Jump to content

SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட தொடரை, இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி அப்போது, வெற்றியை தன்வசப்படுத்தியது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடர், தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்றது.

இதன்படி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இதில் முதல் போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன், ஏனைய மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி தொடர் வெற்றியை பதிவு செய்து, தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை தன்வசப்படுத்தியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி

கொழும்பு - ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பகலிரவு போட்டியாக நேற்று (21) நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ரன்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 110 ரன்களையும், தனஞ்சய டி சில்வா 60 ரன்களையும் எடுத்திருந்தனர்.

பதிலுக்கு 259 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 254 ரன்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.

பிரகாசிக்காத ஆஸ்திரேலிய வீரர்கள்

 

வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வார்னர் 99 ரன்களை பெற்றார்.

ஆஸ்திரேலிய அணியின் ஏனைய வீரர்கள் நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் சரியான முறையில் பிரகாசிக்கவில்லை.

இதன்படி, இலங்கை அணி ஐந்து போட்டிகளை கொண்ட தொடரில், மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தியது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 24ம் தேதி கொழும்பு - ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

30 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் தொடரை கைப்பற்றியமைக்கு இலங்கை அணிக்கு அந்நாட்டின் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61890701

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இலங்கை நிலமையை பார்க்க விசர் ஆக்கி இருக்கும். இதனால் சோபிக்கவில்லை போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 தசாப்தங்களின் பின் சாதித்த இலங்கை, ஆஸி.யுடனான தொடரை வெற்றிவாகையுடன் முடிக்க முயற்சி

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று தசாப்தங்களின் பின்னர் தனது சொந்த மண்ணில் இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியை ஈட்டிய இலங்கை, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 5 ஆவதும் கடைசியுமான போட்டியை இன்று எதிர்கொள்ளவுள்ளது.

Untitled-1.jpg

இந்தத் தொடர் வெற்றியின் போது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் முதல் தடவையாக 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இலங்கை மற்றொரு வரலாற்றை பதிவு செய்தது.

இந்தத் தொடரை இலங்கை ஏற்கனவே 3 -1 என்ற ஆடக்கணக்கில்  கைப்பற்றியுள்ளதால் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் பெரிய அளவில் முக்கியமானதாக அமையப் போவதில்லை. என்றாலும் இரண்டு அணிகளும் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தத் தொடரில் வெற்றிபெறாத போதிலும் அவுஸ்திரேலிய அணியினர் இலங்கை மக்களின் மனங்களை கொள்ளை கொண்டதை  மறக்க முடியாது.

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியில் பல்வேறு நாடுகள் இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்த நிலையில் அவுஸ்திரேலிய அணியினர் இங்கு வருகை தந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தமை வரவெற்கத்தக்க விடயமாகும். அத்தடன் ஐக்கிய நாடுகள் உணவுத் திட்டம் உட்பட வேறு வகைளில் இலங்கைக்கு உதவுவதாக அவுஸ்திரேலிய வீரர்கள் உறுதி வழங்கியதை இலங்கை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இந் நிலையில், அவுஸ்திரேலியர்களின் இந்த மனிதாபிமான நல்லெண்ணத்தை கௌரவிக்கும் வகையில் இரசிகர்கள் கூடுமானமட்டும் மஞ்சள் நிற உடை அணிந்து கடைசிப் போட்டியைக் கண்டுகளிக்க வருமாறு சமூக ஊடக வலைத்தலங்கள் சில கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் நான்காவது போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றைய கடைசிப் போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சகல வீரர்களும் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றமை அணி முகாமைத்துவத்துக்கும் புதிய பயிற்றுநர் சில்வர்வூடுக்கும் திருப்தியைக் கொடுத்துள்ளது.

குறிப்பாக பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க ஆகியோர் துடுப்பாடத்திலும் வனிந்து ஹசரங்க டி சில்வா, இளம் வீரர் துனித் வெல்லாலகே ஆகியோர் சகலதுறைகளிலும் பிரகாசித்தமை இலங்கை அணிக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில் இன்னும் சில தினங்களில் காலியில் ஆரம்பமாவுள்ள டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் நோக்கில் இன்றைய போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து ஆறுதல் வெற்றியை ஈட்டுவதற்கு அவுஸ்திரேலியா முயற்சிக்கவுள்ளது.

ட்ரவிஸ் ஹெட் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க, சர்வதேச ஒருநாள் தொ டருக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களைப் போன்று டெஸ்ட் தொடருக்கும் ஆடுகளம் தயாரிக்கப்பட்டால் அது இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என ஊடக சந்திப்பின்போது அவுஸ்திரேலிய ஆரம்ப வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்தார்.

மேலும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் அதிகளவில் சுழல்பந்துவீச்சாளர்களை இலங்கை அணி பயன்படுத்தியதன் மூலம் தங்களுக்கு சிறந்த பயிற்சி கிடைத்ததாகவும் அதன் மூலம் டெஸ்ட் போட்டிக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அணிகள் (5ஆவது சர்வதேச ஒருநாள்)

இலங்கை: நிரோஷன் திக்வெல்ல அல்லது தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, வனிந்து ஹசரங்க டி சில்வா, ஜெவ்ரி வெண்டர்சே, மஹீஷ் தீக்ஷன அல்லது துஷ்மன்த சமீர.

அவுஸ்திரேலயா: டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), மிச்செல் மார்ஷ், மார்னுஸ் லபுஸ்சான், அலெக்ஸ் கேரி, ட்ரவிஸ் ஹெட் அல்லது ஸ்டீவன் ஸ்மித், கெமரன் க்றீன், பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், மெத்யூ குனேமான்.

 

https://www.virakesari.lk/article/130084

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.