Jump to content

ஒற்றைத் தலைமை விவகாரம்: ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன்.. ஆலோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றைத் தலைமை விவகாம்: ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

ஒற்றைத் தலைமை விவகாரம்: ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன்.. ஆலோசனை.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதேவேளை சென்னையில் தனது இல்லத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்தை, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இரட்டை தலைமையின் கீழ் கட்சி சிறப்பாக நடைபெறும் என கூறினார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1287541

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றைத் தலைமை என்றால், இரட்டை இலை முடக்கம்: பன்னீர் தரப்பின் பகீர் கடிதம்!

spacer.png
 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், " இரட்டைத் தலைமை நன்றாக போய்க் கொண்டிருக்கும்போது ஒற்றைத் தலைமை எதற்கு? அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். அதனால் கட்சிக்கு நல்லதல்ல” என்று பகிரங்கமாக எச்சரித்தார். ஆனால் ஒற்றைத் தலைமை என்று தன்னை அறிவித்துக் கொள்ள தீவிரமாக காய் நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமி, மூன்று நாட்களாகியும் பன்னீரின் கருத்து குறித்து பதில் அளிக்கவில்லை. மாறாக அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்துக்கு நான்கைந்து நாட்களே இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து திட்டவட்டமாக தயார் செய்யப்பட்ட ஒரு கடிதம் அதிமுகவின் அனைத்து மாசெக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதிமுகவின் நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு வந்த அந்தக் கடிதத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

ஆறு பக்கத்துக்கு தட்டச்சு செய்யப்பட்ட அந்த கடிதம் ஒற்றைத் தலைமையால் ஏற்பட இருக்கும் சிக்கல்களை பாயின்ட் பாயின்ட் ஆக குறிப்பிட்டு, அதிமுக கட்சியே பிளவுபட்டு, இரட்டை இலை சின்னம் கூட முடக்கப்படலாம் என்று எச்சரிக்கிறது.

’ஒற்றைத் தலைமை: கழகத்தின் சட்ட விதிகள் மற்றும் சட்டத்தின் பார்வையில்' என்று தலைப்பிடப்பட்ட அந்த கடிதத்தில்,

“கடந்த 12-9-2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கழகத்தின் சட்ட விதிகள் (விதி எண் 20) திருத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி அவர்களது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். மேற்கண்ட பதவிகள் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறை குறித்த கழகத்தின் சட்ட விதிகள் மீண்டும் திருத்தப்பட்டு, அவ்விரு பதவிகளும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று, கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஒற்றை ஓட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தல் குறித்த அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் நடைபெற்று அவர்களால் முறையாக அறிவிப்பு செய்யப்பட்டது. மேற்படி பதவிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்டுவிட்டது. மேற்கண்ட பதவிகளுக்கான கால அளவு ஐந்து வருடங்கள் ஆகும்.

மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் இடத்தை யாரும் நிரப்ப இயலாது என்பதால், பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு இனி இல்லை என்று முடிவெடுத்து அந்த பதவியை ரத்து செய்து, தீர்மானம் கழகத்தின் சட்ட விதி 43 இன் கீழ் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலமான ஐந்து வருடத்தை கழகத்தின் பொதுக்குழு தீர்மானம் மூலம் தற்போது மாற்றி அமைக்க இயலாது. அவ்வாறு மேற்படி பதவிக் காலத்தை மாற்ற வேண்டுமெனில் பதவிக் காலம் முடிவுறும் நேரத்தில் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

spacer.png

அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது தேர்வுகளை பொதுக்குழுவால் ரத்து செய்யவோ மாற்றவோ இயலாது. அதற்கு கழகத்தில் விதிகள் இல்லை....” என்று விளக்குகிறது அந்தக் கடிதம்.

மேலும், “அரசியலமைப்பு சட்டத்தையே திருத்தும் போது அதிமுக அமைப்பு சட்டத்தைத் திருத்த முடியாதா?” என்று எடப்பாடி தரப்பினர் வெளிப்படையாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கும் பதில் சொல்கிறது ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பில் அனுப்பப்பட்ட இந்தக் கடிதம்.

அதாவது, “அவ்வாறு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஒரு தலைப்பட்சமாக கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றி நீக்கம் செய்யும் பட்சத்தில் அது இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு நீதிமன்றத்தின் முன்பு வழக்குகளை சந்திக்க நேரிடும்.

கடந்த 1-12-21 அன்று கழக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களின் ஒற்றை வாக்கின் மூலமாக இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள் என்று சட்ட விதி எண் 20 (அ) பிரிவு 2 ஐ திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் அதற்குப் பிறகு நடைபெறும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவதென்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த அடிப்படையில் மேற்படி சிறப்புத் தீர்மானத்துக்கு மட்டுமே நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஒப்புதல் பெற முடியும். ஏனென்றால் இந்த சிறப்புத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு தேர்தல் ஆணையர்களால் கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட தேதியில் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதை தேர்தல் ஆணையமும் ஏற்று அங்கீகாரம் செய்துவிட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் ஆணையர்களாக இருந்து கிளை, நகர, ஒன்றிய மற்றும் மாவட்ட கழக தேர்தலை முறையாக அறிவிப்பு கொடுத்து நடத்தி முடித்துள்ளார்கள். தேர்வானவர்களின் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த 29-4-2022 அன்று முறையாக சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

spacer.png

எனவே வர இருக்கிற பொதுக்குழுவில் மேற்படி சிறப்புத் தீர்மானத்துக்கு ஒப்புதல் கொடுக்க முடியுமே அன்றி, மேலும் ஒரு தீர்மானத்தின் மூலம் ஒற்றைத் தலைமை கொண்டுவருவதற்காக தேர்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தீர்மானத்தை இயற்றுவதற்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு கூட்டத்தின் விதிகளை மீறி செய்யும் பட்சத்தில் மேற்சொன்ன பதவிகளின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் முன்பு சட்டப்படியான பிரச்சினைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும்.

இதன் மூலம் கழகத்தின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து ஒரு கேள்விக்குறியான நிலை உருவாகும். தமிழ்நாடு முழுதும் கழகத் தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்தத் தூண்டுகோலாக அமையும்” என்று எச்சரித்திருக்கிறது அந்தக் கடிதம்.

அதாவது எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக்கு முயற்சித்தால் அதிமுக என்ற கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீண்டும் முடக்கும் சூழல் உருவாகும் என்று எச்சரிக்கிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதம்.

சட்ட விதிகளை தெளிவாக மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதம் பல நிர்வாகிகளிடையே பேசுபொருளாகியிருக்கிறது. இந்தக் கடிதம் எடப்பாடியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரும் அதைப் படித்துவிட்டு, “நான் முதல் முதல்ல தேர்தல்ல நின்னு ஜெயிச்சதே சேவல் சின்னத்துலதான். அதுக்கப்புறம்தான் அம்மா இரட்டை இலையை கைப்பற்றினாங்க தெரியுமில்லே” என்று பழைய வரலாற்றை புதிய அர்த்தத்தோடு சொல்லியிருக்கிறார்.

 

https://minnambalam.com/politics/2022/06/18/16/panneerselvam-side-letter-to-all-generalbody-members-admk-single-leadership-will-two-leaves-freeze

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.