Jump to content

என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

புலம்பெயர் நாட்டில் பிறந்த பிள்ளைகளின் தாய்மொழி தமிழ் இல்லை. தாய்மொழி என்பது தாய் பேசும் மொழி இல்லை. அவர்களுக்கு இயல்பாக வரும் மொழி. உதாரணமாக உங்கள் கனவில் வரும் உரையாடல்களில் வரும் மொழி!

அந்த பிள்ளைகள் தாம் தமிழினத்தவர் என சொல்வதற்கு அருகதையற்றவர்கள்.

சும்மா தமிழ்மொழியை தொங்கிக்கொண்டிருப்பது ஒருவகை பிற்போக்குத்தனம் என ஒரு வசனம் தற்போது ஊடகங்களில் உலாவுகின்றது.

இதையே ஒரு பிரான்ஸ்காரனிடமோ ஆங்கிலேயனிடமோ ஜேர்மன்காரனிடமோ உன் மொழியை  தூக்கிப்பிடிப்பது பிற்போக்குத்தனம் என சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா , சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண

vanangaamudi

தனது கொள்கைகளை சிந்தனையிலும் செயலிலும் நிறுத்தி வாழ்ந்துகாட்டும் ஒருவர் இன்னொருவருக்கு கருத்து சொல்ல அல்லது  ஆலோசனை  வழங்கும்போது அதற்கு தனியான மதிப்பு உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது.  அப்படி இல்ல

குமாரசாமி

இப்போதெல்லாம் ஒரு பக்க நியாயத்தை உலக நியாயமாக்கி விடுவதையே பலர் செய்கின்றார்கள்.  எனது வீட்டுக்குள்ளேயே பெரிய இழப்பை வைத்துக்கொண்டு வெளியில் சென்று அதை நிவர்த்தி செய்வது  புண்ணியம் தேடுவது போல் தான்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அந்த பிள்ளைகள் தாம் தமிழினத்தவர் என சொல்வதற்கு அருகதையற்றவர்கள்.

அப்படிச் சொல்வதில்லையே. பிரித்தானியாவில் உள்ள நமது பிள்ளைகளிடம், என் பிள்ளைகளையும் சேர்த்துத்தான், தேசிய அடையாளத்தைக் கேட்டால் British என்றுதான் சொல்வார்கள்! ஆனால் ஆங்கிலேயரின் பிள்ளைகள் English என்பார்கள். இதில் ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு சிக்கல் இருக்கலாம். எதற்கும் ஒரு அந்நியரைக்கொண்டு உங்களின் வளர்ந்த பிள்ளைகளிடம்  identity என்ன என்று கேட்டுப்பாருங்கள். தெரிந்துகொள்வீர்கள்! 

புலம்பெயர்ந்ததுடன் நாம் அடையாளத்தைத் தொலைத்துவிட்டோம் என்பதுதான் உண்மை. நான் என்னை இப்பொது British Tamil என்றுதான் அடையாளப்படுத்துவது. ஒருபோதும் Srilankan என்று சொல்வதில்லை. ஏதாவது கேள்விக்கொத்தில் Ethnic Identity ஐ கேட்டால் Tamil என்று கொடுப்பேன். ஆனால் என் பிள்ளைகள் எதிர்காலத்தில் Asian - Other என்று கொடுப்பார்கள் என நினைக்கின்றேன்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2022 at 10:58, நன்னிச் சோழன் said:

இளையோர் தாமாக முன்வந்தால் உண்டு

நன்னி!!, தமிழ் தெரியாத இளைய தலைமுறை தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் கற்க தனியாரிடமோ அல்லது தமிழ் பாடசாலைகளுக்கோ அனுப்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு உதவிகள் இல்லாதமையால் இடைநடுவில் நிற்கிறார்கள். இப்படி ஒரு பகுதியினரும் இப்பொழுது இருக்கிறார்கள். 

எம்மைப்போன்றவர்களுக்கு தமிழ் முதல் மொழி, ஆகையால் தமிழை வளர்க்கவேண்டும் என அதற்காக உழைக்கிறோம். ஆனால் இங்கே பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மொழி என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். வீட்டில் தமிழ் கதைத்தால் மட்டும் தமிழ் எப்படி வளரும்? அவர்களால் ஒரு தமிழ் பத்திரிக்கையை வாசிக்க, ஒரு கட்டுரை எழுத முடியுமா? தனியே பேச்சுத் தமிழுடன் நின்றுவிடும், அது மட்டும் தமிழை வளர்க்க உதவுமா? 

முன்பே நான் கூறியது போல தமிழ் தெரியாத 2ம் தலைமுறையினரும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை, கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள். அதே போல தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் தமிழை வளர்க்க வேறு விதங்களில் உதவுகிறார்கள். இந்த இரண்டு வகையினரையும் விளங்கி நடந்தால் நன்மை உண்டு

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஏதாவது கேள்விக்கொத்தில் Ethnic Identity ஐ கேட்டால் Tamil என்று கொடுப்பேன்.

other asian என்று கொடுங்கள்.

ethnicity,  Ethnic Identity   க்கு Eezham Tamil என்று அடையாளப்படுத்துங்கள்.

பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

இணையவன் அண்ணாவும் சொல்லி போட்டார் தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை என்று. தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லபடும் பிரபல்யம் பெற்றவர்கள் பலரின் பிள்ளைகளுக்கு தமிழ் பேச வராது. என்ன செய்வது ☹️

மூக்குக்குள்ளாலை வயர் விடுறதத்தான் செய்ய வேணும். செஞ்சால் அடியொட்ட வெறுத்துப்போடுங்கள். 

 

8 hours ago, குமாரசாமி said:

யாழ்கள வீழ்ச்சிக்கும் தமிழ் மொழி பற்றாக்குறையும் ஒரு காரணம் என நான் நினைக்கின்றேன்.

நீங்கள் வெளிநாட்டைச் சொல்லுறியள். அப்ப ஊரில இருக்கிற ஆக்கள் சேரலாமெல்லோ? அவையேன் சேருவதில்லை? 

(அண்ணாக்களின்ட தளம் என்ட தோற்றப்பாடோ? )

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

//நன்னி!!, தமிழ் தெரியாத இளைய தலைமுறை தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் கற்க தனியாரிடமோ அல்லது தமிழ் பாடசாலைகளுக்கோ அனுப்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு உதவிகள் இல்லாதமையால் இடைநடுவில் நிற்கிறார்கள். இப்படி ஒரு பகுதியினரும் இப்பொழுது இருக்கிறார்கள். 

முன்பே நான் கூறியது போல தமிழ் தெரியாத 2ம் தலைமுறையினரும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை, கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள். அதே போல தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் தமிழை வளர்க்க வேறு விதங்களில் உதவுகிறார்கள். இந்த இரண்டு வகையினரையும் விளங்கி நடந்தால் நன்மை உண்டு.//

இவையளை வடிவா நெறிப்படுத்தினால் நல்ல அறுவடை உண்டு, எதிர்காலத்தில். ஆனால் அதை எப்படி செய்ய இயலும்.

 

 

//எம்மைப்போன்றவர்களுக்கு தமிழ் முதல் மொழி, ஆகையால் தமிழை வளர்க்கவேண்டும் என அதற்காக உழைக்கிறோம். ஆனால் இங்கே பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மொழி என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். வீட்டில் தமிழ் கதைத்தால் மட்டும் தமிழ் எப்படி வளரும்?//

தமிழ் வளரும் என்டில்லை. ஆனால், அதுகள் கொஞ்சமேனும் கதைக்க தெரிவார்களெல்லோ. சைவரவிட ஒன்டு நல்லம்தானே? இல்லையோ? அப்படியே தொடர்ந்தால், ஆர்வம் பிடிபட, அது மேற்கொண்டு தன்னால வளரும்.

 

//அவர்களால் ஒரு தமிழ் பத்திரிக்கையை வாசிக்க, ஒரு கட்டுரை எழுத முடியுமா? தனியே பேச்சுத் தமிழுடன் நின்றுவிடும், அது மட்டும் தமிழை வளர்க்க உதவுமா? //

இல்லை.

ஆனால், முதல்ல விதையை நடுவம். பேந்து அதை எதில படர விடுறதென்டு யோசிப்பம். விதையை நடவே வழியில்லையாம், இதில கட்டுரைக்கு எங்க ஐயை போவது?

 

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2022 at 18:53, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியை வைத்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது என்பதால் தமிழ்மொழி கட்டாயம் பிள்ளைகளுக்குத் தேவை இல்லை.

லண்டனில் எப்படி என தெரியாது ஆனால் இங்கே அனேகமான பெற்றோர்கள்/தமிழ் பாடசாலைகள் கூறும் காரணங்கள்..

- ATARற்கு உதவும்: இங்கே தமிழ் மொழியையும் HSCற்கு ஒரு பாடமாக எடுக்கலாம், ஒப்பீட்டளவில் அதி கூடிய புள்ளிகளையும்(band 6 or band 5) எடுக்கலாம் எனக்கூறுகிறார்கள். அதனால் எப்படியாவது தமிழை கற்றுக்கொடுக்க விரும்புகிறார்கள். HSCற்கு பின்பு தமிழிற்கு என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நான் கூறவிரும்பவில்லை. 

- ஆங்கிலத்தை விட இன்னொரு மொழி தெரிந்திருந்தால் அது சில வேலைகளுக்கு உதவுகிறது. தமிழும் அப்படித்தான். 

On 25/6/2022 at 18:42, கிருபன் said:
On 19/6/2022 at 22:56, ஈழப்பிரியன் said:

 

ஆம். பள்ளிக்கூடம் போய் தமிழ் படிக்கமுடியும் என்பது நாங்கள் ஊரில் ஆங்கிலம் படித்த மாதிரித்தான்! ஒரு அறுப்பும் விளங்காது!

இப்பொழுது இங்கே தமிழை பாடசாலைகளில் கற்பிக்கும் முகமாக பரீட்ச்சாத்த நடவடிக்கைகள் நடந்து வருகிறது. உயர் வகுப்பு பாடசாலைகளிலும் படிப்பிக்க சாத்தியங்கள் அதிகம் என்பதால் எதிர்காலத்தில் தமிழ்ப் பாடசாலைகள் எவ்வாறு இருக்குமென கூற முடியாது. 

18 hours ago, நன்னிச் சோழன் said:

இவையளை வடிவா நெறிப்படுத்தினால் நல்ல அறுவடை உண்டு, எதிர்காலத்தில். ஆனால் அதை எப்படி செய்ய இயலும்.

அதனால்தான் எனது கேள்வியையும் கேட்டேன்..  தமிழ் ஆர்வலர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடைபோடுவது சரியா என்று. அவ்வளவுதான். அப்படி எடைபோடுவதால் யாருக்கு இழப்பு அதிகம் என விளங்கினால் போதும்..

நன்றி நன்னி!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 16:18, goshan_che said:

இது நியாயமான நிலைப்பாடுதான்.

ஆனால் தனது பிள்ளை படிக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளுக்கும் படிபிக்க கூடாது என நாம் சொல்வதில்லையே?

இப்படி சொல்வதால் தனிழ் ஆர்வம் உள்ள அந்த பெற்றாரின் ஆர்வத்தையும், அவரிடம் படிக்கும் வாய்ப்புள்ள பிள்ளையின் வாய்ப்பையும் அல்லவா ஒருசேர மழுங்கடிக்கிறோம்?

இதன் முடிவு இரெண்டு தலைமுறையில் தமிழ் கற்கும் ஆர்வம் உள்ள இருவர் அடிபட்டு போவார்கள் - அது மட்டும்தானே?

இதைதான் பிரபா மேலே கேட்கிறார், இதனால் இழப்பு யாருக்கு? என்று.

தன்னார்வமான பிள்ளைகளுக்கு கண்டிப்பாக கற்பிப்பது கடமை.
ஆனால் எனது பிள்ளைகளுக்கு பாடசாலை பரீடசை, இதர வகுப்புகள் எல்லாம் இருக்கிறது என்று விதிவிலக்கு ஆனால் ஊரார் பிள்ளைகள் தமிழுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும், மற்றைய செயற்பாடுகளை போன்று தமிழுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பது அல்லது  பெற்றோரை கடிவது எப்படி சரியாகும்.

தமிழ் மேல் ஆர்வம், தமிழ் தொடர்பான செயற்பாடுகள், தமிழ் கற்பித்தல் மட்டுமே அல்ல.  இதர தமிழார்வ செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளுக்கு அந்த ஆர்வம் இல்லை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து.

கற்பிப்பது மட்டும் தான் சற்று இடிக்கும் விடையம்.  அதுவும் இங்கு வியாபாரமாக ஒரு பரீடசைக்கு 50-100  டாலர் வாங்கி சான்றிதழ் கொடுப்பதில் எப்படி தமிழ் வளர்கிறது என்பது எனக்கு புரியவில்லை.  பிள்ளைகளுக்கு அர்த்தமே தெரியாத சொற்பிரயோகங்களை மனபபடமாக்கி ஒப்புவிப்பதற்கு 100$ எதற்கென்றே விருப்பமில்லாமல் எமக்காக கடமைக்கு போய் வந்த பிள்ளைகளை மேற்கொண்டு போக கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டோம்.

பல இடங்களில் (நிறுவங்கள்) தமிழ் கற்பிப்பது ஒரு பெரிய வியாபாரம். 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎06‎-‎2022 at 09:53, கிருபன் said:

எல்லாம் தேவையைப் பொறுத்து. கல்வி எதிர்காலம் வளமாக இருக்கத்தேவை. புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியை வைத்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது என்பதால் தமிழ்மொழி கட்டாயம் பிள்ளைகளுக்குத் தேவை இல்லை. பெற்றோர் தமிழைப் பேச, படிக்க வைக்க சிறுவயதில் முனையலாம். ஆனால் நிர்ப்பந்திக்கமுடியாது.

ஆர்வம் இருப்பவர்கள் கவின்கலைகளில் ஈடுபடுவதுபோல, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் கற்றுக்கொள்வார்கள். தமிழில் பேச பல பிள்ளைகளால் முடிந்தாலும், தமிழ்ப் படங்களைப் பார்த்து புரிந்துகொண்டாலும், தமிழில் ஒரு கட்டுரை, கதை எழுதுவது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களால்தான் முடியும்.

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கவில்லை அல்லது எனக்கு புரியவில்லை:unsure: ...மொழியை படிப்பது கதை ,கட்டுரை எழுதுவதற்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.
பிரபா சொல்லி இருக்கிறார் பிள்ளைகள் தமிழ் கதைக்கா விட்டால் பெற்றோரை குறை சொல்ல கூடாது என்று ஆனால்  உங்கள் பிள்ளைகள் தமிழ் படிப்பக்கவில்லை என்று உங்களை குறை சொன்னதாக நீங்களே மேலே எழுதி இருக்கிறீர்கள்.
புலம் பெயர்ந்த 3ம் ,4ம் தலைமுறை வட இந்தியர்களால்  எப்படி இன்னும் அவர்களது மொழி பேச முடிகிறது?
பிள்ளைகளுக்கு ஒன்றை சொல்லிகொடுப்பது /பழக்கப்படுத்துவது  என்பது அவர்கள் குழந்தைக்காய் இருக்கும் போதே செய்ய வேண்டியது ..நீங்கள் மேலே எழுதியது போல தமிழை  சொல்லிக் கொடுத்து என்னவாக போகிறது என்று விட்டு இருந்தால், இப்படியானவர்கலால்  எந்த அடிப்படியில் மற்றவர்களுக்கு தமிழ் தாய் மொழி என்று பாடம் எடுக்க முடியுது?
யாருக்குமே எதையுமே  திணிக்க கூடாது என்று தான் எனது கொள்கையும் ஆனால் சிறு வயதில் இருந்து ஊட்டி வளர்த்திருக்கலாம் ...அது திணிப்பு இல்லை . அதை விட்டு விட்டு தங்கட பிள்ளைகள் தமிழை படித்து என்னத்தை கிழிக்க போகுறார்கள் என்று விட்டு விட்டு ஊரான் பிள்ளைகளிடம் தமிழை ஊட்டி வளர்க்க போகுறார்கள் ."ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே".😂
பி;கு  மேலே உங்களுக்கு விழுந்த பச்சை உங்கள் கருத்திற்கு விழுந்ததல்ல ...ரதிக்கு எதிராய் எழுதியதால் விழுந்தது. அப்ப  நான் வரட்டா:LOL:

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

புலம் பெயர்ந்த 3ம் ,4ம் தலைமுறை வட இந்தியர்களால்  எப்படி இன்னும் அவர்களது மொழி பேச முடிகிறது?
பிள்ளைகளுக்கு ஒன்றை சொல்லிகொடுப்பது /பழக்கப்படுத்துவது  என்பது அவர்கள் குழந்தைக்காய் இருக்கும் போதே செய்ய வேண்டியது ..நீங்கள் மேலே எழுதியது போல தமிழை  சொல்லிக் கொடுத்து என்னவாக போகிறது என்று விட்டு இருந்தால், இப்படியானவர்கலால்  எந்த அடிப்படியில் மற்றவர்களுக்கு தமிழ் தாய் மொழி என்று பாடம் எடுக்க முடியுது?

நேர்/நேர்மை கொண்ட பார்வை.👍🏾
உலகில் தமிழர்களை தவிர வேறு எந்த இனமும் தம் மொழியை விட்டுக்கொடுப்பதுமில்லை. தாழ்த்தி கதைப்பதுமில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது  புலம்பெயர் நாடுகளில் தமிழ் அறிவிப்பு பலகைகளை கண்டால் நாம் நமிழர் என்ற புளகாங்கிதத்திற்கு எல்லையில்லை.😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நேர்/நேர்மை கொண்ட பார்வை.👍🏾
உலகில் தமிழர்களை தவிர வேறு எந்த இனமும் தம் மொழியை விட்டுக்கொடுப்பதுமில்லை. தாழ்த்தி கதைப்பதுமில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது  புலம்பெயர் நாடுகளில் தமிழ் அறிவிப்பு பலகைகளை கண்டால் நாம் நமிழர் என்ற புளகாங்கிதத்திற்கு எல்லையில்லை.😁

ஆனால்... 
வெங்காயத்தை.... ஆனியன் என்போம்,
உப்பை... சால்ட்டு,
அரிசியை... றைஸ் 
தேசிக்காயை... லெமன், என்றெல்லாம் தமிழை கொலை செய்வோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கவில்லை அல்லது எனக்கு புரியவில்லை:unsure: ...மொழியை படிப்பது கதை ,கட்டுரை எழுதுவதற்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

பேசுதல்

கேட்டல் (கிரகிப்போடு)

வாசித்தல் (கிரகிப்போடு)

எழுதுதல்

இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கவில்லை அல்லது எனக்கு புரியவில்லை:unsure: ...மொழியை படிப்பது கதை ,கட்டுரை எழுதுவதற்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.
பிரபா சொல்லி இருக்கிறார் பிள்ளைகள் தமிழ் கதைக்கா விட்டால் பெற்றோரை குறை சொல்ல கூடாது என்று ஆனால்  உங்கள் பிள்ளைகள் தமிழ் படிப்பக்கவில்லை என்று உங்களை குறை சொன்னதாக நீங்களே மேலே எழுதி இருக்கிறீர்கள்.
புலம் பெயர்ந்த 3ம் ,4ம் தலைமுறை வட இந்தியர்களால்  எப்படி இன்னும் அவர்களது மொழி பேச முடிகிறது?
பிள்ளைகளுக்கு ஒன்றை சொல்லிகொடுப்பது /பழக்கப்படுத்துவது  என்பது அவர்கள் குழந்தைக்காய் இருக்கும் போதே செய்ய வேண்டியது ..நீங்கள் மேலே எழுதியது போல தமிழை  சொல்லிக் கொடுத்து என்னவாக போகிறது என்று விட்டு இருந்தால், இப்படியானவர்கலால்  எந்த அடிப்படியில் மற்றவர்களுக்கு தமிழ் தாய் மொழி என்று பாடம் எடுக்க முடியுது?
யாருக்குமே எதையுமே  திணிக்க கூடாது என்று தான் எனது கொள்கையும் ஆனால் சிறு வயதில் இருந்து ஊட்டி வளர்த்திருக்கலாம் ...அது திணிப்பு இல்லை . அதை விட்டு விட்டு தங்கட பிள்ளைகள் தமிழை படித்து என்னத்தை கிழிக்க போகுறார்கள் என்று விட்டு விட்டு ஊரான் பிள்ளைகளிடம் தமிழை ஊட்டி வளர்க்க போகுறார்கள் ."ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே
".😂
பி;கு  மேலே உங்களுக்கு விழுந்த பச்சை உங்கள் கருத்திற்கு விழுந்ததல்ல ...ரதிக்கு எதிராய் எழுதியதால் விழுந்தது. அப்ப  நான் வரட்டா:LOL:

ஆயிரத்தில் ஒரு சொல் 👍

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் மொழிப்பற்று!! எம்மவர்களுக்குத்தான் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கஷ்டமாயிருக்கு!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் மொழிப்பற்று!! எம்மவர்களுக்குத்தான் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கஷ்டமாயிருக்கு!

நீங்கள் சொல்வது உண்மை தான்.அதற்காக பல காரணங்கள் உண்டு.

ஒவ்வொரு விடுமுறைக்கும் பிள்ளைகளுடன் ஊர் போய் வருகிறார்கள்.

நாங்கள் உள்ள காணிபூமியை விற்கிறோம்.ஆனால் அவர்களோ புதிதுபுதிதாக வாங்குகிறார்கள்.
பெற்றோர்கள் இல்லாமலேயே பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.

மொத்தத்தில் அவர்களுக்கென்று ஒரு நாடு உள்ளதாக எண்ணுகிறார்கள்.

நுhற்றுக்கு 90 வீதமானோர் இரட்டைப் பிரஜாஉரிமை பெற்றிருக்கிறார்கள்.

எமக்கு அங்கு யார் இருக்கிறார்கள் என்றால் யாரைச் சொல்வதென்று முழிப்போம்.

அவர்களுக்கு முழு குடும்பமே அங்கே இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரம் படம் பார்க்க பல இளையவர்கள் வந்திருந்தார்கள்.ஏதாவது விழங்கியிரக்கும் தானே.

Link to comment
Share on other sites

On 18/6/2022 at 16:32, பிரபா சிதம்பரநாதன் said:

நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

இதுபற்றி என் துணைவியிடம் கேட்டேன்,,,, 

காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து உடைமாற்றிச் சாமி கும்பிட்டு காலை உணவையும் முடித்தபின் நீங்கள் கணனியில் உட்கார்ந்தால், எனக்கும் நீங்கள் பார்க்கும் பதிவுகளைப் பார்க்கவும், அதற்காக எழுதும் கருத்துக்களை நோக்கவும், நேரத்துடன் ஆர்வமும் தானாக வரும். கண்ட நேரமெல்லாம் கணனியைக் கட்டிப்பிடித்து இருந்தால் வெறுப்புத்தான் வருகிறது என்றார்.😩  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா?

இந்திய தமிழர்களை பற்றி எனக்கு தெரியாது. இந்தியர்கள் மற்ற மொழிகள் பேசுபவாகள் தங்கள் சொந்த மொழியை தாராளமாக பேசுகிறார்கள் தான்.அவர்கள் தங்களது மொழியை மிகவும் விரும்புகிறார்கள். தமிழ் மிகவும் பழமைவாய்ந்த மொழியானாலும் இலங்கையில் இருந்து வந்தவர்களால் அது அவ்வளவாக விரும்பபடவில்லை ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

👍

நீங்கள் அப்படிபட்டவராக இருக்க மாட்டீர்கள் என்று நான் உங்கள் எழுத்தை வைத்து முதலே நம்பினேன்.
ஊருக்கு மட்டுமே உபதேசம் அது எங்களுக்கு தேவை இல்லை என்று பலர் உள்ளனர் அது தான் தவறு.அங்கே இருந்து தான் மோசமான அரசியல்வாதிகளும் உருவாகுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2022 at 21:37, கிருபன் said:

தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

பேசுதல்

கேட்டல் (கிரகிப்போடு)

வாசித்தல் (கிரகிப்போடு)

எழுதுதல்

இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

@கிருபன்.. மிக்க நன்றி.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2022 at 01:15, Sabesh said:

தமிழ் மேல் ஆர்வம், தமிழ் தொடர்பான செயற்பாடுகள், தமிழ் கற்பித்தல் மட்டுமே அல்ல.  இதர தமிழார்வ செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளுக்கு அந்த ஆர்வம் இல்லை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து

உண்மை. மிக்க நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. 

நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என 

ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்..

இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம்

————————————————

 

@தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎06‎-‎2022 at 12:37, கிருபன் said:

தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

பேசுதல்

கேட்டல் (கிரகிப்போடு)

வாசித்தல் (கிரகிப்போடு)

எழுதுதல்

இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

கிருபன் , இது உங்களுக்கு மட்டும் எழுதப்படடதல்ல....இந்த தலைப்பையும் ,அதனோடு சேர்ந்த எழுதப்படட கருத்துக்களையும் முதலில் வாசியுங்கள்...உங்கள் பிள்ளைகளுக்கு 2ம் மொழியாய்  தமிழ் படிப்பித்தாலும் சரி ,பிரென்ஞ்  படிப்பித்தாலும் சரி அது உங்கள் விருப்பம் 
உங்களிடம் ஒரு கேள்வி பிழைப்பிற்காய் நாட்டை விட்டு  வந்த நாங்கள் இங்குள்ள நாடுகளில் பேசப்படும் மொழிகளை நீங்கள் மேலே சொன்ன முறைப்படியா கற்று பாவிக்கிறோம் ?

4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. 

நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என 

ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்..

இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம்

————————————————

 

@தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

வீட்டில தமிழ் கதைக்கிற பிள்ளைகள் அட்லீஸ்ட் தமிழர்கள் கூடும் விழாக்கள் , பொது 
இடங்களிலாவது தமிழை கதைக்க முயற்சிப்பார்கள் /கதைப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது தான் . ஆனால் குழந்தையாய் இருக்கும் போதே நாங்கள் கதைத்து வந்தால் பிள்ளையும் இயல்பாய் கதைக்கும் 
 

4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. 

நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என 

ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்..

இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம்

————————————————

 

@தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை.

மிகவும் நல்லது.

நான் உங்களை குறைநினைக்கவில்லை.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.