Jump to content

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் உள்வாங்கப்படவில்லை - கோப் குழுவில் சுட்டிக்காட்டல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் உள்வாங்கப்படவில்லை - கோப் குழுவில் சுட்டிக்காட்டல்

(இராஜதுரை ஹஷான்)

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதன் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொண்ட கடனை செலுத்த பயன்படுத்தவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை கோப்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

நிதியமைச்சு, துறைமுக அதிகார சபையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் உரிய ஆவணப்படுத்தலுடன் கணக்குகளை தயாரித்து கோப் குழுவிற்கு அறிக்கை சமர்பிக்குமாறு கோப்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

துறைமுக அதிகார சபையின் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு  அறிக்கை மற்றும் நடைமுறை செயலாற்றுகை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் தலைமையில் 22 ஆம் திகதி புதன்கிழமை குழு கூடியது.

அதற்கமைய 2017ஆம் ஆண்டு 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட போது கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் மிகுதி கடன் பகுதி துறைமுக அதிகார சபையினால் திறைச்சேரிக்கு வழங்கப்பட்டதாகவும்,கடன் வட்டி வீதம் குறைவடைந்துள்ளதுடன், துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீள் செலுத்தாமல் திறைச்சேரியினால் அரச செலவுகளுக்காக அந்நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தபபட்டது.

மத்திய திறைச்சேரியினால் இதுவரை கடன் மற்றும் வட்டி செலுத்தப்பட்டிருந்தாலும், அது வைப்பு அடிப்படையில் செலுத்தப்பட்ட கடனாக குறிப்பிடப்படவில்லை எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2017.11.30ஆம் திகதி வரையில் துறைமுக அதிகார சபையின் வைப்பில் மிகுதியாகவிருந்த 147,746 மில்லியன் கடன் மற்றும் வட்டி மற்றும் 31,545 மில்லியன் வெளிநாட்டு கையிருப்பு பரிவர்தனை நட்டம் துறைமுக அதிகார சபையினால் திறைச்சேரி மற்றும் அமைச்சரவையின் அனுமதியில்லாமல் ஆரம்ப வெளிப்படுத்தல் ஊடாக நீக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதற்கமைய அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நிதியமைச்சு,துறைமுக அதிகாரசபையுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு குறித்த கணக்குகளை முறையாக ஆவணப்படுத்தி ஒருமாத காலத்திற்குள் கோப் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்திய துறைமுக அதிகார சபையின் நிர்வாக நிறுவனம் 2014ஆம் ஆண்டு கப்பல் எண்ணெய் கொள்வனவிற்காக  உள்ளுர் வங்கியில் 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளதுடன்,குறித்த கடனை மீள செலுத்த அந்த நிறுவனம் தவறியதால் அந்த வங்கி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

24 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கப்பல் எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்ட போதும் அதனை நீண்டகாலமாக பயன்படுத்தாது களஞ்சியப்படுத்தி பின்னர் 3.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ததால் 20.5 மில்லியன் டொலர் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபையினால் அங்கிகரிக்கப்பட்ட  சேவையாளர்களின் எண்ணிக்கை 9990 கடந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.துறைமுக அதிகார சபை 2010ஆம் ஆண்டு முன்வைத்த சேவையாளர்கள் இணைத்துக்கொள்ளல் அனுகுமுறையை முகாமைத்துவ சேவை திணைக்களம் ஏற்றுக்கொள்ளவில்லை. நிறுவனம் மற்றும் சேவையாளர்களுக்கிடையில் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமன விடயதானங்கள் மற்றும்  சம்பள நிர்ணயம் தீர்மானிக்கப்பட்டதாகவும் துறைமுக அதிகாரசபையில் உயர்மட்ட அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 

https://www.virakesari.lk/article/130074

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன கணக்கில் வந்திருக்கும்? தெரிஞ்சா சொல்லுங்கப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

அப்ப என்ன கணக்கில் வந்திருக்கும்? தெரிஞ்சா சொல்லுங்கப்பா?

நம்ம பங்கு, இந்தப்பக்கம் வரல்ல போல... வந்தால், காந்திக்கணக்கு எண்டுவார்.

அவரை பிடித்து, அது என்ன என்று கேளுங்கோ😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கணக்கு குறிப்பில் வைக்கப்படவில்லை என்பதா (ஆவணப்படுத்தலுடன்)?

அனால் கணக்கில் இருந்து அகற்றப்படுத் தானே இருக்கும், வாங்கிய கடனுக்கு ஈடு வைத்தது தானே 99 வருட, மீளாத குத்தகை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுப்பவர்கள் குறிப்பெடுக்கின்றார்கள்.
வாங்குபவர் கைகளில் பென்சில் கூட இல்லை.😂

12 பேர், நபர்கள் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220625-075543.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

அப்ப என்ன கணக்கில் வந்திருக்கும்? தெரிஞ்சா சொல்லுங்கப்பா?

எல்லாம் பழைய கணக்குத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

எல்லாம் பழைய கணக்குத்தான்.

இது மாதிரியா?!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவுண்டமணி கடைக்காரரிடம் கடன் வாங்கிப்போட்டு, கடனை கேட்டவரிடம் மீண்டும் கடன் வாங்கி, வாங்கிய காசில் முன்பு பெற்ற கடனை கழிப்பார் பாருங்கள், அதுதான் இன்னும் மிகப்பொருத்தம். முடிந்தால் அதையும் இணைத்து விடுங்கள். நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

கவுண்டமணி கடைக்காரரிடம் கடன் வாங்கிப்போட்டு, கடனை கேட்டவரிடம் மீண்டும் கடன் வாங்கி, வாங்கிய காசில் முன்பு பெற்ற கடனை கழிப்பார் பாருங்கள், அதுதான் இன்னும் மிகப்பொருத்தம். முடிந்தால் அதையும் இணைத்து விடுங்கள். நன்றி.

பாக்கி நிக்குது, கணக்கு நேர் பண்ணணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.