Jump to content

’உணவு பஞ்சம் ஏற்படாது’ - அமைச்சர் மஹிந்த அமரவீர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

’உணவு பஞ்சம் ஏற்படாது’

பா.நிரோஸ்

அதிகளவான ஹெக்டேயர்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவுப்பஞ்சம் தொடர்பில் மக்கள் அச்சம்  கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை வசமுள்ள நெல்லை விரைவாக அரிசியாக மாற்றி விநியோகிக்க வேண்டுமென ஆலோசனை  வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

வழமையாக மாதமொன்றுக்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படும். எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக  அதிகரிக்க நாம் ஆலோசனை வழங்கி உள்ளோம். எனவே தேவைக்கு ஏற்ப அரசியை சதோச, சுப்பர் மார்க்கெட்டுக்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அரிசி மாபியாவை இல்லாதொழிக்க நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை நேரடியாக தலையீடுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார். தேவையைவிட பத்து மடங்காக அரிசியை சந்தைகளுக்கு விநியோகிக்கும் போது அரிசிக்கான தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்பு 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது 470,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளது. எனவே நாட்டின் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. ஆகவே மக்களுக்கு  முன்பிருந்த அச்சம் இப்போது தேவையில்லை எனவும் அமைச்சர்  தெரிவித்தார்.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/உணவு-பஞ்சம்-ஏற்படாது/175-298665

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பஞ்சம் ஏற்படாது – அச்சப்பட வேண்டாம்: அரசாங்கம்!

நாட்டில்... பஞ்சம் ஏற்படாது – அச்சப்பட வேண்டாம்: அரசாங்கம்!

நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒருமாதத்திற்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப் படுவதாகவும் அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேவைக்கு ஏற்ப சதோச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்னர், 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது 470,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1287381

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 கிலோ அரிசி மூடை 6000 ரூபா எங்க போய் சொல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர.......

Link to comment
Share on other sites

உரத்தட்டுப்பாடு பாரிய பிரச்சனை. எப்படி பயிர் செய்ய போகிறார்  மகிந்த அமரவீர?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலை உழுவதற்கு எரிபொருள் இல்லை. அப்படி உழுது விதைத்தாலும் பயிருக்குப் விசிறுவதற்கு உரம் இல்லை. நிலைமை இப்படி இருக்கையில் எப்படி பஞ்சம் ஏற்படாமல் போகும் 🧐

ஒருவேளை அமைச்சர் அரிசியை இறக்குமதி செய்யலாம் என்கிறாரோ....ம்ம்ம்ம்ம்ம்

அதற்கும் டொலர் வேண்டுமே...😏

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கூடப் படித்திருப்பார் போல.....🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2022 at 15:24, கிருபன் said:

நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்பு 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது 470,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளது. எனவே நாட்டின் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது.

இவ்வளவுதான் இவரது அறிவு. வெறும் நிலப்பரப்பு அரிசி போடுமா? இருக்கிற நிலத்தில் பயிர் செய்ய தேவையான மூலப்பொருட்கள் இல்லாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். இதில நிலப்பரப்பு கூடி அரிசி விளையுமாம். எல்லாம் மாதனமுத்தா கதைதான். இல்லாத நிதியை வழங்கச் சொல்லி ஜனாதிபதி அறிவுறுத்தல், இவர் அடுத்த ஜோசியம் சொல்லுறார். மக்களை முட்டாள்கள் என்று நினைத்து முட்டாள்தனமாய் கதைப்பதும், அறிக்கை விடுவதும் வழக்கமாய் போய்விட்டது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.