Jump to content

சிங்கள மக்களின் பொறுமைக்கு... எல்லை உண்டு – கூட்டமைப்பினரை, பகிரங்கமாக எச்சரித்தார் சரத் வீரசேகர.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sarath-werasekara-700x375.jpg

சிங்கள மக்களின் பொறுமைக்கு... எல்லை உண்டு – கூட்டமைப்பினரை, பகிரங்கமாக எச்சரித்தார் சரத் வீரசேகர.

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனின் கட்சி எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோணகல கிராமத்தில் 54 சிங்களவர்கள் கொல்லப் பட்டபோது, கொழும்பில் இந்து மத வேல் திருவிழா இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் வடக்கில் பௌத்த நடைமுறைகளுக்கு கௌரவம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் நாகவிஹாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் பல நூற்றாண்டுளுக்கு முற்பட்ட பௌத்த சின்னங்களாகும்.

கடந்த 9ஆம் திகதி குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் பாரிய தடைகளை ஏற்படுத்தினர்.

இவர்களால், அழைத்து வரப்பட்டவர்கள் கிராம மக்கள் அல்லர் என குற்றம் சுமத்திய அவர், அவர்கள் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1288010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடல் வற்றினாலும் இவனுகள் திருந்த மாட்டானுவள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

கடல் வற்றினாலும் இவனுகள் திருந்த மாட்டானுவள் 

இவரது அரசியலை கவனித்தால், ரணிலை தோற்கடித்து, கொழும்பில் முதல் ஆளாக வந்ததில் இருந்து, இனவாத அரசியலை கையில் எடுக்க நினைக்கிறார். கோத்தா, மகிந்தா.... அடோய், டோய்... அதுக்கு நாங்க இருக்கிறோம், நீ...மூடிட்டு இரு என்று சொன்னாலும், இவர், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், இதை பேச தவறுவதில்லை.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட.... ஒரு ஐடியா இருப்பதாக கேள்வி பட்டு தான் இவரைம் ராஜபக்சேக்கள் ஓரம் கட்டினார்கள்.

சிவபெருமானுடன் சொறிந்த பின்னர் தான், நாடு இந்த நிலைக்கு வந்து, சிங்களவர்கள் பசியுடன் இருக்கிறார்கள்... என்று நம்ம எம்பிமார் அடித்து விட வேண்டியதுதான்...

சனம் பசி, பட்டினியில தவிக்குது.... இவருக்கு விகாரை கேட்குது.

இதைத்தான் சொல்லுறது.... ஆடான ஆடெல்லாம் குழைக்கழ, ஆமிக்கார வீரசேகர ஆடு, விகாரைக்கு அழுத்திச்சாம். 😜

Edited by Nathamuni
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கடல் வற்றினாலும் இவனுகள் திருந்த மாட்டானுவள் 

அண்ணை கடலா குடலா?!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

அண்ணை கடலா குடலா?!

குடல்....குடல்.....🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன இன்னுமொரு 1958 டையும் 1983 டையும் தொடங்கி விடுங்கோவன. 

மகிந்தவை சீனாக்காரன் சவேந்திர சில்வாவை வைத்து சீனன் குடாவில் சிறப்பிடித்து வைத்து இராணுவ ஆட்சியைக்கொண்டுவர எத்தனிக்கையில் மேற்குலகமும் இந்தியாவும் ரணிலை இறக்கி ராஜபக்சக்களைக் காப்பாற்றி அமெரிக்க தூதரகத்துக்கு சவேந்திர சில்வாவை வரவைத்து மிரட்டி அடக்கிவாசிக்கச் சொல்லி, பின்பு கொத்தா உட்பட்ட அனைவரது பாதுகாப்பையும் இராணுவத்திலிருந்து விலக்கி போலீஸ்காரர்களுக்கு மாத்தி ஒரு வழியாக இராணுவ ஆட்சி வரவிருந்ததை நிப்பாட்டி அதே நேரம் இந்திய தூதர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்து குடாநாட்டில் உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்வதற்காக ஒழுங்குநடவடிக்கப் பயமுறுத்தல்களை எவரும் அறியாதமாதிரி காதோடு காதாகச் செய்து.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழியில்யைhம் இதுக்குள்ள புத்தவிகாரை கட்ட வேண்டுமாம்.இன்னும் 4 மாதத்தில் எல்லாம் முடிஞ்சிரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கோணகல கிராமத்தில் 54 சிங்களவர்கள் கொல்லப் பட்டபோது, கொழும்பில் இந்து மத வேல் திருவிழா இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் மக்கள் புரிந்துணர்வுடன் தான் நடந்து கொள்கிறார்கள்.

அப்புறம் எப்படி மக்கள் பொறுமை இழப்பர்.
எல்லாவற்றையும் தூண்டிவிடுவது அரசியல்வாதிகள் தான்.

10 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனின் கட்சி எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதைக் கண்டுபிடிக்க பேராசிரியருக்கு இவ்வளவு காலம் எடுத்ததோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்

மாத்தையா, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! சிங்கள மக்கள் பொறுமையிழந்து இன்று வீதிக்கு இறங்கி வந்து விட்டார்கள், தங்கள் பிழைகளை உணர்ந்து எம்மோடு கைகோர்க்க தொடங்கி விட்டார்கள், இனி உங்கள் பாடு திண்டாட்டந்தான், அரசியலை கழுவுவதோடு புத்தமும் சேர்ந்து கழுவப்படலாம், அதற்கு நீங்களே அடிபோடுகிறீர்கள். உங்கள் சொத்துக்களுக்கு சேதம் இல்லாததால் கொஞ்சம் ஓவராய் பேசுகிறீர்கள், அடக்கி வாசியுங்கள் இல்லையேல் வருந்த்துவீர்கள்!

11 hours ago, தமிழ் சிறி said:

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருளாராய்ச்சி என்று காணி பிடித்தவரை சிறையில் போடணும். மக்களை ஏமாற்றி, மோசடி செய்துள்ளார். மக்களுக்கு அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியில்லை, வந்தவரிடமெல்லாம் கையேந்தி நிற்கிறார்கள். இவருக்கு விகாரை தேவைப்படுகுது. இவரின் விசர்க்கதைக்கு இன்னும் மக்கள் செவிசாய்ப்பார்கள் என கனவு காணுமளவுக்கு பதவியாசை. சரி சிங்கள மக்கள் தமிழரோடு சண்டையிட போனால் அவர்களுக்கு தேவையான எரிபொருளுக்கு, அரிசிக்கு யார் வரிசையில் நிற்பதாம்? முதலில் அதை போய் கவனியுங்கள். மக்களை அவலங்களில் தள்ளிவிட்ட புத்தருக்கு  மட்டும் எல்லா இடத்திலும் விகாரை கேட்குது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகர போன்றவர்கள் தமிழர்களின் அறிவு கண்ணை திறக்கின்றார்கள் நல்லதுதானே ?

எத்தனை தரம் சொன்னோம் சிங்களம் தமிழ்ர்கள்  மீது   துவேசம் பிடித்த கூட்டம் என்று அவர்கள் விபச்சாரம் பண்ணியாவது வந்த டொலரில்  தமிழரை அழிக்க எண்ணுபவர்கள் அதில் மாற்றமில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் விகாரை இருந்தமைக்கு சான்றுகள் உள்ளன: பௌத்தர்களின் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம் – சரத் எச்சரிக்கை

குருந்தூர் மலையில்... விகாரை இருந்தமைக்கு சான்றுகள் உள்ளன: பௌத்தர்களின் இரக்கத்தை, அலட்சியமாக கருத வேண்டாம் – சரத் எச்சரிக்கை

குருந்தூர் மலையில் குருந்தாஸோக என்ற விகாரை இருந்தமைக்கு மகாவம்சத்தில் சான்றுகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் கடந்த 12 ஆம் திகதி புத்தர் சிலை ஒன்றினை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் பௌத்த தேரர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய சரத் வீரசேகர, “வடக்கில் சில பிரிவினைவாத அரசியல் தலைவர்கள் பௌத்த சாசனத்திற்கு உரிய கௌரவத்தை வழங்குவதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடக்கில் முக்கியமான அமைச்சர் ஒருவர் நயினாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு முழுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்கு முன்னர், முல்லைத்தீவில் குருந்தாஸோக என்ற வரலாற்று விகாரையில் புத்தர் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் குண்டர்கள் சிலருடன் வந்து அதனை முழுமையாக சீர்குலைத்தனர்.

உண்மையில் பௌத்த நாட்டில், பௌத்த சாசனத்தைப் போசிப்பதற்கு இடமளிக்காவிட்டால், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை சீர்குலைப்பதற்கு தலைமைத்துவம் வழங்குவார்களாயின் அது உங்களது கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

இந்த குருந்தாஸோக என்ற விகாரை 2000 ஆண்டுகள் பழமையானதாகும். நூறாம் கிறிஸ்து வருடத்தில் கல்லாட்ட என்ற அரசர்தான் இதனை நிறுவி இருக்கின்றார்.

அதன் பின்னர், 571ஆம் கிறிஸ்து வருடத்தில் முதலாம் ஹக்பு மன்னர் இதனை புனரமைத்தார். அதன் பின் நாம் அனைவரும் அறிந்த மகா விஜயபாகு மன்னர் 1055 இல் அதனை மீண்டும் புனரமைத்தார் என்று மகாவம்சத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

2021ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்தினால் ஜனவரி மாதம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, பல பௌத்த தொல்பொருட்கள் அங்கு தோன்றின.

இவ்வாறான நிலையில் தொல்பொருள் திணைக்களம் அவசியமான அனைத்து தரப்பினருக்கும் அறியப்படுத்தி, 100 க்கும் அதிகமான தேரர்களை அழைத்து, புத்தர் சிலையை நிறுவ முற்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் குண்டர்களுடன் சென்று அந்தத் தேரர்களுக்கு ஒரு மலரையேனும் வைக்க இடமளிக்கவில்லை. இதற்கு அரசாங்கத்தின் பணம் பயன்படுத்தப்படவில்லை.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாசனத்திற்கும், தேரர்களுக்கும் ஏற்படுத்திய அபகீர்த்தியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சிங்கள பௌத்தர்களின் பொறுமை மற்றும் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம்.

அந்த பொறுமைக்கும் எல்லை உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1288053

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவன் சொத்து குலநாசம் என்றொரு சொலவடை சைவர்களிடம் உண்டு என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

சிங்கள பௌத்தர்களின் பொறுமை மற்றும் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம்.

அதன் முழுமையையும் கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழர் நாம் கண்டு அனுபவித்துளோம். அதுபற்றி நீங்கள் எமக்கு சொல்லிதரத்தேவையில்லை. இப்போ சர்வதேசமும், தென்னிலங்கையும் காணும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதன் பசி அடங்காமல் வந்தவழிக்கே திரும்பியும் விட்டதை தாங்கள் இன்னும் அறியாமலோ, புரியாமலோ, அல்லது மறைத்தோ கொக்கரிக்கிறீர்கள். அது இப்போ ஏவி விட்டவர்களை விழுங்கப்போகிறது.

20 hours ago, தமிழ் சிறி said:

571ஆம் கிறிஸ்து வருடத்தில் முதலாம் ஹக்பு மன்னர் இதனை புனரமைத்தார். அதன் பின் நாம் அனைவரும் அறிந்த மகா விஜயபாகு மன்னர் 1055 இல் அதனை மீண்டும் புனரமைத்தார் என்று மகாவம்சத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

மகாவம்சம் போலிகளையும், புனைகதைகளையும், அருவெறுக்கத்தக்க கதைகளையும் கூறியுள்ளது. அதை இந்த காலத்திலும் பெருமையாக கொள்வதற்கு அதைவிட பெருமை ஒன்றும் இவரிடம் இல்லை. தமிழரே முதலில் புத்தத்தை பின்பற்றி, நாளடைவில் அதிலிருந்து விலகியவர்கள். மகாவம்சம் எப்போ எழுதப்பட்டது? புத்தம் எப்போ இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டது? இவர் கூறும் மன்னர்கள் எங்கே அரசாண்டார்கள்? என்பதை வரலாற்றாசிரியர்களே நிரூபிக்க வேண்டும். இவர் இராணுவ பின்புலத்தில் இருந்து வந்தபடியால் நாட்டில் எப்போதும் போர் நிகழ வேண்டும் என ஆசைப்படுகிறார். இவரை உக்ரேன் ரஷ்ய போர்முனைக்கு அனுப்பினால் பொருத்தமாக இருக்கும் மக்கள் வயிற்றுப்பசியால் தவிக்கிறார்கள் வலிந்து ஒரு போரை மக்கள் மேல் திணிக்க ஆசைப்படுகிறார்.  சிங்கள மக்கள் விகாரை கேட்டு போராடவில்லை,  நாளாந்தம் வாழ வழியில்லாமல் வீதியில் இறங்கி போராடுகிறார்கள் இவர் திமிர் எடுக்கிறார். அவர்களுக்கு அவசியமானது வயிற்றுக்கு உணவேயொழிய விகாரையல்ல. 

20 hours ago, தமிழ் சிறி said:

பௌத்த நாட்டில், பௌத்த சாசனத்தைப் போசிப்பதற்கு இடமளிக்காவிட்டால்,

பவுத்தர்கள் இல்லாத இடத்தில பவுத்தத்தை திணிக்கும் இவர்கள் மற்றைய மதத்தினரை கண்டிப்பதற்கு தகுதியற்றவர்கள். விரும்புபவர்களுக்கு போதியுங்கள், விரும்பாதவர்களுக்கு, ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு திணிக்காதீர்கள், அதனை போதனை என்று அர்த்தப்படுத்தாதீர்கள்.          

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and text that says 'mugam News'
 
சரத் வீரசேகரவின் இனவாத திமிர் பேச்சிற்கு... ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த சித்தார்த்தன்.
 
பௌத்த சிங்கள மக்களே வாழந்திராத ஒரு பிரதேசத்தில், பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
 
அநுராதபுரத்தில் திராவிட கலை மரபில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட சைவ ஆலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ் ஆலயங்கள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாக கருதப்பட்டனவேயொழிய அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அங்கு சைவ கோயில்கள் கட்டப்படவில்லை.
 
பொலனறுவையில் 12 சைவ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை புதுப்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தலைவர் த.சித்தார்த்தன்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர தமிழ் சமூகத்தை எச்சரிக்கை செய்து, பௌத்த சிங்கள மக்களிற்கும் எல்லையுண்டு, அந்த எல்லையை அவர்கள் தாண்டிவிடுவார்கள் என தெரிவித்திருந்தார்.
 
குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலையை நிறுவ முயற்சித்த போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் வினோநோகராதலிங்கம், செ.கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் க.சிவனேசன் தலைமையில் ஒரு போராட்டம் நடத்தி, அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. அதைப்பற்றித்தான் வீரசேகர அங்கு தெரிவித்துள்ளார்.
உண்மை நிலைமையை கூற வேண்டுமென்பதாலேயே, இன்றைய விவாதப் பொருளுக்கு வெளியில் சென்று அதை குறிப்பிடுகிறேன்.
 
சரத் வீரசேகரவின் பேச்சு ஆக்ரோசமாக இருந்தது. இப்படியான பேச்சுக்கள்தான் இன முறுகலை ஏற்படுத்தி, போரை கொண்டு வந்து, இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமான போர் ஏற்பட்டது என்பது அவருக்கு தெரிந்திருக்கும்.
 
இந்த நிலைமையில் கூட வீரசேகரவின் உரை, இன, மத மோதலுக்கு வழிவகுக்கும்.
பௌத்த சிங்கள மக்களே வாழந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது.
 
அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. தொல்லியல் சட்டங்களையோ, நடைமுறைகளையோ பின்பற்றாமல் இவ்வாறு வழிபாட்டுத்தலங்ளை உருவாக்குவது, அங்கு திட்டமிட்டு பௌத்த, சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கான கால்கோள். இது இனங்களிடையே முரண்பாடுகளை வளர்த்து நாட்டை அழிவுகளுக்கு இட்டுச் செல்லுமேயொழிய, நாட்டை முன்னேற்றவோ ஐக்கியத்தை கட்டியெழுப்பவோ மாட்டாது.
 
அநுராதபுரத்தில் திராவிட கலை மரபில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட சைவ ஆலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ் ஆலயங்கள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாக கருதப்பட்டனவேயொழிய அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அங்கு சைவ கோயில்கள் கட்டப்படவில்லை. பொலனறுவையில் 12 சைவ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை புதுப்பிக்கப்படவில்லை. அவை தென்னிந்திய “மகாஜான” பௌத்த கலை மரபுக்குரியவை. இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களான பேராசிரியர் பரணவிதாரண, நந்தா விஐயசேகர,சேனக பண்டார போன்றவர்கள் வடக்கு, கிழக்கு இலங்கையில் காணப்படும் பௌத்த கட்டட கலை மரபுகள் தென்னிந்தியாவுக்குரியவை என சந்தேகத்திக்கிடமின்றி குறிப்பிட்டுள்ளனர்.
 
பாலி இலக்கியத்தில் கூட குருந்துமலை “குருந்தலூர்” என குறிப்பிடப்பட்டு அது தமிழ் மக்கள் சார்ந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். 1815ல் அரச அதிகாரியான லூயிஸ் அவர்கள் தனது அறிக்கையொன்றில் குருந்தலூரில் இந்து ஆலயங்களின் இடிபாடுகளை நந்தியுடன் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
எது எவ்வாறாயினும் மத அடையாளமானது இனத்தின் அடையாளமாகாது. பௌத்தமதத்தின் தோற்றுவாய் இந்து சமயம் தான். இலங்கையில் பௌத்தம் ஆரம்பத்தில் தமிழர்களாலேயே பின்பற்றப்பட்டது என்பதற்கான சான்றாதாரங்கள் நிறையவுண்டு. பின்னர், சிங்கள பௌத்த நிலைப்பாடு காரணமாகவே பின்னர் அதில் மாற்றம் வந்தது. உலகில் பல நாடுகளில் பௌத்தம் பின்பற்றப்படுகிறது. அங்கெல்லாம் மொழியுடன் சேர்த்து பேசப்படுவதில்லை.
 
நாம் எந்த மததத்திற்கும்எதிரானவர்கள் அல்ல. எனது பெயரே அதற்கு சான்று.
தமிழ் மன்னர்களால் பௌத்த கோவில்களுக்கு வழங்கப்பட்ட பொருளுதவிகள் தொடர்பாக பல கல்வெட்டு குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
அதேபோல சிங்கள மன்னர்கள் சைவ கோயில்கள் கட்டியுள்ளனர். அவர்கள் மதத்தையும், மொழியையும் ஒன்றாக்கவில்லை.
 
இப்படியான காரணங்களினாலேயே கடந்த கால யுத்தம் ஏற்பட்டது. யுத்தத்தில் நாமும் சம்பந்தப்பட்டோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே வாழ வேண்டுமென இன்று நாம் நம்புகிறோம். அப்படியான நிலைமையை உருவாக்கினால்தான், இன்றைய விவாதப் பொருளான சுகாதார சேவைகள் நெருக்கடி பற்றிய பிரச்சனைகளை பேசு வேண்டிய தேவையிருக்காது.
இனியாவது அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்ட வாழ வேண்டும். இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நாட்டை ஆளும் தரப்புக்கள், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அதை அங்கீகரிக்க வேண்டும்.
 
  • Like 1
Link to comment
Share on other sites

நன்றி சித்தார்த்தன் அவர்களே.  இப்போதும் பொய்யான மகாவம்சத்தை ஆதாரமாக காட்டும் சரத் போன்ற இனவாதிகளை பேச்சால் தான் வெல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

நன்றி சித்தார்த்தன் அவர்களே.  இப்போதும் பொய்யான மகாவம்சத்தை ஆதாரமாக காட்டும் சரத் போன்ற இனவாதிகளை பேச்சால் தான் வெல்ல வேண்டும்.

வீடியோ இணைப்புக்கு நன்றி நுணா ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு சொல்வதால் ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை, காரணம் இதொன்றும் அவர்களுக்கு தெரியாததுமில்லை, சர்வதேச உதவும் நாடுகளுக்கும், வரலாறு தெரியாத தென்னிலங்கை மக்களுக்கும் கொண்டு செல்லுங்கள், மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகர நாட்டு மக்களைய தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் – வீ.கே.சிவஞானம்

சரத் வீரசேகர நாட்டு மக்களைய தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் – வீ.கே.சிவஞானம்.

சரத் வீரசேகரவின் கூற்று  நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடாத்தும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”கடந்த 21.06.2022 ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, “அண்மையில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.” என்று கூறியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

யாழ்ப்பாண நகரத்தின் சிரேஷ்ட குடியிருப்பாளர் என்ற வகையில் மட்டுமன்றி இந்த நகரத்தின் நிர்வாகத்திலும் விவகாரங்களிலும் கடந்த 60 வருடங்களாக

தொடர்புடையவன் என்ற வகையில் இந்தக் கூற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படி எந்த நிகழ்வும் நாகவிகாரையில் நடந்ததாக எவருக்கும் தெரியாது.

இவரின் கூற்று நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடாத்தும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும்.

இவரும் இவரைப் போன்றவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பல தசாப்தங்களாக நாக விகாரையுடனும் அதன் விகாராதியுடனும் மிகவும் மேம்பட்ட புரிந்துணர்வையும் அன்னியோன்மத்தையும் யாழ்ப்பாண மக்கள் பேணி வந்துள்ளனர்.

நாகவிகாரையின் உள்விவகாரங்களில் எவருமே தலையிட்டதும் கிடையாது. அப்படி இருக்கையில் நாகவிகாரையில் புத்த பெருமானின் சிலையை நிறுவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். அப்படியானவர் யாரும் இங்கு இல்லை.

மேலும் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இந்தியாவின் தமிழ்நாட்டிலும் இலங்கையின் வடபகுதியிலும் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த வரலாறு பற்றி பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். இங்குள்ள பௌத்த எச்சங்கள் யாவும் தமிழ் பௌத்த எச்சங்களே தவிர சிங்கள பௌத்த எச்சங்கள் அல்ல.

தென்னிலங்கையின் பௌத்த மத உள்வருகையில் யாழ்ப்பாண தமிழ் மக்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவர்களின் ஆதரவு இல்லாமல் சங்கமித்தவும் அறஹத் மஹிந்த மாதகல் ஊடாக அனுநாதபுரம் சென்று வெள்ளரசு மரத்தை நாட்டி புத்த சமயத்தை பரப்பியிருக்க முடி யாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

கால ஓட்டத்தில் சிதைவுற்ற பல சைவ ஆலயங்களின் எச்சங்களை பௌத்த மத எச்சங்கள் என்று புனைந்து பௌத்த விகாரைகளை அமைக்கவும், அந்தந்தப் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்த சைவத் தமிழ் மக்களின் நிலங்களை மதத்தின் பெயரால் அபகரிப்பதும் அடாத்தான செயல்கள். இவற்றை தமிழ் மக்கள் எதிர்த்து குரல் எழுப்பி போராடியே தீருவர் – இவற்றை அச்சுறுத்தல்கள் மூலம் அடக்கி விடலாம் என்பது பகற் கனவு.

தமிழர்கள் கடந்த எழுபது வருட காலத்தில் கே.எம்.பி.ராஜரட்ண, தேமிஸ், என்.கியூ.டயஸ், ஜெயசூரிய, சிறில் மத்திய போன்ற பல இனவாதிகளைக் கண்டவர்கள்.  இப்பொழுதும் சரத் வீரசேகர, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற சிங்கள பௌத்த பேரினவாதிகளையும் அதே நிலைப்பாட்டியே உள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவையும் காண்பவர்கள்.

இவர்களுக்கு எவ்வாறு அவர்களது சிங்கள பௌத்த அடையாளம் உணர்வுபூர்வ மானதோ அதேபோல் தமிழ் இந்துக்களுக்கு அவர்களது அடையாளம் உணர்வுபூர்வ மானது. இனத்துவ மற்றும் சமய அடையாளங்களைப் பேணிக் காக்கவே நாம் போராடுகின்றோம் என்பதை சிங்கள பேரினவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். எமது போராட்டம் சிங்கள மக்களுக்கோ புத்த மதத்திற்கோ எதிரானது அல்ல – என்றுள்ளது

https://athavannews.com/2022/1288520

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100011887622942/videos/pcb.1260715901001319/716987792866361 👈

சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என
பாராளுமன்றத்தில் இனவாதம் பேசியவரை...
சிங்கள மக்களே தெருவில் துரத்தும் காட்சி... 😀
 
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு
நடுவிரல் காட்டி, தகாத வார்த்தைகளால் பேசி... விரட்டியடிக்கும் சிங்கள மக்கள்... 🚶
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/100011887622942/videos/pcb.1260715901001319/716987792866361 👈

சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என
பாராளுமன்றத்தில் இனவாதம் பேசியவரை...
சிங்கள மக்களே தெருவில் துரத்தும் காட்சி... 😀
 
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு
நடுவிரல் காட்டி, தகாத வார்த்தைகளால் பேசி... விரட்டியடிக்கும் சிங்கள மக்கள்... 🚶
 

சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு எண்டு சரியாய் தானே சொல்லி இருக்கிறார். 🤔

பேதி போயிருக்கும்....

😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு எண்டு சரியாய் தானே சொல்லி இருக்கிறார். 🤔

பேதி போயிருக்கும்.... 😁

காலி முகத்திடலில்... முள்ளிவாய்க்கால் பேரவல படங்களை வைத்தமைக்கு 
பலத்த கண்டனத்தை தெரிவித்தவரும் இவர்தான். 

அடுத்த நாட்களில்... பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப் பட்ட போது... 
இவர் எப்படியோ தப்பி விட்டார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வெத்து வேட்டு. சிங்கள மக்களின் பொறுமையை சீண்டி விட்டு, பதில் கொடுக்க முடியாமல் அமைதியாய் இருக்கு. இதுக்கு மேலும் வாயைத்திறந்தால் உண்டு, இல்லை. அவ்வளவுதான்! தமிழரருக்கெதிரா வைச்ச நெருப்பு அவர்மேல் பத்திடுச்சு. அரோகரா!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.