Jump to content

வியாழேந்திரனின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது!

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியிலுள்ள காணி ஒன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று (21) இவர்களை கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

வந்தாறு மூலை பிரதேசத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் காணியை பிரித்து விற்பனை செய்யப்பட்டு அதில் மக்கள் குடியேறியுள்ளனர். இந்த காணியை வாங்கிய மக்கள் பிரதேச சபையில் வீடுகட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு சென்றால் அங்கு கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் சகோதரரும் அவர்களிடம் இந்த காணி போலி உறுதி என அனுமதி வழங்காது முடியாது என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காணி விற்பனை செய்த காத்தான்குடியை சேர்ந்தவரிடம் காணியை வாங்கிய மக்கள் சென்று இந்த காணி உறுதி போலியானது என அனுமதிவழங்க முடியாது என குறித்த நபர்களால் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து காணியை விற்பனை செய்தவர் அமைச்சரின் சகோதரரிடம் குறித்த காணியை சட்டரீதியாக நாங்கள் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கி எமது பதிவு செய்யப்பட்ட கம்பனி ஊடாக இதனை கூறு போட்டு குடியிருப்புக்காக விற்பனை செய்துவருவதாக தெரிவித்த நிலையில் அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து பிரதேச சபை அனுமதிவழங்க 20 இலச்சம் ரூபா இலஞ்சமாக தருமாறு அவரிடம் கோரியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த காணியை விற்பனை செய்த காத்தான்குடியைச் சேர்ந் நபர் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு அறிவித்ததன் பிரகாரம் அவர்களின் ஆலோசனையின்படி சம்பவதினமான நேற்று மாலை 6.30 மணிக்கு இலஞ்சம் கோரியவர்களிடம் 15 இலச்சம் ரூபா பணத்தை தருவதாக தெரிவித்து மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வருமாறு தெரிவித்ததையடுத்து அவர்கள் குறித்த ஹொட்டலில் சென்று 15 இலச்சம் ரூபா பணத்தை அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து காணி உரிமையாளரிடம் பெற்று அதனை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவழைத்து இருவரையும் கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்ற பணத்தை மீட்டு மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

http://www.samakalam.com/வியாழேந்திரனின்-சகோதரர்/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... வீடியோ எடுத்து, பிடித்திருக்கிறார்கள்.

 

வியாழேந்திரனின் சகோதரருக்கு... அனுபவம் காணாது.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

அட... வீடியோ எடுத்து, பிடித்திருக்கிறார்கள்.

 

வியாழேந்திரனின் சகோதரருக்கு... அனுபவம் காணாது.  😂

இப்ப அந்த பணம் கடனா வாங்கினதாம் இவங்கள திருத்த முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப அந்த பணம் கடனா வாங்கினதாம் இவங்கள திருத்த முடியாது

அட பாவிகளா!
இவங்களுக்கு உடம்பெல்லாம் கிரிமினல் மூளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கிழக்குமாகாண அபிவிருத்தி அபிவிருத்தி எண்டானுவள்....அது  இதுதானோ?????

வியாளேந்திரன் செய்த கனடாக்காசு சுத்துமாத்தும் இப்ப ஞாபகத்துக்கு வருது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப அந்த பணம் கடனா வாங்கினதாம் இவங்கள திருத்த முடியாது

 ஆமா! கடன் வாங்குபவனெல்லாம் இப்படிதான் ஹோட்டலில் றூம் போட்டு வாங்கவானோ மட்டக்களப்பில்?அதுசரி பதினைந்து லட்ஷம் எந்த பிணையுமில்லாமல் கொடுத்தவராமோ? கடன் கொடுக்கிறவன் இலஞ்ச தடுப்பு பிரிவுக்கு அறிவித்துவிட்டுத்தான் கொடுப்பானோ? வியாழேந்திரன் மஹிந்தவிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறி, மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் கட்சியை விட்டு வெளியேறினேன் என்று கதை விட்டவர் கண்டியளோ! இது பரம்பரை குணமாயிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 ஆமா! கடன் வாங்குபவனெல்லாம் இப்படிதான் ஹோட்டலில் றூம் போட்டு வாங்கவானோ மட்டக்களப்பில்?அதுசரி பதினைந்து லட்ஷம் எந்த பிணையுமில்லாமல் கொடுத்தவராமோ? கடன் கொடுக்கிறவன் இலஞ்ச தடுப்பு பிரிவுக்கு அறிவித்துவிட்டுத்தான் கொடுப்பானோ? வியாழேந்திரன் மஹிந்தவிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறி, மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் கட்சியை விட்டு வெளியேறினேன் என்று கதை விட்டவர் கண்டியளோ! இது பரம்பரை குணமாயிருக்கும்!

பரம்பரை குணம் என்பதை விட தமிழருக்கு இருக்கும் குணம் என்று சொல்லுங்கோ😛

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.