிரி இருக்க வேண்டும் என்கிறீர்களா?  ஈராக்கில்,ஆப்கானிஸ்தானில் நேட்டோ கும்பலாக குண்டுகளை போடுகிறார்கள். நீங்கள் செய்வது சரி என்று சொல்வதா உங்கள் வாதம்.

நான் greed (பேராசை) பற்றி எழுதியதை மேற்கோள்காட்டி எனது ஜனநாயகம் பற்றிய கூற்றை கேள்வி கேட்கிறீர்கள். பரவாயில்லை.

ஒப்பீட்டளவில் ஜனநாயகமான என்ற கருத்தில் ஒப்பீட்டளவில் என்பதை கவனிக்க தவறி விட்டீர்கள் போலுள்ளது.

சிறிலங்காவில் இருந்து ஓடி, ஏன் இந்த நாடுகளை தேர்ந்து வந்தீர்கள், வந்தோம்? ஏன் தமிழ் பேசும், அருகில் இருந்த, இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு போகவில்லை?

ஏன் ஆங்கிலம், தமிழ் பேசும் சிங்கப்பூர் போகவில்லை?

மொழியே தெரியாத நோர்வே, பின்லாந்து, சுவீடன், ஜேர்மனி, பிரான்ஸ்,  வந்த நாம் ஏன் உக்ரேன், ரஸ்யா, சேர்பியா போகவில்லை?

ஏனென்றால் இந்த நாடுகளில்தான்

1. மேம்பட்ட பொருளாதாரம் இருந்தமையால் நாம் பொருளாதாரத்தில் உயர வாய்ப்பு இருந்தது

2. ஒப்பீட்டளவில் ஜனநாயகம் கூடவாக இருந்தபடியால் - சிஙபூர் போல கண்ணை மூடி கொண்டு அடுத்த பிளைட்டில் நாடு கடத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

இங்கே புள்ளி ஒன்றில் நாம் தேடி வந்த பொருளாதார மேன்மை - இந்த நாடுகள் செய்யும் சர்வதேச greed அரசியால் விழைந்ததே. ஆகவே அதை விமர்சிப்பதாயின், கிடந்த பட்சம் அந்த பொருளாதார அனுகூலத்தையாவது துறந்து விட்டே விமர்சிக்க வேண்டும்.

புள்ளி ரெண்டில் கூறிய ஒப்பீட்டளவில் அதிக ஜனநாயகம் இருப்பதால்தான் இந்த நாடுகள் ஆப்கானிஸ்தானில், மத்திய கிழக்கில் செய்தவை பிழை என இந்த நாட்டில் இருந்தபடியே (ஒரு 1ம் தலைமுறை குடியேறியாய் இருந்தும்) பொது வெளியில் உங்களால் எழுத முடிகிறது.

முடிந்தால் சீனாவில் போய் அசலைம் கேட்டு, அல்லது ஒரு குடியேறி விசாவில் போய் (தந்தால்) பின் அங்கே இருந்தபடி, சீனா உகிர் முஸ்லீம்களுக்கு, திபெத்தியருக்கு செய்யும் கொடுமை பற்றி

அல்லது இதே போல் ரஸ்யாவில் போய் இருந்த படி அவர்கள் செச்னியா அல்லது அலப்போவில் செய்த கொடுமைகள் பற்றி ஒரு வார்த்தை பேசி விட்டு வாருங்களேன்.

அப்போ புரியும் நான் எதை “ஒப்பீட்டளவில் ஜனநாயகமான நாடுகள்” என குறிப்பிட்டேன் என்பது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அதிக ஜனநாயகம் இருப்பதால்தான் இந்த நாடுகள் ஆப்கானிஸ்தானில், மத்திய கிழக்கில் செய்தவை பிழை என இந்த நாட்டில் இருந்தபடியே (ஒரு 1ம் தலைமுறை குடியேறியாய் இருந்தும்) பொது வெளியில் உங்களால் எழுத முடிகிறது.

😂 அந்த நாடுகளில் சுதந்திரமாக வாழ்ந்தபடியே எப்போதோ உள்ளே புகுத்தி வைக்கபட்ட கம்யூனிச சித்ததாந்தத்தின்படி சர்வாதிகாரி விளாடிமிர் புரினின் ஆக்கிரமிப்பு கொடுமைகளை எல்லாம் தீவிரமாக ஆதரிக்க முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2022 at 11:38, goshan_che said:

நானும் போக மாட்டேன். இதில் கல்விக்கு பெரிய வகிபாத்திரம் இருப்பதாக தெரியவில்லை. பிழைத்தல் (survival) என வரும் போது எல்லா மனிதரின் சிந்தனையும் தட்டையானதுதான்.

 

நன்றி. உண்மை.

மன்னிக்கவும், கோசான் அது உங்களுக்கு நகைசுவைக்காக சொன்னது, அதாவது நீங்கள் மேற்கு நாட்டில் இருந்து கொண்டு அதன் கொள்கைகளை குறை சொல்லும் என்னை போன்றவர்கள் தமது நாட்டிற்கே (இலங்கை ?) திரும்பி செல்லவேண்டும் என்று சொன்னதற்காக கூறியது, இது போன்ற கருத்தாடல்களில் பொதுவாக அனைவரும் கூறுவதனால் ஏன் வெளிநாட்டு கொள்கை பிடிக்காவிட்டால் இலங்கைகு போகவேணும் என்ற கருத்தில் எழுதப்பட்டது (Default thinking).

மேலும் நீங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் கூறவில்லை என தெரியும் (அப்படி கூறியிருந்தாலும் தவறினை சுட்டி காட்டுவதில் தவறில்லை அதனால் பிரச்சினை இல்லை), அதனாலேயே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதால் அவ்வாறு பதிலளித்தேன்.

பெரும்பான்மையாக உங்களது கருத்துகளில் எனக்கு எப்போதும் உடன்பாடுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

மன்னிக்கவும், கோசான் அது உங்களுக்கு நகைசுவைக்காக சொன்னது, அதாவது நீங்கள் மேற்கு நாட்டில் இருந்து கொண்டு அதன் கொள்கைகளை குறை சொல்லும் என்னை போன்றவர்கள் தமது நாட்டிற்கே (இலங்கை ?) திரும்பி செல்லவேண்டும் என்று சொன்னதற்காக கூறியது, இது போன்ற கருத்தாடல்களில் பொதுவாக அனைவரும் கூறுவதனால் ஏன் வெளிநாட்டு கொள்கை பிடிக்காவிட்டால் இலங்கைகு போகவேணும் என்ற கருத்தில் எழுதப்பட்டது (Default thinking).

மேலும் நீங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் கூறவில்லை என தெரியும் (அப்படி கூறியிருந்தாலும் தவறினை சுட்டி காட்டுவதில் தவறில்லை அதனால் பிரச்சினை இல்லை), அதனாலேயே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதால் அவ்வாறு பதிலளித்தேன்.

பெரும்பான்மையாக உங்களது கருத்துகளில் எனக்கு எப்போதும் உடன்பாடுண்டு.

ஐயோ வசி,

ஒரு குறையும் இல்லை. நீங்கள் சொன்ன நகைச்சுவையான அர்த்தத்தில்தான் நானும் அதை எடுத்துக்கொண்டான்.

மேலும் உங்கள் நிலையில்தான் நானும் - மேற்கை அதன் வரலாற்றை, அதன் பேராசைகளை நானும் விமர்சித்தாலும், எனக்கும் மேற்கை விட்டால் வேறு கெதி இல்லை. எனக்கு மட்டும் அல்ல புலம்பெயர் தமிழர் எல்லாரினதும் நிலை இதுதான். அதையே சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஐயோ வசி,

ஒரு குறையும் இல்லை. நீங்கள் சொன்ன நகைச்சுவையான அர்த்தத்தில்தான் நானும் அதை எடுத்துக்கொண்டான்.

மேலும் உங்கள் நிலையில்தான் நானும் - மேற்கை அதன் வரலாற்றை, அதன் பேராசைகளை நானும் விமர்சித்தாலும், எனக்கும் மேற்கை விட்டால் வேறு கெதி இல்லை. எனக்கு மட்டும் அல்ல புலம்பெயர் தமிழர் எல்லாரினதும் நிலை இதுதான். அதையே சொன்னேன்.

நன்றி

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.