Jump to content

நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?

  • சே.பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மாதிரி படம்

  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தை திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படாமல் முடங்கியுள்ளதால் பச்சிளம் குழந்தைகள் வீதிகள் வீசப்படும் அவலங்கள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

தொட்டில் குழந்தை திட்டம் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. 1992ஆம் ஆண்டு முதன்முறையாக சேலத்தில் இதை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. தமிழகம் முழுவதும் பெற்றோரால் கைவிடப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சட்டப்படி தத்துக் கொடுக்கப்பட்டன.

தற்போதைய சூழலில் இந்த உயரிய திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தொட்டில் குழந்தை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பது சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரும் பொதுவான விளக்கம். அண்மையில் உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல் நாய்களால் கடித்துக் குதறப்பட்டு கோரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013 முதல் 2020ஆம் ஆண்டு வரை 52 குழந்தைகள் குப்பையிலும் தெரு ஓரங்களிலும் மீட்கப்பட்டன. இவற்றில் நான்கு குழந்தைகள் நாய்களும் எலிகளும் கடித்து பரிதாபமாக உயிரிழந்தன. ஒருவேளை தொட்டில் குழந்தை திட்டம் நடைமுறையில் இருந்திருந்தால் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் திட்டம் மீண்டும் முழுவீச்சில் நடைமுறைக்கு வரப்படவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில் முக்கிய இடங்களில் அரசின் தொட்டில்கள் ஆட வேண்டும். கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலோரின் கோரிக்கையாக உள்ளது.

"தொட்டில் குழந்தை திட்டத்தைத் தற்போது செயல்படுத்துவதற்கு முதலில் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்," என்கிறார் குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் முகமது.

மேலும் இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொட்டில் குழந்தை திட்டம் என்று ஒன்று இருப்பதை அரசு மறந்துவிட்டது. மக்களிடம் இதுகுறித்துப் பெரிதாக எந்தவொரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத்துறை என்ற அமைப்பு இருப்பது பெரும்பாலான கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளை வீதியில் வீசுவதற்கு முன்பு குழந்தைகளுக்கு என்றே தனியாக அரசுத்துறை இருப்பது தெரிந்திருந்தால் குழந்தையை வீதியில் வீசுவது தவிர்க்கப்பட்டிருக்கும். சரியான முறையில் மக்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதைச் சரியாகச் செயல்படுத்தினால் நிச்சயமாக குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும்," என்றார்.

 

தொட்டில் குழந்தை திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தையை வளர்க்க, பாதுகாக்க இயலாது என உணரும் எவருடைய குடும்பமும் தயங்காது 1098 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவித்து, "குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்," என்று பிபிசி தமிழிடம் பேசியபோது கூறினார் குழந்தைகள் நலத்துறையின் முன்னாள் உறுப்பினர் குளோரி ஆனி.

மேலும், "குழந்தையை வீதியில் வீசி எறியாமல் அரசிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தை பாதுகாப்பான ஓர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு, அரசு முறைப்படி தத்துக் கொடுக்கப்பட்டு, நல்லதொரு குடும்ப சூழ்நிலையில் வளரும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியமாக காவல்நிலையங்களில் பதாகைகள் வைக்க வழிவகைகளைச் செய்தல் வேண்டும்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அநீதியின் விளைவாக, குழந்தைகளை ஈனுமளவுக்கு நிலைமை கைமீறிச் செல்லும் பட்சத்தில், அவர்களுக்கு சட்ட நெறிமுறைகளுடன் கூடிய மறுவாழ்வு உதவிகள் கிடைப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் நலத்துறையுடன் அணுகி காவல்துறை ஆவண செய்ய வேண்டும். மேலும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற பொது இடங்களிலும், 'குழந்தைகளை வளர்க்க இயலாது எனில் 1098 என்ற எண் வழியாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தை அணுகி குழந்தைகளை ஒப்படையுங்கள், ரகசியம் பேணப்படும். சட்டத்திற்குப் புறம்பாகத் தத்துக் கொடுத்தல், குழந்தை திருமணம் ஆகியவை தண்டனைக்கு உரிய குற்றம், போக்சோ (POCSO) வழக்கு பதியப்படும், போக்சோ வழக்கில் பிணை கிடையாது', என்ற வாசகங்கள் அடங்கிய பலகை/பதாகைகள் , போஸ்டர்கள் பொருத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும்," என்றார்.

 

தொட்டில் குழந்தை திட்டம்

"1992 ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் வந்தபோது இருந்த குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை விடத் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளன. சமூக நலத் துறையாக இருந்தது தற்போது சமூகப் பாதுகாப்புத்துறையாக மாறியுள்ளது. இப்போதுள்ள பிரச்னை என்னவென்று பார்த்தால் பல்நோக்குத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்து வேலை செய்யாமல் இருப்பதுதான் பிரச்னை," என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரும் 'தோழமை' அமைப்பின் இயக்குநருமான தேவநேயன்.

மேலும் இவர், "குழந்தைகள் இந்த தேசத்தின் சொத்து. இவர்கள் எளிதில் நாசமாக்கப்படலாம். 18 வயதுக்குட்பட்ட சிறுமி அறியாத பழக்கத்தாலோ பாலியல் வல்லுறவினாலோ குழந்தையை ஈன்றால், அதற்குத் தாய் குற்றவாளி இல்லை. அந்தக் குழந்தையும் குற்றவாளி இல்லை. 1991இல் தொட்டில் குழந்தை திட்டத்தில் நிறைய குழந்தைகள் வீசப்பட்டன.

தற்போது விழிப்புணர்வு காரணமாக இந்த எண்ணிகை வெகுவாகக் குறைந்துள்ளது. முறை தவறிய உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் துாக்கி வீசப்படும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்கு அமைப்பு இருப்பது பெற்றோர்கள் சமுதாயத்திற்கு முழுமையாகத் தெரியவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. இதுபோல் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய் மற்றும் குழந்தையை சமூகம் தவறாகப் பேசக்கூடாது.

குழந்தையைத் துாக்கி எறியும் தாய்மார்கள் கர்ப்பகால சிகிச்சை பெற்றார்களா என்பதைக் கண்டறிய வேண்டும். இதுபோன்ற குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு இருந்தால் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தாய்மார்கள் பாதிக்கப்பட்டிருந்தால் 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சமீபகாலமாக இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற இளம் பெண்களுக்கு வாழ்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை எனப் பல துறைகளுக்குத் தொடர்புள்ளது.

 

தொட்டில் குழந்தை திட்டம்

 

படக்குறிப்பு,

"இப்போதுள்ள பிரச்னை என்னவென்று பார்த்தால் பல்நோக்குத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்து வேலை செய்யாமல் இருப்பதுதான் பிரச்னை," என்கிறார் தேவநேயன்

ஆனால் மேற்கண்ட இந்த பல்நோக்கு துறைகள் ஒன்றிணைந்து செயல்படுகிறதா என்று பார்த்தால் கிடையாது. மேற்கண்ட துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து சீராகச் செயல்பட்டால் மட்டுமே குழந்தைகள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் முன்பே தடுத்து நிறுத்த முடியும்," என்றார்.

சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

மேலும் அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கிய நாள் முதல், தற்போது வரை தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. சமூக நலத்துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறார்கள்.

அரசு மருத்துவமனைகள், அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் உள்ள தொட்டில்களில் குழந்தைகளை விட்டுச் செல்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை உசிலம்பட்டிக்குச் சிறப்பு கவனம் செலுத்தி, அங்கிருக்கும் மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற இந்த துயரச் சம்பவத்தை அடுத்து இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை,காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குழந்தைகளுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

https://www.bbc.com/tamil/india-61846282

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.