Jump to content

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு... அவர்களது வீட்டிலேயே, பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு...  அறிவிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவர்களது வீட்டிலேயே பிரசவம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு... அவர்களது வீட்டிலேயே, பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு...  அறிவிப்பு.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவர்களது வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளலாம் என அதன் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் சூழ்நிலையில் போக்குவரத்து சிரமங்கள் உள்ளதால் எந்த நேரத்திலும் பிரசவத்தை எதிர்கொள்ளும் தாய்க்கு வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரசவத்தில் தலையிடுவதற்கான அனுமதியையும் அதிகாரத்தையும் இலங்கை மருத்துவ சபை தமக்கு வழங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1288358

Link to comment
Share on other sites

ஆடிக்கு அழைப்பதுபோல் ஆண்டு முழுவதுமே அழைத்துவிட்டால் பிரசவப் பிரச்சனையே இல்லை. 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியா,சோமாலியாவை விட மிக மோசமான நிலைக்கு சிறிலங்கா வந்துவிட்டது. வெகுவிரைவில் இப்படியான காட்சிகள் அரங்கேறும் போல் உள்ளது.

Kinderarmut - K - A bis Z - Lexikon - neuneinhalb - TV - Kinder

இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து அல்ல. இலங்கை இந்து சமுத்திரத்தின் துயரம்.
இலங்கை மாங்காய் வடிவமானது அல்ல. இலங்கை மாங்கொட்டை வடிவமானது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலி வைத்தியர்களும் மருத்துவிச்சிகளும் பிரசவம் பாக்க வெளிக்கிடப்போகினம்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.