Jump to content

மதுரையில் சமத்துவபுரம் புனரமைப்பு பிரச்னை: மாற்று இடம் கொடுக்காமல் வீடுகள் இடிக்கப்படுவதாக புகார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையில் சமத்துவபுரம் புனரமைப்பு பிரச்னை: மாற்று இடம் கொடுக்காமல் வீடுகள் இடிக்கப்படுவதாக புகார்

14 ஜூன் 2022
 

சமத்துவபுரம் புனரமைப்பு பிரச்னை

மதுரை மாவட்டத்தில் மாற்று இடம் கொடுக்காமல் சமத்துவபுர வீடுகள் இடிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மக்களின் எதிர்ப்பை அடுத்து வீடுகள் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணி குறித்து கடந்த ஒரு மாதகாலமாக மக்களிடம் தெரிவித்து வந்தததாக இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் குட்லாடம்பட்டி அருகே பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 1998-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு மொத்தம் 100 வீடுகள் உள்ளன. அத்துடன், சமுதாய நலக்கூடம், நூலகம், பகுதிநேர ரேஷன் கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த சமத்துவபுரத்தில் புனரமைப்பு பணிகளை செய்வதற்கு தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. அதன்படி குடியிருப்புகள், தார்ச்சாலை, மேல் நீர் தேக்க தொட்டி, ரேஷன் கடை, அங்கன்வாடி, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன.

வீடுகள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன என்பது மிகுந்த மகிழ்ச்சியாய் அமைந்தாலும், குடியிருப்புகளை இடித்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

"தற்போது குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு உரிய அடைக்கலம் எதுவும் கொடுக்காமல் அவர்களின் உடைமைகள், சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் சுமார் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன" என்கிறார் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி.

"வீடுகளை புனரமைத்து கொடுக்கிறோம் என்கின்ற பெயரில் அங்கு வசித்து வரும் குடியிருப்புவாசிகளிடம் எந்தவொரு முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் வீடுகளை இடித்து வருகிறார்கள். அதேபோல் வீட்டுக்காரர்கள் முன்னிலையில் வீடுகளை இடிக்கவில்லை." என்கிறார் ஈஸ்வரி.

"வீடுகளை இடிக்க வரும்பொழுது வீட்டுக்காரர்கள் அங்கு இல்லை என்றால் வீட்டினுள்ளேயே பொருட்கள் இருந்தாலும் அதை பற்றி பொருட்படுத்தாமல் வீடுகளை இடிகிறார்கள். அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் தற்காலிகமாக தங்க சொல்கிறார்கள் 100 குடும்பங்கள் எவ்வாறு தங்க முடியும்? அவர்களின் உடைமைகளுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது யார்?"

 

சமத்துவபுரம் புனரமைப்பு பிரச்னை

குடியிருப்புகளில் புனரமைப்பு பணி மேற்கொள்ளும்போது முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும், உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும், மாற்று இடம் அளிக்க வேண்டும், மக்களின் உரிமைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிறார் சிபிஐ(எம்.எல்.) மதுரை மாவட்ட செயலாளர் மதிவாணன்.

"வாடிப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்படுகின்றன. வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டின் கூரை இடிக்கப்படப் போவது பற்றி தெரிவிக்கவில்லை. எழுத்துப்பூர்வமான அறிவிப்பில்லை. அதிகாரிகள் யாரும் மக்களிடம் அறிவிக்கவோ, மக்களைச் சந்திக்கவோ இல்லை. ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் தங்கள் மனம்போல வீடுகளை இடிகிறார்கள்."

"வீட்டில் குடியிருப்பவருக்கு எவ்வித முன்னறிவிப்பும் தராமல், பொருட்களைப் பாதுகாத்துக்கொள்ள, மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வாய்ப்பளிக்காமல் வீட்டை இடிப்பது அங்கே குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மேலும் இதுநாள் வரை அவர்கள் சேமித்து வைத்த சொத்துக்களின் பாதுகாப்பு நிலை குறித்து மிகுந்த கவலை அடைந்து இருக்கிறார்கள்" என்றார் மதிவாணன்.

 

சமத்துவபுரம் புனரமைப்பு பிரச்னை

"கிராம ஊராட்சிகள் தற்காலிகமாக நூறு குடும்பங்களை தங்க வைப்பதற்கு இடமும் நிதியும் கொடுக்க வாய்ப்பில்லை" என்கிறார் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன்.

"சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகள் புனரமைக்கப்பட இருக்கிறது என்பது குறித்து கடந்த ஒரு மாதமாக வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் மூன்று அதிகாரிகள் குழுவினர் ஒவ்வொரு குடியிருப்புவாசிகள் இடமும் நேரடியாக தெரிவித்தனர். தற்பொழுது குடியிருப்புகள் இடிக்கப்பட்ட பிறகு எங்களுக்கு எந்த தகவலும் சொல்லவில்லை என சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 100 குடும்பங்களுக்கு மாற்று இடம் கொடுத்து தங்க வைப்பதற்கு கிராம ஊராட்சியில் நீதியும் இடமும் இல்லை. குடியிருப்பு வாசிகளின் உடைமைகள், சொத்துக்கள் பாதுகாப்பிற்கு அந்த குடியிருப்புவாசிகள் முழுமனதோடு ஒற்றுமையுடன், ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.

https://www.bbc.com/tamil/india-61801400

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.