Jump to content

என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

புலம்பெயர் நாட்டில் பிறந்த பிள்ளைகளின் தாய்மொழி தமிழ் இல்லை. தாய்மொழி என்பது தாய் பேசும் மொழி இல்லை. அவர்களுக்கு இயல்பாக வரும் மொழி. உதாரணமாக உங்கள் கனவில் வரும் உரையாடல்களில் வரும் மொழி!

அந்த பிள்ளைகள் தாம் தமிழினத்தவர் என சொல்வதற்கு அருகதையற்றவர்கள்.

சும்மா தமிழ்மொழியை தொங்கிக்கொண்டிருப்பது ஒருவகை பிற்போக்குத்தனம் என ஒரு வசனம் தற்போது ஊடகங்களில் உலாவுகின்றது.

இதையே ஒரு பிரான்ஸ்காரனிடமோ ஆங்கிலேயனிடமோ ஜேர்மன்காரனிடமோ உன் மொழியை  தூக்கிப்பிடிப்பது பிற்போக்குத்தனம் என சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா , சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண

vanangaamudi

தனது கொள்கைகளை சிந்தனையிலும் செயலிலும் நிறுத்தி வாழ்ந்துகாட்டும் ஒருவர் இன்னொருவருக்கு கருத்து சொல்ல அல்லது  ஆலோசனை  வழங்கும்போது அதற்கு தனியான மதிப்பு உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது.  அப்படி இல்ல

குமாரசாமி

இப்போதெல்லாம் ஒரு பக்க நியாயத்தை உலக நியாயமாக்கி விடுவதையே பலர் செய்கின்றார்கள்.  எனது வீட்டுக்குள்ளேயே பெரிய இழப்பை வைத்துக்கொண்டு வெளியில் சென்று அதை நிவர்த்தி செய்வது  புண்ணியம் தேடுவது போல் தான்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அந்த பிள்ளைகள் தாம் தமிழினத்தவர் என சொல்வதற்கு அருகதையற்றவர்கள்.

அப்படிச் சொல்வதில்லையே. பிரித்தானியாவில் உள்ள நமது பிள்ளைகளிடம், என் பிள்ளைகளையும் சேர்த்துத்தான், தேசிய அடையாளத்தைக் கேட்டால் British என்றுதான் சொல்வார்கள்! ஆனால் ஆங்கிலேயரின் பிள்ளைகள் English என்பார்கள். இதில் ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு சிக்கல் இருக்கலாம். எதற்கும் ஒரு அந்நியரைக்கொண்டு உங்களின் வளர்ந்த பிள்ளைகளிடம்  identity என்ன என்று கேட்டுப்பாருங்கள். தெரிந்துகொள்வீர்கள்! 

புலம்பெயர்ந்ததுடன் நாம் அடையாளத்தைத் தொலைத்துவிட்டோம் என்பதுதான் உண்மை. நான் என்னை இப்பொது British Tamil என்றுதான் அடையாளப்படுத்துவது. ஒருபோதும் Srilankan என்று சொல்வதில்லை. ஏதாவது கேள்விக்கொத்தில் Ethnic Identity ஐ கேட்டால் Tamil என்று கொடுப்பேன். ஆனால் என் பிள்ளைகள் எதிர்காலத்தில் Asian - Other என்று கொடுப்பார்கள் என நினைக்கின்றேன்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2022 at 10:58, நன்னிச் சோழன் said:

இளையோர் தாமாக முன்வந்தால் உண்டு

நன்னி!!, தமிழ் தெரியாத இளைய தலைமுறை தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் கற்க தனியாரிடமோ அல்லது தமிழ் பாடசாலைகளுக்கோ அனுப்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு உதவிகள் இல்லாதமையால் இடைநடுவில் நிற்கிறார்கள். இப்படி ஒரு பகுதியினரும் இப்பொழுது இருக்கிறார்கள். 

எம்மைப்போன்றவர்களுக்கு தமிழ் முதல் மொழி, ஆகையால் தமிழை வளர்க்கவேண்டும் என அதற்காக உழைக்கிறோம். ஆனால் இங்கே பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மொழி என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். வீட்டில் தமிழ் கதைத்தால் மட்டும் தமிழ் எப்படி வளரும்? அவர்களால் ஒரு தமிழ் பத்திரிக்கையை வாசிக்க, ஒரு கட்டுரை எழுத முடியுமா? தனியே பேச்சுத் தமிழுடன் நின்றுவிடும், அது மட்டும் தமிழை வளர்க்க உதவுமா? 

முன்பே நான் கூறியது போல தமிழ் தெரியாத 2ம் தலைமுறையினரும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை, கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள். அதே போல தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் தமிழை வளர்க்க வேறு விதங்களில் உதவுகிறார்கள். இந்த இரண்டு வகையினரையும் விளங்கி நடந்தால் நன்மை உண்டு

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஏதாவது கேள்விக்கொத்தில் Ethnic Identity ஐ கேட்டால் Tamil என்று கொடுப்பேன்.

other asian என்று கொடுங்கள்.

ethnicity,  Ethnic Identity   க்கு Eezham Tamil என்று அடையாளப்படுத்துங்கள்.

பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

இணையவன் அண்ணாவும் சொல்லி போட்டார் தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை என்று. தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லபடும் பிரபல்யம் பெற்றவர்கள் பலரின் பிள்ளைகளுக்கு தமிழ் பேச வராது. என்ன செய்வது ☹️

மூக்குக்குள்ளாலை வயர் விடுறதத்தான் செய்ய வேணும். செஞ்சால் அடியொட்ட வெறுத்துப்போடுங்கள். 

 

8 hours ago, குமாரசாமி said:

யாழ்கள வீழ்ச்சிக்கும் தமிழ் மொழி பற்றாக்குறையும் ஒரு காரணம் என நான் நினைக்கின்றேன்.

நீங்கள் வெளிநாட்டைச் சொல்லுறியள். அப்ப ஊரில இருக்கிற ஆக்கள் சேரலாமெல்லோ? அவையேன் சேருவதில்லை? 

(அண்ணாக்களின்ட தளம் என்ட தோற்றப்பாடோ? )

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

//நன்னி!!, தமிழ் தெரியாத இளைய தலைமுறை தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் கற்க தனியாரிடமோ அல்லது தமிழ் பாடசாலைகளுக்கோ அனுப்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு உதவிகள் இல்லாதமையால் இடைநடுவில் நிற்கிறார்கள். இப்படி ஒரு பகுதியினரும் இப்பொழுது இருக்கிறார்கள். 

முன்பே நான் கூறியது போல தமிழ் தெரியாத 2ம் தலைமுறையினரும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை, கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள். அதே போல தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் தமிழை வளர்க்க வேறு விதங்களில் உதவுகிறார்கள். இந்த இரண்டு வகையினரையும் விளங்கி நடந்தால் நன்மை உண்டு.//

இவையளை வடிவா நெறிப்படுத்தினால் நல்ல அறுவடை உண்டு, எதிர்காலத்தில். ஆனால் அதை எப்படி செய்ய இயலும்.

 

 

//எம்மைப்போன்றவர்களுக்கு தமிழ் முதல் மொழி, ஆகையால் தமிழை வளர்க்கவேண்டும் என அதற்காக உழைக்கிறோம். ஆனால் இங்கே பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மொழி என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். வீட்டில் தமிழ் கதைத்தால் மட்டும் தமிழ் எப்படி வளரும்?//

தமிழ் வளரும் என்டில்லை. ஆனால், அதுகள் கொஞ்சமேனும் கதைக்க தெரிவார்களெல்லோ. சைவரவிட ஒன்டு நல்லம்தானே? இல்லையோ? அப்படியே தொடர்ந்தால், ஆர்வம் பிடிபட, அது மேற்கொண்டு தன்னால வளரும்.

 

//அவர்களால் ஒரு தமிழ் பத்திரிக்கையை வாசிக்க, ஒரு கட்டுரை எழுத முடியுமா? தனியே பேச்சுத் தமிழுடன் நின்றுவிடும், அது மட்டும் தமிழை வளர்க்க உதவுமா? //

இல்லை.

ஆனால், முதல்ல விதையை நடுவம். பேந்து அதை எதில படர விடுறதென்டு யோசிப்பம். விதையை நடவே வழியில்லையாம், இதில கட்டுரைக்கு எங்க ஐயை போவது?

 

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2022 at 18:53, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியை வைத்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது என்பதால் தமிழ்மொழி கட்டாயம் பிள்ளைகளுக்குத் தேவை இல்லை.

லண்டனில் எப்படி என தெரியாது ஆனால் இங்கே அனேகமான பெற்றோர்கள்/தமிழ் பாடசாலைகள் கூறும் காரணங்கள்..

- ATARற்கு உதவும்: இங்கே தமிழ் மொழியையும் HSCற்கு ஒரு பாடமாக எடுக்கலாம், ஒப்பீட்டளவில் அதி கூடிய புள்ளிகளையும்(band 6 or band 5) எடுக்கலாம் எனக்கூறுகிறார்கள். அதனால் எப்படியாவது தமிழை கற்றுக்கொடுக்க விரும்புகிறார்கள். HSCற்கு பின்பு தமிழிற்கு என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நான் கூறவிரும்பவில்லை. 

- ஆங்கிலத்தை விட இன்னொரு மொழி தெரிந்திருந்தால் அது சில வேலைகளுக்கு உதவுகிறது. தமிழும் அப்படித்தான். 

On 25/6/2022 at 18:42, கிருபன் said:
On 19/6/2022 at 22:56, ஈழப்பிரியன் said:

 

ஆம். பள்ளிக்கூடம் போய் தமிழ் படிக்கமுடியும் என்பது நாங்கள் ஊரில் ஆங்கிலம் படித்த மாதிரித்தான்! ஒரு அறுப்பும் விளங்காது!

இப்பொழுது இங்கே தமிழை பாடசாலைகளில் கற்பிக்கும் முகமாக பரீட்ச்சாத்த நடவடிக்கைகள் நடந்து வருகிறது. உயர் வகுப்பு பாடசாலைகளிலும் படிப்பிக்க சாத்தியங்கள் அதிகம் என்பதால் எதிர்காலத்தில் தமிழ்ப் பாடசாலைகள் எவ்வாறு இருக்குமென கூற முடியாது. 

18 hours ago, நன்னிச் சோழன் said:

இவையளை வடிவா நெறிப்படுத்தினால் நல்ல அறுவடை உண்டு, எதிர்காலத்தில். ஆனால் அதை எப்படி செய்ய இயலும்.

அதனால்தான் எனது கேள்வியையும் கேட்டேன்..  தமிழ் ஆர்வலர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடைபோடுவது சரியா என்று. அவ்வளவுதான். அப்படி எடைபோடுவதால் யாருக்கு இழப்பு அதிகம் என விளங்கினால் போதும்..

நன்றி நன்னி!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 16:18, goshan_che said:

இது நியாயமான நிலைப்பாடுதான்.

ஆனால் தனது பிள்ளை படிக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளுக்கும் படிபிக்க கூடாது என நாம் சொல்வதில்லையே?

இப்படி சொல்வதால் தனிழ் ஆர்வம் உள்ள அந்த பெற்றாரின் ஆர்வத்தையும், அவரிடம் படிக்கும் வாய்ப்புள்ள பிள்ளையின் வாய்ப்பையும் அல்லவா ஒருசேர மழுங்கடிக்கிறோம்?

இதன் முடிவு இரெண்டு தலைமுறையில் தமிழ் கற்கும் ஆர்வம் உள்ள இருவர் அடிபட்டு போவார்கள் - அது மட்டும்தானே?

இதைதான் பிரபா மேலே கேட்கிறார், இதனால் இழப்பு யாருக்கு? என்று.

தன்னார்வமான பிள்ளைகளுக்கு கண்டிப்பாக கற்பிப்பது கடமை.
ஆனால் எனது பிள்ளைகளுக்கு பாடசாலை பரீடசை, இதர வகுப்புகள் எல்லாம் இருக்கிறது என்று விதிவிலக்கு ஆனால் ஊரார் பிள்ளைகள் தமிழுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும், மற்றைய செயற்பாடுகளை போன்று தமிழுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பது அல்லது  பெற்றோரை கடிவது எப்படி சரியாகும்.

தமிழ் மேல் ஆர்வம், தமிழ் தொடர்பான செயற்பாடுகள், தமிழ் கற்பித்தல் மட்டுமே அல்ல.  இதர தமிழார்வ செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளுக்கு அந்த ஆர்வம் இல்லை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து.

கற்பிப்பது மட்டும் தான் சற்று இடிக்கும் விடையம்.  அதுவும் இங்கு வியாபாரமாக ஒரு பரீடசைக்கு 50-100  டாலர் வாங்கி சான்றிதழ் கொடுப்பதில் எப்படி தமிழ் வளர்கிறது என்பது எனக்கு புரியவில்லை.  பிள்ளைகளுக்கு அர்த்தமே தெரியாத சொற்பிரயோகங்களை மனபபடமாக்கி ஒப்புவிப்பதற்கு 100$ எதற்கென்றே விருப்பமில்லாமல் எமக்காக கடமைக்கு போய் வந்த பிள்ளைகளை மேற்கொண்டு போக கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டோம்.

பல இடங்களில் (நிறுவங்கள்) தமிழ் கற்பிப்பது ஒரு பெரிய வியாபாரம். 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎06‎-‎2022 at 09:53, கிருபன் said:

எல்லாம் தேவையைப் பொறுத்து. கல்வி எதிர்காலம் வளமாக இருக்கத்தேவை. புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியை வைத்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது என்பதால் தமிழ்மொழி கட்டாயம் பிள்ளைகளுக்குத் தேவை இல்லை. பெற்றோர் தமிழைப் பேச, படிக்க வைக்க சிறுவயதில் முனையலாம். ஆனால் நிர்ப்பந்திக்கமுடியாது.

ஆர்வம் இருப்பவர்கள் கவின்கலைகளில் ஈடுபடுவதுபோல, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் கற்றுக்கொள்வார்கள். தமிழில் பேச பல பிள்ளைகளால் முடிந்தாலும், தமிழ்ப் படங்களைப் பார்த்து புரிந்துகொண்டாலும், தமிழில் ஒரு கட்டுரை, கதை எழுதுவது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களால்தான் முடியும்.

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கவில்லை அல்லது எனக்கு புரியவில்லை:unsure: ...மொழியை படிப்பது கதை ,கட்டுரை எழுதுவதற்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.
பிரபா சொல்லி இருக்கிறார் பிள்ளைகள் தமிழ் கதைக்கா விட்டால் பெற்றோரை குறை சொல்ல கூடாது என்று ஆனால்  உங்கள் பிள்ளைகள் தமிழ் படிப்பக்கவில்லை என்று உங்களை குறை சொன்னதாக நீங்களே மேலே எழுதி இருக்கிறீர்கள்.
புலம் பெயர்ந்த 3ம் ,4ம் தலைமுறை வட இந்தியர்களால்  எப்படி இன்னும் அவர்களது மொழி பேச முடிகிறது?
பிள்ளைகளுக்கு ஒன்றை சொல்லிகொடுப்பது /பழக்கப்படுத்துவது  என்பது அவர்கள் குழந்தைக்காய் இருக்கும் போதே செய்ய வேண்டியது ..நீங்கள் மேலே எழுதியது போல தமிழை  சொல்லிக் கொடுத்து என்னவாக போகிறது என்று விட்டு இருந்தால், இப்படியானவர்கலால்  எந்த அடிப்படியில் மற்றவர்களுக்கு தமிழ் தாய் மொழி என்று பாடம் எடுக்க முடியுது?
யாருக்குமே எதையுமே  திணிக்க கூடாது என்று தான் எனது கொள்கையும் ஆனால் சிறு வயதில் இருந்து ஊட்டி வளர்த்திருக்கலாம் ...அது திணிப்பு இல்லை . அதை விட்டு விட்டு தங்கட பிள்ளைகள் தமிழை படித்து என்னத்தை கிழிக்க போகுறார்கள் என்று விட்டு விட்டு ஊரான் பிள்ளைகளிடம் தமிழை ஊட்டி வளர்க்க போகுறார்கள் ."ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே".😂
பி;கு  மேலே உங்களுக்கு விழுந்த பச்சை உங்கள் கருத்திற்கு விழுந்ததல்ல ...ரதிக்கு எதிராய் எழுதியதால் விழுந்தது. அப்ப  நான் வரட்டா:LOL:

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

புலம் பெயர்ந்த 3ம் ,4ம் தலைமுறை வட இந்தியர்களால்  எப்படி இன்னும் அவர்களது மொழி பேச முடிகிறது?
பிள்ளைகளுக்கு ஒன்றை சொல்லிகொடுப்பது /பழக்கப்படுத்துவது  என்பது அவர்கள் குழந்தைக்காய் இருக்கும் போதே செய்ய வேண்டியது ..நீங்கள் மேலே எழுதியது போல தமிழை  சொல்லிக் கொடுத்து என்னவாக போகிறது என்று விட்டு இருந்தால், இப்படியானவர்கலால்  எந்த அடிப்படியில் மற்றவர்களுக்கு தமிழ் தாய் மொழி என்று பாடம் எடுக்க முடியுது?

நேர்/நேர்மை கொண்ட பார்வை.👍🏾
உலகில் தமிழர்களை தவிர வேறு எந்த இனமும் தம் மொழியை விட்டுக்கொடுப்பதுமில்லை. தாழ்த்தி கதைப்பதுமில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது  புலம்பெயர் நாடுகளில் தமிழ் அறிவிப்பு பலகைகளை கண்டால் நாம் நமிழர் என்ற புளகாங்கிதத்திற்கு எல்லையில்லை.😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நேர்/நேர்மை கொண்ட பார்வை.👍🏾
உலகில் தமிழர்களை தவிர வேறு எந்த இனமும் தம் மொழியை விட்டுக்கொடுப்பதுமில்லை. தாழ்த்தி கதைப்பதுமில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது  புலம்பெயர் நாடுகளில் தமிழ் அறிவிப்பு பலகைகளை கண்டால் நாம் நமிழர் என்ற புளகாங்கிதத்திற்கு எல்லையில்லை.😁

ஆனால்... 
வெங்காயத்தை.... ஆனியன் என்போம்,
உப்பை... சால்ட்டு,
அரிசியை... றைஸ் 
தேசிக்காயை... லெமன், என்றெல்லாம் தமிழை கொலை செய்வோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கவில்லை அல்லது எனக்கு புரியவில்லை:unsure: ...மொழியை படிப்பது கதை ,கட்டுரை எழுதுவதற்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

பேசுதல்

கேட்டல் (கிரகிப்போடு)

வாசித்தல் (கிரகிப்போடு)

எழுதுதல்

இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கவில்லை அல்லது எனக்கு புரியவில்லை:unsure: ...மொழியை படிப்பது கதை ,கட்டுரை எழுதுவதற்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.
பிரபா சொல்லி இருக்கிறார் பிள்ளைகள் தமிழ் கதைக்கா விட்டால் பெற்றோரை குறை சொல்ல கூடாது என்று ஆனால்  உங்கள் பிள்ளைகள் தமிழ் படிப்பக்கவில்லை என்று உங்களை குறை சொன்னதாக நீங்களே மேலே எழுதி இருக்கிறீர்கள்.
புலம் பெயர்ந்த 3ம் ,4ம் தலைமுறை வட இந்தியர்களால்  எப்படி இன்னும் அவர்களது மொழி பேச முடிகிறது?
பிள்ளைகளுக்கு ஒன்றை சொல்லிகொடுப்பது /பழக்கப்படுத்துவது  என்பது அவர்கள் குழந்தைக்காய் இருக்கும் போதே செய்ய வேண்டியது ..நீங்கள் மேலே எழுதியது போல தமிழை  சொல்லிக் கொடுத்து என்னவாக போகிறது என்று விட்டு இருந்தால், இப்படியானவர்கலால்  எந்த அடிப்படியில் மற்றவர்களுக்கு தமிழ் தாய் மொழி என்று பாடம் எடுக்க முடியுது?
யாருக்குமே எதையுமே  திணிக்க கூடாது என்று தான் எனது கொள்கையும் ஆனால் சிறு வயதில் இருந்து ஊட்டி வளர்த்திருக்கலாம் ...அது திணிப்பு இல்லை . அதை விட்டு விட்டு தங்கட பிள்ளைகள் தமிழை படித்து என்னத்தை கிழிக்க போகுறார்கள் என்று விட்டு விட்டு ஊரான் பிள்ளைகளிடம் தமிழை ஊட்டி வளர்க்க போகுறார்கள் ."ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே
".😂
பி;கு  மேலே உங்களுக்கு விழுந்த பச்சை உங்கள் கருத்திற்கு விழுந்ததல்ல ...ரதிக்கு எதிராய் எழுதியதால் விழுந்தது. அப்ப  நான் வரட்டா:LOL:

ஆயிரத்தில் ஒரு சொல் 👍

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் மொழிப்பற்று!! எம்மவர்களுக்குத்தான் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கஷ்டமாயிருக்கு!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் மொழிப்பற்று!! எம்மவர்களுக்குத்தான் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கஷ்டமாயிருக்கு!

நீங்கள் சொல்வது உண்மை தான்.அதற்காக பல காரணங்கள் உண்டு.

ஒவ்வொரு விடுமுறைக்கும் பிள்ளைகளுடன் ஊர் போய் வருகிறார்கள்.

நாங்கள் உள்ள காணிபூமியை விற்கிறோம்.ஆனால் அவர்களோ புதிதுபுதிதாக வாங்குகிறார்கள்.
பெற்றோர்கள் இல்லாமலேயே பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.

மொத்தத்தில் அவர்களுக்கென்று ஒரு நாடு உள்ளதாக எண்ணுகிறார்கள்.

நுhற்றுக்கு 90 வீதமானோர் இரட்டைப் பிரஜாஉரிமை பெற்றிருக்கிறார்கள்.

எமக்கு அங்கு யார் இருக்கிறார்கள் என்றால் யாரைச் சொல்வதென்று முழிப்போம்.

அவர்களுக்கு முழு குடும்பமே அங்கே இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரம் படம் பார்க்க பல இளையவர்கள் வந்திருந்தார்கள்.ஏதாவது விழங்கியிரக்கும் தானே.

Link to comment
Share on other sites

On 18/6/2022 at 16:32, பிரபா சிதம்பரநாதன் said:

நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

இதுபற்றி என் துணைவியிடம் கேட்டேன்,,,, 

காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து உடைமாற்றிச் சாமி கும்பிட்டு காலை உணவையும் முடித்தபின் நீங்கள் கணனியில் உட்கார்ந்தால், எனக்கும் நீங்கள் பார்க்கும் பதிவுகளைப் பார்க்கவும், அதற்காக எழுதும் கருத்துக்களை நோக்கவும், நேரத்துடன் ஆர்வமும் தானாக வரும். கண்ட நேரமெல்லாம் கணனியைக் கட்டிப்பிடித்து இருந்தால் வெறுப்புத்தான் வருகிறது என்றார்.😩  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா?

இந்திய தமிழர்களை பற்றி எனக்கு தெரியாது. இந்தியர்கள் மற்ற மொழிகள் பேசுபவாகள் தங்கள் சொந்த மொழியை தாராளமாக பேசுகிறார்கள் தான்.அவர்கள் தங்களது மொழியை மிகவும் விரும்புகிறார்கள். தமிழ் மிகவும் பழமைவாய்ந்த மொழியானாலும் இலங்கையில் இருந்து வந்தவர்களால் அது அவ்வளவாக விரும்பபடவில்லை ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

👍

நீங்கள் அப்படிபட்டவராக இருக்க மாட்டீர்கள் என்று நான் உங்கள் எழுத்தை வைத்து முதலே நம்பினேன்.
ஊருக்கு மட்டுமே உபதேசம் அது எங்களுக்கு தேவை இல்லை என்று பலர் உள்ளனர் அது தான் தவறு.அங்கே இருந்து தான் மோசமான அரசியல்வாதிகளும் உருவாகுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2022 at 21:37, கிருபன் said:

தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

பேசுதல்

கேட்டல் (கிரகிப்போடு)

வாசித்தல் (கிரகிப்போடு)

எழுதுதல்

இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

@கிருபன்.. மிக்க நன்றி.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2022 at 01:15, Sabesh said:

தமிழ் மேல் ஆர்வம், தமிழ் தொடர்பான செயற்பாடுகள், தமிழ் கற்பித்தல் மட்டுமே அல்ல.  இதர தமிழார்வ செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளுக்கு அந்த ஆர்வம் இல்லை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து

உண்மை. மிக்க நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. 

நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என 

ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்..

இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம்

————————————————

 

@தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎06‎-‎2022 at 12:37, கிருபன் said:

தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

பேசுதல்

கேட்டல் (கிரகிப்போடு)

வாசித்தல் (கிரகிப்போடு)

எழுதுதல்

இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

கிருபன் , இது உங்களுக்கு மட்டும் எழுதப்படடதல்ல....இந்த தலைப்பையும் ,அதனோடு சேர்ந்த எழுதப்படட கருத்துக்களையும் முதலில் வாசியுங்கள்...உங்கள் பிள்ளைகளுக்கு 2ம் மொழியாய்  தமிழ் படிப்பித்தாலும் சரி ,பிரென்ஞ்  படிப்பித்தாலும் சரி அது உங்கள் விருப்பம் 
உங்களிடம் ஒரு கேள்வி பிழைப்பிற்காய் நாட்டை விட்டு  வந்த நாங்கள் இங்குள்ள நாடுகளில் பேசப்படும் மொழிகளை நீங்கள் மேலே சொன்ன முறைப்படியா கற்று பாவிக்கிறோம் ?

4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. 

நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என 

ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்..

இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம்

————————————————

 

@தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

வீட்டில தமிழ் கதைக்கிற பிள்ளைகள் அட்லீஸ்ட் தமிழர்கள் கூடும் விழாக்கள் , பொது 
இடங்களிலாவது தமிழை கதைக்க முயற்சிப்பார்கள் /கதைப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது தான் . ஆனால் குழந்தையாய் இருக்கும் போதே நாங்கள் கதைத்து வந்தால் பிள்ளையும் இயல்பாய் கதைக்கும் 
 

4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. 

நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என 

ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்..

இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம்

————————————————

 

@தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை.

மிகவும் நல்லது.

நான் உங்களை குறைநினைக்கவில்லை.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.