Jump to content

5 வயது குழந்தையை... களனி ஆற்றில் எறிந்து விட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5 வயது குழந்தையை களனி ஆற்றில் எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது!

5 வயது குழந்தையை... களனி ஆற்றில் எறிந்து விட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது!

வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது 5 வயது குழந்தையை எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 42 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1287136

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“அம்மா ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை“ – தாயாரினால் களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவனின் அண்ணன்!

“அம்மா... ஏன், இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை“ – தாயாரினால் களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவனின் அண்ணன்!

வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள குறித்த பெண்ணின் தாயின் மூத்த மகன், தனது அம்மாவுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும் அம்மா தன்னைவிட தம்பி மீதுதான் அதிகமாக பாசம் காட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்படியிருக்கையில் ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில் வீட்டில் இருந்து தம்பியை மட்டும் அழைத்துக்கொண்டு வெளியேறியதாகவும் இதன்போது, எங்கே போகிறீர்கள் என கேட்டதற்கு அவரேதும் பதிலளிக்காமல் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான சிறுவனின் தாய் நேற்று முன்தினம் (15) இரவு சிறுவனை களனி ஆற்றில் எறிந்துவிட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

எனினும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. குறித்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1287334

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.......ஆருக்கு வெளிச்சம் ........!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.......ஆருக்கு வெளிச்சம் ........!  😢

இலங்கை நிலை மிக மோசம் தமிழ் மக்களை விட இன்று சிங்கள மக்கள்  பசியை அனுபவித்து வருகிறார்கள் அதன் தாக்கமாக கூட இருக்கலாம்
நாலு நாளா மெனக்கடுறன் பெற்றோல் அடிக்கலாம் என சில நேரம் கால் நடை சில நேரம் சைக்கிள் இப்படி போகிறது கேஸ் இல்லை விறகு அடுப்பு  வட கிழக்கு நிலை கொழும்பில் ??

ஒன்றே ஒன்று சொல்லலாம் இலங்கையில் முதலிடுவது.  நாடு நாம் பிறந்த தேசம் ஊரு என்று இனியும் வந்து  இங்கு குடியேற நினைக்காம உங்களது குழந்தைகள் எல்லோரையும் நன்றாக படிக்க வைத்து ஈழம் என்றொரு தேசம் இருந்தது அங்கு வாழ்ந்த காலங்கள் என்பவற்றை எடுத்துக்கூறுங்கள் அதுதான் இப்போதைக்கு நல்லது மிக நல்லது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கை நிலை மிக மோசம் தமிழ் மக்களை விட இன்று சிங்கள மக்கள்  பசியை அனுபவித்து வருகிறார்கள் அதன் தாக்கமாக கூட இருக்கலாம்
நாலு நாளா மெனக்கடுறன் பெற்றோல் அடிக்கலாம் என சில நேரம் கால் நடை சில நேரம் சைக்கிள் இப்படி போகிறது கேஸ் இல்லை விறகு அடுப்பு  வட கிழக்கு நிலை கொழும்பில் ??

ஒன்றே ஒன்று சொல்லலாம் இலங்கையில் முதலிடுவது.  நாடு நாம் பிறந்த தேசம் ஊரு என்று இனியும் வந்து  இங்கு குடியேற நினைக்காம உங்களது குழந்தைகள் எல்லோரையும் நன்றாக படிக்க வைத்து ஈழம் என்றொரு தேசம் இருந்தது அங்கு வாழ்ந்த காலங்கள் என்பவற்றை எடுத்துக்கூறுங்கள் அதுதான் இப்போதைக்கு நல்லது மிக நல்லது 

இதுவும் கடந்து போகும் தனி.......சோர்வு கூடாது......மனம்தளராதீர்கள்.......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இதுவும் கடந்து போகும் தனி.......சோர்வு கூடாது......மனம்தளராதீர்கள்.......!  

நேற்று கூட அண்ண அப்பா ஆட்டோவில் நிற்க மகன் மோட்டார் சைக்கிளில் நிற்க ஆட்டோவில் இருந்த அப்பா அப்படியே ஆட்டோவிலே இறந்து கிடக்கிறார்
நேற்று மதியம் 12.00 மணீக்கு போன நண்பன் இன்று காலை 8.30 மணிக்கு  வந்தார் 1000 ரூபாய்க்கு மாத்திரம் கொடுத்தார்கள் மண்ணெண்யை 500 ரூபாக்கு மட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நேற்று கூட அண்ண அப்பா ஆட்டோவில் நிற்க மகன் மோட்டார் சைக்கிளில் நிற்க ஆட்டோவில் இருந்த அப்பா அப்படியே ஆட்டோவிலே இறந்து கிடக்கிறார்
நேற்று மதியம் 12.00 மணீக்கு போன நண்பன் இன்று காலை 8.30 மணிக்கு  வந்தார் 1000 ரூபாய்க்கு மாத்திரம் கொடுத்தார்கள் மண்ணெண்யை 500 ரூபாக்கு மட்டும் 

இப்ப கண்ணுக்கு முன்னாலுள்ள உடனடி பிரச்சினைகளை பார்கும் போதே பயமாக இருக்கு, சிறுவர்களின் ஊட்ட குறைபாடு, மருத்துவ வசதி மற்றும் கல்வி என நீண்டகாலத்தில் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்பட போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, vasee said:

இப்ப கண்ணுக்கு முன்னாலுள்ள உடனடி பிரச்சினைகளை பார்கும் போதே பயமாக இருக்கு, சிறுவர்களின் ஊட்ட குறைபாடு, மருத்துவ வசதி மற்றும் கல்வி என நீண்டகாலத்தில் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்பட போகிறார்கள்.

ம் பாடசாலை கல்வி மட்டங்கள் மாணவர் நிலமை மற்றும் கல்வித்தகமை என்பன மிக அடி மட்டத்தில் உள்ளது இது நீண்டால் இன்னும் சிக்கலாகவே இருக்கும் 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2022 at 07:50, vasee said:

இப்ப கண்ணுக்கு முன்னாலுள்ள உடனடி பிரச்சினைகளை பார்கும் போதே பயமாக இருக்கு, சிறுவர்களின் ஊட்ட குறைபாடு, மருத்துவ வசதி மற்றும் கல்வி என நீண்டகாலத்தில் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்பட போகிறார்கள்.

இந்த மாதிரி சம்பவங்களும், சிறுவர்களை  துன்புறுத்தல்களும் அதிகமாகும் அபாயம் உள்ளது.. வயது வந்தோரின்/பெற்றோரின் கோபங்கள், இயலாமைகள் எல்லாவற்றிற்கும் வடிகாலாக, குழந்தைகள் சிறுவர்களே அகப்படுகிறார்கள்.. 

இன்னொரு இடத்தில் தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்ற இயலாமை விரகத்தியில் தாய் தற்கொலைக்கு முயற்சி..

பிள்ளைகளுக்கு உணவு அளிப்பதற்காக பாலியல் தொழிலாளிகளாக மாறும் பெண்கள்.. 

ஆனாலும் அரசு இவர்களை கணக்கில் எடுக்கப்போவதில்லை.. 

அழகான, வளமான நாட்டை பாழாக்கிவிட்டார்கள்

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.