Jump to content

கச்சத்தீவு: வரவேற்பும் எதிர்ப்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவு: வரவேற்பும் எதிர்ப்பும்

June 7, 2022
spacer.png
 

சூசை ஆனந்தன்

புவியியல்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர்,

யாழ். பல்கலைக்கழகம்

தமிழக முதலமைச்சர் ஓர் அரசியல்வாதி. அவர் வாக்கு வேட்டைக்காக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதுவதாக நினைத்து கச்சதீவை மீட்குமாறு கேட்டிருப்பார். அது அவர் தமிழ்நாட்டு மீனவர்கள் சார்பாக கேட்டிருப்பார். அவர் பக்கம் பார்க்கும் போது அது பிழை இல்லை.

ஆனால் கடந்த காலங்களில் வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களினால் படும் துன்பங்கள், அழிவுகள், சுற்றாடல் பாதிப்புகள் பற்றித் தெரிந்திருந்தும், அவரின் கச்சதீவை மீளப்பெறும் கோரிக்கையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அதை வன்மையாக எதிர்க்கிறோம்.

30 வருடங்களாக நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது, இந்திய மீனவர்களால் ஏற்படும் இழப்புகள் பற்றி அவருக்குத் தெரியும். அப்படியிருந்தும் கச்சதீவை மீட்கக் கோரும் அவரின் கோரிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். அது நியாயமான கோரிக்கை அல்ல.

கச்சதீவு 1974ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நட்பு ரீதியாக இலங்கைக்குக் கொடுத்த ஒரு தீவு. கிட்டத்தட்ட 50 வருடங்களாகின்றன. இதுவரையில் இந்த கச்சதீவு தொடர்பான பிரச்சினைக்கு இரண்டு நாட்டு அரசாலும் எந்தவொரு தீர்வையும் கண்டுகொள்ள முடியவில்லை. எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. அந்தத் தீவு மக்கள் இல்லாத ஒரு சிறிய தீவு. இந்த சிறிய தீவு தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க முடியாத அரசாங்கங்கள் எப்படி எங்கள் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும். அந்தத் தீவு நெடுந்தீவு அரச அதிபர் பிரிவிற்குட்பட்ட ஒரு தீவாக வரைபடத்தில் இருக்கின்றது,

அந்தத் தீவால் எங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. அந்தத் தீவை பயன்படுத்த இலங்கை அரசாங்கம் விடவில்லை. யுத்தத்தை பயன்படுத்தி, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அந்தத் தீவில் எங்களைக் கால்வைக்க விடவில்லை. அந்தோனியர் கோவில் திருவிழாவிற்குப் போய்வரலாம். அதுதவிர ஏந்தவித பிரயோசனமும் இல்லை. அதற்காக இந்தியா கேட்கின்றது என்பதற்காக விட்டுக் கொடுக்க முடியாது. எதிர்காலத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழலாம். வடமாகாண சபைக்கு அதிகாரங்கள் வரும் சந்தர்ப்பங்களில் சுற்றுலாவிற்காகவோ, கடற்பூங்காவாகவோ பயன்படுத்தலாம், மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடிக்கலாம் எதிர்காலத்தில் ஏதாவது செய்யலாம்.

தமிழக முதலமைச்சர் அவரது கோரிக்கையை தங்கள் சார்பில் விட்டிருக்கிறார். ஆனால் எங்கள் சார்பில் நாங்கள் அதை எதிர்க்கிறோம். இந்தியாவிற்கு கச்சதீவை கொடுக்கும் நிலையில் இலங்கை இல்லை. வடபகுதி மக்கள் தமிழ்நாட்டுடன் எந்தவித தொடர்பையும் வைத்துக் கொள்வதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. பலாலி விமான நிலையமாக இருக்கலாம். இலங்கை  – தனுஸ்கோடிக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டமாக இருக்கலாம். கப்பல் சேவையாக இருக்கலாம். இவற்றையெல்லாம் இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை.  ஒருவேளை கச்சதீவை இந்தியாவிற்குக் கொடுக்கும் ஒரு நிலை வந்தால், வடபகுதியிலுள்ள இரண்டு இலட்சம் மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிவரும். அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. ஆழ்கடல் மீன்பிடி வாய்ப்புக்களும் இல்லை. அவர்கள் ஒரு சிறிய கடற்பரப்பிலேயே தங்கி வாழ்கின்றார்கள். அந்தக் கடற்பரப்பில் இந்திய றோலர்கள் வாரத்தில் 3 நாட்கள் அத்துமீறி நுழைந்து மீன்வளத்தை சூறையாடிக் கொண்டு போகிறார்கள். இதனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

கச்சதீவை அண்டிய கடற்பகுதியை குத்தகைக்கு கேட்கும் ஒரு நிலையும் இந்தியாவிடம் உள்ளது என பேச்சுவார்த்தையில் பங்குபற்றியவர்கள் வந்து சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை கச்சதீவை இந்தியாவிற்குக் கொடுக்கும் நிலை வந்தால், வடபகுதி மீனவர்கள் தொழில் இழக்கும் நிலை ஏற்படும். எனது கணிப்பின்படி இந்தியாவின் மூவாயிரம் றோலர் படகுகள் வந்து வளங்களை சுரண்டிக் கொண்டு போகின்றது. பெருமளவான அந்நியச் செலாவணி சம்பாதிக்கக்கூடிய இறால், நண்டு, கடலட்டை, கணவாய், மீன் வகைகளை சுரண்டிக் கொண்டு போகின்றனர். இவற்றுடன் குஞ்சு மீன்களையும் சூறையாடிச் செல்கின்றனர். ஒரு வருடத்தில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இந்தியாவினால் வடபகுதிக் கடற்பகுதியில் சூறையாடப்படுகின்றன.

 

spacer.png

ஜெ.கோசுமணி

தலைவர்

தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கச்சத்தீவை விரைவில் மீட்பேன் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு தமிழக மீனவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை வழங்கி இருக்கின்றது.  தொன்றுதொட்டு பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து, தொடர் தாக்குதலை நடத்தி  கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்,  பல கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன்கள், வளைகள், அனைத்தும் கொள்ளை  அடிக்கப்பட்டிருக்கிறது.  இதற்கான தீர்வாக தமிழக மீனவர்கள் கச்சத்தீவை மீட்பது தான் தீர்வு என்பதை  உணர்ந்து இருக்கிறார்கள். எனவே கச்சத்தீவை மீட்போம் என்ற தமிழக அரசின் வாக்குறுதி  மீனவ மக்களிடத்தில்  வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை வட கிழக்கு மாகாணப் பகுதி மற்றும் சிங்களவர், மீனவர்கள் வாழ்கின்ற பகுதியில் இருக்கக்கூடிய, மீனவர்கள்  மிகப்பெரிய அளவில் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டம் நடத்திவரும் சூழலை நாம் பார்க்கிறோம்.  தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கின்ற போது இலங்கையில் வாழுகின்ற மீனவர்களும்,  நம் தொப்புள் கொடி உறவு என்கின்ற அடிப்படையில் மீன்களை பிடிக்க வேண்டுகிறேன்.

இந்நிலையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தாமல் மீன் பிடித்தால் இருநாட்டு மீனவர்களுக்கும் வாழ்வளிக்கும். எனவே இலங்கையில் உள்ள மீனவர்களுக்கும் இந்திய தமிழக மீனவர்களுக்கும், இந்திய அரசும், இலங்கை அரசும், முறையான மீன்பிடி வழிகாட்டும் ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டு நாட்டு அரசு வழி காட்டும் வழியில் மீன் பிடித்தால் இந்த பிரச்சினைக்கு மிகப்பெரிய தீர்வு கிடைக்கும். எனவே  இந்திய அரசும் இலங்கை அரசும் ஒரு முறையான, சட்டபூர்வ  மீன்பிடி முறையை,  சட்ட திட்டங்களை வகுத்து இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கும் வகையில் மீன்பிடி புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான், தமிழக மீனவர்களின் கோரிக்கை.

இரண்டு நாட்டு அரசும் இதை செயல்படுத்தும் என்று நம்புகிறோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கச்சத்தீவை மீட்டால் தமிழக மீனவர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிப்பார்கள்,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு தெளிவான அழுத்தங்களைக் கொடுத்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

https://www.ilakku.org/kachchativu-welcome-and-resistance/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் Tamils for Biden இந்த தீவை வாங்கி, கடற்பூங்கா, மீனவர்கள் இளைபாற இடம், கொடுக்கல் வாங்கலிற்கு HSBC வங்கியின் ஒரு கிளை என முன்னேற்றினால் பிரச்சனை தீர்ந்துவிடும்.. 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பேசாமல் Tamils for Biden இந்த தீவை வாங்கி, கடற்பூங்கா, மீனவர்கள் இளைபாற இடம், கொடுக்கல் வாங்கலிற்கு HSBC வங்கியின் ஒரு கிளை என முன்னேற்றினால் பிரச்சனை தீர்ந்துவிடும்.. 

 

Bikini Island

”it’s neither India, nor Sri Lanka - it’s a Paradise”. 
 

கச்ச தீவு

” இது இந்தியாவும் இல்லை, இலங்கையும் இல்லை - பூலோக சொர்கம்”.

- Tourism Development Board, BI

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

Bikini Island

”it’s neither India, nor Sri Lanka - it’s a Paradise”. 
 

கச்ச தீவு

” இது இந்தியாவும் இல்லை, இலங்கையும் இல்லை - பூலோக சொர்கம்”.

- Tourism Development Board, BI

அப்படியே நாதமுனி அண்ணாவை இந்த Boardற்கு Directorஆக நியமித்தால் .. சொல்லி வேலையில்ல!! நிறைய திட்டங்கள் அவரிடம் இருக்கு.. பிறகு கச்சதீவு,  Las Vegas, Monte Carlo levelற்கு வந்துவிடும்.. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்ச தீவை பற்றி எமது அரசியல், சமூக, செல்வாக்கு உள்ளவர்கள் அடக்கி வாசிக்க  வேண்டும்.

இதை வைத்து சிங்களமம், கிந்தியாவும், தமிழ்நாட்டின் ஈழத்தமிழர் மீதான அக்கறையை அணைக்க பார்க்கிறது.

கச்ச தீவை திருப்பி தரமுடியாது என்ற ஓங்கிய குரல்களின் பின்பே, மிலிந்த, முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றதையும் தற்செயலலானது என்று எடுக்க முடியாது.

அததற்காக முதல்வராய் இங்கு குறை கூறவில்லை.  

கச்ச தீவை உணர்வு அடிப்படியில் அணுகுவதை தவிர்க்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு அது உணர்வு பிரச்சனையும் கூட.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

Bikini Island

”it’s neither India, nor Sri Lanka - it’s a Paradise”. 
 

கச்ச தீவு

” இது இந்தியாவும் இல்லை, இலங்கையும் இல்லை - பூலோக சொர்கம்”.

- Tourism Development Board, BI

கச்சதீவு பிரச்சனை இல்லைய. அதனையொட்டி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களால்தானே பிரச்சனை. 

இந்திய-இலங்கை கடல் எல்லையை தாண்டாதவகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே சிறந்த தீர்வாக அமையும். 

மிகுதி அனைத்தும், முற்றத்தில் தொலைத்துவிட்டு கொல்லைப்புறத்தில் தேடுவதாகவே அமையும். 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு  ஈழத்தமிழருக்கு தேவையில்லாத ஆணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

கச்ச தீவை பற்றி எமது அரசியல், சமூக, செல்வாக்கு உள்ளவர்கள் அடக்கி வாசிக்க  வேண்டும்.

இதை வைத்து சிங்களமம், கிந்தியாவும், தமிழ்நாட்டின் ஈழத்தமிழர் மீதான அக்கறையை அணைக்க பார்க்கிறது.

கச்ச தீவை திருப்பி தரமுடியாது என்ற ஓங்கிய குரல்களின் பின்பே, மிலிந்த, முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றதையும் தற்செயலலானது என்று எடுக்க முடியாது.

அததற்காக முதல்வராய் இங்கு குறை கூறவில்லை.  

கச்ச தீவை உணர்வு அடிப்படியில் அணுகுவதை தவிர்க்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு அது உணர்வு பிரச்சனையும் கூட.

 

8 hours ago, Kapithan said:

கச்சதீவு பிரச்சனை இல்லைய. அதனையொட்டி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களால்தானே பிரச்சனை. 

இந்திய-இலங்கை கடல் எல்லையை தாண்டாதவகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே சிறந்த தீர்வாக அமையும். 

மிகுதி அனைத்தும், முற்றத்தில் தொலைத்துவிட்டு கொல்லைப்புறத்தில் தேடுவதாகவே அமையும். 

😉

 

5 hours ago, குமாரசாமி said:

கச்சதீவு  ஈழத்தமிழருக்கு தேவையில்லாத ஆணி.

என்னை பொறுத்தவரை கச்ச தீவு என்பது தேவையில்லாமல் தமிழ் நாட்டில் உணர்வு பூர்வமாக்க படுகிறது.

அதே நேரத்தில் கைச்சாத்தான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தை மீள பெற்று அத்தனை தமிழர்களையும் அவர்கள் சந்ததையையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப சொன்னால் எப்படி அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் இதுவும் (அப்படி செய்தாலாவது இலங்கையில் தமிழர் எண்ணிக்கை கூடும்).

இங்கே உண்மையான பிரச்சனை அத்துமீறிய மீன் பிடி.

முதல்வர் ஸ்டாலின் யதார்தவாதியாக தெரிகிறார். இலங்கை மீனவர் பிரதிநிகளை அழைத்து உண்மையை விளங்கி கொண்டு, அதன் பின் தமிழ்நாட்டு முதலாளிகளை கட்டுபடுத்த வேண்டும்.

கூடவே தமிழ்நாட்டின் கடலில் வழித்து ஒழிக்கப்பட்ட மீன் வளத்தை மீள வளர்தெடுக்கும் நடவைக்கைகளிலும் ஈடுபடல் வேண்டும்.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.