Jump to content

சிறுவாணி ஒப்பந்தம்: தமிழ்நாடு - கேரளா இடையே என்ன சிக்கல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவாணி ஒப்பந்தம்: தமிழ்நாடு - கேரளா இடையே என்ன சிக்கல்?

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக
20 ஜூன் 2022
 

சிறுவாணி அணை

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய அளவில் பங்கு கிடைப்பதில்லை என்பது தமிழ்நாடு - கேரள அரசுகளுக்கு இடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியார் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வருக்கு சமீபத்தில் இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் கோவை வந்திருந்த அமைச்சர் கே.என்.நேரு, கேரள அரசு சிறுவாணியிலிருந்து உரிய அளவில் தண்ணீர் வழங்குவதில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

ஜூன் 19ஆம் தேதி எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், `சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்திப் பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் உத்தரவிட வேண்டும்` என தெரிவித்திருந்தார். தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தை தொடர்ந்து சிறுவாணி அணையில் வழங்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வரின் ட்வீட்டிற்கு பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிகபட்சம் வெளியேற்ற அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. விரைவில் முதல்வர் அளவிலான சந்திப்பின் மூலம் அடுத்த கட்டம் விவாதிப்போம் என பதிலளித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், `ஒத்துழைப்பு மற்றும் தோழமை உணர்வுடன் பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண எதிர்நோக்கியுள்ளேன். இரு மாநிலங்களும் இணைந்து வளர்ச்சியடைவதை நாம் உறுதி செய்வோம்,` என்றுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சிறுவாணி திட்டம் எப்போது உருவாக்கப்பட்டது?

பிபிசி தமிழிடம் பேசிய கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் இளங்கோவன், `கோவையில் முதல் குடிநீர் திட்டமான சிறுவாணி திட்டம் கடந்த 1929-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு நகராட்சியால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முதல் குடிநீர் திட்டம் சிறுவாணி தான். அப்போது மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்படவில்லை.

 

சிறுவாணி அணை கேரளா

1956இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சிறுவாணி அணை கேரளா வசம் சென்றது. ஆனால் அதன் பயன்பாடு தமிழ்நாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறுவாணி அணை பராமரிப்புக்கான கட்டனத்தை தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள அதே சிக்கல் தான் சிறுவாணியிலும் உள்ளது. 1973-ம் ஆண்டு தமிழ்நாடு - கேரளா இடையே சிறுவாணி குடிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி நீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெயில் காலங்களிலும், மழை பொய்த்துவிடும் போதும் சிறுவாணியில் குடிநீர் பெறுவது சிக்கலாகி விடுகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இரு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதற்கு நிரந்தரமாக ஒரு தீர்வு காணப்பட வேண்டும்,' என்றார்.

ஒப்பந்தம் என்ன?

 

சிறுவாணி அணை

பிபிசி தமிழிடம் பேசிய கோவை குடிநீர் வடிகால் வாரியத்தின் சிறுவாணி பிரிவு நிர்வாக பொறியாளர் மீரா, "சிறுவாணி அணை கட்டப்பட்டதே தமிழ்நாட்டின் குடிநீர் தேவைக்காக தான். தற்போது அதன் கட்டுப்பாடு கேரள அரசிடம் உள்ளது. சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் 7 நகராட்சிகளுக்கும், 28 ஊராட்சிகளுக்கும் கோவை மாநகராட்சியின் ஒரு பகுதிக்கும் பயன்படுகிறது. சிறுவாணி அணையின் நீர், பாசனத்திற்கு பயன்படுவதில்லை," என்கிறார்.

கேரள அரசுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி சிறுவாணியிலிருந்து நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு 304 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு (1 ஜூலை முதல் 30 ஜூன் வரையிலான காலகட்டத்தில்) 1.30 டி.எம்.சி குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளப்பட குடிநீரின் அளவு முழுமையாக வழங்கப்படவில்லை என முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 300 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த அளவு ஜனவரியிலிருந்து (ஜனவரி - 237 கோடி லிட்டர், பிப்ரவரி - 179 கோடி லிட்டர், மாட்ச் 179 கோடி லிட்டர், ஏப்ரல் - 162 கோடி லிட்டர், மே - 161 கோடி லிட்டர்) படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

மே மாதம் வழங்கப்பட வேண்டிய குடிநீர் அளவில் பாதியே வழங்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் குடிநீர் வரத்து சற்று குறைவாக இருக்கும். ஆனால் கடந்த காலங்களில் இந்த அளவுக்கு குறைந்ததில்லை. ஜனவரி மாதத்திலிருந்து கேரள அதிகாரிகள் குடிநீர் வழங்கும் அளவை குறைத்தனர். ஆனால் அதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசின் கோரிக்கை என்ன?

 

சிறுவாணி அணை

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இரு மாநில ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணை 878.5 மீட்டர் கொள்ளளவில் தண்ணீரை பராமரிக்க வேண்டும். ஆனால் கேரள அர்சு 877 மீட்டர் அளவில் தான் தண்ணீரை பராமரிக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 122 மெட்ரிக் கன அடி தண்ணீர் பற்றாக்குறை ஆகிறது. எனவே தண்ணீர் அளவை ஒப்பந்தத்தில் உள்ள நிலையில் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு கேரள அரசிடமிருந்து அதிகாரபூர்வ பதில் எதுவும் வரவில்லை. அதிகாரிகள் தரப்பிலான பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. அப்போது இந்த கோரிக்கை விரிவாக விவாதிக்கப்பட உள்ளது` என்கிறார் சிறுவாணி பிரிவு நிர்வாக பொறியாளர்.

கேரளாவின் பதில் என்ன?

இது தொடர்பாக கேரள அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், `சிறுவாணி ஒப்பந்தம் தான் 1973-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அணை அதற்கு முன்பே கட்டப்பட்டுவிட்டது. மதகுகள் கடுமையாக பழுதடைந்துள்ள நிலையில் அணையும் பலவீனமடைந்துள்ளது. அதனால் தான் முழு கொள்ளளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவதில்லை. பல இடங்களில் கசிவுகள் ஏற்படுகிறது. தமிழ்நாடு அரசிடம் இதை முறையாக தெரிவிக்க உள்ளோம்.

ஆனாலும் தண்ணீரை முறையாக வழங்கி வருகிறோம். தற்போது வரை 1.15 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட 1.30 டி.எம்.சி வழங்கப்பட்டுவிடும். சிறுவாணி அணையால் கேரளாவுக்கு எந்தப் பலனும் இல்லை. கோவையின் குடிநீர் தேவைக்காக தான் சிறுவாணி அணை உள்ளது.

சிறுவாணி அணை தொடர்பான கூட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்ட முடியவில்லை. இந்த கூட்டம் கூடிய விரைவில் நடத்தப்படும். அப்போது இந்த விவாகரங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்` என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-61872163

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல‌ ஆனால் இந்த‌ காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி இந்த‌ மாத‌ காணொளி என்றால் என்னில் தான் த‌வ‌று  த‌வறுக்கு ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் நான் ரிக்ரொக் பார்ப்ப‌தே 2மாத‌த்துக்கு ஒருக்கா என‌து போனில் ரிக்ரொக் ஆப் இல்லை  த‌ம்பி த‌ங்கைச்சி இவ‌ர்க‌ளின் வீடியோக்க‌ள் பார்க்க‌  சில‌ ம‌ணி நேர‌ம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.