Jump to content

புதிய சாதனையை படைத்த வீரர்!


Recommended Posts

 புதிய சாதனையை படைத்த வீரர்!

புதிய சாதனையை படைத்த வீரர்!

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ.

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

லோர்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. 2 வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. தலைவர் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 145.3 ஓவர்களில் 553 ஓட்டங்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 190, டாம் பிளண்டல் 106 ஓட்டங்கள் எடுத்தார்கள். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைஅடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 128.2 ஓவர்களில் 539 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 14 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. ரூட் 176, போப் 145 ஓட்டங்கள் எடுத்தார்கள். நியூசி. அணியின் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2 வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய செய்த நியூசிலாந்து அணி, 4 ம் நாள் முடிவில் 69 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்தது. 5 ம் நாளில் 84.4 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்கள் எடுத்தார். பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 299 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி அட்டகாசமாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. பேர்ஸ்டோ 92 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 136 ஓட்டங்களும் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களும் எடுத்தார்கள்.

அவுஸ்திரேலியாவில் காபா மைதானத்தில் இந்திய அணி கடைசி நாளில் கடினமான இலக்கை விரட்டியதுபோல இங்கிலாந்து அணி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடைசி நாளில் அதிரடியாக விளையாடி மறக்க முடியாத வெற்றியை அடைந்தது.

3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வது டெஸ்ட், லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 23 அன்று தொடங்கும்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது (குறைந்தது 100 ஓட்டங்கள் எடுத்த வீரர்களில்) அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பேர்ஸ்டோ. இதற்கு முன்பு 2002 இல் நியூசிலாந்தின் ஆஸ்லே, இங்கிலாந்துக்கு எதிராக 168 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 28 பவுண்டரிகளுடன் 222 ஓட்டங்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தின் ஸ்டிரைக் ரேட் - 132.14. இதுவே இலக்கை விரட்டியபோது சதமடித்த வீரர்களில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட இன்னிங்ஸாக இருந்தது. இதனை பேர்ஸ்டோ முறியடித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவருடைய ஸ்டிரைக் ரேட் - 147.82.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது சதமடித்த வீரர்களில் அதிக ஸ்டிரைக் ரேட்

1. பேர்ஸ்டோ (இங்கிலாந்து) - 147.82
2. ஆஸ்லே (நியூசிலாந்து) - 132.14
3. கில்பர்ட் (இங்கிலாந்து) - 130.00
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.