Jump to content

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 250 பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 250 பேர் பலி

32 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

250 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-61891443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 1000 பேர் பலி, 1500 பேர் காயம்

22 ஜூன் 2022, 05:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீடு.

பட மூலாதாரம்,@ALHAM24992157

 

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீடு.

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது.

பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

பக்திகா மாகாணத்தின் அரசு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் பேசும்போது, 1000 பேர் இறந்ததாகவும், 1500 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் கூறினார்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 7,000 பேருக்கும் மேலானவர்கள் அங்கு நிலநடுக்கம் காரணமாக இறந்துள்ளனர் என்று ஐநாவின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலத்தின் தரவுகள் கூறுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 560 பேர் நிலநடுக்கத்தால் இறந்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY

இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்ட அதிர்வு

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.

"துரதிஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பல வீடுகளையும் அழித்துள்ளது." என அரசு செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,AFGHAN GOVERNMENT NEWS AGENCY

"மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு, உதவி முகமைகள் தங்களின் குழுக்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் தீவிரம் என்ன?

காபூலில் இருந்து 182 கி.மீ. தொலைவிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 334 கி.மீ. தொலைவிலும், இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் ரஜௌரியில் இருந்து 445 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.1 அளவில் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய நேரப்படி ஜுன் 22-ம் தேதி அதிகாலை 2.24 மணிக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தானில் இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகிறது அந்த நிலநடுக்கவியல் மையம்.

 

Destroyed buildings

பட மூலாதாரம்,AFGHANISTAN INFORMATION SERVICE

ஆனால், பாகிஸ்தானில் சேதம் ஏதும் இருந்ததாக உடனடியாக செய்தி இல்லை என்கிறது பிபிசி உருது.

"நானும், குழந்தைகளும் அலறினோம்"

நள்ளிரவு தாண்டி நடந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அழிவு குறித்து, உள்ளூர் மக்கள் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் பகிர்ந்துகொண்டனர்.

"எங்கள் வீட்டின் அறை ஒன்று இடிந்து விழுந்தது. நானும் குழந்தைகளும் அலறினோம்," என்று பாத்திமா என்பவர் கூறினார்.

 

ஆப்கானிஸ்தான் நிலநடுக்க வரைபடம்.

"எங்கள் பக்கத்து வீடுகள் தரைமட்டமாகின. அந்த வீடுகளில் இருந்தோர் அலறினர். அவர்கள் அறைகள் எல்லாம் வெளியே தெரிந்தன" என்கிறார் ஃபைசல். "நாங்கள் சென்று பார்த்தபோது பலர் இறந்திருந்தனர். பலர் காயமடைந்திருந்தனர். நானே பல சடலங்களைப் பார்த்தேன்" என்கிறார் அவர்.

பக்திகா மாகாணத்தின் கயான், பர்மல் மாவட்டங்களில்தான் பெரும்பாலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன என உள்ளூர் மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

கயான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஒன்று முழுதாக அழிந்துவிட்டதாக உள்ளூர் செய்தித்தளமான எடிலாட்- இ- ரோஜ் (Etilaat-e Roz) தெரிவிக்கிறது.

51 கி.மீ. ஆழத்தில் 6.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலாளர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/global-61891443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afghanistan Earthquake Update: குறைந்தது 920 பேர் மரணம்; 600 பேர் காயம் - Full Details

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தொட்டுள்ளது.

மேலும், 1,500பேர் காயமடைந்தனர் மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பக்திகா மாகாணத்தில் உள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் காபூல் மற்றும் கார்டெஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று பக்திகா தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் முகமது அமின் ஹொசைஃபா தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் ஊடகங்களில் உள்ள புகைப்படங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமாகி, போர்வைகளில் உடல்கள் தரையில் கிடப்பதைக் காட்டியது.

ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, காயமடைந்தவர்களைச் சென்றடையவும், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சக அதிகாரி சலாவுதீன் அயூபி தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். இது தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை கிழக்கு மாகாணமான பக்திகாவில் இருந்தன. அங்கு 255பேர் உயிரிழந்தனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோஸ்ட் மாகாணத்தில், 25பேர் இறந்தனர் மற்றும் 90பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆளும் தலிபான் கட்சியின் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்சாதா தனது இரங்கலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1288237

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கன் நிலநடுக்கம்: உணவோ, தங்குமிடமோ இல்லாமல் தவிக்கும் மக்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பர்மால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள்

 

படக்குறிப்பு,

பர்மால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்தவர்கள், சாப்பிட எதுவுமில்லை, தங்க இடமில்லை, காலரா தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறுகிறார்கள். பிபிசியின் செகந்தர் கெர்மானி, நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பக்திகா மாகாணத்தில் இருந்து செய்திகளை வழங்கி வருகிறார்.

தனது குடும்ப வீட்டில் மிச்சமிருக்கும் இடிபாடுகளுக்கு இடையே கண்ணீரோடு ஆகா ஜான் தேடிக் கொண்டிருந்தார்.

"இதெல்லாம் என் மகனின் காலணிகள்," என்று அவற்றிலிருந்த தூசுகளைத் தட்டிவிட்டபடி கூறினார். அவருடைய மூன்று இளம் குழந்தைகளும் இரண்டு மனைவிகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர்.

புதன்கிழமை அதிகாலை வேளையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஆகா ஜான் அவருடைய குடும்பத்தினர் தங்கியிருந்த அறையை நோக்கி வேகமாக ஓடினார்.

"அனைத்தும் இடிபாடுகளுக்கு அடியில் கிடந்தன. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. என் உறவினர்களை உதவிக்கு அழைத்தேன். ஆனால், என் குடும்பத்தினரை நாங்கள் வெளியே எடுத்தபோது, அவர்கள் உயிரிழந்திருந்தனர்."

பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில், ஆகா ஜானின் கிராமம் அமைந்திருக்கும் பகுதி, நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. அதில், சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் 3,000 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அருகிலுள்ள பெரிய நகரத்திற்குச் செல்ல, பெரும்பாலும் மோசமான நிலையிலிருக்கும் சாலைகளில் மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டும். தொலைதூரத்தில் இருக்கும் இடம் என்பதால் காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வதும் மிகக் கடினமாகிறது. சிலர் தாலிபன்களின் ராணுவ ஹெலிகாப்டர்களில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பொதுவாக மண் மற்றும் கல்லால் கட்டப்பட்ட கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீடும் மோசமாகச் சேதமடைந்து காணப்படுகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் யாராவது ஒருவரையேனும் இழந்து துக்கப்படுவதைப் போல் தெரிகிறது.

ஹபீப் குல், பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரின் எல்லையைத் தாண்டி கூலி வேலை செய்து கொண்டிருந்தார். நிலநடுக்கம் குறித்த செய்தியை அறிந்ததும் அவர் பர்மாலில் இருக்கும் தனது கிராமத்திற்கு விரைந்தபோது, அவருடைய உறவினர்களில் 20 பேர் பலியாகியிருந்தனர். அதில் 18 பேர் ஒரே வீட்டில் பலியாகினர்.

 

தனது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களோடு ஆகா ஜான்(இடதுபுறம்)

 

படக்குறிப்பு,

தனது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களோடு ஆகா ஜான்(இடதுபுறம்)

"யாருடைய பெயர்களை நான் உங்களுக்குக் கொடுப்பேன்? மூன்று சகோதரிகள், என் மருமகள், என் மகள், சிறு குழந்தைகள் என்று என் உறவினர்களில் பலர் உயிரிழந்துவிட்டார்கள்.

நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு கிராமவாசிகளும் தங்கள் வீட்டிற்கு ஏற்பட்ட அழிவைக் காட்ட விரும்புகிறார்கள். இந்தப் பேரழிவை உலகம் காண விரும்புவதால்,

நாம் சந்திக்கும் ஒவ்வொரு கிராமவாசிகளும் தங்கள் வீட்டிற்கு அழிவை காட்ட விரும்புகிறார்கள். அதற்கு ஒரு காரணம், இந்தப் பேரழிவை உலகம் காண வேண்டும். மற்றொரு காரணம், உதவி விநியோகப் பட்டியலில் தங்கள் பெயர்கள் சேர்க்கப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

"உலகம் எங்களை சகோதரர்களாகப் பார்த்து எங்களுக்கு உதவி செய்தால், நாங்கள் இங்கு எங்கல் நிலத்தில் இருப்போம். இல்லையென்றால், கண்ணீரோடு இவ்வளவு காலம் வாழ்ந்த இந்த இடத்தை விட்டு வெளியேறுவோம்," என்று ஹபீப் குல் பிபிசியிடம் கூறினார்.

மேலே, ராணுவ ஹெல்காப்டர்கள் வானத்தில் சுழல்கின்றனர். அவர்கள் இனி காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வதில்லை. ஆனால் பொருட்களை வழங்குகிறார்கள். தாலிபன் அதிகாரிகள் எங்களிடம் மீட்பு நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

 

ஹபீப் குல்

 

படக்குறிப்பு,

இடிபாடுகளில் வீழ்ந்துகிடக்கும் சுவர் ஒன்றிமீது அமர்ந்திருக்கும் ஹபீப் குல்

வீடுகளை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்குத் தங்குமிடம் என்பது மிக முக்கியமான தேவை.

ஆகா ஜானும் அவருடைய எஞ்சியிருக்கும் மகன்களில் ஒருவரும் ஒரு வெற்று நிலத்தில் மரக் குச்சிகளுக்கு இடையே ஒரு பெரிய தார்ப்பாய் போட்டுள்ளார்கள். மற்ற குடும்பங்கள், அவர்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கட்டிய வீடுகளின் எச்சங்களால் சூழப்பட்டிருக்கும் கூடாரங்களில் தங்கியுள்ளன.

காலித் ஜான் இப்போது தனது ஐந்து இளம் பேரக் குழந்தைகளுக்குப் பொறுப்பானவர். அவர்களுடைய தந்தை, அவருடைய மகன், காலித் ஜானின் மற்ற இரண்டு குழந்தைகள் ஆகியோர் நிலநடுக்கத்துக்குப் பலியாகினர்.

"அவர்களுக்கு எஞ்சியிருப்பது நான் தான்," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். மேலும், ஒரு கூடாரத்தின் கீழ் ஒரு பாரம்பர்ய படுக்கையின் மீது அமர்ந்திருந்தவர், "ஆனால், இங்குள்ள வீடுகள் உட்பட அனைத்துமே அழிக்கப்பட்டு விட்டன. என்னால் வீட்டை மீண்டும் கட்ட முடியாது," என்கிறார்.

 

நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குடும்பத்தினரோடு நிற்கும் தாத்தா காலித் ஜான்

 

படக்குறிப்பு,

நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குடும்பத்தினரோடு நிற்கும் தாத்தா காலித் ஜான்

ஆப்கானிஸ்தான் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்கள் சேதங்களை மதிப்பீடு செய்து பொருட்களை வழங்குகின்றன. ஆனால், இதுவொரு பெரிய நெருக்கடி. நாடு ஏற்கெனவே மோசமான மனிதாபிமான நெருக்கடியில் இருக்கும் சூழலில் இது நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை, காலரா பரவும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளது.

ஹபீப் குல் கிராமத்தில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்ய ஆண்கள் கூடினர். சுமார் 250 பேரில் 50 பேர் பலியாகினர். இப்போது உயிர் பிழைத்தவர்கள் மீதும் அவர்களுக்கு எவ்வளவு விரைவாக உதவிகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதிலும் கவனம் திரும்பும்.

https://www.bbc.com/tamil/global-61922283

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.