Jump to content

இலங்கை நெருக்கடி: அகதிகளை பழைய படகுகளில் அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் - அதிகாரிகள் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: அகதிகளை பழைய படகுகளில் அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் - அதிகாரிகள் கூறுவது என்ன?

9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பழைய படகுகளில் இலங்கை அகதிகளை அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 11) கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அம்பாறை பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த படகு கடற்படை அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த படகில் சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

 

பழைய படகுகளில் இலங்கை அகதிகளை அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

அத்துடன், ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் கடந்த மே மாத இறுதி வரை 2,88,645 கடவுச்சீட்டுக்கள் (பாஸ்போர்ட்) விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பழைய படகுகளில் இலங்கை அகதிகளை அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

2021ம் ஆண்டு முழுவதும் 3,82,506 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் மூன்று லட்சத்தை அண்மித்த கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் தொடர்ந்தும் காத்திருப்பதை நாளாந்தம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் ஐந்து லட்சத்தை அண்மித்தோர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை பல மடங்குகளாக அதிகரித்துள்ளன.

 

பழைய படகுகளில் இலங்கை அகதிகளை அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 1,20,000க்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100 வீதம் அதிகரிப்பு என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை

இலங்கையிலிருந்து தற்போது அதிகளவிலானோர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக, இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்காக பாவனைக்கு உதவாத பழைய படகுகளே பயன்படுகின்றமை உறுதியாகியுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

பழைய படகுகளில் இலங்கை அகதிகளை அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

''ஆட்கடத்தல்காரர்களே மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதாக உணர முடிகின்றது. மக்கள் கஷ்டத்தில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில், நல்லதொரு நாடு இருக்கின்றது என போலியாக அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு பழைய படகுகளை பயன்படுத்தியே, இவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். அது மிகவும் அபாயகரமானது. அதுவே அச்சப்படக்கூடியதாக உள்ளது. பழைய படகுகளில் செல்லும் போது, கடல் சீற்றம் அடைந்தால், அனைத்தும் முடிந்து விடும். இந்த படகு வெளிநாட்டு கடல் எல்லைக்குள் சென்றதன் பின்னர், மீண்டும் ஆட்கடத்தல்காரர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால், பாவனைக்கு உதவாத பழைய படகுகளையே இதற்காக பயன்படுத்துகின்றனர்" என கடற்படை பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சட்டவிரோதமான வெளிநாடுகளுக்கு செல்வோரை, அந்தந்த நாடுகள் உடனடியாக திருப்பி அனுப்பி வைக்கும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா கூறுகின்றார்.

''இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்வோரை, அந்த நாடு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி விடும். இதனால், தேவையற்ற விதத்தில் பணத்தை வீண்விரயமாக்க வேண்டாம் என்றே கூற வேண்டியுள்ளது. இவ்வாறு செல்வோரை நாம் எப்படியாவது கைது செய்வோம். இல்லையென்றால், கடலில் செல்லும் போது, அவர்கள் உயிரிழக்கக்கூடும். அவர்களை பாதுகாக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்ற இரு குழுக்களை, ஆஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் விமானம் மூலம் நாடு கடத்தியிருந்தது.

12 பேரை கொண்ட இலங்கையர்களை கடந்த மே மாதம் 24ம் தேதியும், 15 பேரை கொண்ட இலங்கையர்களை கடந்த 9ம் தேதியும் ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியிருந்தது.

இதேவேளை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் செல்வதற்கு அதிகபட்சமாக சுமார் 10 லட்சம் இலங்கை ரூபாய், ஆட்கடத்தல்காரர்களினால் கோரப்பட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைக்கின்றது.

இவ்வாறு ஆட்கடத்தல்காரர்களுக்கு வழங்கப்படும் பணம் முழுமையாக வீண்விரயமாகும் எனவும், அந்த பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதனால், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை அதிகாரிகள், பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61776751

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.