Jump to content

பாக்கெட்டில் வைத்தாலே "சார்ஜ்' ஆகிவிடும் மொபைல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cqs1186530365z.jpg

லண்டன்: மொபைல் போன், "சார்ஜ்' தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, "சார்ஜ்' செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான் பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர்.

இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, "பேஸ்மேக்கர்" கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், "சார்ஜ்' செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

"பேஸ் மேக்கர்' கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், "பேஸ்மேக்கர்' இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, "பேஸ் மேக்கர்' கருவியில், மிகச்சிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், மின்சக்தியை ஏற்படுத்தி, அதை பேட்டரிக்கு தருகிறது. இப்படி, "பேஸ் மேக்கரில்' சக்தி வாய்ந்த, "ஜெனரேட்டர்' இயங்கி, இதயத்துடிப்பு அதிர்வை வைத்து மின்சக்தியை ஏற்படுத்தும் போது, அதே பாணியில், ஏன் மொபைல் போனில், "சார்ஜ்' செய்ய முடியாது? என்று, எண்ணினர் விஞ்ஞானிகள்.

பிரிட்டனில் உள்ள சவுதாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவ் பீபே தலைமையில் குழுவினர், இது தொடர்பாக ஆராய்ந்து வந்தனர். மொபைல் போன் மட்டுமல்ல, எம்.பி.3 மியூசிக் சிஸ்டம், ஐபாட் போன்றவற்றுக்கு கூட, இப்படிசிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவியை பொருத்தி, அதன் மூலம் மொபைலுக்கு மின்சக்தியை தர முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

மொபைல் பயன்படுத்துவோர், "சார்ஜ்' செய்ய, தனியாக சார்ஜரை தேடாமல், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தாலே போதும். பாக்கெட்டுக்கு அருகே உள்ள இதயத்தின் துடிப்பால், மொபைல் போனில் உள்ள, "ஜெனரேட்டர்' இயங்கி, மின்சக்தியை தந்து, "சார்ஜ்' செய்துவிடும். சோதனை முழு வெற்றி அடைந்தவுடன், இந்த நவீன முறை அமலுக்கு வரும்.

குமுதம்

Link to comment
Share on other sites

அட நல்லா இருக்குதே............ஆமாம் எனக்கு பெரிய கரச்சல் நம்ம போன் சார்ஜ் போய் கொண்டே இருக்கும்...........கதைக்கவும் ஏலாம இருக்கும் எனி அந்த பிரச்சினை இல்லை...........கிஷாண் அண்ணா தாங்கள் வாங்கவில்லையா........... :( :P

Link to comment
Share on other sites

பக்கவிளைவுகள் ஏதும் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கவிளைவுகள் ஏதும் இல்லையா?

பக்க விளைவைப் பற்றி இப்பவே ஆராய்ஞ்சா எப்படி இதை வைச்சு காசு பாக்கிறது..??! :(:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கவிளைவுகள் ஏதும் இல்லையா?

உலகத்திலை எந்த தொழில்நுட்பத்திலை பக்கவிளைவு 100% இல்லை என்று ஒரு உதாரணம் உங்களாலை சொல்லமுடியுமா? :lol:

உதெல்லாம் பார்த்தால் வேலைக்காகாது.. ;)

Link to comment
Share on other sites

எனக்கு அடிக்கடி வேகமாக துடிக்கும். சரி இனி எல்லா ரெலிபோனையும் என்னிடமே கொண்டுவாங்கோ

தகவலிற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா லேசாகி விட்டதே.

எப்போ இருந்து விற்பனைக்கு வருது?

Link to comment
Share on other sites

பெண்களிற்க்கு ரொம்பவேகமாவே சார்ஜ் ஆகிடுமே :o

ஏன் வான்வில் அண்ணா??? :o :P

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாணவர், Justin Floyd என்பவர்,2001இல், காந்த புல இயக்கம் (Magnetic Induction Technology, as used in a human-powered torch)மூலம் இயங்கும் கைத் ெதாலைபேசி charger ஒன்றை கண்டு பிடித்துள்ளார். இதன் பெயர் Electric Doughnut. இது வளைய வடிவான பொருள்.

லண்டன் நிலத்துக்கடி தொடரூந்தில் பயணிக்கும் போது, அதன் ஆட்டத்தில் இந்த வளைய வடிவான பொருளின் உள் இருக்கும் இரு குண்டுகள் , காந்த புல இயக்கம் மூலம் மின்னை பிறப்பிக்குமாம். இதனை சட்டைப் பையினில் வைத்துக் கொள்ளலாம். மின்சாரம் இல்லாத இடத்தில் நிற்கும் போது குலுக்கி மின்னை உருவாக்கலாம். அல்லது!!

jogging :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செல்போன் வைத்திருப்பவர்கள் யாரும் இனி இதயத்தை இரவல் கொடுக்கவோ அல்லது இடம் மாற்றவோ கூடாது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கெட்டில் வைத்தாலே "சார்ஜ்' ஆகிவிடும் மொபைல்!

இதில் பக்கவிளைவுகள் அதிகமாகத்தான் இருக்கும்

Link to comment
Share on other sites

எனக்கு அடிக்கடி வேகமாக துடிக்கும். சரி இனி எல்லா ரெலிபோனையும் என்னிடமே கொண்டுவாங்கோ

தகவலிற்கு நன்றி

சாறத்திற்கு பாக்கெட் தைச்சு போட்டிருப்பாங்களோ?? :):D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.