Jump to content

பூவா, தலையா சொல்லி கரு பாலினத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி மையங்கள் - சிறப்புச் செய்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூவா, தலையா சொல்லி கரு பாலினத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி மையங்கள் - சிறப்புச் செய்தி

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருவில் இருப்பது பூவா தலையா? பூ என்றால் பெண் குழந்தை, தலை என்றால் ஆண் குழந்தை. இதுபோன்ற குறியீட்டுச் சொற்களை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஸ்கேன் மையங்களில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சொல்வதற்கு பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை 'பெண் குழந்தை' என தெரிய வந்தால் போலி மருத்துவர்கள் மூலமாக கருக்கலைப்பும் நடைபெறுகிறது என்று தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், தருமபுரியில் வனஜா என்ற கர்ப்பிணி பெண் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்ததும், போலி மருத்துவர்கள் மூலம் பணம் செலுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். முறையாக மருத்துவம் பயிலாத போலி மருத்துவர்கள் வனஜாவின் வயிற்றில் இருந்த கருவை அகற்ற முடியாமல் வயிற்றுக்குள் கரு சிதைந்த நிலையில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீடு திரும்பிய வனஜா வலியால் அவதிப்படவே, அவரது தாய் அவரை அவரச சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோதுதான், போலி மருத்துவர்களின் உதவியுடன் கருச்சிதைவு நடைபெற்றது என அரசு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

தொடர்ச்சியாக சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வனஜாவுக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு, அவர்களிடம் நவீன ஸ்கேன் கருவி இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த கும்பல் பல கர்ப்பிணி பெண்களை ஒரு வீட்டுக்கு வரவழைத்து ஸ்கேன் செய்து கருக்கலைப்புக்கு ஊக்குவித்தும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கருக்கலைப்பு எவ்வாறு எளிதாக நடைபெறுகிறது என பிபிசி தமிழ் தகவல்களை சேகரித்தது. பெண்கள் அமைப்புகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலரிடமும் பேசினோம். ஸ்கேன் மையங்களை நடத்துவோர்கள் பேச முன்வரவில்லை.

ஆனால் கருக்கலைப்பு செய்ய உறவினர் பெண் ஒருவரை அழைத்துச் சென்ற பெண் தனது அடையாளங்களை மறைத்து கள நிலவரத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

முதலில், ஸ்கேன் மையங்களில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் குறித்து கேட்டபோது, சமூக ஆர்வலர் செந்தில்ராஜ் தெளிவுபடுத்தினார்.

''பல ஸ்கேன் மையங்களில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் குறியீடுகள் மூலம் பாலினம் சொல்லப்டுகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் கருக்கலைப்பு பரவலாக நடக்கிறது என்பதற்கு அவவ்போது பதிவாகும் வழக்குகள் சாட்சியாக உள்ளன. ஸ்கேன் மையங்களில் கருவில் உள்ள குழந்தை பூ என்றால் பெண் குழந்தை என்றும் தலை என்றால் ஆண் குழந்தை என்றும் சங்கேதமாக பாலினம் சொல்லப்படுகிறது. வெகு எளிதில் பாலினத்தை தெரிந்துகொண்டு, பல பெற்றோர் கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பெண் குழந்தை என தெரியவந்தால், கருக்கலைப்பு செய்யும் நடைமுறை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காணப்படுகிறது,''என்கிறார் செந்தில்ராஜ்.

வேலைவாய்ப்பின்மை மற்றும் சாதிமறுப்பு திருமணங்களும் பெண் கருக்கொலைக்கான காரணங்களாக இருப்பதாக விவரித்தார் அவர். ''தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பலர் பெங்களூரு, கேரளா, சென்னை என வெளியிடங்களுக்கு சென்று வேலைபார்க்கவேண்டிய கட்டாயம் உள்ளது. தொழில் வளர்ச்சி இங்கு குறைவு. குழந்தைகளை வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி வளர்க்கிறார்கள் என்பதால், இளவயது திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன.

 

கரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதோடு, முன்னைவிட, சாதிமறுப்பு திருமணங்கள் அதிகரித்துவிட்டன. அதிலும் தருமபுரியை பொறுத்தவரை, வன்னியர்-தலித் சமூகங்களுக்கு இடையே பதின் பருவ சிறார்கள் இடையே திருமணங்கள் நடைபெறுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. பதின்பருவத்தில் சாதி மாறி பெண் குழந்தைகள் திருமணம் செய்துகொள்வதை பெற்றோர்கள் அவமானமாக கருதுகின்றனர். வேலைவாய்ப்பு தேடி அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லவேண்டிய நிர்பந்தத்தில் உள்ள பெற்றோர்களால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியவில்லை என்பதால் ஒரு பெண் குழந்தை இருந்தால் போதும், இரண்டாவது அல்லது மூன்றாவது பெண் குழந்தை என தெரியவந்தால், கருக்கலைப்பு செய்துவிடவேண்டும் என எண்ணுகிறார்கள்,''என்கிறார்.

மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் செய்யவேண்டிய செலவுகளும் பெற்றோர்களை கருக்கலைப்புக்கு தள்ளுகிறது என்கிறார்.

''முன்னைவிட விலைவாசி கடுமையாக அதிகரித்து விட்டது. வறுமையில் வாழும் பெற்றோர்கள் இனிவரும் காலங்களில் தங்களது வருமானத்தை வைத்து பெண் குழந்தைகளுக்கு செலவு செய்யமுடியுமா என வேதனையில் உள்ளனர். இந்த தவிப்பில்தான் கருக்கலைப்பு செய்துகொள்ள போலி மருத்துவர்களை நாடுகிறார்கள்,'' என்கிறார் செந்தில் ராஜ்.

தேசிய குடும்ப நல ஆய்வின்படி, தமிழ்நாட்டில், 2015-16ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 954 பெண் குழந்தைகள் இருந்தனர். அதே ஆய்வில் 2020-21ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 878 பெண் குழந்தைகள்தான் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதால்தான் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல பெண்களுக்கு குறைந்தது ஒருமுறையாவது கருக்கலைப்பு செய்துகொண்ட அனுபவம் இருக்கும் என்கிறார் தருமபுரியைச் சேர்ந்த வள்ளி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ''என் உறவினர் பெண்ணுக்கு தற்போது வயது 25. அவருக்கு 17 வயதில் திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது, நான்காவதும் பெண் குழந்தை என தெரியவந்ததால், கருக்கலைப்பு செய்யவேண்டும் என வீட்டு பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள். அவரது கணவருக்கு வேறு திருமணம் செய்யப்போவதாக அந்த பெண்ணை மிரட்டினார்கள். வேறு வழியின்றி நான் கருக்கலைப்புக்கு அழைத்துச்சென்றேன். எங்கள் ஊர்களில் பல பெண்கள் குறைந்தது ஒருமுறையாவது கருக்கலைப்பு செய்த்தவர்களாக இருப்பார்கள்,''என்கிறார் வள்ளி.

 

கரு

பட மூலாதாரம்,BSIP

மேலும் அவர், கிராமங்களில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வந்தால் அதற்கான தீர்வுகள் உடனடியாக கிடைப்பதில்லை என்பதாலும் பெண் குழந்தைகளை பெற்றோர் விரும்புவதில்லை என்கிறார். ''பெற்றோரின் கவனிப்பின்றி, வயதானவர்களின் மேற்பார்வையில்தான் பெரும்பாலான குழந்தைகள் வளர்க்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தால், புகார் தெரிவித்தாலும், அதில் நீதி கிடைப்பதற்கு பல காலங்கள் ஆகின்றன. இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தை தேவையில்லை என்றும் பெண் குழந்தையை கருவில் அழிப்பதை தீர்வாகவும் எண்ணுகிறார்கள்,''என்கிறார் வள்ளி.

தமிழ்நாட்டில் தொடரும் கருக்கலைப்பு சம்பவங்களைத் தடுப்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் பேசினோம். குறிப்பாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் ஏன் கருக்கலைப்பு தொடர்கதையாகவே உள்ளது என வினவினோம்.

''தருமபுரியில் கருக்கலைப்பு செய்த நபர்கள் கைதாகியுள்ளனர். தனியார் ஸ்கேன் மையங்கள் பலவும் பேராசை காரணமாக கருக்கலைப்பு செய்து அதிக காசு சம்பாதிப்பதில் குறியாக உள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஸ்கேன் மையங்களில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சொல்கிறார்களா என்ற சோதனை நடந்துவருகிறது. விதி மீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்போம். அதோடு தர்மபுரி மலை கிராமங்களில் இள வயது திருமணங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

அதுவும் கருக்கலைப்புக்கு ஒரு காரணாமாக உள்ளது. சமூக நலத்துறை மூலமாக நாடகம் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,''என்கிறார். மேலும், தமிழ்நாட்டில் பெண் கருக்கலைப்பை குறைப்பதற்கு சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-61784032

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.