Jump to content

4 இலட்சம் கடவுச்சீட்டுகள்.... வழங்கப்பட்டுள்ள போதிலும், 70 ஆயிரம் பேர் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

4 இலட்சம் கடவுச்சீட்டுகள்.... வழங்கப்பட்டுள்ள போதிலும், 70 ஆயிரம் பேர் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 20% க்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையும் தற்போது 2400ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் ஆயிரம் கடவுச்சீட்டுகளும் சாதாரண சேவையின் கீழ் 800 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு வேறு திகதி வழங்கப்படுவதுடன், அவ்வாறு திகதிகள் வழங்கப்பட்ட சுமார் 600 பேரின் கடவுச்சீட்டுகள் நாளாந்தம் வழங்கப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் கடந்த வாரத்தைவிட இந்த வாரம் வாடிக்கையாளர் வருகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1288384

Link to comment
Share on other sites

வைத்தியர்கள் உட்பட வெளிநாடு சென்றோருக்கு ஏற்பட்ட சிக்கல்! இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை

Sri Lanka RefugeesSri Lanka Economic CrisisSri Lankan political crisis

1 மணி நேரம் முன்

 நாடு கடத்துமாறு அறிவித்தல்

உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடு சென்றவர்கள் மற்றும் வெளிநாடு சென்ற வைத்தியர்களை உடனடியாக நாடு கடத்துமாறு அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் வெளியாக்கியுள்ளது.

பதிவி நீக்கம்

உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெறாமல் வைத்தியர்கள் வெளிநாடு சென்றால், நிறுவன சட்டத்தின் பிரகாரம் சேவையில் இருந்து விலகியவர்கள் என பதிவை நீக்க வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சில வைத்தியர்களும் இலங்கைக்கு வர மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறையான நடைமுறைகள் இல்லாமல் வெளிநாடு செல்வோர்

முறையான நடைமுறைகள் இல்லாமல் வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் முறையான நடைமுறைக்கு அமைய வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் வைத்தியர்களுக்கு அனுமதி வழங்க பின் வாங்க மாட்டோம் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்த நாட்டுக்கு போயிருப்பார்கள் இவ்வளவு பேரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிச்ச ஆட்கள்… அவுஸ்திரேலியாவுக்கு போய்க் கொண்டு இர்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் எதுவுமே உற்பத்தி,அபிவிருத்தி செய்யாமல் வெளிநாட்டு பணத்தை மட்டும் வைத்து என்ன செய்யப்போகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள பவுத்த நாடு எனச்சொல்லி, தமிழரை வந்தேறு குடிகள் என அவர்களது பாரம்பரிய பூமியிலிருந்து விரட்டியடித்து, அகதிகளாக, ஏதிலிகளாக அலைய வைத்து மகிழ்ந்தவர்கள், இன்று அதே நிலையில். "நீ எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறாயோ, அதே அளவையால் உனக்கு திருப்பி அளக்கப்படும்." ராஜபக்ஷக்களும்,  இனவாதிகளும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நாள் வரும், அந்நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.