Jump to content

சட்ட விரோதமாக... இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட, 5 சொகுசு வாகனங்கள் மீட்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 5 சொகுசு வாகனங்கள் மீட்பு!

சட்ட விரோதமாக... இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட, 5 சொகுசு வாகனங்கள் மீட்பு!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து சொகுசு வாகனங்களை சுங்க திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனங்களில் பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் மற்றும் ஆடி கார்கள் உள்ளடங்குவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து உதிரி பாகங்கள் என்ற போர்வையில் இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருகொடவத்தையில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இருந்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சுங்க அதிகாரிகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அவற்றுள், 40,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள 2500  விஸ்கி பாட்டில்கள், என்ஜின் ஆயில், அழகு சாதனப் பொருட்கள், மஞ்சள் மற்றும் லைட்டர்கள் ஆகியவை அடங்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வத்தளை சரக்கு அகற்றும் நிலையத்தில் இரண்டு கொள்கலன்களில் இருந்து இந்த பொருட்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

https://athavannews.com/2022/1288378

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2022 at 00:13, தமிழ் சிறி said:

சட்ட விரோதமாக... இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட, 5 சொகுசு வாகனங்கள் மீட்பு!

இது தானே காலங்காலமாக நடக்குது.

ஏதோ கணக்குகள் பிணக்குகள் பிரச்சனை போல.

போட்டுக் கொடுத்தாச்சு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த விஸ்க்கிப் போத்தல்கள் என்னாச்சு.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ஆரோ பெரிய கையின்ர தான்.

மோட்டரையும் காணேல்லை......விஷ்கி போத்திலையும் காணேல்லை 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மோட்டரையும் காணேல்லை......விஷ்கி போத்திலையும் காணேல்லை 😁

ஓ நீங்க லேட் புறோ.

பங்கீடு முடிந்தது.

1 hour ago, சுவைப்பிரியன் said:

அப்ப அந்த விஸ்க்கிப் போத்தல்கள் என்னாச்சு.😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, அதற்கிடையில் எல்லாத்தையும் பொதுக்கிப்போட்டு படம் காட்டுறானுகள். புலிகளை பிடித்துவிட்டோம் ஆயுதங்களை பறித்துவிட்டோம் என்று முன்பு அடிக்கடி றீல் விட்டவை, அந்தப்பழக்கத்தில வெளியிட்டிருக்கினமோ? மக்களை பிரச்சனைகளிலிருந்து  திசை திருப்புவதற்கு உப்பிடி எத்தினை வித்தை காட்டுவினம்! உண்மையென்றால், அந்தப்புள்ளியை சட்டத்திற்கு முன் நிறுத்திக்காட்டட்டும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.