Jump to content

பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி!

மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு- கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வுஎ மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும் என்றும் இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றன என்றும் நாட்டின் அறுவடை விநியோகத்தின்போது, சுமார் 40 சதவீதம் அழிக்கப்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடுமையான அவதானம் செலுத்துவதன் மூலம் பாரியளவிலான உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியும் என்றும் அறுவடையை விநியோகிப்பதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையை வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நிறுவனங்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான பிரதிபலன்களை அடைய முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1287157

Link to comment
Share on other sites

இது மனோ கணேசன் பாராளுமன்றத்தில் பல நாட்களுக்கு முன் முன்மொழிந்த திட்டம். இப்போதுதான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தமிழர்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பார்ப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற... தோட்டக் காணிகள் எல்லாம்..
அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கப் போகுது, போலை கிடக்கு. 🙃

  • Like 1
Link to comment
Share on other sites

5 minutes ago, தமிழ் சிறி said:

இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற... தோட்டக் காணிகள் எல்லாம்..
அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கப் போகுது, போலை கிடக்கு. 🙃

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கிறார்கள் என்றால் இந்தக் காரணத்தை வைத்து இராணுவ ஆக்கிரமிப்புக் காணிகளை அவர்கள் விடுவிக்க முயல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கிறார்கள் என்றால் இந்தக் காரணத்தை வைத்து இராணுவ ஆக்கிரமிப்புக் காணிகளை அவர்கள் விடுவிக்க முயல வேண்டும்.

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள்... தமக்கு சம்பந்தம் இல்லாத,
மற்றைய இனத்தின்... அரசியலுக்கு வக்காலத்து வாங்குவார்களே தவிர,

தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட, தமது மக்களுக்காக..
ஒரு கோட்டில்... வரவே மாட்டார்கள்.

இது.. கடந்த கால அனுபவம். 
அதனை பார்க்க... இவர்கள் மீது வெறுப்புதான் வருகின்றது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமநல சேவை அலுவலகத்தில் இருப்பவர்களின் வேலை கானாது அல்லது வேலையே செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி

அரசு அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

வலி வடக்கு பலாலி மேற்கை விட்டால் நான் லண்டனில் இருந்து சென்று உற்பத்தியை மேற்கொள்ள தயாரக இருக்கின்றேன் வளமான 100 பரப்பு சொந்த காணி இருக்கிறது

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

எப்படி…?

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

மீரா....

காசிருந்தால்.... சொல்லுங்க..... என்ன சாமான் எங்க டெலிவரி வேண்டும் எண்டு.... தமிழகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து எடுப்பிக்கலாம்.

உதைதான் சொன்னார்கள்..... சிங்களவருக்கு, இலங்கையை விட்டால் நாதியில்லை என்று.... முடிந்தால், தமிழகத்தில் இருந்து ஒரு அரிசி மூட்டை இறக்கி காட்டட்டும்...

தமிழருக்கு..... உலகமெல்லாம்..... நாதியுண்டு.

21 hours ago, தமிழ் சிறி said:

இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற... தோட்டக் காணிகள் எல்லாம்..
அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கப் போகுது, போலை கிடக்கு. 🙃

இராணுவம் வீட்ட போகிற நிலைப்பாடு. சம்பளம் கொடுக்க காசில்லை. 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மீரா....

காசிருந்தால்.... சொல்லுங்க..... என்ன சாமான் எங்க டெலிவரி வேண்டும் எண்டு.... தமிழகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து எடுப்பிக்கலாம்.

உதைதான் சொன்னார்கள்..... சிங்களவருக்கு, இலங்கையை விட்டால் நாதியில்லை என்று.... முடிந்தால், தமிழகத்தில் இருந்து ஒரு அரிசி மூட்டை இறக்கி காட்டட்டும்...

தமிழருக்கு..... உலகமெல்லாம்..... நாதியுண்டு.

சிங்களவருக்கு... சீனா, ஜப்பான் எல்லாம் இருக்கு என்று முன்பு நினைத்தனான்.  
இப்ப பார்க்க... அவங்கள், தங்களுடைய காரியம் பார்ப்பதில், குறியாக இருக்கிறார்கள்.

4 minutes ago, Nathamuni said:

இராணுவம் வீட்ட போகிற நிலைப்பாடு. சம்பளம் கொடுக்க காசில்லை. 😁

எந்தக் காரணம் கொண்டும், 
இராணுவத்தை குறைக்க மாட்டேன்  என்று, கோத்தா சொல்லியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

எந்தக் காரணம் கொண்டும், 
இராணுவத்தை குறைக்க மாட்டேன்  என்று, கோத்தா சொல்லியுள்ளார்.

இப்படி கதைவிட்ட மகிந்த எங்க?

ஜஎம்எப்... நிபந்தனைபடி அரச ஊழியர் ஜந்து வருடம்... வெளிநாடு போகலாம் என்று முதல் பந்து அடிச்சாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மீரா....

காசிருந்தால்.... சொல்லுங்க..... என்ன சாமான் எங்க டெலிவரி வேண்டும் எண்டு.... தமிழகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து எடுப்பிக்கலாம்.

உதைதான் சொன்னார்கள்..... சிங்களவருக்கு, இலங்கையை விட்டால் நாதியில்லை என்று.... முடிந்தால், தமிழகத்தில் இருந்து ஒரு அரிசி மூட்டை இறக்கி காட்டட்டும்...

தமிழருக்கு..... உலகமெல்லாம்..... நாதியுண்டு.

நாதம்ஸ், கள்ளச் சந்தையில் பொருட்கள் வாங்கி விவசாயம் செய்ய முடியாது.

மேலும் பெற்றோல் 950/= , 1000/= என்று போகிறது. டீசல் 850/= வரை போகிறது. U.K. விலையிலும் கூட. எரிவாயு 15,000/=. எல்லாத் தமிழர்களுக்கும் வெளிநாட்டு உதவி இல்லையே…!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

நாதம்ஸ், கள்ளச் சந்தையில் பொருட்கள் வாங்கி விவசாயம் செய்ய முடியாது.

மேலும் பெற்றோல் 950/= , 1000/= என்று போகிறது. டீசல் 850/= வரை போகிறது. U.K. விலையிலும் கூட. எரிவாயு 15,000/=. எல்லாத் தமிழர்களுக்கும் வெளிநாட்டு உதவி இல்லையே…!

 

லண்டன் ரஞ்சன் கேள்வி, உங்கள் பதில்.... உடன் தொடர்பானதே எனது பதிவு.....

மற்றும்படி.... நீங்கள் சொன்னதில் தவறேதும் இல்லை. ஆயினும் சிங்களவர்களிலும் பார்க்க... தமிழர்கள் இந்த பிரச்சணையை சமாளிக்க அனுபவமும், வாய்ப்பும், உதவியும் உண்டு என்று சொல்ல வந்தேன்.

சிங்களவர்.... ஏதோ... தமக்கு மட்டுமே இலங்கையில் வாழ்க்கை என்று நிணைத்தாடியவர்கள், தமிழக உதவியை கூட.... தமக்கும் சேர்த்து அனுப்புமாறு கோரினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

லண்டன் ரஞ்சன் கேள்வி, உங்கள் பதில்.... உடன் தொடர்பானதே எனது பதிவு.....

மற்றும்படி.... நீங்கள் சொன்னதில் தவறேதும் இல்லை. ஆயினும் சிங்களவர்களிலும் பார்க்க... தமிழர்கள் இந்த பிரச்சணையை சமாளிக்க அனுபவமும், வாய்ப்பும், உதவியும் உண்டு என்று சொல்ல வந்தேன்.

சிங்களவர்.... ஏதோ... தமக்கு மட்டுமே இலங்கையில் வாழ்க்கை என்று நிணைத்தாடியவர்கள், தமிழக உதவியை கூட.... தமக்கும் சேர்த்து அனுப்புமாறு கோரினர்.

உண்மை சிங்களவர்கள் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். 

அரசும் இதை உணர்ந்து சதோச விற்கு ஊடாக சில பொருட்களை விநியோகம் செய்கிறது.

கடவுச்சீட்டு எடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் நிற்கிறார்கள். எட்டாம் மாதம் முதற்கிழமைதான் முன்பதிவு செய்ய கூடியதாக உள்ளது. 

 

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

வன்னி நிலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இவையெல்லாம் இல்லாமலும் விவசாயம் செய்யப்பட்டது. விவசாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது மாற்று வழிகள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

வன்னி நிலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இவையெல்லாம் இல்லாமலும் விவசாயம் செய்யப்பட்டது. விவசாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது மாற்று வழிகள் உண்டு.

13 வருடங்களுக்கு முன்னர் நடந்தவைகளை இன்று நடைமுறைப்படுத்த இயலாத நிலமை. அவற்றை பேசி இனி பயன் இல்லை. 

பூக்கன்றுகளுக்கே செயற்கை உரங்களை பயன்படுத்தும் நிலையில் மக்கள் சோம்பேறிகளாக.

Edited by MEERA
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

தமிழக உதவியை கூட.... தமக்கும் சேர்த்து அனுப்புமாறு கோரினர்.

தவறான தகவல், நாதம்ஸ்.
சிங்களவர் கேட்க முதல்...  தமிழர்கள் பலரும், 
சிங்களத்துக்கும் சேர்த்து உதவி செய்வதுதான் 
சரியாக இருக்கும் என்று, தமிழக முதல்வர்  ஸ்ராலினிடம் கூறியவர்கள். 
(சுமந்திரன், குணா கவியழகன் போன்றோர்.)

ஏனென்றால்... எமக்கு மட்டும், தமிழகத்தில் இருந்து உதவி வந்து...
நாம் அதனை... பயன்படுத்தும் போது, பசியில் உள்ள சிங்களவருக்கு..
எம் மீது, பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்துவதுடன்....  
கலவரத்தைக் கூட உருவாக்கலாம் என்று கருதியதால்...
அப்படி கேட்டது, சரியான அணுகு முறை என்றே நினைக்கின்றேன்.

அத்துடன்... தமிழருக்கு மட்டும், தமிழக அரசு உதவி செய்வதாக இருந்தால்...
அத்த உதவியை... இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசும் 
நிச்சயம்  அனுமதித்து இருக்க மாட்டாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, MEERA said:

உண்மை சிங்களவர்கள் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். 

அரசும் இதை உணர்ந்து சதோச விற்கு ஊடாக சில பொருட்களை விநியோகம் செய்கிறது.

கடவுச்சீட்டு எடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் நிற்கிறார்கள். எட்டாம் மாதம் முதற்கிழமைதான் முன்பதிவு செய்ய கூடியதாக உள்ளது. 

 

கடவுச்சீட்டு எடுக்க லைனில் நிற்கத்தான் வேணும் போல கிடக்கு 8மாதம் 17 ற்கு பிறகுதான் எனக்கும் டேற் கொடுத்து இருக்கானுகள் நாட்டை விட்டு போக எத்தன பேரு யெப்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடவுச்சீட்டு எடுக்க லைனில் நிற்கத்தான் வேணும் போல கிடக்கு 8மாதம் 17 ற்கு பிறகுதான் எனக்கும் டேற் கொடுத்து இருக்கானுகள் நாட்டை விட்டு போக எத்தன பேரு யெப்பா 

நேற்று மாலை4ம் திகதிக்கு இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

நேற்று மாலை4ம் திகதிக்கு இருந்தது.

காலை 11 மணிக்கு இடையில் இத்தனை பேரா ஏற்கனவே போட்டோ எடுத்ததால் என்னவோ தெரியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

முடியும் யாழ்ப்பாணத்தானால் ...செய்து காட்டி வாழந்தவன்....கல் உடைத்து கிணறு வெட்டி துலா மித்து விவாசயம் செய்தவன் ...ஒரு காலத்தில் இந்த மண்ணின் இந்த செயலை பாடப்புத்தகத்தில் எழுதி படிப்பித்தவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2022 at 23:58, ஈழப்பிரியன் said:

அரசு அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவற்றைத்தான் அரசுக்கு சொந்தமான நிலங்கள் என்று சொந்தம் கொண்டாடுகிறார்களோ? சிங்கள இளைஞர்களுக்கே இந்த அறிவித்தல் எல்லாம், எங்களுக்கல்ல. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.