Jump to content

நீர்வீழ்ச்சி முதல் டெட் சோன்கள் வரை: ஆழ்கடலின் ரகசியங்கள் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வீழ்ச்சி முதல் டெட் சோன்கள் வரை: ஆழ்கடலின் ரகசியங்கள் என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஆழ்கடல்

பட மூலாதாரம்,DAMIR ZURUB

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம் (ஐநாவின் புகைப்படப் போட்டியில் ஆழ்கடல் காட்சிகள் பிரிவில் 2ஆம் பரிசு வென்ற படம்)

நம் பூமியின் 70 சதவீத பரப்பை கடல் சூழ்ந்துள்ளது. ஆனால், கடலை பற்றி நாம் அறிந்தவை மிக அரிதே. ஆனால், ஆழ்கடலில் முழுவதும் ஆராயப்படாத ஒரு பிரபஞ்சமே உள்ளது, மனித கண்களுக்கு புலப்படாதவையாக அவை உள்ளன. கடல் குறித்து நாம் ஏன் கொஞ்சம் மட்டுமே அறிந்திருக்கிறோம்?....

ஆழ்கடலில் உள்ள அபரிமிதமான அழுத்தம், டைவர்களுக்கும் ஆழ்கடல் உபகரணங்களுக்கும் பெரும் சவாலாக விளங்குகிறது. விண்வெளிக்கு செயற்கைக்கோளளை அனுப்புவது இதைவிட எளிதானதாக உள்ளது. ஆனால், நீர்மூழ்கி ரோபோட்டுகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் மூலம், ஆழ்கடலில் மறைந்திருக்கும் இந்த சாம்ராஜ்ஜியத்தின் ரகசியங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

ஆழ்கடலில் உள்ள ரகசியங்கள் என்ன? ஆம், அதிக தண்ணீர் இருக்கிறது. கொஞ்சம் துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால், 1,41,91,20,000 கியூபிக் கிலோமீட்டர் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. 300 கோடி மக்களுக்கு புரதசக்தியின் முக்கிய ஆதாரமாக விளங்கும் மீன்கள் அந்த தண்ணீரில் இருக்கின்றன. ஆனால், ஆழ்கடலில் மீன்களை தவிர இன்னும் அதிகமானவை இருக்கின்றன. இன்னொரு உலகமான ஆழ்கடலில் அசாதாரணமான பல உயிரினங்கள் வாழ்கின்றன, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆழ்கடலில் இருந்து புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஜெலட்டின் தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள், அவற்றை நீங்கள் வலைகள் மூலம் பிடிக்க முயன்றால் சிதைந்துவிடும்.

 

ஜெல்லி மீன்கள்

பட மூலாதாரம்,TIM GRAY

2020ஆம் ஆண்டில் பெரிய சிஃபோனோஃபோர் அபோலேமியா என்ற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட மில்லியன்கணக்கிலான குளோன்களால் ஆனது இந்த உயிரினம், இதன் மெல்லிய, முறுக்கப்பட்ட உடல், நீண்ட லேசான கயிற்றை நினைவுபடுத்துவதாக உள்ளது.

மேலும், கடல்தளமானது, நீங்கள் கற்பனை செய்யக்கூடிய தட்டையான மற்றும் தனிச்சிறப்பில்லாத கடற்பரப்பில் இருந்து வெகுதொலைவில் உள்ளது. ஒட்டுமொத்தக் கடலும் வற்றிவிட்டால், அதன் நிலப்பரப்பு இந்த பூமியில் உள்ள எதுவொன்றுக்கும் இணையாக கண்கவரக்கூடிய ஒன்றாக இருக்கலாம், சில உயரமான சிகரங்கள், ஆழமான பள்ளத்தாக்குகள், நீளமான நதிகளை ஒத்த பெருமையை கொண்டிருக்கலாம்.

ஆழ்கடலில் நீர்வீழ்ச்சிகள்

ஆழ்கடலில் நீர்வீழ்ச்சிகளும் உள்ளன, டென்மார்க் ஸ்ட்ரெய்ட் கேட்டராக்ட் என்பது அட்லாண்டிக் கடலில் கண்டெடுக்கப்பட்ட நீர்வீழ்ச்சியாகும். இங்கு, கிரீன்லாந்து கடலின் குளிர்ந்த நீரும் இர்மிங்கர் கடலின் வெப்பமான நீரும் சங்கமிக்கின்றன. இதில், குளிர்ந்த நீர் கீழே தள்ளப்படுவதால், அது மூன்றரை ஆயிரம் மீட்டர் நீளம்கொண்ட மாபெரும் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. கடலின் மேற்பரப்பில் உள்ள யாராலும் இதனை கண்டறிய முடியாது. உலகின் மிக ஆழமான பகுதியான, 11,000 மீட்டர் நீள நீர்வீழ்ச்சியான மரியானா ஆழியுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் இல்லை.

ஆழ்கடலில் புகுந்த பிளாஸ்டிக்

2020ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் கண்டறிந்த ஒன்று, உலகுக்கான அபாய ஒலியாக உள்ளது. இந்த உலகில் யாராலும் செல்ல முடியாத கடல் பிளவு ஒன்றில், சுமார் 7,000 மீட்டர் ஆழத்தில் அவர்கள் புதிய ஒட்டுமீன் இனங்களை கண்டறிந்தனர். அவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக் இருந்தது. அந்த பிளாஸ்டிக்கை யூரிதீன்ஸ் பிளாஸ்டிகஸ் என அழைக்கின்றனர். கடல் குறித்து நாம் அறிதாகவே ஆராயத் தொடங்கியிருக்கும் நிலையில், நம் விளைவுகளால் அதன்மீது ஏற்படும் தாக்கங்களை ஏற்கெனவே உணரத்தொடங்கிவிட்டோம். 2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களைவிட அதிக பிளாஸ்டிக்குகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

ஆழ்கடல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலநிலை மாற்றம்

ஆனால், பிளாஸ்டிக் மட்டுமே பிரச்னை அல்ல. காலநிலை மாற்றம் கடலின் அடிப்படை வேதித்தன்மையை மாற்றுகிறது, கடலை வெப்பமாக்குகிறது, கடல்நீரை அமிலமயமாக்குகிறது. கடல் வாழ்வியலுக்கு துணைபுரியும் ஆக்சிஜன் போதாமையால் 'டெட் சோன்களும்' கடலில் உள்ளன. இவை அனைத்தும் மாசுபாட்டால் வழக்கமாகிவிட்டன.

கடலை பொறுத்தவரையில் மனித செயல்பாடுகளின் விளைவுகள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதே வேதனையான உண்மை. குறிப்பாக நீங்கள் கடற்கரையிலிருந்து அப்பால் வாழ்ந்தால், கடலில் இருந்து விலகியிருப்பது போன்ற உணர்வு எளிதானது. ஏன் கடலை குப்பைகளை கொட்டும் இடமாக நடத்துகிறோம் என்பதை இது விளக்குகிறது. ஆனால், கடலை நாம் எவ்வாளவு அதிகமாக ஆராய்கிறோமோ, அந்தளவுக்கு அதிகமாக கடல் நமக்கு வழங்கும்.

கடற்பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற ஆழ்கடல் வாழ்வின் மரபணுக் குளம், ஆண்டிபயாடிக் எதிர்ப்பின் அவசர சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோலைக் கொண்டிருக்கக்கூடும். மிக முக்கியமாக, கிரகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் கடல் முக்கியமானது: நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் பாதி, பைட்டோபிளாங்க்டன் மற்றும் கடற்பாசி போன்ற ஒளிச்சேர்க்கை கடல் தாவரங்களால் கிடைக்கிறது.

கடல் நமது காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது, கிரகத்தைச் சுற்றி சூரிய வெப்பத்தை விநியோகிப்பதன் மூலம் வெப்பநிலையை சமன் செய்கிறது. நாம் அதை உணராமல் இருக்கலாம், ஆனால் நமது நேர்த்தியான சமநிலையான புவியமைப்பில் கடல் வகிக்கும் பங்கினால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிறோம். ஆயினும்கூட, இந்த முக்கிய வாழ்க்கை ஆதாரத்தைப் பாதுகாக்க நாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள், கடலில் ஒரு துளியே.

கண்ணுக்குத் தெரியாத பல மூச்சடைக்கக்கூடிய பள்ளத்தாக்குகள், கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் என, இன்னும் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் கடலில் உள்ளன. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் முன்பை விட கடலைப் பற்றி அதிகம் வெளிக்கொண்டு வருகிறது. ஒருவேளை கடலின் ரகசியங்களை அதிகம் அறிந்தால், அதனை சிறப்பாகக் கவனித்துக் கொள்ளலாம்.

(டுர்ஹாம் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மேத்யூ கேர்டிக்னி மற்றும் பிளைமௌத் பல்கலைக்கழக பேராசிரியர் கெர்ரி ஹோவெல் ஆகியோரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'பிபிசி ஐடியாஸ்' பகுதியிலிருந்து எழுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை.)

https://www.bbc.com/tamil/science-61873904

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.