Jump to content

கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

22-62ab72e5cef9f-300x200.jpgகனடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கனடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டுள்ளார்.

மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந்துள்ளார்

விபத்தை அடுத்து உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“மிகவும் சோகத்துடன், எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்பதை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்” என்று ஒட்டாவா காவல்துறை புதன்கிழமை காலை ட்வீட் செய்துள்ளது.

மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந்ததாகவும், அவர் புன்னகையுடன் இருந்ததாகவும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். மதியழகன் இலங்கையில் பிறந்து ஒட்டாவாவில் வளர்ந்தார், அவரது குடும்பத்தில் இளைய பிள்ளையாவார்.

 

 

 

அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட கொடிகள்

 

எவ்வாறாயினும், இந்த விபத்து அவர் கடமையில் இல்லாதபோது நிகழ்ந்ததாக ஒட்டாவா பொலிஸார் இன்று காலை அறிவித்துள்ளனர்.

இவரது மறைவு காரணமாக அனைத்து ஒட்டாவா காவல்துறை கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. விபத்து தொடர்பில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி - அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்                                      

கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள் – குறியீடு (kuriyeedu.com)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது சமூகத்தில் இந்த மாதிரி துறைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு.. அவர்களும் கூட தங்களது திறமைகளை வெளிப்படுத்தியும், சமூகத்திற்கு முன் உதாரணமாகவும் திகழ வேண்டிய நேரத்தில் பாதியில் உலகில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுவிடுகிறார்கள்.. கவலையான ஒரு சம்பவம்.. 

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எங்களது சமூகத்தில் இந்த மாதிரி துறைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு.. அவர்களும் கூட தங்களது திறமைகளை வெளிப்படுத்தியும், சமூகத்திற்கு முன் உதாரணமாகவும் திகழ வேண்டிய நேரத்தில் பாதியில் உலகில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுவிடுகிறார்கள்.. கவலையான ஒரு சம்பவம்.. 

மிகவும் சரியாக சொல்லியுள்ளீர்கள்.

ஆழ:ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

Link to comment
Share on other sites

9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எங்களது சமூகத்தில் இந்த மாதிரி துறைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு.. அவர்களும் கூட தங்களது திறமைகளை வெளிப்படுத்தியும், சமூகத்திற்கு முன் உதாரணமாகவும் திகழ வேண்டிய நேரத்தில் பாதியில் உலகில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுவிடுகிறார்கள்.. கவலையான ஒரு சம்பவம்.. 

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

தேர்வுகள் கஷ்டமாக இருக்கலாம்.. அதனால்தான் எங்கேயாவது அருமையாக வருபவர்களும் இல்லாமல் போகும் பொழுது கஷ்டமாக உள்ளது.. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

ஜேர்மனியில் இங்கே பிறந்த எம் இளைஞர்கள் யுவதிகள் பலர் காவல்துறையில் பணியாற்றுகின்றார்கள்.
-----------------------------------------
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎06‎-‎2022 at 01:11, nunavilan said:

இதில் எடுபடுவதும் கஸ்டம் என்று சொல்கிறார்கள். யாழ்கள "கலைஞன்" பல தேர்வுகளில் தெரிவாகி இறுதியில் தட்டி விட்டார்கள் என யாழ்களத்தில் எங்கேயோ எழுதிய நினைவு.

இங்கு காவல்துறையில் தமிழர்கள் குறிப்பாய்  பெண்கள் வேலை செய்கிறார்கள் ...கலைஞ்ன் முயற்சித்தது விமானப் படையில் சேருவதற்கு   என்று நினைக்கிறேன் 
 

  • Like 1
Link to comment
Share on other sites

காவல்துறை அதிகாரி மதியழகன் விஜயாலயன் அவர்களின் இறுதி நிகழ்வு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "காலம்" ஆகிய காவல்துறையின் தனது வீரருக்கு இறுதிவணக்க நிகழ்வில் மிகவும் சிறப்புடன் கலந்துகொண்டு பங்காற்றியமைக்கும் இறுதி வணக்கம் செய்தமைக்கும் அனைத்துத் தமிழனத்தினதும் சார்பில் எமது நன்றியையும் வணக்கத்தையும் உரித்துடையதாக்குகிறோம்.

கனடா தேசம் தனது நாட்டின் மக்களுக்குப் பல்வேறு தருணங்களில் எப்படி மதிப்பளிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

நன்றி. 
அந்தக் கனடாவின் காவல்துறை வீரனுக்கு எனது இறுதி வணக்கம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.