Jump to content

என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

// நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? 

நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // 

இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.. 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா , சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண

vanangaamudi

தனது கொள்கைகளை சிந்தனையிலும் செயலிலும் நிறுத்தி வாழ்ந்துகாட்டும் ஒருவர் இன்னொருவருக்கு கருத்து சொல்ல அல்லது  ஆலோசனை  வழங்கும்போது அதற்கு தனியான மதிப்பு உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது.  அப்படி இல்ல

குமாரசாமி

இப்போதெல்லாம் ஒரு பக்க நியாயத்தை உலக நியாயமாக்கி விடுவதையே பலர் செய்கின்றார்கள்.  எனது வீட்டுக்குள்ளேயே பெரிய இழப்பை வைத்துக்கொண்டு வெளியில் சென்று அதை நிவர்த்தி செய்வது  புண்ணியம் தேடுவது போல் தான்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஒருவர் போல இன்னொருவர் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே.அது பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

பிரபா முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் பெருமையாக இருக்கிறது.

நன்றி அங்கிள்!!

 

27 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருவர் போல இன்னொருவர் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே.அது பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

உண்மைதான்.. 

இன்றிரவு ஒரு வீட்டிற்கு போயிருந்தேன்.. அங்கே நான் தனியே அப்படி இருக்க தேவையில்லை என வாதாட மற்றவர்கள் என்னிடம் கூறினார்கள், நான் நினைப்பது பிழை. 90% வீதமானவர்கள் ஓரே மாதிரி சிந்திக்கையில் நான் அதை ஏற்காவிட்டால் என்னில்தான் தவறு என்றார்கள்.. மிகவும் கவலையாகிவிட்டது

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு கண் தெரியும் என்பதற்காக கண் தெரியாதோர் வாழக்கூடாது என்று யாரும் நினைக்கவே முடியாது. அதுபோலத்தான்.. உங்களுக்கு உங்கள் தாய்மொழி அறிவு இருக்கிறது என்பதால்.. அதனை பாவிக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. உங்களின் ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் தாய் மொழியை.. தந்தை மொழியை.. பேசுவதும் விடுவதும் அவரவர் விருப்பம்.. அவர்களுக்காகவோ.. ஊர் வாய்க்காகவே.. நீங்கள் தாய் மொழியை அதற்கான சேவையை நிராகரினுன்னு இல்லை.. அப்படி யாரும் எதிர்பார்ப்பார்கள் என்றால்.. அவர்களை நிராகரித்துவிட்டு.. உங்களுக்கு சரியென்பதை தெளிந்து செய்யுங்கள்.

எங்கள் செயல் பிறரை.. உலகை.. சூழலை பாழாக்கும் என்றால் தவிர.. மற்றும்படி எங்கள் செயலை சொல்லை யாருக்காகவும் கைவிடனும் என்ற அவசியமில்லை. அப்படி மற்றவர்கள் எதிர்பார்க்கவும் முடியாது.. அந்த உரிமை அவர்களுக்கும் இல்லை. 

Edited by nedukkalapoovan
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உஙகள் செயறபாட்டை குறை லெ;ல முடியாது.ஆனால்  தாய் மொழியில் ஈடுபாடு கொன்ட ஒருவரின் பிள்ளை அந்த மொழியை
கதைக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் இடிக்கத்தான் செய்யும.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி பிரபா சிதம்பரநாதன். தமிழ் மொழி மீது பற்றும் ஆர்வமும்   இருப்பது உங்கள் உரிமை . உங்களுக்கு மிகவும் பிடித்தது . துணைக்கு ஆர்வமில்லாத போது பல தடைகள் வரக் கூடும் அது வழமை. பிள்ளைக்கு  புகட்டிட முயற்சியுங்கள். முடியாவிடடால்  அவரை அவர் போக்கில் விடவும். இதற்காக உ ங்கள் முயற்சியையோ ஆர்வத்தையோ  அணை போட வேண்டாம். 
இது உங்களுக்கான உரிமை வரம்  ஆர்வம் . எல்லோருக்கும் எல்லாம் கை வரும் என்று இல்லை.  பிள்ளைகள் வளரும் நாடு சூழல் பின்னணி   என்பதை பொறுத்தது.  மேலும் உங்கள் திறமைகள்  யாழிலும்  நாம் அறிய பங்கு பெற  வாழ்த்துக்கள் 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

மிக்க மகிழ்ச்சி பிரபா சிதம்பரநாதன். தமிழ் மொழி மீது பற்றும் ஆர்வமும்   இருப்பது உங்கள் உரிமை . உங்களுக்கு மிகவும் பிடித்தது . துணைக்கு ஆர்வமில்லாத போது பல தடைகள் வரக் கூடும் அது வழமை. பிள்ளைக்கு  புகட்டிட முயற்சியுங்கள். முடியாவிடடால்  அவரை அவர் போக்கில் விடவும். இதற்காக உ ங்கள் முயற்சியையோ ஆர்வத்தையோ  அணை போட வேண்டாம். 
இது உங்களுக்கான உரிமை வரம்  ஆர்வம் . எல்லோருக்கும் எல்லாம் கை வரும் என்று இல்லை.  பிள்ளைகள் வளரும் நாடு சூழல் பின்னணி   என்பதை பொறுத்தது.  மேலும் உங்கள் திறமைகள்  யாழிலும்  நாம் அறிய பங்கு பெற  வாழ்த்துக்கள் 

மன்னிக்கவேண்டும் நிலாமதி அக்கா, இது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்றது இல்லை. 

நான் போன இடத்தில் எமது சமூகத்தில் பிரபல்யமானவர்களின் பிள்ளைகளைப் பற்றி மற்றவர்கள் கதைக்கும் பொழுது, கதைத்த விடயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை, நான் உடன்படவும் இல்லை. அப்பொழுதுதான் நான்தான் ஏதும் பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறேனோ என நினைத்தமையாலேயே தெளிவு பெற கேட்டேன். மற்றப்படி இது எனது தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. 

மிக்க நன்றி நிலாமதி அக்கா

5 hours ago, சுவைப்பிரியன் said:

உஙகள் செயறபாட்டை குறை லெ;ல முடியாது.ஆனால்  தாய் மொழியில் ஈடுபாடு கொன்ட ஒருவரின் பிள்ளை அந்த மொழியை
கதைக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் இடிக்கத்தான் செய்யும.

அப்படியென்றால் சமூகத்திற்கு அந்த தமிழ் ஆர்வலரின் தமிழ் பங்களிப்பு தேவையில்லை, சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் நேரத்தில் பிள்ளைக்கு தமிழை கற்றுக்கொடுத்தால் சரியென நினைக்கிறீர்களா?

நன்றி சுவைப்பிரியன் அண்ணா!

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

எங்கள் செயல் பிறரை.. உலகை.. சூழலை பாழாக்கும் என்றால் தவிர.. மற்றும்படி எங்கள் செயலை சொல்லை யாருக்காகவும் கைவிடனும் என்ற அவசியமில்லை. அப்படி மற்றவர்கள் எதிர்பார்க்கவும் முடியாது.. அந்த உரிமை அவர்களுக்கும் இல்லை. 

உண்மைதான்!. 

எனக்கென்ன கவலை என்றால், இந்த மாதிரி எதிர்பார்ப்புக்களால் பிள்ளைகளையும் வேதனைப்படுத்துகிறார்கள் என்பதே. 

நான் பொதுவாக, உறவினர் வீடுகளுக்கு சென்றால் எங்களது சம வயதானவர்களுடன் அல்லது வயதில் பெரியவர்களுடன் கதைக்கும் அதே சமயத்தில் இளவயதினர்/ சிறுவர்கள் எல்லோருடனும் அவர்கள் வயதிற்கேற்ப கதைப்பதால் அவர்களிடம் இருந்து சில விடயங்களை அறிய முடிந்தது.. எனக்கு சில வழிகளில் உதவியும் உள்ளது. 

நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தந்தை போல் நானில்லை என்பது எவ்வளவு நிச்சயமோ,

அதே அளவு நிச்சயம்.

என்னை போல் என் பிள்ளை இராது என்பதுவும்.

இதில் யாரின் தெரிவும், யாரையும் கட்டுப்படுத்தாது. 

மேடை ஏறி தமிழ் பேசியவன் நீ, உன் பிள்ளையையும் அப்படித்தன் வளர்கிறாயா என்று என்னிடம் கேட்பார்கள் - சொல்லி கொடுக்கிறேன் - ஒரு பந்தை துரத்தி கொண்டு மைதானத்தில் ஓடுவதுதான் அவரின் தெரிவென்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்பேன் நான்.

 

8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

// நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? 

நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // 

இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.. 

 

 

Edited by goshan_che
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

தனது கொள்கைகளை சிந்தனையிலும் செயலிலும் நிறுத்தி வாழ்ந்துகாட்டும் ஒருவர் இன்னொருவருக்கு கருத்து சொல்ல அல்லது  ஆலோசனை  வழங்கும்போது அதற்கு தனியான மதிப்பு உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது.  அப்படி இல்லையென்றால் ஊருக்குத்தான் உபதேசம் அது உங்கள் வீட்டுக்கு இல்லை என்று தான் சொல்வார்கள்.

இதை கடந்து செல்வதற்கு உங்கள் கருத்தரங்குகளில் இதுபோன்ற இக்கட்டான சூழலை உருவாக்கும் மையக்கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. மேடையில்  பேசும்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த தமிழ்மொழி அறிவை வழர்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களானால் அது மற்றவர்களின் நகைப்பிற்கிடமனாதாகவே இருக்கும். உங்கள் கருத்தை எவரும் செவிமடுக்கவும் மாட்டார்கள்.

உங்கள் மொழியார்வத்தையும் பற்றையும் கைவிடாமல் தொடர அது பிறர் சம்பந்தப்பட்டதாயின் அதற்கு ஏற்ற விதமாக உங்கள் பேசுபொருளையும் மையக்கருத்தையும் மீள்பரிசீலனை செய்து மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிய......
இங்கு ஒருவர் தமிழ்/கலாச்சார ஈடுபாடு கொண்டவர்.தமிழ்பள்ளிக்கூட வாத்தியாரும் கூட...நல்ல/துக்க விசயங்களுக்கெல்லாம் வேட்டி சட்டையுடன் மட்டுமே காட்சியளிப்பார். தமிழரை கண்டால் வணக்கம் சொல்லி தமிழில் மட்டுமே கதைப்பார்.வீட்டிலும் ஒரே தமிழ் புத்தக மயம். தமிழ் வளர்க்க/வளர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்.

ஆனால் அவர் பிள்ளைகளோ கொச்சை தமிழ்தான் பேசுவார்கள்.தமிழ் கலாச்சாரம் அறவே இல்லை. அவரின் பிள்ளைகளா இவர்கள் என நான் நினைப்பதுண்டு.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் ஐயா சொன்னது போல தாய் மொழியில் ஈடுபாடு கொன்ட ஒருவரின் பிள்ளை அந்த மொழியைகதைக்க முடியவில்லை என்றால் கொஞ்சம்  இடிக்க செய்யாது, முழுமையாகவே இடிக்க செய்யும்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? /

பிழை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

// நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? 

நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // 

இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.. 

 

நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா ,

சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டேன். நேரடியாகத் தமிழ்க் கற்பித்தலில் ஈடுபடவில்லையாயினும் கூட, அது தொடர்பான செயற்பாடுகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ந்தேன்.

ஆரம்பத்தில் எனது பிள்ளைகளும் என்னுடன் பாடசாலைக்கு வந்தனர். ஆர்வத்துடன் கல்விசார் செயற்பாடுகளிலும், கலை கலாசார நிகழ்வுகளிலும் பங்குகொண்டனர். காலம் செல்லச் செல்ல, ஆங்கில மூலக் கல்விக்கும், பிரதான பாடசாலையின் செயற்பாடுகளுக்கும் எனது பிள்ளைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கவே, தமிழ்க் கற்றலில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குறைவடையத் தொடங்கியது. பெற்றோரில் ஒருவனான எனது ஆர்வம் மட்டுமே பிள்ளைகள் தமிழினைத் தொடர்ந்து படிக்கப் போதுமானதாக இருக்காது என்பதனை நான் புரிந்துகொண்ட நேரமும் அதுதான். சில வருடங்களில் எனது இளைய மகளும் தனது தமிழ்ப் பாடசாலையுடனான தொடர்பினை பிரதான பாடசாலையில் பரீட்சையொன்றினைக் காட்டி கத்திரித்துக்கொள்ள நானும் விலகவேண்டியதாயிற்று.

அதன் பின்னர் பலர் என்னிடம் கேட்ட ஒரு கேள்விதான், தமிழ்ப் பள்ளிக்கூட அதிபராக இருந்தீர்கள், ஆனால் உங்களின் பிள்ளைகளைத் தொடர்ச்சியாக பாடசாலைக்கு அழைத்துவரமுடியாமல்ப் போய்விட்டதே? என்பதுதான். வருத்தமாக இருந்தது. ஆனால், உண்மையும் அதுதானே? பாடசாலைக்குப் பிள்ளைகளின் வரவுபற்றியும், அவர்கள் தொடர்ந்தும் தமிழினைக் கற்பதன் அவசியம்பற்றியும் அடிக்கடி பேசும் என்னால் எனது சொந்தப் பிள்ளைகளையே பாடசாலைக்குத் தொடர்ந்து அழைத்துவரமுடியாமற் போனதையிட்டு வருந்தினேன். ஆனால்,தமிழினை எமக்குப் பின்னர், அமது அடுத்த சந்ததிக்கு கொடுக்கவிரும்பும் என்னைப்போன்ற பலருக்கு இருக்கும் வருத்தம்தான் அது. 

ஆனால், எனது பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் தமிழினைக் கற்கும் ஆர்வம் இல்லாமற்போனதனால், நான் மற்றையவர்களின் பிள்ளைகளுக்குத் தமிழினைக் கற்றுக்கொடுப்பது ஒன்றும் தவறில்லையே? எனது பிள்ளைகள்  மூலமாக தமிழ் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்பட முடியாமற்போனாலும் கூட, தமிழினைக் கற்க ஆர்வத்துடன் இருக்கும் மற்றைய பிள்ளைகளூடாகவாவது தமிழினை நாம் கொண்டுசெல்வதில் தவறிருக்க முடியாது அல்லவா? 

எனது பிள்ளைகள் தமிழினைக் கற்பதை நிறுத்தியதையிட்டு நான் கவலைப்படுவதுண்டு. ஆனால், அவர்களால் முடியாவிட்டாலும், தமிழினை நேசிக்கும் இன்னும் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நாம் தமிழினைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடு.

நீண்ட 4 வருடங்களுக்குப் பின்னர் மிக அண்மையில் மீண்டும் தமிழ்ப் பாடசாலைக்கு என்னை சில உதவிகள் கேட்டு அழைத்திருந்தார்கள். பேச்சுப்போட்டிகளில் நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றவும், பிள்ளைகளை தமிழில் உரையாட வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட செவ்வி செயற்பாட்டு ஒன்றிற்காகவு அழைத்திருந்தார்கள். மகிழ்வுடன் சென்று உதவிவிட்டு வந்தேன்.

அப்பிள்ளைகளுக்கு தமிழில் இருக்கும் ஆர்வத்தையும், அவர்களும் பேசும் விடயங்களையும் பார்த்தும், கேட்டும் மகிழ்ந்தேன். அவர்கள் மூலம் தமிழ் மேலும் கொண்டுசெல்லப்படும் என்பதையும் உணர்ந்தேன். எனது பிள்ளைகளால் தமிழினைக் கற்கமுடியவில்லை என்கிற ஏக்கம் அப்போது சுத்தமாக போயிருந்தது.

எனது பிள்ளைகள் கற்கிறார்களோ இல்லையோ, கற்கவிரும்பும் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று எண்ணியிருக்கிறேன். நோக்கம் எனது தாய்மொழி அழிந்துவிடக்கூடாது என்பதுதான். அதை எப்படிச் செய்தால் என்ன, விளைவு ஒன்றுதான். 

  • Like 10
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா ,

சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டேன். நேரடியாகத் தமிழ்க் கற்பித்தலில் ஈடுபடவில்லையாயினும் கூட, அது தொடர்பான செயற்பாடுகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ந்தேன்.

ஆரம்பத்தில் எனது பிள்ளைகளும் என்னுடன் பாடசாலைக்கு வந்தனர். ஆர்வத்துடன் கல்விசார் செயற்பாடுகளிலும், கலை கலாசார நிகழ்வுகளிலும் பங்குகொண்டனர். காலம் செல்லச் செல்ல, ஆங்கில மூலக் கல்விக்கும், பிரதான பாடசாலையின் செயற்பாடுகளுக்கும் எனது பிள்ளைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கவே, தமிழ்க் கற்றலில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குறைவடையத் தொடங்கியது. பெற்றோரில் ஒருவனான எனது ஆர்வம் மட்டுமே பிள்ளைகள் தமிழினைத் தொடர்ந்து படிக்கப் போதுமானதாக இருக்காது என்பதனை நான் புரிந்துகொண்ட நேரமும் அதுதான். சில வருடங்களில் எனது இளைய மகளும் தனது தமிழ்ப் பாடசாலையுடனான தொடர்பினை பிரதான பாடசாலையில் பரீட்சையொன்றினைக் காட்டி கத்திரித்துக்கொள்ள நானும் விலகவேண்டியதாயிற்று.

அதன் பின்னர் பலர் என்னிடம் கேட்ட ஒரு கேள்விதான், தமிழ்ப் பள்ளிக்கூட அதிபராக இருந்தீர்கள், ஆனால் உங்களின் பிள்ளைகளைத் தொடர்ச்சியாக பாடசாலைக்கு அழைத்துவரமுடியாமல்ப் போய்விட்டதே? என்பதுதான். வருத்தமாக இருந்தது. ஆனால், உண்மையும் அதுதானே? பாடசாலைக்குப் பிள்ளைகளின் வரவுபற்றியும், அவர்கள் தொடர்ந்தும் தமிழினைக் கற்பதன் அவசியம்பற்றியும் அடிக்கடி பேசும் என்னால் எனது சொந்தப் பிள்ளைகளையே பாடசாலைக்குத் தொடர்ந்து அழைத்துவரமுடியாமற் போனதையிட்டு வருந்தினேன். ஆனால்,தமிழினை எமக்குப் பின்னர், அமது அடுத்த சந்ததிக்கு கொடுக்கவிரும்பும் என்னைப்போன்ற பலருக்கு இருக்கும் வருத்தம்தான் அது. 

ஆனால், எனது பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் தமிழினைக் கற்கும் ஆர்வம் இல்லாமற்போனதனால், நான் மற்றையவர்களின் பிள்ளைகளுக்குத் தமிழினைக் கற்றுக்கொடுப்பது ஒன்றும் தவறில்லையே? எனது பிள்ளைகள்  மூலமாக தமிழ் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்பட முடியாமற்போனாலும் கூட, தமிழினைக் கற்க ஆர்வத்துடன் இருக்கும் மற்றைய பிள்ளைகளூடாகவாவது தமிழினை நாம் கொண்டுசெல்வதில் தவறிருக்க முடியாது அல்லவா? 

எனது பிள்ளைகள் தமிழினைக் கற்பதை நிறுத்தியதையிட்டு நான் கவலைப்படுவதுண்டு. ஆனால், அவர்களால் முடியாவிட்டாலும், தமிழினை நேசிக்கும் இன்னும் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நாம் தமிழினைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடு.

நீண்ட 4 வருடங்களுக்குப் பின்னர் மிக அண்மையில் மீண்டும் தமிழ்ப் பாடசாலைக்கு என்னை சில உதவிகள் கேட்டு அழைத்திருந்தார்கள். பேச்சுப்போட்டிகளில் நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றவும், பிள்ளைகளை தமிழில் உரையாட வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட செவ்வி செயற்பாட்டு ஒன்றிற்காகவு அழைத்திருந்தார்கள். மகிழ்வுடன் சென்று உதவிவிட்டு வந்தேன்.

அப்பிள்ளைகளுக்கு தமிழில் இருக்கும் ஆர்வத்தையும், அவர்களும் பேசும் விடயங்களையும் பார்த்தும், கேட்டும் மகிழ்ந்தேன். அவர்கள் மூலம் தமிழ் மேலும் கொண்டுசெல்லப்படும் என்பதையும் உணர்ந்தேன். எனது பிள்ளைகளால் தமிழினைக் கற்கமுடியவில்லை என்கிற ஏக்கம் அப்போது சுத்தமாக போயிருந்தது.

எனது பிள்ளைகள் கற்கிறார்களோ இல்லையோ, கற்கவிரும்பும் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று எண்ணியிருக்கிறேன். நோக்கம் எனது தாய்மொழி அழிந்துவிடக்கூடாது என்பதுதான். அதை எப்படிச் செய்தால் என்ன, விளைவு ஒன்றுதான். 

மிகவும் யதார்தமான பதிவு.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

எனது பிள்ளைகள் தமிழினைக் கற்பதை நிறுத்தியதையிட்டு நான் கவலைப்படுவதுண்டு. ஆனால், அவர்களால் முடியாவிட்டாலும், தமிழினை நேசிக்கும் இன்னும் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நாம் தமிழினைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடு.

பாடசாலைக்குப் போனால்த் தான் தமிழ் படிக்கலாம் என்பதிலிருந்து நான் விதிவிலக்கு.

பிள்ளைகள் தமிழ் பேச வேண்டுமென்றால் இதை முதலில் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@vanangaamudi, @விளங்க நினைப்பவன், மற்றும் @குமாரசாமிஅண்ணா, உங்களது கருத்துக்களிற்கு நன்றி.. 

90% வீதமானவர்களின் எதிர்பார்ப்பு உங்களது கருத்துக்களை ஒத்துத்தான் இருக்கும்.. ஆனால் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவரின் தமிழிற்கான  பங்களிப்பை எடைப் போடுவதால் யாருக்கு இழப்பு அதிகம்? 

14 hours ago, goshan_che said:

இதில் யாரின் தெரிவும், யாரையும் கட்டுப்படுத்தாது. 

 

உண்மை!!

5 hours ago, Kavi arunasalam said:

பிழை

நன்றி கவி ஐயா!

3 hours ago, ரஞ்சித் said:

நோக்கம் எனது தாய்மொழி அழிந்துவிடக்கூடாது என்பதுதான். அதை எப்படிச் செய்தால் என்ன, விளைவு ஒன்றுதான். 

இதுதான் எனது எண்ணமும்..

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

90% வீதமானவர்களின் எதிர்பார்ப்பு உங்களது கருத்துக்களை ஒத்துத்தான் இருக்கும்.. ஆனால் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவரின் தமிழிற்கான  பங்களிப்பை எடைப் போடுவதால் யாருக்கு இழப்பு அதிகம்? 

இதில் வணங்கா முடி சொன்ன சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி என்பதும் முக்கியம்தான்.

உதாரணமாக ஒருவர் மேடை ஏறி சீதனத்தை எதிர்த்து பேசி விட்டு, அவரின் மகனுக்கு சீதனம் வாங்கி திருமணம் முடித்து கொடுத்தால் - அது மகனின் தெரிவு என சொன்னால் - சமூகம் அவரின் போக்கை do as I preach not as I practice என்ற ஒரு வகை ஹிப்ரோகிரசி என்றே பார்க்கும் இல்லையா?

ஆகவே நாம் பிள்ளைகளுக்கு நாம் நம்புவதை சொல்லி கொடுக்கவாவது முனைந்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். 

அதன் பின்னும் அதை அவர்கள் கைக்கொள்ளவில்லை என்றால் - நம்மால் என்ன செய்ய முடியும்.  

இது எனது கொள்கை ஆனால் என் பிள்ளை அதன் படி நடக்கவில்லை அது அவரின் தெரிவு என சொல்ல மட்டும்தான் முடியும்.

ஆனால் யதார்தத்தில் பிள்ளைகள் தெரிவு பெற்றாரை கட்டுப்படுத்துகிறது என்பதுதான் அதிகம் உண்மையும் கூட.

எனக்கு தெரிந்த ஒருவர்  முன்னர் வெள்ளைகளை கலியாணம் முடிப்பதை, ஒத்த பால் உறவை கடுமையாக எதிர்ப்பார். ஒரு பிள்ளை வெள்ளை இனத்தவரையும் இன்னொரு பிள்ளை தன் இனத்தவரையும் துணையாக தேர்ந்து விட இப்போ அவர் இவை பற்றி கதைப்பதே இல்லை.

தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

எமது வாழ் நாள் நிலைப்பாடுகளை அடித்து நொறுக்கும் வல்லமை எம் எச்சங்களுக்கு இருக்கிறது என்பதும் உண்மைதான் 🤣.

ஆனால் மகாத்மா காந்தி போல செயல் மூலம் எமக்கும் எம் எச்சங்களுக்கும் இடையான கொள்கை இடைவெளியை தெளிவுற விளக்கி விட்டால் இதை ஓரளவு இலகுவாக கையாளலாம் என நினைக்கிறேன். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா ,

சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டேன். நேரடியாகத் தமிழ்க் கற்பித்தலில் ஈடுபடவில்லையாயினும் கூட, அது தொடர்பான செயற்பாடுகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ந்தேன்.

ஆரம்பத்தில் எனது பிள்ளைகளும் என்னுடன் பாடசாலைக்கு வந்தனர். ஆர்வத்துடன் கல்விசார் செயற்பாடுகளிலும், கலை கலாசார நிகழ்வுகளிலும் பங்குகொண்டனர். காலம் செல்லச் செல்ல, ஆங்கில மூலக் கல்விக்கும், பிரதான பாடசாலையின் செயற்பாடுகளுக்கும் எனது பிள்ளைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கவே, தமிழ்க் கற்றலில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குறைவடையத் தொடங்கியது. பெற்றோரில் ஒருவனான எனது ஆர்வம் மட்டுமே பிள்ளைகள் தமிழினைத் தொடர்ந்து படிக்கப் போதுமானதாக இருக்காது என்பதனை நான் புரிந்துகொண்ட நேரமும் அதுதான். சில வருடங்களில் எனது இளைய மகளும் தனது தமிழ்ப் பாடசாலையுடனான தொடர்பினை பிரதான பாடசாலையில் பரீட்சையொன்றினைக் காட்டி கத்திரித்துக்கொள்ள நானும் விலகவேண்டியதாயிற்று.

அதன் பின்னர் பலர் என்னிடம் கேட்ட ஒரு கேள்விதான், தமிழ்ப் பள்ளிக்கூட அதிபராக இருந்தீர்கள், ஆனால் உங்களின் பிள்ளைகளைத் தொடர்ச்சியாக பாடசாலைக்கு அழைத்துவரமுடியாமல்ப் போய்விட்டதே? என்பதுதான். வருத்தமாக இருந்தது. ஆனால், உண்மையும் அதுதானே? பாடசாலைக்குப் பிள்ளைகளின் வரவுபற்றியும், அவர்கள் தொடர்ந்தும் தமிழினைக் கற்பதன் அவசியம்பற்றியும் அடிக்கடி பேசும் என்னால் எனது சொந்தப் பிள்ளைகளையே பாடசாலைக்குத் தொடர்ந்து அழைத்துவரமுடியாமற் போனதையிட்டு வருந்தினேன். ஆனால்,தமிழினை எமக்குப் பின்னர், அமது அடுத்த சந்ததிக்கு கொடுக்கவிரும்பும் என்னைப்போன்ற பலருக்கு இருக்கும் வருத்தம்தான் அது. 

ஆனால், எனது பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் தமிழினைக் கற்கும் ஆர்வம் இல்லாமற்போனதனால், நான் மற்றையவர்களின் பிள்ளைகளுக்குத் தமிழினைக் கற்றுக்கொடுப்பது ஒன்றும் தவறில்லையே? எனது பிள்ளைகள்  மூலமாக தமிழ் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்பட முடியாமற்போனாலும் கூட, தமிழினைக் கற்க ஆர்வத்துடன் இருக்கும் மற்றைய பிள்ளைகளூடாகவாவது தமிழினை நாம் கொண்டுசெல்வதில் தவறிருக்க முடியாது அல்லவா? 

எனது பிள்ளைகள் தமிழினைக் கற்பதை நிறுத்தியதையிட்டு நான் கவலைப்படுவதுண்டு. ஆனால், அவர்களால் முடியாவிட்டாலும், தமிழினை நேசிக்கும் இன்னும் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நாம் தமிழினைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடு.

நீண்ட 4 வருடங்களுக்குப் பின்னர் மிக அண்மையில் மீண்டும் தமிழ்ப் பாடசாலைக்கு என்னை சில உதவிகள் கேட்டு அழைத்திருந்தார்கள். பேச்சுப்போட்டிகளில் நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றவும், பிள்ளைகளை தமிழில் உரையாட வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட செவ்வி செயற்பாட்டு ஒன்றிற்காகவு அழைத்திருந்தார்கள். மகிழ்வுடன் சென்று உதவிவிட்டு வந்தேன்.

அப்பிள்ளைகளுக்கு தமிழில் இருக்கும் ஆர்வத்தையும், அவர்களும் பேசும் விடயங்களையும் பார்த்தும், கேட்டும் மகிழ்ந்தேன். அவர்கள் மூலம் தமிழ் மேலும் கொண்டுசெல்லப்படும் என்பதையும் உணர்ந்தேன். எனது பிள்ளைகளால் தமிழினைக் கற்கமுடியவில்லை என்கிற ஏக்கம் அப்போது சுத்தமாக போயிருந்தது.

எனது பிள்ளைகள் கற்கிறார்களோ இல்லையோ, கற்கவிரும்பும் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று எண்ணியிருக்கிறேன். நோக்கம் எனது தாய்மொழி அழிந்துவிடக்கூடாது என்பதுதான். அதை எப்படிச் செய்தால் என்ன, விளைவு ஒன்றுதான். 

ரஞ்சித் உங்கள் கருத்து சரி ....ஆனால் , பிரபாவின் கேள்விக்கு உங்கள் பதில் பொருந்தாது......தமிழ் படிக்க விரும்புகின்ற பிள்ளைகளுக்கு நீங்கள் படிப்பிக்கின்றதில்லைலோயோ  அல்லது அவர்களை உற்சாகப்படுத்துவதில்லோ தவறில்லை ...ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தமிழை படிக்க ஊக்கம் கொடுக்காமல் அடுத்தவர் பிள்ளைகளை தமிழ் படிக்க கூப்பிடுவதும், அவர்களை கட்டாயப்படுத்துவது தவறு ...இதனை வணங்காமுடி தெளிவாய் சொல்லி உள்ளார்.
பிள்ளைகள் தமிழை படிக்க மாட்டோம்  என்று சொன்னால் கட்டாயப்படுத்த கூடாது என்று சொல்கின்ற நீங்கள் அதே பிள்ளைகள் 10 வகுப்போடு படிப்பை நிப்பாட்ட போறோம் என்று சொன்னால் விடுவீர்களா ?....அதென்ன ஆங்கில நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் தமிழ் படிக்க கசக்குது ?....என்னை பொறுத்த வரை பெற்றோரில் தான் பிழை சொல்வேன் .

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அதென்ன ஆங்கில நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் தமிழ் படிக்க கசக்குது ?....என்னை பொறுத்த வரை பெற்றோரில் தான் பிழை சொல்வேன் .

தங்கள் பிள்ளைகளுக்கு விருப்பமில்லை/அவசியமில்லை. அவர்கள் நினைத்ததை அல்லது விருப்பமானதை தொடரட்டும் என்ற பெருந்தன்மை உள்ளவர்கள் தான் ஊரில் கட்டாய படிப்பு படித்து இவ்வளவு முன்னேறியுள்ளார்கள். ஒரு வயது மட்டும் கட்டாய படிப்பு அவசியம். அதிலும் தாய் மொழி என்பது எழுத படிக்க வேண்டியது அவசியம் ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பெற்றோர் அவசியம் வற்புறுத்தி கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பின் தமிழை தொடர்வதும் தொடராமல் விடுவதும் அவர்கள் பிரச்சனை.

எனது பிள்ளைக்கு சொந்த மொழியின் அருமை பெருமையை சொல்லி கொடுக்காமல்  உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என பறைசாற்றி மற்ற பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதை செய்யவும் மாட்டேன்.

உலகில் எத்தனையோ மனித சமூகங்களுக்கு சொந்த மொழியுமில்லை. சொந்த எழுத்துருவும் இல்லை.அப்படியிருக்க மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு தன்னை வளர்த்துக்கொள்ள எத்தனை சிரமங்கள்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனது பிள்ளைக்கு சொந்த மொழியின் அருமை பெருமையை சொல்லி கொடுக்காமல்  உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என பறைசாற்றி மற்ற பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதை செய்யவும் மாட்டேன்.

 

இது நியாயமான நிலைப்பாடுதான்.

ஆனால் தனது பிள்ளை படிக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளுக்கும் படிபிக்க கூடாது என நாம் சொல்வதில்லையே?

இப்படி சொல்வதால் தனிழ் ஆர்வம் உள்ள அந்த பெற்றாரின் ஆர்வத்தையும், அவரிடம் படிக்கும் வாய்ப்புள்ள பிள்ளையின் வாய்ப்பையும் அல்லவா ஒருசேர மழுங்கடிக்கிறோம்?

இதன் முடிவு இரெண்டு தலைமுறையில் தமிழ் கற்கும் ஆர்வம் உள்ள இருவர் அடிபட்டு போவார்கள் - அது மட்டும்தானே?

இதைதான் பிரபா மேலே கேட்கிறார், இதனால் இழப்பு யாருக்கு? என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மகாத்மா காந்தி போல செயல் மூலம் எமக்கும் எம் எச்சங்களுக்கும் இடையான கொள்கை இடைவெளியை தெளிவுற விளக்கி விட்டால் இதை ஓரளவு இலகுவாக கையாளலாம் என நினைக்கிறேன். 

அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் இடையான பிரச்சனை எங்கே வந்தது அவர்கள் தான் பிள்ளைகளின் விருப்பத்தை பவ்வியமாக ஏற்று கொள்கிறார்களே அவர்கள் கொள்கை திணிப்பு எல்லாம் பிற தமிழர்களிடம் தான்.

1 hour ago, குமாரசாமி said:

எனது பிள்ளைக்கு சொந்த மொழியின் அருமை பெருமையை சொல்லி கொடுக்காமல்  உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என பறைசாற்றி மற்ற பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதை செய்யவும் மாட்டேன்.

7 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகள் தமிழ் பேச வேண்டுமென்றால் இதை முதலில் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

👍 நல்ல கருத்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது நியாயமான நிலைப்பாடுதான்.

ஆனால் தனது பிள்ளை படிக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளுக்கும் படிபிக்க கூடாது என நாம் சொல்வதில்லையே?

இப்படி சொல்வதால் தனிழ் ஆர்வம் உள்ள அந்த பெற்றாரின் ஆர்வத்தையும், அவரிடம் படிக்கும் வாய்ப்புள்ள பிள்ளையின் வாய்ப்பையும் அல்லவா ஒருசேர மழுங்கடிக்கிறோம்?

இதன் முடிவு இரெண்டு தலைமுறையில் தமிழ் கற்கும் ஆர்வம் உள்ள இருவர் அடிபட்டு போவார்கள் - அது மட்டும்தானே?

இதைதான் பிரபா மேலே கேட்கிறார், இதனால் இழப்பு யாருக்கு? என்று.

இப்போதெல்லாம் ஒரு பக்க நியாயத்தை உலக நியாயமாக்கி விடுவதையே பலர் செய்கின்றார்கள். 
எனது வீட்டுக்குள்ளேயே பெரிய இழப்பை வைத்துக்கொண்டு வெளியில் சென்று அதை நிவர்த்தி செய்வது  புண்ணியம் தேடுவது போல் தான் எனக்கு தெரிகின்றது.மற்றும் படி மற்றவர்களுக்கு கற்பிப்பது என்பதும் ஒரு வகை தானம் என்பது மறுப்பதற்கில்லை.அதை  வீட்டிலும் நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.


பிள்ளை தமிழ் படிக்கவில்லை/நாட்டமில்லை என்றால் பேசாமல் விடுவது தான் தவறு என்று மீண்டும் சொல்கிறேன். 

 கண்ணுகளா! இப்படி இருக்கணும் 🤣

 

  • Haha 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இப்போதெல்லாம் ஒரு பக்க நியாயத்தை உலக நியாயமாக்கி விடுவதையே பலர் செய்கின்றார்கள். 
எனது வீட்டுக்குள்ளேயே பெரிய இழப்பை வைத்துக்கொண்டு வெளியில் சென்று அதை நிவர்த்தி செய்வது  புண்ணியம் தேடுவது போல் தான் எனக்கு தெரிகின்றது.மற்றும் படி மற்றவர்களுக்கு கற்பிப்பது என்பதும் ஒரு வகை தானம் என்பது மறுப்பதற்கில்லை.அதை  வீட்டிலும் நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.


பிள்ளை தமிழ் படிக்கவில்லை/நாட்டமில்லை என்றால் பேசாமல் விடுவது தான் தவறு என்று மீண்டும் சொல்கிறேன். 

 கண்ணுகளா! இப்படி இருக்கணும் 🤣

 

உப்பிடிதான் எங்கள கொண்டு போனது🤣

Link to comment
Share on other sites

கொச்சைத்தமிழ், பேச்சுத் தமிழ், எழுத வாசிக்கத் தெரிந்த தமிழ், சரளமான தமிழ்... இவை எல்லாமே வெவ்வேறு எல்லைகளே தவிர இவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை.

தமிழ் தெரியாதவர்கள் தென்னாபிரிக்காவிலிருந்து எமக்கு ஆதரவு வழங்கினார்கள். மகாத்மா காந்தியின் உபதேசமே இந்தியாவுக்குத் தேவைப்பட்டது. அவரின் சொந்த பிள்ளை வளர்ப்பு அல்ல. குறுகிய மனப்பான்மையுடைய சமுதாயம் சாதி தொழில் பிரதேசம் என்று தன் இனத்தையே குறுக்கியது போதாதா ? தங்களைப் புனிதர்களாகக் காட்டித் தமிழ் ஆர்வலர்களை நோக்கிக் கைநீட்டுவது தமிழ் மீது பற்றுள்ளவர்களின் செயல் அல்ல. 

சொல்லத் துணியாததைத் சொல்லத் துணிந்த பிரபாவுக்கும் ரஞ்சித்துக்கும் நன்றிகள்.

(குறிப்பு: ரஞ்சித் ஏனைய பிள்ளைகளைத் தமிழ் படிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக எங்கும் குறிப்பிடவில்லை. தவிர, தனது மகள் பாடசாலையிலிருந்து விலகியதும் தானும் விலகி விட்டதாகக் கூறியுள்ளார். சிலர் அரைகுறையாக வாசித்து உணர்ச்சிவசப்பட்டுள்ளனரா அல்லது நான் தவறாக வாசித்துள்ளேனா ?)

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.