Jump to content

பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ஜனாதிபதி பதவி விலக வேண்டிய தருணம் இதுவாகும் - அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ஜனாதிபதி பதவி விலக வேண்டிய தருணம் இதுவாகும் - அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர்

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் முதலாவது ஆய்வுப்பல்கலைக்கழகமான ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியலாளரான ஸ்டீவ் ஹன்க் மிகமோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த சில மாதங்களாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவுகளைச் செய்துவருகின்றார். 

அதன்படி இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் நேற்றைய தினம் செய்திருக்கும் பதிவிலேயே ஸ்டீவ் ஹன்க் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைவரம் படிப்படியாக மிகமோசமடைந்துவருவதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது அண்ணளவான மதிப்பீட்டின்படி இலங்கையின் வருடாந்தப் பணவீக்கம் 130.14 சதவீதமாகக் காணப்படுவதாகவும் இது நாட்டின் உத்தியோகபூர்வ வருடாந்தப் பணவீக்கமாகக் காணப்படும் 39.10 சதவீதத்தின் 3 மடங்கை விடவும் உயர்வாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கை ரூபாவின் பெறுமதி 50 சதவீதத்தால் வீழ்ச்சிகண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே நாட்டில் உணவு, உரம் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், தற்போது இலங்கை அதன் கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு முறிவடைந்திருப்பதாகவும் இது ஜனாதிபதி பதவி விலகவேண்டிய தருணமென்றும் தெரிவித்துள்ளார். 

 

https://www.virakesari.lk/article/130069

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அறுபது லட்ஷம் மக்களால்  தெரிந்தெடுக்கப்பட்டவரை அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

 அறுபது லட்ஷம் மக்களால்  தெரிந்தெடுக்கப்பட்டவரை அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது!

சிங்களத்துக்காக, பௌத்தத்திற்காக சிங்கள மக்களால் ஏகோபித்த முறையில் தெரிவு செய்யப்பட்ட தலைவனை போய் பதவி விலகச்சொல்கின்றார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீர சேகரவின் காதில் இந்தச் செய்தி இன்னும் விழவில்லை. நாடே கொதித்தெழுந்து சொன்னவரின் உருவபொம்மையை எரிக்கப்போகுது. ஒருகாலம் இருந்தது, இனிமேல் இல்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க, மேற்குலகக் (கொள்கை வகுப்பாளருக்கு)கொள்ளையடிப்பாளருக்கு தமது தேவைக்கேற்றவாறு ஆடும் ஒரு குரங்கொன்று இலங்கையில் தேவைப்படுகிறது. தமிழீழத்தை அழித்து இலங்கையெனும் ஒற்றைச் சந்தையை உருவாக்க, அதனை சீனா கையகப்படுத்தத் துணைபோகும் ராயபக்சர்களை வெளியேற்றிவிட முனையும் ஓநாய்களின் ஓலம். இதில் மக்கள் நலனென்பது சுழியமே.  சனநாயகம் மற்றும் மக்கள் குறித்த நேர்மையான அரசியல் இருந்திருப்பின் புலிகளைத் தடைசெய்து பெரும் இன அழிப்பிற்குத் துணைபோயிரா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👇கீழே உள்ள இணைப்பின்.. முதல் ஐந்து பந்திகளையும் வாசித்துப் பாருங்கள்.
இலங்கையில்... தனது தவறுக்கு பொறுப்பு ஏற்று பதவி விலகும் எண்ணமே இல்லாமல்.
சம்பந்தப் பட்டவர்கள்... தினமும்,  புது புலுடா விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.👇

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது காணாதென்று, ராஜபக்சக்களின் அடுத்த வலதுகை, இவரை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளவேண்டும் என்கிறார். வரப்போகும் காலம் கோத்தாவுக்கு நெருக்கடியானதாக இருக்கும். நாட்டை விட்டு தப்பியோடும் காலம் வரும்போல் தெரிகிறது!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.