Jump to content

இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடுமாயின் அதனை அனுமதிக்க முடியாது - சம்பிக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடுமாயின் அதனை அனுமதிக்க முடியாது - சம்பிக்க

 (எம்.மனோசித்ரா)

இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடுமாயின் அவற்றை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.

மின்சக்தி துறையை அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இலங்கை மின்சாரசபையின் தலைவர் எம்.எம்.சி.பேர்னாண்டோவினால் , அப்போதைய திறைசேறி செயலாளர் சஜித் ஆட்டிகலவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் , அதானி என்ற இந்திய நிறுவனத்திற்கு மன்னார் வலயத்தில் 500 மெகா வோல்ட் கற்றுமின் சக்தியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அதானி நிறுவனத்தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்து விமானத்தின் மூலம் இந்த பிரதேசத்தை கண்காணித்ததாக செய்திகள் வெளியாகின.

இதன் போது அவர்களுக்கு 6000 மெகாவோல்ட் சூரிய மற்றும் காற்று மின்சக்தி தேவைப்படுவதாக அப்போதைய அரசாங்கமும் நிறுவனங்களும் தெரிவித்தன.

ஆனால் இலங்கையில் நாளாந்த மின் தேவை 2500 மெகா வோல்ட் மாத்திரமேயாகும். அதானி என்பது தனியார் நிறுவனமொன்றாகும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு இவ்விடயத்தில் இரு அரசாங்கங்கள் தலையிட முடியும் என்பது கேள்விக்குரியதாகும்.

இது தொடர்பில் மின்சாரசபை தலைவர் கோப்குழுவில் தெரிவித்த கருத்தினை தற்போது வாபஸ் பெற்றுள்ள போதிலும் , அவர் திறைசேறி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி அதானி நிறுவனம், இலங்கை மின்சாரசபை, முதலீட்டுசபை, நிதி அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் 500 மெகா வோல்ட் மின் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அதானி நிறுவனம் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதற்கு உத்தியோகபூர்வ சான்றுகள் உள்ளனவா? மின்சாரசபை தலைவரின் கருத்தை ஜனாதிபதி மறுத்துள்ளார்.

அவ்வாறெனில் பிரதமரா இந்த ஆலோசனையை வழங்கியது? மின்சாரசபை சட்டத்தின் பிரகாரம் பிரதமருக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கும் அதிகாரம் கிடையாது. அமைச்சரவை அனுமதி உள்ளது என்று கூறப்படுவது இதற்கு பதில் அல்ல. காரணம் சட்டத்திற்கு முரணாக அமைச்சரவைக்கு செயற்பட முடியாது.

எனவே மன்னால் வலயத்தின் மின்சக்தி துறையை முழுமையாக அதானி தனியார் நிறுவனத்திற்கு வழங்கி நாட்டின் இறையான்மை காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சாரசபை சட்டத்தின் மூலம் , அதானி நிறுவனத்திற்கு இதனை வழங்குவதில் அரச தரப்பில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின் ஏனைய தரப்பினர் ஊடாக வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு மத்தியில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளை , இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுமாயின் அவற்றை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். மின்சக்தி துறையை அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/129410

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாடு, மருந்து, அரச ஊழியருக்கு சம்பளம், எரி பொருள், எரிவாயு... எதுவுமே இல்லை.
அதற்கு இந்தியாவின் உதவி இல்லாவிடில்... எப்பவோ, பட்டினி சாவு ஆரம்பித்து இருக்கும்.

ஆனால்... இலங்கையின் இறையாண்மை, கடலாமை என்று கொண்டு.... 
கொழுப்பு எடுத்த கதைகளுக்கு... குறைவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால்... இலங்கையின் இறையாண்மை, கடலாமை என்று கொண்டு.... 
கொழுப்பு எடுத்த கதைகளுக்கு... குறைவில்லை. 

அண்மையில் ஒரு திரி தொடர்ந்தது.

பிரான்சு அடிமையுரிமையாளர்  அடிமைகளை இழப்பதற்கான நட்ட இடை  பிரான்ஸ் கோரி, மீண்டும் ஹெய்ட்டி மீது படையெடுப்பதாக பிரான்ஸ் அச்சுறுத்த,  ஹெய்ட்டி சுதந்திரம், இறையாண்மையை பிரான்சிடம்  வாங்கியது அந்த நட்ட எடை கொடுத்து எனும் கருத்துப்பட பதிவு ன்று தொடர்ந்தது.

அதை yarl இல் யார் சொன்னார்கள் என்பதை பார்க்கிலும், சம்பிக்க சொன்னதில் உள்ள இறுமாப்பு (அதை நான் இறுமாப்பு என்று சொல்லமாட்டேன்) போன்றவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால் தெரிகிறது இறைமையை விலை (பணம், பொருள்) கொடுத்து வாங்க முடியாது என்று.

இது தான் இறையாண்மைமையை கொண்டுள்ள இனம் / தேசம் இடம் உள்ள தன்னம்பிக்கையும், துணிவும்.

இறையாண்மை என்பது தேசம் / இனம் முழுவதும், பரவி, வியாபித்து, புரையோடி இருப்பது; வாங்கும், விற்கும்   விடயம் அல்ல.

இறையாண்மை நிலை நாட்டப்படுவது (நீங்கள் சமபிகாவை எது சொன்னாலும்).

நான் நல்லூர் வாய் வழி வரலாற்றில் சொல்லிய கொடி கொடுப்பது என்பதை, ஒரு முறை எவரோ பலர் தமக்கு தரும் படி, கொடி  கொடி கொடுப்பவர்கள் சற்று நலிந்து இருக்கையில் கேட்டு இருக்கிறார்கள் என்பதே எனக்கு நினைவு வந்தது இறையாண்மையை வாங்கலாம், விற்கலாம் எனும் கருத்தை பார்த்தபோதும், இப்பொது சம்பிக்க சொன்னதை பார்த்த போதும்.

கொடி  கொடுப்பவர்கள் அப்படி நலிந்த நிலையில் கூட,  கொடி  கொடுக்கும் செலவுகளுக்கு நேரடியாந ஒரு சிறு உதவியையும் கேடகவில்லை.

அவர்களின் உறவுகள் எவரும் கூட   கொடி  கொடுக்கும் செலவுகளுக்கு நேரடியாக உதவ மறுத்து விட்டனர். உறவினர்கள், அவர்களின் வாழ்க்கைக்கு தேவையானதுக்கே செலவுகள், பொருட்கள் போன்றவற்றை கொடுத்தனர்.

இது ஓர் சிறிய ஒப்பீடு.  கொடி கொடுப்பதிலேயே இவ்வளவு இறையாண்மை இருக்கும் போது, தேசத்துக்கான இறையாண்மையை சிந்தித்து பாருங்கள். 

சொல்ல மறந்து விட்டேன், நல்லூர் கோயில் நிர்வாகம், உரிமையாளர் கூட இணங்கி இருக்க மாட்டார்கள் வேறு எவரும் கொடி கொடுப்பததற்கு.  
 

Link to comment
Share on other sites

சீனாவுக்கு எழுதி கொடுக்கப்பட்டவை பற்றி சம்பிக்க பேசவில்லை. அந்த நேரம் இறையாண்மை பாதிக்கப்படவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வேண்டுமானால் இடுப்பிலே கைபிடித்துத் தூக்கிவிட்டலாமேயன்றி இடுப்பிற்குக் கீழே கைவைத்தால் நடப்பதே வேறென்பதை எந்தவொரு தன்மானமுள்ளவரும் எதிர்க்கவே செய்வர். ஆனால் அப்படிச் சொல்லும் தகமை சிங்கள உயர்குழாச் சிந்தனைவாதச் சம்பிக்கவுக்கு இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இறைமை உள்ள நாடு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எல்லா வித உரிமைகளும் இருக்கு அது சிறீ லங்காவாக இருந்தாலும் என்ன தமிழர் நிலம் ஆகவிருந்தாலும் என்ன இன்று மன்னார்பகுதி நாளை கச்சதீவு இப்படி எதிர்காலத்தில் தமிழர் நிலம் எல்லாம் இந்தியனுக்குத் தாரை வார்த்துக்கொடுப்பதை யாழ் களத்தில் எவரும் விரும்பமாட்டார்கள் என அறிகிறேன்.

மோடி கொத்தாவை அழைத்து சீனாவுக்குக் கொடுக்கப்பட்ட மன்னாரை அதானிக்குக் கொடு இல்லையேல் நாம் போர்க்குற்றம் இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு உங்களுக்கு ஆதரவு தரமாட்டேன் எனக்கூறியது இப்போது சிங்களவர்களாலேயே வெளியில் வந்துவிட்டது.

நாளை வடபகுதிக்கடலில் பல இந்திய மீனவர்களை இந்தியாவே கொன்றொழித்துவிட்ட சிங்களம் செய்தது எனக்கூறி கச்சதீவை ஆக்கிரமிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Elugnajiru said:

ஒரு இறைமை உள்ள நாடு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எல்லா வித உரிமைகளும் இருக்கு அது சிறீ லங்காவாக இருந்தாலும் என்ன தமிழர் நிலம் ஆகவிருந்தாலும் என்ன இன்று மன்னார்பகுதி நாளை கச்சதீவு இப்படி எதிர்காலத்தில் தமிழர் நிலம் எல்லாம் இந்தியனுக்குத் தாரை வார்த்துக்கொடுப்பதை யாழ் களத்தில் எவரும் விரும்பமாட்டார்கள் என அறிகிறேன்.

மோடி கொத்தாவை அழைத்து சீனாவுக்குக் கொடுக்கப்பட்ட மன்னாரை அதானிக்குக் கொடு இல்லையேல் நாம் போர்க்குற்றம் இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு உங்களுக்கு ஆதரவு தரமாட்டேன் எனக்கூறியது இப்போது சிங்களவர்களாலேயே வெளியில் வந்துவிட்டது.

நாளை வடபகுதிக்கடலில் பல இந்திய மீனவர்களை இந்தியாவே கொன்றொழித்துவிட்ட சிங்களம் செய்தது எனக்கூறி கச்சதீவை ஆக்கிரமிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இன்னொரு இனத்தை(பூர்வீக குடிகளை)அழித்து பெரும் சிங்கள தேசத்தைப் படைக்க நினைத்ததன் பலாபலனை அறுவடை செய்வதற்கான நிகழ்வுநிரல் நகர்கிறது. ஆனால் இப்போதுகூடச் சிங்களம் திருந்தவில்லை. அப்படியொரு சிந்தனை மாற்றம் வந்திருந்தால் குருந்தூரை ஆக்கிரமிக்க கோத்தா  ஆட்களைத் திரட்டடி அனுப்பியிருக்கார். இப்போதாவது கடற்பலிகளது காலத்தை ஒருமுறை சிறிலங்கா, இனவாதக் கண்ணாடியைக் களற்றி வைத்துவிட்டு உற்றுநோக்கித் தமிழருக்கான இறையாண்மையை ஏற்றாலே 90வீதமான சிக்கல்களிலிருந்து இலங்கைத்தீவு விடைபெற்று சிறீலங்கா-தமிழீழம் என்ற நாடுகளாக அல்லது 'இலங்கை ஐக்கிய சமஷ்டிக் கூட்டரசு' என்றோ ஒருவருக்கொருவர் வழிவிடுவதே தீவினது மக்கள் நலனுக்கு ஏற்றதாகும். இல்லையென்றால் இந்தியா, சீனா, மேற்குலகும் அவர்களின் கிழக்கினது அடிவருடிகளும் பகுதி பகுதியாகத் தமது நலன்களை அடைவார்கள். இறுதியாக சிங்களவரும் தமிழரும் கையேந்தி நிற்கும் நிலைவரும். இன்று எம்மை அடிமையாக்கியதாக அடையும் புழங்காகிதம், நாளை உங்களையும் அடிமையாக்கப்போகிறது. 

Link to comment
Share on other sites

கோத்தபாய இழந்த தமது பலத்தை பெற மிக இலகுவான வழி இனவாதத்தை கையில் எடுப்பதாகும். வேறு எவ்வழியிலும் சிங்கள மக்களை சமரசமம் செய்ய முடியாது என்பது  மகிந்த குடும்பமல்ல அனைத்து சிங்கள அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா காசு இபொருட்கள் மட்டும் கொடுக்க வேண்டுமே ஒழிய இறையாண்மையில் கைவைக்கக் கூடாது.எடுக்கிறது பிச்சை இதற்கிடையில் இறையாண்மையும் மண்ணாங்கட்டியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-- தற் மொமன்ற் --

IMG-20220615-185801.jpg எனக்கு பழைய சோறு ஒத்துக்காது என்டு உனக்கு தெரியுமல்லொ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டு குடிமக்களின் உரிமைகளை பறித்து, அடிமைகளாக வைத்துக்கொண்டு இறையாண்மை கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? தன் மக்களை சமமாக நடத்த தெரியவில்லை, பிச்சை போடுகிற நாட்டுக்கு பாடம் எடுக்கிறார்கள். இறையாண்மை உள்ளவர்கள் ஏன் கையேந்த வேண்டும் இன்னொரு நாட்டிடம்?  இறையாண்மை என்னவென்று தெரியுமா இவர்களுக்கு? விலைபோன நாட்டுக்குள்  இறையாண்மை தேடுகிறார்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.