Jump to content

ராஜபக்‌ஷர்கள் இன்று அரசியலில் ‘கிங் மேக்கர்’கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌ஷர்கள் இன்று அரசியலில் ‘கிங் மேக்கர்’கள்

May 23, 2022
sri_lanka_26746_c0-5-5824-3402_s1200x700

Photo, AP Photo/Eranga Jayawardena, The Washington Times

ராஜபக்‌ஷர்கள் கோட்டபாய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்குமாறு தென்னிலங்கையைக் கோரினர். 69 இலட்சம் வாக்குகளை அளித்து தென்னிலங்கை மக்கள் அவரை ஜனாதிபதியாக்கினர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் என்று ராஜபக்‌ஷர்கள் தென்னிலங்கையிடம் கோரினர். அந்தக் கோரிக்கையையும் தென்னிலங்கை மக்கள் நிறைவேற்றி வைத்தனர்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கான மக்கள் ஆணையை வைத்துக் கொண்டு 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியை சர்வாதிகாரியாக மகுடம் சூட்டினர். தென்னிலங்கை மக்கள் வெறும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராஜபக்‌ஷர்கள் தமது குடும்பத்துக்கு ஏற்றாற் போல் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். அப்பொழுதும் தென்னிலங்கை பார்த்துக் கொண்டிருந்தது.

நாடு சூறையாடப்பட்டது. இலங்கையின் கஜானா காலியாகியது. எல்லாவற்றுக்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. நாட்டை ராஜபக்‌ஷ குடும்பமும் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கமும் மீள முடியாத கடன் பொறியில் தள்ளினர். இறுதியாக முழு நாட்டையும் மக்களையும் ‘படடினிப் பொறிக்குள்’ தள்ளினர்.

அப்பொழுதுதான் தென்னிலங்கை விழித்தது. விழித்து என்ன பயன் எல்லாமே கட்டு மீறிப் போய்விட்டது.

‘கோட்டா கோ’ என தென்னிலங்கை இளைஞர்களும் யுவதிகளும் களத்தில் இறங்கினர். காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ‘கோட்டா கோ கம’ என்ற கிராமத்தையே உருவாக்கினர். இந்த தென்னிலங்கை இளைஞர் யுவதிகளின் கருத்தியல் தென்னிலங்கை மக்களின் உணர்வுகளைக் கிளறியது. நாடு தழுவிய போராட்டம் மற்றும் தென்னிலங்கையில் பல இடங்களில் ‘கோட்டா கோ கம’ கிராமங்கள் உருவாகின.

அலரி மாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ உருவாகியது. இவைகளுடன்  ‘கபுடா கா கா’ வும் இணைந்து கொண்டது.

பாசாங்கு அரசியல்

இதன் எதிரொலியாக  பிரதமர் பதவியில் இருந்து  மஹிந்த ராஜபக்‌ஷ இராஜினாமா செய்தார். ராஜபக்‌ஷ குடும்பத்தினர் அமைச்சுப் பதவிகளைத் துறந்தனர். 21ஆவது திருத்தம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் பற்றிப் பேசப்படும் நிலையில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ தனக்கு தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த நாடாளுடமன்றப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது 21ஆவது திருத்தத்துடன் தொடர்புபட்ட வெளிநாட்டுப் பிரஜை குறித்த விடயத்தைப் பேசாமல் இருப்பதற்கான காய் நகர்த்தலாகவே உள்ளது. இவ்வாறு தோல்வியை ஒப்புக் கொள்வது போன்று ராஜபக்‌ஷர்கள் பாசாங்கு காட்டிய அதேவேளை மறு புறம்

– மக்கள் வழங்கிய ஆணையைக் கேடயமாக்கி அரசியலமைப்பு ரீதியில் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.

– தமக்கென ஒரு விசுவாசியை பிரதமராக்கி ‘மொட்டுக் கட்சியின்’ அமைச்சரவையையும் அமைத்து ‘ஒரு சமாளிப்பு’ ஆட்சியை நடத்தத் தொடங்கிவிட்டனர்.

– பதவி விலகப்போவதில்லையென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். நாட்டையும் மக்களையும் படு குழிக்குள்  வீழ்த்தியதை ஒப்புக் கொள்ளும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தான் தோல்வியுற்ற ஜனாதிபதியாக வெளியேறப் போவதில்லை. மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப தொடர்ந்தும் பதவியில் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

– பஷில் ராஜபக்‌ஷ நாடாளுமன்றப் பதவியைத் துறந்து சாதாரண பிரஜையாகியுள்ளதாக அறிவித்துள்ளார். அதேவேளையில் தான் தொடர்ந்தும்  பொதுஜன பெரமுன கட்சியின் நலன்களுக்காக அரசியலில் இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

மொத்தத்தில் ராஜபக்‌ஷர்கள் ஜனாதிபதி பதவி மற்றும் பொது ஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற பலத்தைக் கைகளில் வைத்துள்ள பஷில் ராஜபக்‌ஷ மூலம் தொடர்ந்தும் இலங்கை அரசியலில் ‘கிங் மேக்கராக’ கோலோச்ச காய்களை நகர்த்தியுள்ளனர்.

இலங்கை அரசியலில் இதுவரை முடிசூடா மன்னர்களாக இருந்த ராஜபக்‌ஷர்கள் இன்று ‘கிங் மேக்கர்’ அரசியலை நடத்தத் தொடங்கிவிட்டனர்.

மக்களுக்கு ஆணை வழங்க அனுமதித்துள்ள அரசியலமைப்பு அந்த ஆணை மீறப்படும் போது அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படும் போது அந்த ஆணையை மக்களால் மீளப் பெறுவதற்கான அனுமதியை அரசியலமைப்பு வழங்கவில்லை. மக்களின் ஆணை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள ஆளும் எதிர்க் கட்சிகளுக்கிடையிலான பலப் பரீட்சையிலேயே மக்கள் ஆணை தீர்மானிக்கப்படுகின்றது. அடுத்த தேர்தல் நடைபெறும்வரை ‘ஆணை வழங்கிய மக்கள்’ வெறும் பார்வையாளர்களாக இருந்துவிட்டுப் போக வேண்டியதுதான் அரசியல்வாதிகளின் நிலைப்பாடாக உள்ளது. அரசியலமைப்பின் ஏற்பாடாகவும் உள்ளது. இலங்கை அரசியலில் இதுதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

‘கோட்டா கோ கம’ இளைஞர் யுவதிகளினதும் தென்னிலங்கை மக்களினதும் அரசியல் அபிலாசைகளுக்கு தீனி போடுவதாக ஜ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘அரசியல் நாடகம்’ மற்றும் ‘கிங் மேக்கர்’ அரசியல் அமையப்போவதில்லை என தென்னிலங்கை உரத்துக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த நல்லாட்சி காலத்தில் அன்றைய பிரதமரும் இன்றைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடன் அமைச்சரவையில் அமர்ந்துள்ள அமைச்சர்களும் ராஜபக்‌ஷர்களை காப்பாற்றிய நகர்வுகளை நாடே அறியும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசியலில் ‘ஒட்சிசன்’ தேவைப்படுகின்றது. ராஜபக்‌ஷ குடும்பங்கள் போட்ட ‘பிரதமர் பதவி பிச்சை’ மாத்திரம் இலங்கை அரசியலில் தனக்கும் தான் தலைமையேற்றிருக்கும் ஜக்கிய தேசிய கட்சிக்குமான அரசியல் பாதையை அமைத்துக் கொள்ள போதுமானதல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே, அவசரப்பட்டு விரைவில் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்க அவர் முன்வரமாட்டார்.

ராஜபக்‌ஷர்களும் நாட்டில் ஒரு தேர்தல் வருவதை விரும்பும் நிலையில் இல்லை. ராஜபக்‌ஷர்களைப் போன்றே அவர்கள் சார்ந்த பொது ஜன பெரமுன கட்சியும் ஆளும் வர்க்கமும் தேர்தலை எதிர் கொள்ளும் மன நிலையில் இல்லை.

மொத்தத்தில் ரணில் இலங்கை அரசியலில் மீண்டெழ துடிக்கின்றார். ராஜபக்‌ஷர்கள் தமக்கெதிராக தென்னிலங்கையில் திரண்டெழுந்து வருகின்ற எதிர்ப்பலைகளைக் கடந்து போய்விடத் துடிக்கின்றனர்.

அந்த வகையில் தென்னிலங்கை கோருவது போன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் நிலையில் இல்லை. அவரை வெளியேற்றும் வல்லமை கொண்டதாக எதிர்க் கட்சிகள் இல்லை. அரசியலமைப்பு ரீதியிலும் ஜனாதிபதியை அகற்றுவதற்கான எந்த மார்க்கமும் இல்லை. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிரான எந்த நகர்வுகளையும் தகர்த்தெறியும் சக்தி படைத்தவர்களாக ராஜபக்‌ஷகள் உள்ளனர்.

மொத்தத்தில் ராஜபக்‌ஷர்கள் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையைப் பொறியாக்கி அந்த பொறிக்குள் மக்களையே சிக்க வைத்துள்ளனர்.

இன்றைய நிலையில் நாடு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போவதே ஒரே வழி. பொதுத் தேர்தலுடன் ஜனாதிபதி முறை குறித்து தீர்மானம் எடுக்கும் வழிவகைகள் குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இப்போதைக்கு இது சாத்தியமாவதாகத் தெரியவில்லை. இந்த நிலைமை தொடர்வதும் மாற்றமடைவதும் தென்னிலங்கை இளைஞர் யுவதிகளினதும் மக்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது.

V.Thevaraj-e1652333618491.jpg?resize=105வி.தேவராஜ்
 

 

https://maatram.org/?p=10203

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.