Jump to content

6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட 'சின்னு' எனும் கோழி - கேரள கிராம மக்கள் வியப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
814235.jpg  
 

ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா தெற்கு பஞ்சாயத்தை சேர்ந்தவர் சி.என்.பிஜு குமார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் வாங்கி கோழிப் பண்ணை அமைக்கும் நோக்கில் 23 BV380 ஹைபிரிட் ரக கோழிகளை வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு கோழி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் அசதியாக இருந்துள்ளது. அதனை கவனித்த பிஜு கூட்டிலிருந்து அதை எடுத்து, தனியாக விட்டுள்ளார். பின்னர் அந்தக் கோழி கால் தாங்கியபடி நடந்ததை கவனித்துள்ளார். அதையடுத்து காலில் வலி நிவாரணி தடவி விட்டுள்ளார் அவர்.

பின்னர் அன்றைய தினமே காலை 8.30 தொடங்கி மதியம் 2.30 மணி வரையில் தொடர்ச்சியாக 'சின்னு' கோழி முட்டைகளை இட்டு வந்துள்ளது. அந்தச் செய்தியை அறிந்து பிஜு வீட்டிற்கு பலரும் வருகை தந்து, கோழியை பார்த்துள்ளனர். ஊரார் கூடியிருக்க அவர்கள் முன்னிலையில் அந்தக் கோழி முட்டை இட்டுள்ளது.

இந்தச் செய்தி குறித்து அறிந்த கால்நடை மருத்துவர்களும் கோழியை வந்து பார்வையிட்டுள்ளனர். "இது மிகவும் அரிதான ஒன்று. அந்த கோழி தொடர்ச்சியாக முட்டையிட்டது ஏன் என்பதை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார் கால்நடை மருத்துவக் கல்வி பேராசிரியர் பினோஜ் சாக்கோ. பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஒரே சமயத்தில் அதிகளவிலான முட்டையை இட்ட கோழிக்கு அதன் உடலில் இருந்து கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் போன்ற சக்திகள் பெருமளவு குறைந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இது தவிர அதற்கு உடல் அளவிலும் சிரமம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.

6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட 'சின்னு' எனும் கோழி - கேரள கிராம மக்கள் வியப்பு | chinnu a hen lays 24 eggs in 6 hours alappuzha kerala india miracle - hindutamil.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிழம்பு said:

 கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

🐓சின்னு…. போட்ட, 24 முட்டையையும்…. அடைகாத்து, 🐣குஞ்சு பொரிக்க வைக்க வேணும்.
சின்னுவின் வம்சத்தில் வாற, கோழிகள் எல்லாம்… டசின் கணக்கில், முட்டை இடலாம். 🥚🥚🥚

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பிழம்பு said:

ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

24 முட்டையும் என்னவிலை என்று விலையை பேசுங்க.

33 minutes ago, தமிழ் சிறி said:

🐓சின்னு…. போட்ட, 24 முட்டையையும்…. அடைகாத்து, 🐣குஞ்சு பொரிக்க வைக்க வேணும்.
சின்னுவின் வம்சத்தில் வாற, கோழிகள் எல்லாம்… டசின் கணக்கில், முட்டை இடலாம். 🥚🥚🥚

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சின்னுவுக்கு நடந்த    ஏதும் தந்திர மந்திர வேலையாய் இருக்குமோ ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

🐓சின்னு…. போட்ட, 24 முட்டையையும்…. அடைகாத்து, 🐣குஞ்சு பொரிக்க வைக்க வேணும்.
சின்னுவின் வம்சத்தில் வாற, கோழிகள் எல்லாம்… டசின் கணக்கில், முட்டை இடலாம். 🥚🥚🥚

சின்னுவின் வீட்டுக்காரரை காட்டினால் தான் நம்புவம்....

6 மணித்தியாலத்திலை 24 எண்டால்... ஆள் விசய காரர் போலை கிடக்குது...

Roster Stock Photos and Images. 1,812 Roster pictures and royalty free  photography available to search from thousands of stock photographers.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நிலாமதி said:

 சின்னுவுக்கு நடந்த    ஏதும் தந்திர மந்திர வேலையாய் இருக்குமோ ? 😀

சின்னு…. இரண்டு முட்டை இட்டிருந்தால் நம்பலாம்.
அது… 24 முட்டையை, 6 மணித்தியாலத்திலை போட்டுதாம் என்றதை நான் நம்பவில்லை.

சின்னு  முட்டையிட முதல்…. ரொம்ப அசதியாய், நொண்டி, நொண்டி நடந்ததாம்.
அதை பார்த்த உரிமையாளர், அதனை தனிமைப் படுத்தி…
காலுக்கு…. வலி நிவாரணி தடவி விட்டாராம்.

ஊர்ச்சனங்கள், கால் நடை வைத்தியர்கள், ஆராய்ச்சியாளர்கள்….
எல்லாம் வந்ததை பார்க்க…. நிலைமை… சீரியஸ் போல கிடக்கு. 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

சின்னுவின் வீட்டுக்காரரை காட்டினால் தான் நம்புவம்....

6 மணித்தியாலத்திலை 24 எண்டால்... ஆள் விசய காரர் போலை கிடக்குது...

Roster Stock Photos and Images. 1,812 Roster pictures and royalty free  photography available to search from thousands of stock photographers.

சின்னு…. 24 முட்டை, போட்டதை கேள்விப் பட்டு….
15 பேர், தாங்கள்தான்… சின்னுவின் வீட்டுக்காரர் என்று உரிமை கோருவதால்,
ஓறிஜினல் வீட்டுக்காரர் யார் என்று கண்டு பிடிக்க,  சிரமமாக உள்ளதால்…
பொலிசார்…. மோப்ப நாயை, வரவழைத்து உள்ளார்கள். 🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

சின்னு…. 24 முட்டை, போட்டதை கேள்விப் பட்டு….
15 பேர், தாங்கள்தான்… சின்னுவின் வீட்டுக்காரர் என்று உரிமை கோருவதால்,
ஓறிஜினல் வீட்டுக்காரர் யார் என்று கண்டு பிடிக்க,  சிரமமாக உள்ளதால்…
பொலிசார்…. மோப்ப நாயை, வரவழைத்து உள்ளார்கள். 🤣
 

நாய்..... லபெக்கெண்டு... கோழிய... கவ்வீரும் எண்டதால.... டிஎன்ஏ ரெஸ்ட் தான் சரிவரும் எண்டுறார் உடான்சு சுவாமியார்... குருஜி நித்தியானந்தா சுவாமிகள்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நாய்..... லபெக்கெண்டு... கோழிய... கவ்வீரும் எண்டதால.... டிஎன்ஏ ரெஸ்ட் தான் சரிவரும் எண்டுறார் உடான்சு சுவாமியார்... குருஜி நித்தியானந்தா சுவாமிகள்... 😁

உடான்ஸ் சாமியார்…. நாய்க்கு முதல், கோழியை கவ்வ… பிளான் போடுறார் போல கிடக்கு.😂 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முட்டையைச் சாப்பிட்டால்........🤣🤛🤛🙏👍😢😭🙏

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.