Jump to content

பித்தப்பை (Gallbladder)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. இந்தப் பித்தப்பை இல்லாமல் மாந்தர் உயிர் வாழமுடியும். அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் பித்தப்பை நீக்கம் எனப்படும்.

 பித்தப்பைக்கல் அல்லது பித்தக்கல் என்பது பித்தத்தில் அடங்கியுள்ள பொருட்கள் ஒன்றாகச்சேர்ந்து இறுக்கமடைந்து உருவாகும் படிகத் திரளமைப்பு ஆகும். இந்தக் கற்கள் பித்தப்பையில் உருவாகினாலும் கல்லீரல், பித்தப்பை, பித்தக்கான்கள் அடங்கியுள்ள கல்லீரல்-பித்தப்பைத் தொகுதியின் பித்தப்பைக்கான், பொதுப் பித்தக்கான், கணையக் கான், வாட்டரின் குடுவையம் முதலிய வழிகளுக்குச் செல்லக்கூடியது.

பித்தப்பையில் பித்தக்கற்கள் தேங்கியிருப்பது அழற்சி தொடர்புடைய இடர்ப்பாடான கடிய பித்தப்பையழற்சிக்கு வழிகோலலாம். கடிய பித்தப்பையழற்சியில் பித்தம், பித்தக்கற்கள் பித்தப்பையில் தேங்கியிருப்பதால் குடல் நுண்ணுயிரிகளால் இரண்டாம்நிலைத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. ஏனைய பித்தவழிகளில் கற்கள் தேங்குதல் பித்தக்கான்களில் அடைப்பை ஏற்படுத்தும். இந்நிலைமை கணையவழற்சி, பித்தக்கான் அழற்சி போன்ற பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரு இடர்ச் சந்தர்ப்பங்களும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இவை அவசரநிலை மருத்துவ தேவைகளாகக் கருதப்படுகின்றன.

 

 தகவல் ... விக்கி பீடியா 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி.......ஒரு படமும் போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும் சகோதரி..........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

தகவலுக்கு நன்றி.......ஒரு படமும் போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும் சகோதரி..........!  👍

Gallstones : பித்தப்பையில் கல் இருக்கா... நீங்களே கண்டுபிடிக்க எளிய வழி..

S Dhanalakshmi | Samayam TamilUpdated: 21 Feb 2020, 4:40 pm
 
 
 
 
 
 
 
 
Subscribe
 
samayam-tamil.jpg
பித்தப்பை கற்கள் பிரச்சனைக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பொதுவாக எல்லா நோய்களுமே அறிகுறிகளால் தங்கள் வரவை உணர்த்திவிடுவதுண்டு. ஆனால் உடலில் வளர்ந்து வரும் பித்தப்பை கற்கள் எந்தவிதமான அறிகுறிகளையும் காண்பிக்காது. வேறு ஏதேனும் உடல் உபாதை இருந்து ஸ்கேன் எடுக்கும் போது பித்தப்பையில் கல் இருப் பதை அறியலாம். அப்படி அறிந்தால் நீங்கள் உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வந்து அது தீவிரமாகாமல் பார்த்து கொள்ளலாம்.
 

பித்தப்பை கல் அளவுக்கு மீறி பெரியதாக ஆகும் போதுதான் அடிவயிற்றில் வலி, முதுகு கீழ் வலி, சில நேரங்களில் பித்தப்பை அழற்சியால் காமாலை என விபரீதமான தாங்க முடியாத வலியின் போது தான் இதை உணர முடியும். இதனால் சமயத்தில் பித்தப்பை உறுப்பையும் நீக்க வேண்டியதாகிவிடுகிறது. இந்த பித்தப்பை கற்களுக்கு காரணங்கள் என்ன எப்போது அறியலாம் என்பதையும் தெரிந்துகொள்வோம்.
 

பித்தப்பை

samayam-tamil.jpg

பித்தப்பை என்பது நம் உடலில் ஈரலுக்கு கீழ் அமைந்திருக்கிறது. இது பித்தம் சுரக்க உத வுகிறது, இவை அதிகரிக்கும் போது தான் அந்த சுரப்பு அதிகரித்து கல்லாக மாறுகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் ஈரலில் இருந்து சுரக்கும் பித்த நீரை சேமிக்கும் பை தான் பித்தபை. இதில் தான் பித்த நீர் சேர்ந்திருக்கும்.

 

 

உடலுக்கு பித்த நீர் தேவைப்படும் போது அவை சிறிது சிறிதாக குடலுக்குள் அனுப்பும். இதில் பித்தப்பை கற்கள் என்பது பித்தநீர் இறுகி சற்று அடர்ந்து சேறு போன்று கடினமாகி கற்களாக மாறும்.பித்தப்பை கற்கள் சட்டென்று கண்டுபிடிக்கமுடியாது. இவை சிறிது சிறிதாக வளர்ந்து பெரிய கற்களாக பித்தப்பைக்குள் இருக்கும் இதை ஸ்கேன் செய்யும் போது மட்டும் தான் கண்டறிய முடியும்.

பித்தப்பை கற்கள் யாருக்கு? எதனால்?

samayam-tamil.jpg
 

ஆண்கள், பெண்கள், வளர்ந்து வரும் சிறிய குழந்தைகள் வரை தற்போது அதிகரித் துவரு கிறது. பித்தப்பை கற்களுக்கு இதுவரை உறுதியான காரணம் சொல்லப்படவில் லை. உதாரணமாக சிறுநீரக கல் வருவதற்கு காரணம் கால்சியம் அதிகரிப்பு என்று சொல்வதுண்டு. ஆனால் பித்தப்பை கற்களின் தன்மையை பார்க்கும் போது அப்படி சொல்ல முடியவில்லை. பித்தப்பை கற்களில் 80 % கொழுப்பும், 20 % உப்பும் காணப் படுகிறது. அல்லது 20 % கொழுப்பும் 80% உப்புமாக மாறியும் இருக்கிறது.

பொதுவான காரணம்

samayam-tamil.jpg
 

உடலில் பித்தம் அதிகமாகும் போது இந்த கற்கள் வர வாய்ப்புண்டு. செரிமானத்துக்கு தேவையான பித்த நீர் அதிக அளவு சுரக்கும் போது இந்த கற்கள் வருகிறது. உடல் உஷ் ணம் அதிகமாகும் போது இவை உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகிறது. உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதும், அடிக்கடி விரதம் மேற்கொள்வதாலும் இந்த பித்தநீர் பித்த கற்களாக மாறுவதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

 

பெண்களை மட்டுமே குறிவைக்கும் மார்பு வலி ஏன்? தவிர்க்க முடியுமா?

 

உடலில் கொழுப்பு அமிலங்கள் செரிமானத்தன்மைக்கு குறைவாக இருந்தாலும் இந்த பித்தம் அதிகமாவதாக தெரிவிக்கிறார்கள். ஈரலில் ஏதேனும் குறைபாடு இருந்தாலும் கூட இந்த கற்கள் உண்டாகலாம் என்றும் சொல்கிறார்கள்.இன்னும் சொல்லபோனால் அதி கப்படியான மன உளைச்சலை கொண்டிருப்பவர்களுக்கும், எப்போதும் மன அழுத் தத்தோடு இருப்பவர்களுக்கும் கூட இந்த பாதிப்பு உள்ளாவதாகவும் கூறுகிறார்கள்.

கண்டறிய முடியுமா?

samayam-tamil.jpg
 

அந்த காலத்தில் முன்னோர்கள் பித்தம் அதிகமாக இருப்பதை உடலை தடவி கண்டறிந்து விடுவார்கள். இதை நீங்களும் எளிதாக கண்டறிய முடியும். நேராக நிமிர்ந்து கொள்ளுங் கள். உங்கள் விலா எலும்பை நிமிர்த்தும் அளவுக்கு,. இப்போது உங்கள் உள்ளங்கையை உங்கள் வலது பக்கம் வயிற்றின் கீழ் மெதுவாக சிறிது சிறிதாக நகர்த்துங்கள். விலா எலும்பின் கடைசி எலும்பின் கீழ் தான் ஈரல் உறுப்பு உண்டு. அப்போது மூச்சை வேகமாக இழுத்து மெதுவாக வெளியே விட்டபடி அங்கு உள்ளங்கையை அழுத்தும் போது பித்தப்பை கற்களால் வீங்கியிருந்தால் உள்ளங்கையில் தட்டுப்படும்.

 

கற்கள் பித்தப்பையிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்தால் மூச்சு விடும்போது வலியையும் உணர முடியும். இதை உணரமுடியுமா என்கிறீகளா? கண்டிப்பாக உணர முடியும், பெண்கள் கர்ப்பக்காலத்தில் குழந்தையின் அசைவை வயிற்றில் கை வைத்து உணர்வது போன்று இந்த வீக்கமும் உள்ளங்கையில் தட்டுப்படும்.

வேறு அறிகுறி

samayam-tamil.jpg

சிலர் சரியான நேரத்தில் சாப்பிடுவார்கள். ஆனாலும் செரிமானம் பிரச்சனை நெஞ்சு எதுகளிப்பு போன்றவை இருக்கும் போது இந்த அறிகுறி பித்தப்பை கற்களை உணர்த்தும். அதிலும் அல்சர் இல்லாதவர்களுக்கு இந்த அறிகுறி தென்பட்டால் கண்டிப்பாக அது பித்தப்பை பிரச்சனையாகவே இருக்கலாம்.

 

சிலர் கொழுப்பு நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளும் போதும் நெஞ்செரிச்சலும், நெஞ்சில் வலி, வயிறு உப்புசம் போன்றவை இந்த உணவு எடுக்கும் போதெல்லாம் வந்தால் இது பித்தப்பை கல்- ஆக இருக்கலாம் என்ற நிலையில் பரிசோதனை செய்வது நல்லது. மருத்துவர்களை அணுகும் போதே அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனையில் கற்களின் அளவு தெளிவாக தெரியும். பிறகு இதற்குரிய சிகிச்சைகள் செய்வார்கள்.

என்ன சிகிச்சை

samayam-tamil.jpg

மருத்துவர்கள் 12 mm மேல் வந்தால் பித்தகல்லை நீக்கவோ, பித்தப்பை நீக்குவதோ உண்டு. இதில் கவனிக்க வேண்டியது பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் நீரிழிவு பாதிப் புக்கு உள்ளானவர்களாக இருந்தால் அவர்கள் கண்டிப்பாக இந்த கற்களுக்கான சிகிச் சையை எடுத்துகொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்தில் இதை கண்டறிந்தால் உணவு பழக்கங்கள் வழியாக குறைக்க பழக வேண்டும்.

 

சர்க்கரை கட்டுப்படாமல் இருக்கும் போது பித்தப்பை கற்கள் தீவிரமாகும் போது அவை மஞ்சள் காமாலையாக மாறலாம். ஈரல் தொற்று வரை பாதிப்பை உண்டாக்கும். உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் கவனமாக கடப்பதன் மூலம் இந்த பாதிப்பு தீவிரமாகாமல் பார்த்து கொள்லலாம்.

தவிர்க்க

samayam-tamil.jpg

நேரத்துக்கு சாப்பிடுங்கள். உணவிலும் சத்தானதை எடுத்துகொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை எடுத்துகொள்ள வேண்டும். சித்த மருத்துவத்தில் நீர் முள்ளி பொடியை கொதிக்கும் நீரில் கலந்து வடிகட்டி குடிக்கலாம். எண்ணெய் நிறைந்த உணவுகள் எல்லாமே பித்தத்தை அதிகமாக்க கூடியவை.இதை தவிர்க்க வேண்டும். கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்கவேண்டும்.

 

சர்க்கரை நோய் : எச்சரிக்கை.. இந்த அறிகுறிகள் சர்க்கரை நோய் தொடக்கத்துக்கான அலாரமாகவும் இருக்கலாம்..

 

தினமும் காலையில் டீ, காபி போன்ற பானங்களை எடுக்க கூடாது. மாறாக நெல்லிக்காயை அடித்து அதில் இனிப்பு, உப்பு சேர்க்காமல் பொறுமையாக உமிழ்நீரோடு கலந்து குடித்தால் பித்தம் குறையும். இரவில் நீண்ட நேரம் விழிக்காமல் ஆழ்ந்த உறக்கம் 6 அல்லது 7 மணி நேரமாவது இருக்க வேண்டும். மன உளைச்சல் இருந்தால் அதை குறைக்க முயற்சி செய்வதும் கூட பித்தப்பை கற்களின் அளவை குறைத்து வெளியேற்ற முயற்சி செய்யும்.

https://tamil.samayam.com/lifestyle/health/causes-and-symptoms-for-gallbladder-stones/articleshow/74239428.cms?story=7

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளக்கமான கட்டுரை .....நன்றி ஏராளன்..........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பதிவு.  இணைத்தமைக்கு நிலாமதி மற்றும் ஏராளன் ஆகியோருக்கு நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இதை நிதானமாக வாசிக்க முடிந்தது.

இணைப்புக்கு நிலாமதி அக்காவுக்கும் ஏராளனுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.