Jump to content

பெண்களும் கற்புப் பூட்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களும் கற்புப் பூட்டும்

spacer.png
 

மனிதனுடைய வரலாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்துவிட்டாலும் அதில் ஏடு அறிந்ததும், ஏடு அறியாததும் என பொதுவாக ஆராயப்படுகிறது. ஏடறிந்த வரலாற்றில் உண்மைகளுடன் புனைவுகளும் சேர்ந்தே பதியப்படுகிறது. இங்கு உண்மை, புனைவு என்பதை பகுத்தறியும் ஆற்றல் கொண்டவர்களால் தொடர்ந்த தேடலில் இனம் காணக்கூடியதாகவே இருக்கும். எனினும் ஏடறிந்த வரலாற்றின்படி உலகலாவிய ரீதியில் முதலில் தோன்றிய ஒடுக்குமுறை பெண்கள் மீதே என்பது யாவரும் அறிந்ததே.

மேலைநாடுகளில் சூனியக்காரிகளின் வேட்டைக்கு முன்பே கற்புபெல்ட் என்ற புனைவு தொடங்கியுள்ளது எனலாம். சூனியக்காரிகள் பற்றி கூறும்போது அவர்கள் பாலியல்வேட்கை உடையவர்கள் எனவும், பிசாசுடன் பாலியல் உறவுகளை கொண்டவர்கள் எனவும் புனையப்பட்டது. “கற்பு பெல்ட்” (Chastity belt) என்பதும் அவ்வாறே புனைவுகளுடன் பிணைந்து உள்ளது என கூறப்படுகிறது. தடித்த உலோகத்தாலான உள்ளாடைகள். பூட்டுகளினால் பிணைக்கப்பட்டிருக்கும். இது பெண்களது பாலியல் தூய்மையை(chastity) பாதுகாக்க பயன்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வகையான கட்டுக்கதைகளை உற்று பார்க்கும்போது பெண்களது பாலியல் குறித்து பொதுவாக ஆணாதிக்க சமூகத்தில் உள்ள ஆண்கள் பொறாமை, சந்தேகம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அதனால் தமது அதிகாரத்தை கொண்டு பெண்களை கட்டுப்படுத்த முனைகிறார்கள் எனலாம்.

‘கற்பு’ என்ற சொல் புராண இலக்கியங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும் இன்று வழக்கொழிந்த பதமேயாகும். இது பாலியல் ஒழுக்கம், பாலியல் தூய்மை, என பலவாறு கூறப்படுகிறது. ஆயினும் இந்த பாலியல் ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமே உரியது என்பதாகவே ஆண்மைய கருத்தியல் வலியுறுத்துவதை காணலாம். அத்துடன் பெண்களுடைய பாலியலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே விரும்புகிறார்கள். இதனை பாரதியார் “கற்பு நிலை என சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் பொதுவில் வை” என கூறுவதன் அர்த்தம் பாலியல் ஒழுக்கம் என்பது என்பது உடல் சார்ந்த விடயம் இல்லை. அது உளம் சார்ந்த விடயம். ஆண், பெண் இருபாலினருக்கும் பொதுவாக இருத்தல் அவசியம் என்கிறார்.

கற்புபெல்ட் என்பது உலோகத்தினால் ஆன உள்ளாடையாகும். பெண்களது பாலியல் உறுப்பான யோனியை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கு பூட்டும் சாவியும் உள்ளது. இது பல்வேறு வடிவங்களில் உள்ளது. அவற்றில் சில சிறுநீர், மலம் கழிப்பதற்கு ஏற்பவும் வடிவமைத்துள்ளது. இவை வரலாற்றின் இடைக்காலத்தில் பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை பாதுகாக்க பயன்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெல்ட் அணிந்த பெண்கள் தங்கள் கணவரின் அனுமதியின்றி உடலுறவு கொள்ள முடியாது.

இத்தகைய கற்பு பெல்ட் வரலாற்றில் உண்மையா? புனைவுடன் ஆன கட்டுக்கதையா என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?

பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கருத்துகளின்படி உண்மையில் உலோகத்தாலான கற்புபெல்ட் இருந்ததற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. அத்துடன் இதனை பயன்படுத்தும் பெண்களுக்கு உடல்நல அபாயம் கொண்டது. சில நாட்களில் பாதிக்கப்பட்ட தோல் காயங்கள், யோனி குத தொற்றுநோய்கள் ஏற்படுத்தி இறுதியில் மரணமும் சம்பவிக்கலாம். ஆதலால் உலோகத்தாலான கற்புபெல்ட் என்பது முற்றும் முழுதாக புனைவு என்பதாகவே இருந்துள்ளது என குறிப்பிடுகின்றனர்.

ஜேர்மன் இராணுவ பொறியியலாளர் Konrad Kyeser என்பவர் ‘Billifortis’ என்ற படைப்பில் இராணுவ தொழில்நுட்ப இயந்திரங்கள், ஆயுதங்கள், கருவிகள் குறித்து தாக்குதல், பாதுகாப்பு நுட்பங்கள் சித்திரவதை பற்றிய விளக்கப்படங்களை வரைந்திருந்தார். அந்த வரைபடங்களில் கற்புபெல்ட்டின் வரைபடமும் 1405ல் முதன் முதலில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவை அவரது நகைச்சுவையே என்றும் அறியப்படுகிறது. ஆனால் Konrad Kyeser இன் வரைபடம் Gottigen பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக ‘கற்பு பெல்ட்’ என்பது கிரீக் மித் எனறே கருதப்படுகிறது. இதன் கட்டுக்கதைகள் பலவாறு உள்ளது. சிலுவைப்போரில் ஆர்வம் கொண்ட ஆண்கள் போவதற்கு முன்பு தங்கள் மனைவியரை கற்புபெல்ட்டில் பூட்டி வைத்தார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த சிலுவைப்போரானது நீண்ட காலங்களைக் கொண்டிருக்கும். பெண்கள் தமது பாலியல் விருப்பங்களை அடக்கி வைத்திருக்கும் தன்மை அற்றவர்கள் என்ற ஆண்மைய கருத்துக்களை அன்றைய சமூகத்தினர் கொண்டிருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய கட்டுக்கதைகள் கத்தோலிக்க மத திருச்சபையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏனெனில் பெண்களை ஏமாற்றுவது பாவமாக கருதப்பட்டது. அக்காலத்தில் வழக்கமாக ஏமாற்றப்படும் பெண்கள் கொல்லப்படுவார்கள். மோசடி செய்யும் ஆண்கள் தப்பிவிடுவார்கள். பெண்கள் பாலியல் ரீதியில் வன்கொடுமைக்கு உள்ளாகாமல் கற்புபெல்ட் பாதுகாப்பு அளிக்கும் என நம்பினார்கள். அதேபோல் ஆண்களுக்கும் இந்த கற்புபெல்ட் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது அவர்களது ஆண்மையைக் குறைக்கும், மனச்சோர்வை உண்டாக்கும், குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும், இன்னும்பிற நம்பிக்கைகள் கட்டுக்கதைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஆகும்.

கற்பு பெல்ட் ஒரு கட்டுக்கதை எனின் இன்னும் ஏன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது ?

கற்பு பெல்ட் பற்றிய கட்டுக்கதைகள் பெருமளவில் பெண்களை மையமாக வைத்தே உருவகம் செய்யப்பட்டது. இந்த கற்பு பெல்ட், பிரித்தானியாவின் லண்டனிலும், பிரான்சில் Musée de Cluny என்ற இடத்திலும் வேறு சில நாடுகளிலும் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தலுக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில லண்டனில் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட காட்சியில் இடைக்கால கற்புப்பட்டி அகற்றப்பட்டதாகவும் அறியப்படுகிறது. ஏனெனில் அது போலியான ஆவணம் எனக் கருதப்பட்டமையே ஆகும். இதனை இடைக்கால்ம் பற்றிய தவறான கருத்துக்கள்( Misconception about middle age) என்கிற நூல் விவரிப்பதாக உள்ளது. இவை இடைக்காலத்து கலைப்படைப்பாக கருதப்படுகிறது. எனினும் அவை நவீனமானவையாக இருந்தன. பிரான்சில் காணப்பட்ட கற்புபெல்ட உலோகப் பரிசோதனையிற்கு உட்படுத்தபோது அவை 19 ம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரியதாக காணப்பட்டது என ஒரு தகவல் அறிய முடிகிறது. வேறுசில தகவலின்படி ஆரம்ப கற்புபெல்ட் பண்டைய ரோமில் இருந்து வந்தவை எனவும், அவை உலோகக் கலவையற்ற எளிய முடிச்சுக்களை கொண்டது எனவும் கூறப்படுகிறது.

spacer.png


 

வரலாற்று ஆசிரியர் Sarah pond “கற்பு பெல்ட்” பற்றி ரோமானிய காலத்து வேர்களை ஆராய்ந்தபோது, பழமையான சடங்காக திருமணத்திற்கு முன்பு ரோமானிய மணப்பெண் tunica rectangles என்ற துணியை அணிந்திருந்தார்கள். அதன் வெள்ளை நிறம் தூய்மையைக் குறிக்கிறது. சிலர் காவிநிறமும் அணிவர். அத்துடன் ருனிகாவிற்கு மேலாக zona or Cingular எனும் கவ்விப்பிடிக்கும் ஆடையையும் அணிந்தார்கள். இந்த cord பெல்ட் மணமகளின் கற்பைக் குறிக்கிறது. அதிலுள்ள (Herculea knots)முடிச்சுகளை கணவர் பின்னர் அவிழ்த்துவிடுவார். ஆண்களும் முடிச்சுப்பட்டி அணிந்திருப்பார்கள். ஆரம்ப மற்றும் இடைக்காலங்களில் (meadivale) முடிச்சு பெல்ட் பெண்களின் அடக்கத்தையும், பாலியல் ஒழுக்கத்தையும் குறிப்பதாக கூறப்படுகிறது. அந்த முடிச்சு ஆடையின் மடிப்புக்களை உயர்த்தி பிடித்தவாறு இருப்பதனால் அது இடுப்பை அழகாக காட்டுவதாக கூறப்படுகிறது . ரோமானிய காலத்தில் சிக்கலான முடிச்சுகளை கொண்ட பழமையான உடைகளுக்கான வழக்காக இருந்துள்ளது. ஆனால் அது உலோகத்தால் ஆனது என்பது பொருத்தமற்றதாக உள்ளது என்கிறார்.

20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மானடவியலாளரான எரிக் ஜான் டிங்வால் (Eric John Dingwall) எழுதிய நூலில் “The gridle of chastity belt” அறிவொளி காலத்திற்கு (Renaissance) முந்திய பின்தங்கிய இருண்டகாலத்து(Dark age) காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்துவதாக கூறுகிறார். ஆதலால் கற்புபெல்ட் பற்றிய கருத்தியல் புனைவானது 18ம்,19ம் நூற்றாண்டிலேயே பிரபல்யமானது என கூறுகிறார்கள். இப்போ இருண்டகாலத்திற்கு ஒரு சிறிய பார்வையை செலுத்துவோம்.

பொதுவாக ஐரோப்பிய வரலாற்று காலகட்டங்களை ஐந்து கட்டங்களாக பார்க்கப்படுகிறது. அவை

  • இருண்டகாலம் (Dark Age period) 5,6 —- 11,12 நூற்றாண்டு
  • மறுமலர்ச்சிக்காலம் ( Renaissance) 13 ——- 14
  • அறிவொளிகாலம் (Enlightenment )17 ——— 18
  • கைத்தொழில் மயமான காலம் (Industrial Revolution ) 18 ——- 19
  • ஜனநாயக புரட்சிக்காலம் (Democracy ) 19 —- 20, 21

இருண்டகாலம் என்பது வளர்ச்சி அடையாத நிலப்பிரபுத்துவ காலகட்டம் எனலாம். மனித வரலாறு மதத்தோடு பிணைந்திருந்தது. கிறிஸ்தவம் சட்டபூர்வ மயப்பட்டதாக இருந்தது. சமூகம் மதத்தால் ஆளப்பட்டது. சமூகத்தின் மீதான செல்வாக்கு கத்தோலிக்க திருச்சபையிடம் இருந்தது. விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி அற்றதாகவே இருந்தது. பைபில் இருந்தபடி உலகம் தட்டையானது என்றே நம்பப்பட்டது. உலகம் உருண்டை என கண்டுபிடித்தவர்கள் தண்டனைக்கு உள்ளான காலகட்டமாக இருந்தது. இங்கு மக்கள் சிலுவையை ஏந்திய வண்ணம் மற்றைய மதத்தவருடன் போருக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையே சிலுவைப்போர் என அழைப்பர். இது ரோமில்(இத்தாலி) இருந்து யேசுநாதர் பிறந்த இடமான பாலஸ்தீனம் வரை எனவும் தகவல் அறியப்படுகிறது. சமூக அமைப்பின் குடும்பத்தில் பெண்களது நிலைமை மதத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஆதாமுக்காகவே ஏவால் படைக்கப்பட்டாள் என்ற நம்பிக்கை வலுவாக நம்பப்பட்டது. பெண்களை பற்றிய மிக மோசமான அடிமைத்தனங்கள் பின்பற்றப்பட்டது எனலாம்.

கற்புபெல்ட் குறித்த புனைவுகள் இன்று புத்தகங்களிலும், திரைப்படங்களிலுமே அதிகமாக பேசப்படுகின்றன. “Robin Hood”, “Man in Tight” ஆகிய திரைப்படங்களில் இதனைக் காணக்கூடியதாக உள்ளது.

University of Arizona இடைக்கால ஆய்வாளர், அறிஞர் ஆல்பிரெக் கிளாசன் (Albrecht Classen) என்பவர், தமது நூலில் ‘The medieval chastity belt: A myth – making process’ஆண்களிடம் காணப்படும் பாலியல் ரீதியான தாழ்வுச்சிக்கலே நகைச்சுவையாக வெளிப்படுகிறது என்கிறார். வளர்ச்சியடையாத இருண்டகால அடக்குமுறைக்கான கற்பனையான உருவகமே கற்புபெல்ட் ஆகும். இதனை சித்திரவதைக்கான அதி பயங்கர கருவியாக காட்ட முனைந்தனர். எனினும் வரலாற்று ரீதியான ஆதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளது எனவும் கூறுகிறார். இடைக்காலத்தைப் பற்றியோ கலாச்சார வரலாற்றின் வேறு எந்த கட்டத்தைப் பற்றியோ நாம் தெரிந்து கொள்வதற்காக பெரும்பாலும் epistemological filters அறிவியல் வடிகட்டல்களையே பயன்படுத்துகிறோம். ஆனால் அவை அதன் பின்னர் உள்ள யதார்த்தத்தை மாற்றியமைத்து தெரிவிக்கின்றன. எனவே உண்மையான புரிதலுக்கு உன்னிப்பான பகுப்பாய்வுகள் தேவை என்கிறார்.

Kyeser இன் கருத்துப்படி 1405 ல் Florence முதலில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு பெண்ணின் பாலுணர்வைக் கட்டுப்படுத்த பயன்படும் எனவும் குறிப்பிடப்பட்டது. பின்னர் இது நகைசுவையாக வரையப்பட்டது என அறிய முடிகிறது. ஆனால் உண்மையில் வரலாற்று ரீதியில் முக்கியமான எழுத்துகளிலோ கலைப்படைப்புகளிலோ(serious texts or art work) காணப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வந்த நகைச்சுவை எழுத்தாளர்களின் எழுத்துகளில் காணப்படுகிறது. ஆண்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி பெண்கள் மீது அவர்களது பாலுணர்வை கட்டுப்படுத்த பயன்படுத்தினார்கள் எனக் கூறப்படுகிறது.

19ம் நூற்றாண்டில் அறிவார்ந்த(Scholr) மற்றும் சில சாதாரண படைப்புகளின் ஆசிரியர்கள் கற்புபெல்ட் பற்றி கொடூரமானதாக கருத தொடங்கினர். இதனால் கற்புபெல்ட்டின் கருப்பொருள் முக்கியத்துவம் பெற்றது. ஐரோப்பா முழுவதும் மிகவும் பிரபல்யமான இடைக்கால சித்தரவதை அருங்காட்சியகம் நிறுவப்பட்ட காலமும் இதுவேயாகும். பெரும்பாலும் அக்காலத்தில் நவீனமான பொருட்களே வழங்கப்பட்டது.

‘The medieval chastity belt: A myth – making process என்ற நூல் 2007 ல் வெளிவந்தது. அதற்கு முன்னர் பெரும்பாலான அறிஞர்களும் கற்பு பெல்ட் இடைக்காலத்தில் இருந்ததாகவும் சிலுவைப்போர் மற்றும் பிற இராணுவ நடவடிக்கைகளுக்கு புறப்படுபவர்கள் பயன்படுத்தினார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். பாலியல் வரலாற்றில் அக்கறை கொண்டவர்களில் பெரும்பாலானோர் கடந்தகாலத்தில் இருந்த கட்டுக்கதைகளை நம்பினார்கள்.

15ம் நூற்றாண்டு புரளியாக இருந்தது. பின்னர் 19ம் நூற்றாண்டு வரலாற்று அருங்காட்சியகங்களின் புரளியாக மாறியது. இடைக்காலத்தைப் பற்றி நமது அறிவு தவறான கருத்துக்களால் வடிவமைக்கப்பட்டது. பூமி தட்டையானது என்பது இடைக்காலத்து மக்களால் நம்பப்பட்டது. ஆனால் அது ஒரு அனுமானமே ஆகும். உண்மைக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. அக்காலத்தில் பிரபல்யமான கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தியது எனலாம். ஆனால் அந்த அனுமானம் நிறுவப்பட்டவில்லை. இவ்வாறு அல்பிரேக் கிளாசன் தமது ஆய்வின் முடிவுகளை வெளிப்படுத்துகிறார்.

spacer.png

கற்பு பெல்ட் என்னும் கருத்தாக்கத்தை மேற்கூறப்பட்டவாறு மானிடவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் போன்றோர் போதிய ஆதாரங்களும், சான்றுகளும் இல்லை என்பதால் இதனை புனைவு என்றே கூறுகின்கிறார்கள். இது இருண்டகாலத்தின் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாகவே உள்ளது. பெண்கள், தமது கணவர்களை தவிர வேறு ஆண்களுடன் பாலியல் உறவு வைப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு பின்பற்றப்பட்டதால் அதன் வெளிப்பாடாக இத்தகைய சித்திரவதை சாதனம் கற்பனை வடிவமாக உருவகம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் கூறுகின்றனர். கற்புபெல்ட் என்பது ஐதீகமாக ரோமில் இருந்திருக்கலாம். ஆனால் உலோகத்தாலானது என்பதற்கு போதிய ஆதாரங்கள் ஊடாக நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறு ஐரோப்பிய வரலாறு பாலியல் ஒழுக்கம் பற்றி கூறினாலும் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் பாலியல்ஒழுக்கம் பெண்களுகே உரியது என்ற ஐதீகம் இன்றுவரை உயிருடனே வாழ்கிறது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.

சில சமூகங்களில் திருமணத்தின் முதல்நாள் அவர்களது படுக்கை வெள்ளை பெட்சீட் விரிப்புகளை கொண்டதாக இருக்கும். அடுத்தநாள் படுக்கை விரிப்பில் இரத்தக்கறை இருந்தால் மணப்பெண் (vergin) தூய்மை உடையவராக கருதப்படுகிறது. இதேபோல் ஆபிரிக்க சமூகங்களில் கத்தம் என்ற நிகழ்வும் பெண்களது தூய்மை என்ற புனைவை வைத்தே நிகழ்த்தப்படுகிறது. இதன்போது பெண்ணின் யோனியை பகுதியாக தைத்து விடுவதும், திருமணத்திற்கு முன்பு அவிழ்ப்பதுமானதாகும். இவற்றை பார்க்கும்போது இந்த ‘கற்புபெல்ட்’ பெண்களை சித்திரவதை பண்ணுவதற்கு பயன்படுத்தியிருப்பார்கள் என்று கூறினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. பெண் உடலின் பாலியலை ஆண்மைய சமூகம் எவ்வாறு மிருகத்தனமாக கட்டுப்படுத்த பொய்களினாலான புனைவுகளை உருவாக்கி அதனை கட்டியும்காக்கிறது என்பது புலப்படும். உலோகத்தாலான கற்பு பெல்ட் என்பது புனைவு என்று சொல்லப்பட்டாலும் பெண்கள் மீது அழுத்தம் கொடுக்கும் பாலியல் ஒழுக்கம் பற்றிய புனைவு உலோகத்தைவிட உறுதியாகவே ஒடுக்குகிறது என்பது உண்மையிலும் உண்மையே.
 

https://solvanam.com/2022/06/12/பெண்களும்-கற்புப்-பூட்டு/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப் போன அரசனின் கதை தெரியும்தானே 🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 01:12, Kapithan said:

போருக்குப் போன அரசனின் கதை தெரியும்தானே 🤣

தெரியாது......!   😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 00:12, Kapithan said:

போருக்குப் போன அரசனின் கதை தெரியும்தானே 🤣

 

1 hour ago, suvy said:

தெரியாது......!   😴

ஒரு ராசாவுக்கு மனைவி மேலே சந்தேகம்... இருந்தாலும், போர்க்களம் போகவேண்டும். பக்கத்து நாட்டு மன்னன் படையெடுத்து வந்துவிட்டான், என்ன செய்வது.

யோசித்தான் மன்னன்...

அரண்மனையில் வயதானவர்... முன்னாள் மந்திரி... அவரை அழைத்தார் மன்னன்...

அந்தப்புரம் சாவியை கொடுத்தார்.... உள்ளே அரசியார் இருக்கிறார்....

தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன.... அவசியம் என்றால் மட்டுமே திறக்க வேண்டும்.

கவனம் இருக்கட்டும். நான் போர்க்களம் போய் வருகிறேன்.

கிளம்பி விட்டான் மன்னன்.... 'வெற்றி வேல், வீர வேல்' என்று கத்தியபடி படையுடன் கிளம்பிவிட்டான்.

ஒரு காத தூரம் கூட போயிருக்க மாட்டார்கள்.

தூரத்தில், புழுதி கிளப்பிக்கொண்டு குதிரை ஒன்று வருகிறது. வந்தவர் வயதான அமைச்சர்.

மேல் முச்சு, கீழ் மூச்சு வாங்க கத்தினார்.....

மன்னா.... 'பிழையான சாவியை கொடுத்து விட்டு, நீ பாட்டுக்கு கிளம்பி வந்து விட்டாயே'....  😡 🤬

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்கள் அல்லது ஆண்களுக்கு, பிறப்புறுப்பு முழுவதும் நீக்கப்பட்டு, அரண்மணை அந்தப்புறத்தில், எடுபிடியாக, காவலுக்கு அமர்த்தப்படுபவர்கள்.

இவ்வகையான பலர், முகாலய அரண்மனைகளில் அதிகமாக இருந்திருக்கிறார்கள். மிக அதிகமான பெண்களை திருமணம் செய்து, மன்னர், அடுத்த ரவுண்டு வர, மிக காலம் எடுப்பதால், தபபுக்கள் நடக்க கூடாதென இந்த ஏற்பாடு.

இவர்கள் Eunuch என அழைக்கப்பட்டனர்.

நீக்கப்படுவது Emasculation என அழைக்கப்படும்.

ஆக, பிரிட்டிஸ் அரசகுடும்பங்களில் முன்னர் இருந்திருக்கலாம். 🥺

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

 

ஒரு ராசாவுக்கு மனைவி மேலே சந்தேகம்... இருந்தாலும், போர்க்களம் போகவேண்டும். பக்கத்து நாட்டு மன்னன் படையெடுத்து வந்துவிட்டான், என்ன செய்வது.

யோசித்தான் மன்னன்...

அரண்மனையில் வயதானவர்... முன்னாள் மந்திரி... அவரை அழைத்தார் மன்னன்...

அந்தப்புரம் சாவியை கொடுத்தார்.... உள்ளே அரசியார் இருக்கிறார்....

தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன.... அவசியம் என்றால் மட்டுமே திறக்க வேண்டும்.

கவனம் இருக்கட்டும். நான் போர்க்களம் போய் வருகிறேன்.

கிளம்பி விட்டான் மன்னன்.... 'வெற்றி வேல், வீர வேல்' என்று கத்தியபடி படையுடன் கிளம்பிவிட்டான்.

ஒரு காத தூரம் கூட போயிருக்க மாட்டார்கள்.

தூரத்தில், புழுதி கிளப்பிக்கொண்டு குதிரை ஒன்று வருகிறது. வந்தவர் வயதான அமைச்சர்.

மேல் முச்சு, கீழ் மூச்சு வாங்க கத்தினார்.....

மன்னா.... 'பிழையான சாவியை கொடுத்து விட்டு, நீ பாட்டுக்கு கிளம்பி வந்து விட்டாயே'....  😡 🤬

சிறு திருத்தம்.

அரசன் மந்திரியிடம் கொடுத்தது மகாராணியாரின் உலோகத்தாலான உள்ளாடைக்கு போடப்பட்ட பூட்டின் சாவியை. (அதாவது,  கற்பு பெல்ற்றின் சாவியை)

🤫

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.