Jump to content

எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும்... நட்பு நாடுகள், உக்ரைனை.... கைவிட்டு விடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டு உள்ள உக்ரைனியர்கள் பிரித்தானிய விசாக்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும்... நட்பு நாடுகள், உக்ரைனை.... கைவிட்டு விடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்!

எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது என என நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைன் போர் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது, பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். எனவே, அதற்கேற்ப நாம் நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு நடைபெறுவதால் நேட்டோ உறுப்பு நாடுகளும் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தற்போது அளித்து வரும் ஆதரவைக் குறைத்துவிடக் கூடாது. எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது.

நீண்ட காலத்துக்கு போர் நீள்வதால் ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது உண்மையே. அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதால் மட்டுமன்றி, எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்தாலும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும்.

ஆனால், அதற்காக போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதிலிருந்து ஐரோப்பிய நாடுகள் பின்வாங்கிவிடக் கூடாது. போர் முனையில் உக்ரைன் வீரர்கள் சந்திக்கும் இழப்புகளோடு ஒப்பிடுகையில், உணவு, எரிபோருள் விலையேற்றத்தால் ஏற்படும் இழப்பு மிகவும் சிறியதாகும்.

கடந்த 2014ஆம் ஆண்டில் கிரீமியா பிரதேசத்தை இணைத்துக் கொண்டதைப் போல, தற்போது உக்ரைனின் மற்ற பகுதிகளையும் கைப்பற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் நோக்கம் நிறைவேற அனுமதித்தால், தற்போதைய பொருளாதார இழப்புகளைவிட அதிக விலையை ஐரோப்பிய நாடுகள் கொடுக்க வேண்டியிருக்கும்’ என கூறினார்.

https://athavannews.com/2022/1287724

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2022 at 11:44, தமிழ் சிறி said:

நேட்டோ பொதுச் செயலர்!

 தொடக்கிவிட்டுட்டு ஐரோப்பாவையும் மெதுவா யுத்தத்திற்குள் தந்திரமாக இழுத்துவிட்டு விட்டு ஆலோசனை வேறு. போறபோக்கிலை ஐரோப்பாவிலை உணவுப்பஞ்சத்தாலை சனங்கள் சாகப்போகுது. எவளவு காலத்துக்கு வரிச்சலுகை அது  இதெல்லாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்லுறதைப் பார்த்தால் விரைவில் உக்ரேன் ஸ்ரீ லங்காவிடமும் கடன் கேட்கும் போலக் கிடக்கு......!  🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2022 at 11:44, தமிழ் சிறி said:

எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும்... நட்பு நாடுகள், உக்ரைனை.... கைவிட்டு விடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்!

தாங்கள்  தங்கடை பிரச்சனை எண்டால் எவ்வளவு கரிசனையாய் இருக்கிறாங்கள் பாருங்கோ...!
கெட்டாசுகள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேகமாக மேற்குலகு உக்ரேனைக் கைவிடும். 

உக்ரேன் யுத்தத்தில் முற்றிலுமாக அழிந்து பேச்சுவார்த்தையில் யுத்தம் முடிவுக்கு வருவதைவிட, இப்போதே பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது ஆயிரம் மடங்கு நன்மையானதது.

மேற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நேர்மையாக நடந்தது கிடையாது. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.