Jump to content

கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - திருமணமான ஐந்து நாளில் சோகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - திருமணமான ஐந்து நாளில் சோகம்

13 ஜூன் 2022
 

ஆணவ கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் மற்றஉம் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்தவர்கள் சேகர் மற்றும் தேன்மொழி தம்பதி (பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்). இவர்களுக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளார். தந்தை சேகர், மூத்த மகன் சக்திவேல் ஆகியோர் கொத்தனார் பணி செய்கின்றனர். மற்ற இரு மகன்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ஒரே மகளான சரண்யா நர்சிங் படித்து விட்டு சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

மருத்துவமனையில் மலர்ந்த காதல்

இதற்கிடையே, சரண்யாவின் தாயார் தேன்மொழி உடல் நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது அதே மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்னத்தெருவை சேர்ந்த (செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்த) மோகன் (26) என்பவரின் தாயாரும் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த நேரத்தில் சரண்யாவுக்கும் மோகனுக்கும் காதல் அரும்பியுள்ளது.

இருவரது தாயாரும் சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பிய போதும், காதலர்கள் இருவர் மட்டும் அலைபேசி வழியாக காதல் தொடர்புகளை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சரண்யாவும், மோகனும் சென்னையில் காதல் திருமணம் செய்துள்ளனர்.

இந்த ஜோடி இன்று காலை சோழபுரம் துலுக்கவேலியில் உள்ள சரண்யா வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் நண்பகல் உணவிற்கு பிறகு, மீண்டும் சென்னை செல்ல இருந்தனர். அப்போது சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், காதல் தம்பதி வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்டுள்ளனர்.

பிறகு, அரிவாளால் மோகனை வெட்ட முற்பட்டனர். அப்போது, மோகன் அங்கிருந்து ஓடியபோது, அவரை சக்திவேல், ரஞ்சித் கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து சரண்யாவும் தப்பியோட அவரையும் விரட்டிச் சென்று அந்த கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவ இடத்தை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர்கள் அசோகன், வெற்றிவேந்தன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, குடும்ப பிரச்சனை காரணமாக இந்த படுகொலை நடந்துள்ளது. படுகொலை குறித்து நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

இந்த நிலையில், காதல் தம்பதியை படுகொலை செய்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-61791701

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டியது பட்டியல் இனம்....

வெட்டப்பட்டது..... ?

புரியவில்லை..... இது ஆணவப்படுகொலையா அல்லது காத்திருந்த பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போனதால் வந்த கடுப்பா? (அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் )

குடும்ப பிரச்சனை என்று போலீஸ் சொல்வதால் அப்படி தான் இருக்கலாம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

வெட்டியது பட்டியல் இனம்....

வெட்டப்பட்டது..... ?

புரியவில்லை..... இது ஆணவப்படுகொலையா அல்லது காத்திருந்த பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போனதால் வந்த கடுப்பா? (அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் )

குடும்ப பிரச்சனை என்று போலீஸ் சொல்வதால் அப்படி தான் இருக்கலாம்.

 

உங்கள் கருத்தில், சாதிவெறி தாண்டவமாடுகிறது

சும்மா

  • Like 2
Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

வெட்டியது பட்டியல் இனம்....

வெட்டப்பட்டது..... ?

புரியவில்லை..... இது ஆணவப்படுகொலையா அல்லது காத்திருந்த பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போனதால் வந்த கடுப்பா? (அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் )

குடும்ப பிரச்சனை என்று போலீஸ் சொல்வதால் அப்படி தான் இருக்கலாம்.

சரண்யா பட்டியல் வகுப்பு
மோகன்  செங்குந்த முதலியார் வகுப்பு

சாதிப்பிரச்சனையால் நடந்த கொலையாக இருக்க தான் சந்தர்ப்பம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

சரண்யா பட்டியல் வகுப்பு
மோகன்  செங்குந்த முதலியார் வகுப்பு

சாதிப்பிரச்சனையால் நடந்த கொலையாக இருக்க தான் சந்தர்ப்பம் உண்டு.

வழக்கமாக.... உயர்சாதியினர் தானே ஆணவக் கொலை செய்வர்.... இங்கே தாழ்த்தப்பட்ட பட்டியல் இனம்.

அவரும் நம்பிக்கையுடன் அங்கே வந்திருக்கிறார்..... ஏற்றுக்கொள்வார்கள் என்று.

அதனால் தான்.... இது சாதிப்பிரச்சணையில்லை..... குடும்ப பிரச்சணை என்று போலீசார் சொல்லியிருக்கலாம் என்ற ரீதியில் எனது அபிப்பிராயம் பதிந்து, தான் விளக்கம் கேட்டேன்....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிப்பிரச்சினையும் , மைத்துனர் ரஞ்சித்துக்கு தங்கையை  கொடுப்பதாக இருந்ததால் விருந்துக்கு மோகன் வரவைத்து  வெட்டி இருக்கிறார்கள் என வேறு பத்திரிகை சொல்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

மைத்துனர் ரஞ்சித்துக்கு தங்கையை  கொடுப்பதாக இருந்ததால்

அண்ணர்  சக்திவேல் கடையில் வாங்கிய ஒரு பொருளா தங்கை  தனது விருப்பபடி மைத்துனருக்கு கொடுப்பதற்கு
பெண் தனக்கு விரும்பியவரை திருமணம் செய்தால் கடுப்பாகி விருந்துக்கு வாங்கோ என்று அழைத்து ஓட விரட்டி கொலை செய்வார்கள் கொடூரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணர்  சக்திவேல் கடையில் வாங்கிய ஒரு பொருளா தங்கை  தனது விருப்பபடி மைத்துனருக்கு கொடுப்பதற்கு
பெண் தனக்கு விரும்பியவரை திருமணம் செய்தால் கடுப்பாகி விருந்துக்கு வாங்கோ என்று அழைத்து ஓட விரட்டி கொலை செய்வார்கள் கொடூரம்.

விளங்க நினைப்பவரே ...மன்னிக்கவும் . இந்திய பேச்சுத்தமிழில்  ..கொடுத்து என எழுதி  விடடேன் .

 ஆனால் பெண் கொடுத்து பெண் எடுத்தல் எனும் வழக்கம் உண்டு . .

கொண்டு கொடுத்தல் என்பது பெண் கொடுத்து பெண் எடுத்தல் என்ற பழக்கம் ஆகும். இதன்படி 'அ' குழுவைச் சேர்ந்த பெண்ணை ஆ குழுவிற்கு கொடுத்தால் அங்கிருந்து 'அ' குழுவிற்கு ஒரு பெண் திரும்பப் பெறப்படுவாள்.

 

உடன் பிறந்தோர் பரிமாற்றம் (sibling set exchange) என்ற இம்முறை கொண்டு கொடுத்தலில் ஒரு முறையாகும். இதன்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்கள் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்களை மணம் செய்துகொள்ளலாம்.

ஆதாரம் தமிழ் விக்கி பீடியா 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் கொடுத்து பெண் எடுத்தல் எனும் பொருள் மாற்று முறை அவர்களிடம் இருந்தாலும் சரண்யா மோகனை தான் விரும்பி திருமணம் செய்துள்ளார். தங்கள் சொல்பவரை திருமணம் செய்யாமல் தான் விரும்பியவரை திருமணம் செய்வதா என்று தம்பதிகளை படுகொலை செய்துள்ளனர். இது ஆணவக கொலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சரியாகவே சொல்லியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும், மைத்துனனும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்திருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தங்களது விருப்பத்தின் பெயரில், காதலித்து, சாதியை மறுத்து திருமணம் செய்து கொண்டதாலேயே, குடும்பத்தினரால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை, ‘சாதிய ஆணவப்படுகொலை’ என்றே பதிவுசெய்ய வேண்டும். அவ்வாறு பதிவுசெய்ய மறுப்பதும், இதனைப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்ட கொலையென்றுகூறி சுருக்குவதும் ஏற்புடையதல்ல.

https://www.naamtamilar.org/2022/06/seeman-demands-tn-govt-to-draft-a-seperate-law-to-curb-the-increasing-caste-based-honor-killings/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணம் காதல் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்டனரா? - பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கும்பகோணம்

கும்பகோணத்தில் சில நாட்களுக்கு முன்பாக புதுமணத் தம்பதி கொல்லப்பட்ட விவகாரம் பலத்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது. பட்டியலினத்தவர் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ஆணவக் கொலையின் மறுவடிவமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. ஆனால், உண்மையில் என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு...

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சோழபுரத்தில் திருமணமான சில நாட்களில் புதுமணத் தம்பதி, பெண்ணின் உறவினர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆணவக் கொலை குறித்த பலத்த விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், கொலையில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களும், பெருமிதம் கொண்டு கொலையில் ஈடுபட்டார்களா என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சாதி தொடர்பான பெருமிதத்தால் நடத்தப்பட்டதா அல்லது பின்னணியில் வேறு காரணங்கள் இருந்தனவா என்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தந்தனர். உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது சோழபுரம். இங்கு பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கி அமைந்துள்ளது துளுக்கவேலி ஆண்டவன் நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதிக்கு சக்திவேல், சதீஷ், சரவணன் என மூன்று மகன்களும் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

இதில் சேகரும் சக்திவேலும் கொத்தனாராக வேலை பார்த்து வருகின்றனர். சதீஷ் எம்.பி.ஏவும் சரவணன் டி.எம்.இயும் முடித்துவிட்டு திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். சகோதரர்கள் அனைவருக்குமே திருமணமாகிவிட்டது. சரண்யா சென்னையில் சில தனியார் மருத்துவமனைகளில் செவிலியராகப் பணியாற்றிவந்தார்.

தேன்மொழிக்கு மனநலம் அவ்வப்போது பாதிக்கப்படும் பிரச்னை இருந்த நிலையில், அவரைக் கடந்த டிசம்பர் மாதம் சென்னைக்கு அழைத்துவந்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தார் சரண்யா. பணியாற்றும் நேரம் போக, மீதி நேரத்தில் அவரை மருத்துவமனையில் இருந்து பார்த்துக்கொண்டார் அவர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னார் கிராத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி - வடிவேல் தம்பதியின் ஒரே மகன் மோகன். இவர் வேதியியலில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். வடிவேல் சிறு வயதிலேயே இறந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரி மட்டும் பொன்னூர் கிராமத்தில் மகன் அனுப்பிவந்த மாதாந்திரத் தொகையில் வாழ்க்கை நடத்திவந்தார். இவரும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதவாக்கில் இவரது மனநலம் மிகவும் மோசமடையவே, இவரைச் சென்னையில் உள்ள அரசு மனநலக் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தார் மோகன். அந்தத் தருணத்தில், தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க சரண்யாவும் அங்கிருந்த நிலையில், இருவரும் பழக ஆரம்பித்தனர்.

 

கும்பகோணம் தம்பதி கொலை

சரண்யாவின் வீட்டில் எதிர்ப்பு ஏன்?

மோகனைப் பொறுத்தவரை, மனநலம் பாதிக்கப்பட்ட தாயைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலையில், காதலைத் தொடர பெரிய எதிர்ப்பு ஏதும் இருக்கவில்லை. ஆனால், சரண்யாவின் சகோதரர் சக்திவேல் இந்த காதலை ஏற்கவில்லை. இதற்குக் காரணம் இருந்தது.

சரண்யாவின் மூத்த சகோதரரான சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் என்பவரை சரண்யாவுக்கு திருமணம் செய்வது குறித்து கடந்த ஓராண்டுக்கு முன்பிலிருந்தே பேசிவந்தனர். ரஞ்சித்தும் சரண்யாவும் சில நாட்கள் பழகியும் வந்தனர். ஆனால், ரஞ்சித்திற்கு குடி, போதை போன்ற பழக்கங்கள் இருக்கவே, அவரை சரண்யாவுக்குத் திருமணம் செய்து வைப்பது குறித்து சதீஷும் சரவணனும் மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் சரண்யாவும் ரஞ்சித்தைவிட்டு விலக ஆரம்பித்திருந்தார்.

ஆனால், மூத்த சகோதரரான சக்திவேல் இதனை ஏற்கவில்லை. தனது மைத்துனருக்கே சரண்யாவைத் திருமணம் செய்துவைக்க வேண்டுமெனக் கூறி சண்டையிட்டுவந்தார். இந்த நிலையில், சரண்யாவும் மோகனும் காதலிக்கும் விவகாரம் தெரியவந்தபோது அதற்கு அவரது பெற்றோரோ, சக்திவேல் தவிர்த்த மற்ற இரு சகோதரர்களோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், சக்திவேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 9ஆம் தேதி வியாழக்கிழமையன்று தனது தாய் பரமேஸ்வரி மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகில் உள்ள கோவில் ஒன்றில் சரண்யாவைத் திருமணம் செய்தார்.

விருந்துக்காக அழைக்கப்பட்ட தம்பதி கொலை

இந்தத் திருமணம் குறித்த தகவலை தனது சகோதரர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார் சரண்யா. இதற்குப் பிறகு சரண்யாவை அழைத்த சக்திவேல், திங்கட்கிழமையன்று மோகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியும் அவரது பெயரில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்டுத் தரும்படியும் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து மோகனும் சரண்யாவும் துளுக்கவேலிக்கு வந்துள்ளனர். சக்திவேலும் சரண்யாவும் கும்பகோணத்திற்குச் சென்று நகைகளை மீட்ட பிறகு, வீட்டுக்கு வந்தனர். பிறகு அனைவரும் சேர்ந்து சாப்பிட்ட பிறகு, பிற்பகலில் சென்னைக்குச் செல்வதற்காக மோகனும் சரண்யாவும் புறப்பட்டனர். சரண்யா, சக்திவேல், மோகன் ஆகியோர் வீட்டைவிட்டு வெளியில் வந்ததும், வீட்டின் மற்ற பெண்களை வீட்டுக்குள் போட்டுப் பூட்டினார் சக்திவேல்.

உடனடியாக ரஞ்சித்திற்குக் குரல் கொடுக்க, ஆயுதத்துடன் ஒளிந்திருந்த அவர் முதலில் மோகனைப் பின்னாலிருந்து கழுத்தில் வெட்டியதாகவும் அங்கிருந்து தப்பி ஓடிய சரண்யாவை அடுத்த திருப்பத்திலேயே துரத்திப் பிடித்த சக்திவேல் அவரது கழுத்தைப் பிடித்து நெரிக்க, அங்கு ஓடி வந்த ரஞ்சித் சரண்யாவையும் வெட்டியதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் கொலையான இருவரில் சரண்யா பட்டியலினத்தையும் மோகன் செங்குந்த முதலியார் இனத்தையும் சேர்ந்தவர்கள். ஆகவே, முதல் பார்வையில், இந்தக் கொலை சாதிக்கு வெளியே நடந்த திருமணத்தால் நிகழ்ந்த கொலையென்று கருதப்பட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்திய ஆணவக் கொலை என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட ஆரம்பித்தது.

"சாதிக்காக நடந்த கொலையில்லை"

ஆனால், இந்தக் கூற்றை முற்றிலுமாக மறுக்கிறார்கள் சக்திவேலின் குடும்பத்தினர். "இது நிச்சயமாக சாதிக்காக நடந்த கொலையில்லை. எங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை. அம்மா மன நலம் சரியில்லாதவர். நானும் என் அண்ணனும் திருப்பூரில் இருந்தோம். அம்மா, என் மனைவி, என் அண்ணன் மனைவி மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல இப்படிச் செய்திருக்கிறார்கள்" என்கிறார் சரண்யாவின் சகோதரரான சரவணன்.

சரண்யாவின் மற்றொரு சகோதரரான சதீஷ் வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருப்பதை உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார் அவர். தனக்கு ஒரு நல்ல வாழ்வைத் தேடி சரண்யா, வேறு ஒரு நபரைத் திருமணம் செய்ததில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்கிறார் சதீஷ். குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். வேறு எதையும் பேசும் நிலையில் அவர்கள் இல்லை.

சரண்யாதான் அந்த வீட்டின் ஆணி வேர் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். தன் சகோதரர்களைப் படிக்கவைத்து, தன் தாய்க்கு மருத்துவம் பார்த்து மிகப் பொறுப்புடன் நடந்துகொண்ட பெண் என்கிறார்கள் அவர்கள். தனது மனநல பிரச்னையிலிருந்து மீண்ட அவரது தாய், மீண்டும் பாதிப்புக்குள்ளாக ஆரம்பித்திருக்கிறார்.

 

மோகனின் தாய் பரமேஸ்வரி

 

படக்குறிப்பு,

மோகனின் தாய் பரமேஸ்வரி

சுயநினைவின்றி புலம்பும் தாய்

ஆனால், சரண்யாவைத் திருமணம் செய்ததால் கொல்லப்பட்ட மோகனின் கதை இன்னும் பரிதாபமானது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ள உள்ளடங்கிய கிராமம் பொன்னூர். ஊர் கடைசியில் அமைந்திருக்கும் ஆலமரத்தின் கீழ் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் மோகனின் தாய் பரமேஸ்வரி.

"நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. வேணாம் வேணாம்னு.. இப்படி நடந்துருச்சு. தீடீர்னு கூட்டினு போய் கல்யாணம் பண்ணுனான். செத்துப்போய்ட்டான்" என்று சுயநினைவின்றி புலம்புகிறார் அவர்.

மோகன் ஐந்தாவது படிக்கும்போதே அவரது தந்தை வடிவேல் இறந்துவிட, மிகச் சிரமப்பட்டு அவரை படிக்கவைத்து ஆளாக்கியவருக்கு தன் மகன் இறந்துவிட்டதைக்கூட முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.

மகனுக்கு இறுதிச் சடங்குகளை முடித்து ஒரு நாளுக்கு மேலாகியும் குளிக்காமலும் உடுத்திய உடையை மாற்றாமலும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார் அவர். "இனிமே என்ன இருக்குது.. நானும் கெளம்ப வேண்டியதுதான்" என்கிறார்.

ஊர்க்காரர்களைப் பொறுத்தவரை, மோகனை விருந்துக்கு அழைத்துச் சென்று கொன்றுவிட்டதாக பெண் வீட்டாரின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஆதரவின்றி இருக்கும் மோகனின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ஏதாவது உதவிசெய்ய வேண்டுமென்கிறார்கள்.

சோழவரம் காவல்துறையைப் பொறுத்தவரை, ஜாதி ஆணவத்தில் நடந்த கொலையாகத் தெரியவில்லை என்கிறது. தன்னை சரண்யா நிராகரித்துவிட்ட ஆணவத்தில் ரஞ்சித்தும் அவரால் துண்டப்பட்டு சக்திவேலும் இந்தக் கொலையில் ஈடுபட்டதாக காவல்துறை கருதுகிறது.

இப்போது ரஞ்சித், சக்திவேல் ஆகிய இருவரும் சிறையில் இருக்கிறார்கள். காதல் திருமணத்திற்குப் பிறகு இந்தக் கொலைகள் நடந்திருப்பதால் இதனை ஆணவக் கொலை என்றுதான் அழைக்க வேண்டும் என்று சிலரும், ஆணாதிக்கக் கொலை என்று அழைக்க வேண்டுமென சிலரும் விவாதித்துவருகிறார்கள்.

இது அப்பட்டமான ஆணாதிக்க ஆணவப் படுகொலை என்கிறார், மதுரையில் உள்ள எவிடென்ஸ் அமைப்பின் கதிர். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்திருக்கும் கதிர், "இந்தப் படுகொலையில் நேரடியாக சாதி இல்லை என்றாலும் இவை ஆணவக் கொலைகள் தான். ஒரு பெண்ணின் இணைந்து வாழக்கூடிய அல்லது திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு எதிராக குறுக்கீடு செய்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ அவற்றை ஆணவக் குற்றங்கள் என்று தான் பார்க்க வேண்டும். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவாதங்களுக்கு அப்பால், வெகு தூரத்தில் ஒரு ஆலமரத்தடியில் தனியாக அமர்ந்து உயிரோடில்லாத மகனோடு பேசிக்கொண்டிருக்கிறார் பரமேஸ்வரி.

https://www.bbc.com/tamil/india-61836122

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.