Jump to content

சைக்கிள்களை சோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை : விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள்களை சோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை : விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம்

( எம்.எப்.எம்.பஸீர்)

 அடுத்து வரும்  இரண்டு, மூன்று வாரங்களுக்கு   சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்தி தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய  நடவடிக்கை  ஒன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளது.  

bicycles.JPG

இதற்கான அறிவுறுத்தல்கள் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரால், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, பலரும் தற்போது சைக்கிள்களை பயன்படுத்தும் நிலையில், கடந்த கால தரவுகலுடன் ஒப்பீடு செய்து, விபத்து சம்பவங்கள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த புதிய  திட்டம் அமுல் செய்யப்படவுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

 நடப்பு ஆண்டில் ( 2022) இதுவரை 1202 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன்,  அந்த விபத்துக்களால் 96 சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

 சைக்கிள்களில் பிரதான விளக்கு இன்மை அல்லது அது ஒளிரவிடப்படாமை,  பின் பக்கத்தில் அடையாளப்படுத்தும் விளக்குகள் எவையும் இல்லாமை,  இரவு நேரங்களில் ஓட்டுநர்கள் கடும் நிறங்களிலான ஆடைகளை அணிந்து பயணிப்பது,   சமிக்ஞை விளக்குகளை கவனத்தில் கொள்ளாது பயணிப்பது, பாதைகளின் குறுக்காக பயணிக்கும் போது எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை உணராது பயணிப்பது போன்றன இந்த சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்துக்களில் சிக்க காரணங்களாக பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கண்டறிய்பட்டதுள்ளது.

இந் நிலையிலேயே  தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் சைக்கிள் பாவனை அதிகரித்துள்ள பின்னணியில், சைக்கிள்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதுடன்,  இரவு நேரங்களில் பயணிக்கும் போது இளம் நிறங்களிலான ஆடைகளை அணிந்து பயணிப்பது, சைக்கிள்களில் பின் பக்கம் அடையாள விலக்குகளை பொருத்துவது போன்ற ஓட்டுநர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ  தெரிவித்தார்.
 

https://www.virakesari.lk/article/129777

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜா சர்வீஸ்(  நடந்து செல்வோர் )  கான புதிய வழிமுறை வெளியிடபட்டுள்ளது.

அதன்படி ..

1. வீதியால் நடந்து செல்வோர் சிகப்பு வண்ண உடுப்பு மேலாடை யாக அணிந்திருக்க வேண்டும்.

2. மக்கள் நெரிசல் , போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் குரல் எழுப்பி கொண்டோ அல்லது கையில் உள்ள ஒலிப்பானை அழுத்தி கொண்டே செல்ல வேண்டும்

3. இரவு நேர பயணங்களை மேற்கொள்வோர் சிகப்பு நிற ஒளிரும் விளக்குகளை கையில் பிடித்தவாறே செல்லுதல் வேண்டும்.

4. சாலையை கடக்க விரும்புவோர் கடக்கும் வேளையில் ஆ.. ஊ.. என்று குரல் எழுப்பி செல்ல வேண்டும்..

விரைவில் திருத்தபட்ட வர்த்தமானி வெளியிடப்பட உள்ளது..

டிஸ்கி

மலரும் நினைவுகளாக இப்போதான் மிதிவண்டிக்கு திரும்பி இருக்கினம் .அதற்கும் ஆப்பு வைக்கினம்..😢

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.